search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mother"

    • பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
    • அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    காங்கயம் :

     காங்கயம் பழையகோட்டை சாலை ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 70). இவருடைய தங்கை மகள் மனநலம் பாதிக்கப்பட்ட கலாமணி (33). வாடகை வீட்டில் வசித்து வந்த இருவரும் ஆதரவற்ற நிலையில் வறுமையின் கொடுமையால் பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் உடல்களை காங்கயம் போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பிரேத பரிசோதனைக்கு பின்னர் காங்கயம் போலீசார் அனுமதியுடன் 2 பெண்களின் உடல்களை காங்கயத்தை சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் காங்கயம் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.

    • 2 வயது குழந்தையுடன் தாய் மாயமானார்.
    • சுப்பிரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை

    பழங்காநத்தம் மருதுபாண்டியர் நகர் பசும்பொன் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சதீஷ்பாண்டி. இவரது மனைவி கலைமலர் (வயது23). இவர்களது 2 வயது மகன் அருள்கருப்பு. கடந்த 31-ந் தேதி அருள்கருப்புடன் வெளியே சென்ற கலைமலர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து சதீஷ்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 2 பெண்கள் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த சோமனூர் ரெயில் நிலையம் அருகே 2 பெண்கள் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா காயத்ரி,சப் -இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.அங்கு 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் 15 வயது மதிக்கத்தக்க பெண்ணும் ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பிணமாக கிடந்தனர்.உடலை கைப்பற்றிய ரெயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் இறந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் அடுத்த சாமளாபுரம் பவலந்தான்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரது மனைவி தனலட்சுமி (32),மகள் தட்சணா (15) என்பது தெரியவந்தது. சரவணன் சொந்தமாக விசைத்தறி வைத்து நடத்தி வருகிறார்.இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    இதனால் கணவனிடம் கோபித்துக் கொண்டு தனலட்சுமி மகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற அவர்கள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.தொடர்ந்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திட்டங்களை செயல்படுத்துவதில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் செயல்படுத்தி வருகிறார்.
    • தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் என்று மானாமதுரை தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. கூறினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் உள்ள இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு தமிழக அரசு சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஏராளமான திட்டபணிகள் நடைபெற்று வருகிறது.

    மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்-முன்னாள் அமைச்சர் ஆ.தமிழரசி ரவிக்குமார் கூறியதாவது:- தாயுள்ளம் கொண்ட நமது தமிழக முதல்வர் இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாகவும், திட்டங்களை செயல்படுத்துவதில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் செயல்படுத்தி வருகிறார்.

    மகளிர் முன்னேற்றத்தில்மிகவும் அக்கறையுடன் கட்டணமில்லா பஸ்பயணம், உயர் கல்வி கற்கும் மாணவிகளுக்குமாதம் ரூ.1000 திட்டம், வரும்பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம், வீடுதேடிவரும்மருத்துவம், இல்லம் தேடி கல்வி திட்டங்களும் பொது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

    இதுதவிர மாதந்தோறும் மாவட்டங்களில் திட்டங்கள் செயல்படுத்துவது பற்றி கள ஆய்வு பணி, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் நிறைவேற்றப்படாத வளர்ச்சி பணிகள் நமது மானாமதுரை தொகுதியில் இளையான்குடி பேரூராட்சிக்கு தற்போது ரூ.9 கோடி மதிப்பில் திட்டப்பணிகள், மானாமதுரை வைகை ஆற்றில் புதிய பாலம், நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிய அலுவலக கட்டிடங்கள், உயர் நிலை-மேல்நிலை பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், புதிதாக நெல்கொள்முதல் நிலையங்கள், மானாமதுரையில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடம், திருப்புவனம் ஒன்றியம் லாடனேந்தல், செல்லப்பனேந்தல் இடையே வைகைஆற்றில் புதிய பாலம், மானாமதுரை வைகைஆற்றில் குடிநீர்திட்டத்திற்காக தடுப்பணைகள், கிராமங்கள் முழுவதும் புதிதாக பஸ் வசதி, மானாமதுரையில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி மையம்,சொட்டதட்டி- பனையூர் சுற்றுசாலை திட்டம், தற்போது உலகமே வியக்கும் கீழடி, கொந்தகை, மணலூர்அகழ்வாராய்ச்சி பணிகள் முடிக்கப்பட்டு இன்று ரூ.18 கோடி மதிப்பீட்டில் தமிழக செட்டிநாடு கலையில் 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நமது பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறைகளையும், அகழ்வாராய்ச்சி பணியில் கிடைத்த பல அரிய பொருட்களை தமிழக மக்கள் எளிதாக பார்த்து பயன் அடையும் வகையில் எதிர்கால நமது தலைமுறைக்காக கீழடியில் அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகத்தை தாயுள்ளம் படைத்த நமது தமிழக முதல்வர் திறந்து வைக்கிறார் என்பது தமிழக மக்களுக்கு பெருமை ஆகும்.

    மதுரை-ராமேசுவரம் சாலையில் இருந்து எளிதாக கீழடிஅருங்காட்சியகம் வருவதற்காக புதிய சர்வீஸ் சாலை மற்றும் சாலையை கடக்க நடைபாலம் அமைக்கவும், சட்டமன்ற கூட்டத்தில் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    • மீனா நாங்குநேரி பழைய பஸ் நிலையத்திற்கு டீ வாங்க சென்றார்.
    • ஆத்திரம் அடைந்த மணி, மீனாவை அவதூறாக பேசி தாக்கினார்.

    களக்காடு:

    நாங்குநேரி செல்வன் தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி மீனா (வயது 46). இவர்களது மகன் கோகுல கண்ணன் என்ற பெட்ரோல் மணி. கூலி தொழிலாளியான இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு இவர் செலவுக்கு பணம் கேட்டு தாயாரிடம் தகராறு செய்தார். இதுகுறித்து புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

    அதன் பின் அவர் ஜாமீனில் விடுதலையானார். சிறையில் இருந்து விடுதலையான பிறகும் அவர் வேலைக்கு செல்லாமல் தாயாரிடம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். சம்பவத்தன்று மீனா நாங்குநேரி பழைய பஸ் நிலையத்திற்கு டீ வாங்க சென்றார். அப்போது அங்கு வந்த மணி, மீனாவிடம் வழக்கம் போல் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். மீனா பணம் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த மணி அவரை அவதூறாக பேசி தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார்.

    இதுபற்றி அவர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மணியை தேடி வருகின்றனர்.

    • திருக்குறுங்குடி அருகே உள்ள மேலகட்டளையை சேர்ந்தவர் ராஜம்மாள்.கூலி வேலை செய்து வருகிறார்.
    • இதையடுத்து ராஜம்மாளையும் செல்வின் தாக்கினார். இதில் காயமடைந்த ராஜம்மாள் சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள மேலகட்டளையை சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது65). இவரது கணவர் சுந்தர்ராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். ராஜம்மாள் கூலி வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவில் ராஜம்மாளின் மகன் ஜான் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் விழாவிற்காக மேலகட்டளையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் அலங்காரப் படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் செல்வின், ஜானை பார்த்து ஆலயத்தை அலங்காரப்படுத்த நீங்கள் யார்? எனக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த செல்வின், ஜானை தாக்கினார். இதைப்பார்த்த ராஜம்மாள் தட்டிக் கேட்டார். இதையடுத்து ராஜம்மாளையும் செல்வின் தாக்கினார். இதில் காயமடைந்த ராஜம்மாள் சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தாய், மகனை தாக்கிய செல்வினை தேடி வருகின்றனர்.

    • வருவாய்த் துறை அதிகாரிகள் அரசு இடத்தை ஆக்கிரமிக்க முயன்றது குறித்து பெண்ணிடம் விசாரித்தனர்.
    • அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டியைச் சேர்ந்த ராணி(62). நிலக்கோட்டையில் பத்திர எழுத்தராக உள்ளார். இவர் அணைப்பட்டி - நிலக்கோட்டை சாலையில் திரவியம் நகர் பகுதியில் உள்ள அரசு இடத்தை கடந்த சில தினங்களாக சுத்தம் செய்து, கம்பி வேலி போட முயற்சி செய்து கொண்டிருந்தார்.

    இதை அறிந்த நிலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் ராணியிடம் சென்று அரசு இடத்தை ஆக்கிரமிக்க முயன்றது குறித்து விசாரித்தனர்.

    அப்போது ராணி அவரது மகன் விஜயபாஸ்கர் ஆகியோர் கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜிடம் கொடுத்த புகாரின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி வழக்குப்பதிவு செய்து ராணி மற்றும் விஜயபாஸ்கர் 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அரசு சார்பில் மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை பெற்று வருகிறார்கள்.
    • ஒரே வீட்டில் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் நல்லாத்துபாளையம் பகுதியை சேர்ந்த தம்பதி முருகேசன் - கலாவதி. முருகேசன் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 20 வயதில் சக்திவேல் என்ற மகன் உள்ளார். இதனிடையே பிறந்தது முதல் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட சக்திவேலுக்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையாத நிலையில் ,அரசு சார்பில் மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை பெற்று வருகிறார்கள்.

    இந்தநிலையில் மகனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக தொடர்ந்து ஒரே வீட்டில் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடு வழங்க கூறி மனு அளித்த நிலையில் அதிகாரிகள் ஒரு லட்சம் வரை கட்ட கூறியுள்ளனர். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மகனின் வாழ்க்கையையும், குடும்ப சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு தங்களுக்கு அரசு சார்பில் இடம் வழங்க வேண்டுமென திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

    • களக்காடு அருகே உள்ள இடையன்குளம் காலனி தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது49). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெயராணி.
    • கடந்த 31-ந்தேதி பொன்ராஜ் வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வீட்டிற்கு வந்த போது ஜெயராணியை காணவில்லை.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள இடையன்குளம் காலனி தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது49). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெயராணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜெயராணிக்கு கடந்த 8 ஆண்டுகளாக உடல்நல பாதிப்புக்காக அவர் நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கடந்த 31-ந்தேதி பொன்ராஜ் வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வீட்டிற்கு வந்த போது ஜெயராணியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடியும் ஜெயராணி குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோசப்ஜெட்சன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான ஜெயராணியை தேடி வருகிறார்.

    • தாய்க்கு உதவி செய்ய சென்ற மதுரை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்
    • போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த ஒரு பெண், தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில், ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அதில் எனக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதற்காக காரைக்குடி, பள்ளத்தூரில் உள்ள உறவினர் ராஜபாண்டி என்பவரின் வீட்டில் தங்கி இருந்தேன். அப்போது என்னை பராமரிப்பதற்காக 14 வயது மகள் வந்திருந்தார்.

    இந்த நிலையில் ராஜபாண்டி (வயது 40). இவர் பொய்யான வாக்குறுதிகளை கூறி, எனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதன் காரணமாக என் மகள் இப்போது கர்ப்பமாக உள்ளார். எனவே போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது சம்பவம் நடந்தது, காரைக்குடி பகுதி என்பதால் இந்த வழக்கை காரைக்குடிக்கு மாற்றுவது என்று போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    • மனு கொடுத்த பெண்ணின் 2-வது மகன் மகேஷ் என்பவர் கம்போடியா நாட்டில் பணியாற்றி வருகிறார்.
    • மேலும் ரூ. 2½ லட்சம் தந்தால் என் மகனை அழைத்து வருவதாக ஏஜெண்டுகள் கூறி உள்ளனர்.

    நெல்லை:

    பாளை அருகே உள்ள மூலக்கரைப்பட்டி காரியாண்டியை சேர்ந்தவர் கலியன். இவரது மனைவி சிதம்பரவடிவு (வயது52). இவர் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க ஒரு மனு கொடுத்தார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எங்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அதில் 2-வது மகன் மகேஷ் என்பவர் கம்போடியா நாட்டில் பணியாற்றி வருகிறார். அந்த வேலைக்காக நாகர்கோவிலை சேர்ந்த 2 பேர் எங்களிடம் ரூ. 5 லட்சம் பெற்று கொண்டனர்.

    டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணி என கூறிய அவர்கள் மகேசை கம்போடியாவில் உள்ள சட்டவிரோத கும்பலிடம் வேலைக்கு சேர்த்துவிட்டனர்.

    இதையறிந்த எனது மகன் தன்னை மீட்குமாறு எங்களிடம் போனில் வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து நாகர்கோவிலை சேர்ந்த ஏஜென்டிடம் விபரம் கேட்டோம்.

    அதற்கு அவர்கள் மேலும் ரூ. 2½ லட்சம் தந்தால் உங்கள் மகனை அழைத்து வருவதாக தெரிவித்தனர். அதன்பேரில் ரூ. 1 ½ லட்சம் கொடுத்தோம். ஆனால் அவர்கள் அதனை வாங்கி கொண்டு மேலும் ரூ. 2 லட்சம் தந்தால்தான் அழைத்து வருவோம் என்கின்றனர்.

    எனவே எங்கள் மகனை பத்திரமாக மீட்டுத் தர வேண்டும். மேலும் நாகர்கோவில் ஏஜென்டுகள் மீது நடவடிக்கை எடுத்து நாங்கள் கொடுத்த பணத்தையும் திருப்பி வாங்கி தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தாயிடமிருந்து நகை, பணத்தை பறித்து கவனிக்காத மகனை போலீசார் எச்சரித்தனர்.
    • இதனை மூதாட்டி ஏற்றுக் கொண்டதால பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது.

     கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 75) .இவர் ஹலோ சீனியர் காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தனது 2 பவுன் நகை மற்றும் தனது கணவரது சேமிப்பு பணம் ஒரு லட்சம் ரூபாய் ஆகியவற்றை தனது மூத்த மகன் அன்புவேல் வாங்கிக்கொண்டு தன்னை கவனித்துக் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டதாக புகார் தெரிவித்தார். அதன் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராமன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்ததில் புகார்தாரரின் மகன் அன்புவேல் தனது அம்மாவுக்கு கொடுக்க வேண்டிய 2 பவுன் நகை , 1 லட்சம் பணம் மற்றும் வீட்டு மனை பத்திரம் ஆகியவற்றை தனது உறவினர்களை சாட்சியாக வைத்து அவர்கள் முன்னிலையில் கொடுத்து விடுவதாக உத்தரவாதம் அளித்துள்ளார். இதனை மூதாட்டி ஏற்றுக் கொண்டதால பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது.

    ×