search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mother arrest"

    புத்தகம் படித்துக் கொண்டிருந்த போது இடைவிடாமல் அழுததால் பெற்ற குழந்தையை குளியல் தொட்டியில் அமுக்கி தாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள சாண்ட்லர் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜென்னா போல்வெல் (19). இவருக்கு பிறந்த ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை இருந்தது.

    அந்த குழந்தைக்கு ரெய்னர் என பெயரிட்டிருந்தனர். இந்த நிலையில் ஜென்னா போல்வெல் பரபரப்பாக போலீஸ் நிலையம் வந்தார். வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது குழந்தையை யாரோ கடத்தி சென்று விட்டனர் என அழுது கொண்டே புகார் செய்தார்.

    அதை உண்மை என நம்பிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ஜென்னாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் தீவிரமாக விசாரிக்கப்பட்டது.

    அப்போது அவர் தனது குழந்தையை குளியல் தொட்டியில் தண்ணீரில் அமுக்கி கொலை செய்ததாக தெரிவித்தார். மேலும் குழந்தை ரெய்னரின் உடலை ஒரு பெரிய ‘பேக்’கில் அடைத்து அதை அருகில் உள்ள பூங்காவில் வீசியதாக கூறினார்.

    எனவே, ஜென்னாவை போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட குழந்தையின் உடலும் மீட்கப்பட்டது.

    பெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி கொன்றது ஏன் என ஜென்னா போலீசில் வாக்குமூலம் அளித்து இருக்கிறார். அதில், புத்தகம் படித்துக் கொண்டிருந்த போது குழந்தை ரெய்னர் இடைவிடாது தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஜென்னா குழந்தையை குளியல் தொட்டியில் நிரம்பி இருந்த தண்ணீரில் அமுக்கி கொலை செய்ததாக தெரிவித்தார்.
    வாளி தண்ணீரில் அமுக்கி குழந்தையை கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த அந்த பெண்ணின் தாய் மற்றும் காதலன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை கிண்டி கன்னிகாபுரத்தில் சாலையோரம் உள்ள குப்பை தொட்டியில் கடந்த மாதம் 17-ந் தேதி பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை பிணமாக கிடந்தது. இதுபற்றி கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் உடலை குப்பை தொட்டியில் வீசியது யார்? என விசாரணை நடத்திவந்தனர்.

    போலீஸ் உதவி கமிஷனர் பாண்டியன், இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில், அதேபகுதியை சேர்ந்த வசந்தி(வயது 24) என்பவர் தனது குழந்தையையே கொன்று குப்பை தொட்டியில் வீசியது தெரிந்தது.

    இதையடுத்து போலீசார் வசந்தியை கைது செய்தனர். அவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில், இதற்கு உடந்தையாக இருந்த அவருடைய தாய் விஜயா(55) மற்றும் போரூரை சேர்ந்த காதலன் ஜெபராஜ்(26) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். குழந்தையை கொன்றது குறித்து போலீசாரிடம் வசந்தி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது எனக்கும், ஜெபராஜூக்கும் காதல் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் நெருங்கிப் பழகியதில் கர்ப்பம் அடைந்தேன். இதனை வீட்டுக்கு தெரியாமல் மறைத்தேன். 7 மாதத்துக்கு பின்னர் நான் கர்ப்பமாக இருப்பது எனது வீட்டுக்கு தெரிந்தது.

    இதனை எனது தாய் விஜயா கண்டித்தார். திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றால் அக்கம் பக்கத்தினர் என்ன நினைப்பார்கள்? என்று கூறி, இதனை வெளியில் தெரியாமல் மறைக்க முடிவு செய்தார். அதன்பிறகு என்னை வீட்டில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. கடந்த மாதம் எனக்கு பெண் குழந்தை பிறந்தது.

    இதை அறிந்தால் உறவினர்கள் கிண்டல் செய்வார்கள் என்று நாங்கள் கருதினோம். எனவே குழந்தையை கொன்றுவிட முடிவு செய்தோம். இதுபற்றி ஜெபராஜூக்கு தெரிவித்ததும் அவரும் ஒப்புக்கொண்டார். கடந்த 16-ந் தேதி குழந்தையை வீட்டில் உள்ள வாளியில் தண்ணீருக்குள் அமுக்கி கொன்றோம். போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக குழந்தையின் உடலை குப்பை தொட்டியில் வீசினோம்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். #tamilnews
    வேளச்சேரி அருகே பிறந்த குழந்தையை தண்ணீர் வாளியில் அழுக்கி கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த தாய், காதலனும் கைதானார்கள்.
    ஆலந்தூர்:

    வேளச்சேரி கன்னிகாபுரத்தில் உள்ள அம்மா உணவகம் அருகே குப்பைத் தொட்டியில் கடந்த 17-ந் தேதி பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை இறந்து கிடந்தது.

    இது குறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குழந்தையை கொன்று வீசியது வேளச்சேரி கன்னிகாபுரத்தை சேர்ந்த தாய் வசந்தி என்பது தெரிந்தது.

    அவருக்கு உடந்தையாக தாய் விஜயா, போரூரை சேர்ந்த காதலன் ஜெபராஜ் இருந்தது தெரிந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    குழந்தையை கொன்றது குறித்து வசந்தி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த போது எனக்கும் ஜெபராஜூக்கும் காதல் ஏற்பட்டது. நெருங்கி பழகியதால் நான் கர்ப்பம் அடைந்தேன். இதனை வீட்டுக்கு தெரியாமல் மறைத்தேன். 7 மாதத்துக்கு பின்னர் நான் கர்ப்பமாக இருப்பது வீட்டுக்கு தெரிந்தது.

    இதனை தாய் விஜயா கண்டித்தார். மேலும் திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்றால் அக்கம் பக்கத்தினர் என்ன நினைப்பார்கள் என்று கூறி இதனை வெளியில் தெரியாமல் மறைக்க முடிவு செய்தார்.

    இதையடுத்து என்னை வீட்டில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. கடந்த மாதம் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை அறிந்தால் உறவினர்கள் கிண்டல் செய்வார்கள் என்று நாங்கள் நினைத்தோம்.

    எனவே குழந்தையை கொன்று குப்பைத் தொட்டியில் வீச முடிவு செய்தோம். இதுபற்றி காதலன் ஜெபராஜுக்கு தெரிவித்தோம். அவரும் இதற்கு ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து கடந்த 16-ந்தேதி குழந்தையை தண்ணீர் வாளிக்குள் அமுக்கி கொன்றோம். பின்னர் குழந்தையின் உடலை குப்பைத் தொட்டியில் வீசினோம். போலீசாரிடம் சிக்கமாட்டோம் என்று நினைத்தோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    வேளச்சேரியில் குழந்தையை தாய் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    வேளச்சேரி, திரவுபதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் வெங்கண்ணா. தரமணியில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி உமா. கடந்த 35 நாட்களுக்கு முன்பு இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சர்விக் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

    நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிய குழந்தை சர்விக் காணாமல் போனது. குழந்தையை மர்மநபர்கள் கடத்தி சென்று விட்டதாக உமா தெரிவித்தார். இரவு புழுக்கமாக இருந்ததால் காற்றுக்காக கதவை திறந்து வைத்திருந்ததாகவும், அப்போது யாரோ குழந்தையை தூக்கிச் சென்று விட்டனர் என்றும் கூறினார்.

    இதுபற்றி வேளச்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. வீடு புகுந்து குழந்தை கடத்தப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது நைட்டி அணிந்த பெண் ஒருவர் குழந்தையை தூக்கிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    அந்த பெண் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. போட்டோவில் இருக்கும்  குழந்தையின் தாய் உமாவின் தோற்றத்தில் இருந்தது. இதனால் உமா மீது போலீசுக்கு சந்தேகம் வலுத்தது.

    இதையடுத்து உமாவிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அவர் எந்தவித பதட்டமும் இல்லாமல் இருந்தார். இதுவும் அவர் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தியது. அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் குழந்தையை கொன்று நாடகமாடியதை உமா ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    குழந்தையின் உடலை பிளாஸ்டிக் பையில் சுற்றி அருகில் உள்ள ஏரியில் வீசிவிட்டதாக உமா தெரிவித்தார். போலீசார் ஏரியில் தேடி குழந்தையின் உடலை மீட்டனர்.

    பாலூட்டும் போது மார்பகத்தில் வலி ஏற்பட்டதாலேயே குழந்தையை கொலை செய்ததாக தாய் உமா திடுக்கிடும் தகவலை கூறினார். இதனை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.


    இதுதொடர்பாக உமா அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

    குழந்தை பிறந்த பின்னர் பாலூட்டுவது சிரமமாக இருந்தது. கடந்த 15 நாட்களாக பால் கொடுக்கும் போது மார்பகத்தில் எனக்கு அதிகமான வலி ஏற்பட்டது.

    எனது கணவருடனும், தாயிடமும் இதுபற்றி பலமுறை கூறினேன். என்னால் குழந்தையை வளர்க்க முடியாது. தனது தாயிடம் நீங்களே வளர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன். ஆனால் எனது வலியை யாரும் பொருட்படுத்தவில்லை.

    இது எனக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது. குழந்தையை கொன்றுவிட வேண்டும். அப்போது தான் நிம்மதியாக இருக்க முடியும் என்று எண்ணினேன்.

    நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் எல்லோரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். குழந்தையும் தூங்கிக் கொண்டிருந்தது. இதுதான் குழந்தையை கொலை செய்ய சரியான நேரம் என்று நினைத்து தூங்கிய குழந்தையை தூக்கி பாலிதீன் கவரில் போட்டு சுற்றி கொலை செய்தேன்.

    பின்னர் யாருக்கும் தெரியாமல் அருகில் உள்ள ஏரியில் போட்டுவிட்டேன். பின்னர் ஒன்றும் தெரியாதது போல வீட்டில் வந்து படுத்துக் கொண்டேன்.

    காலையில் எழுந்ததும் எனது கணவர் குழந்தையை தேடினார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் தேடினார்கள். நானும் அவர்களோடு சேர்ந்து தேடினேன். குழந்தையை யாரோ கடத்திச் சென்று விட்டனர் என்று கூறினேன்.

    இதனை வீட்டில் இருந்தவர்களும் நம்பிவிட்டனர். ஆனால் போலீசார் விசாரித்ததில் உண்மை வெளிப்பட்டு விட்டது.

    இவ்வறு உமா கூறியுள்ளார்.

    இச்சம்பவம் தொடர்பாக வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இன்று காலை 6 மணி அளவில் குளத்தில் இருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.

    கைது செய்யப்பட்ட தாய் உமா கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெற்ற குழந்தையை பாலூட்டி வளர்க்க வேண்டிய தாயே அதன் வலியை தாங்க முடியாமல் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    வெங்கண்ணா-உமா தம்பதியின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ஆகும்.

    பரங்கிமலை அருகே பார்வையற்ற மகனை கொன்ற வழக்கில், போதிய வருமானம் இல்லாததால் மகனை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்றேன் என பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த பரங்கிமலை நசரத்புரத்தை சேர்ந்தவர் கோபிநாத். இவரது மனைவி பத்மா (35). இவர்களுக்கு பரத் (13) என்ற பார்வையற்ற மகன் இருந்தான். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 12 வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பத்மா தனது மகனை பிளாஸ்டிக் கவரால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

    பின்னர் தானும் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். கயிறு அறுந்து விட்டதால் அதில் இருந்து உயிர் தப்பினார். இதற்கிடையே பரத்தின் உடலை கைப்பற்றிய பரங்கிமலை போலீசார் பிரேத பரிசோதனை நடத்தினர்.

    சிறுவன் சாவில் சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து பத்மாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனது மகனை கொன்று விட்டு தான் தற்கொலைக்கு முயன்றதை அவர் ஒப்புக்கொண்டார். அதை தொடர்ந்து பத்மாவை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    கொலை செய்யப்பட்ட பரத்தின் உடல் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தாய் பத்மா சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவனது உடலை யாரிடம் ஒப்படைப்பது என்பதில் போலீசாருக்கு பிரச்சினை ஏற்பட்டது.

    இறுதியில், அவனது தந்தை கோபிநாத்திடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்தனர். மனைவியை பிரிந்து வாழும் கோபிநாத் நசரத்புரத்தில் தான் தங்கியிருந்தார். எனவே அவரை அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி பேசினார். பின்னர் அவரிடம் பரத்தின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

    இதற்கிடையே தனது மகனை கொலை செய்தது ஏன் என்று பத்மா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    “கடந்த 14 வருடத்துக்கு முன்பு நானும், கோபிநாத்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.

    கருத்து வேறுபாடு காரணமாக 2 வருடத்தில் அவர் பிரிந்து சென்றுவிட்டார். நான் எனது மகனுடன் தாய் வீட்டில் இருந்தேன். எனது குறைந்த வருமானத்தில் மகனை வளர்த்து படிக்க வைத்தேன். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் எனது தாயாரும் இறந்துவிட்டார்.

    இதனால் மிகவும் விரக்தி அடைந்தேன். எனது குறைந்த வருமானம் மூலம் குடும்பம் நடத்த முடியவில்லை. சம்பாதிக்கும் பணம் வீட்டு வாடகைக்கும், மகன் மருத்துவ செலவுக்கும் போதவில்லை. என்னை விட்டு பிரிந்து சென்ற கணவர் கோபிநாத் இதே பகுதியில் வசித்தாலும் மகன் பரத்துக்கு எந்த உதவியும் செய்யவில்லை.

    நான் நம்பி இருந்த தாயும் இறந்துவிட்டார். வறுமையும் வாட்டியது. ஆகவே நான் தற்கொலை செய்து கொள்ள விரும்பினேன். நான் இறந்தால் பார்வையற்ற மகனின் கதியை நினைத்து கலங்கினேன். கண் தெரியாத மகனை விட்டு சென்றால் அவனை பிச்சை எடுக்கவிட்டு விடுவார்களோ என பயந்து பிளாஸ்டிக் கவரால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.

    நான் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றேன். ஆனால் கயிறு அறுந்துவிட்டதால் உயிர் பிழைத்தேன். அதன் பிறகும் பிளாஸ்டிக் கவரால் எனது கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றேன். ஆனால் முடியவில்லை. வறுமையின் காரணமாக எனது மகனை கொன்ற பாவி ஆகிவிட்டேன் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
    கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கள்ளக்காதல் மூலம் பிறந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொடூரமான முறையில் கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பாறமுக்கு காலனி பகுதியை சேர்ந்தவர் ரின்ஷா (வயது 24).

    இவருக்கு திருமணமாகி விட்டது. கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக அவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். இவர் அக்கம், பக்கத்தினரிடம் அதிகமாக பேசி பழகாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.

    இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து குழந்தையின் அழு குரல் கேட்டது. பிறகு சிறிது நேரத்தில் அது ஓய்ந்து விட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் ரின்ஷாவின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு குழந்தை இறந்து கிடந்தது. கையில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் ரின்ஷா உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

    இதுபற்றி போலீசுக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று அந்த பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மேலும் வீட்டில் இறந்து கிடந்த குழந்தையின் பிணம் கைப்பற்றப்பட்டு கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த குழந்தை ரின்ஷாவுக்கு பிறந்தது என்பதும், குழந்தை பிறந்த உடனேயே அது கழுத்தை நெரித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதும் பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

    இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கணவரை பிரிந்து தனியாக வசித்துவந்த ரின்ஷாவுக்கும் ஒரு வாலிபருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு அதன்மூலம் அவர் கர்ப்பம் அடைந்தது தெரிய வந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த ரின்ஷாவுக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்ததும் அதை மறைப்பதற்காக பெற்ற குழந்தையையே கழுத்தை நெரித்து கொன்று விட்டு கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.

    தற்போது ரின்ஷா தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் அவருக்கு சிகிச்சை முடிந்த பிறகுதான் அவரது கள்ளக்காதலன் யார்? என்பது பற்றி தெரிய வரும். ரின்ஷா மீது கொலை மற்றும் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் அவர் சிகிச்சை பெறும் வார்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #tamilnews
    கோவை சரவணம்பட்டி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக கூறி 3மாத குழந்தையை கழுத்தை அறுத்து தாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    கோவை:

    கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 26). ரப்பர் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி வனிதா (22). இவர்களுக்கு 2 வயதில் சசிபிரியா, 3 மாதமே ஆன கவிஸ்ரீ என்ற குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை வீட்டில் தொட்டிலில் தூங்க வைத்த 3 மாத குழந்தையை யாரோ மர்மநபர்கள் கடத்தி சென்று விட்டதாக வனிதா சத்தம் போட்டார்.

    இதுகுறித்து கணவருக்கு தகவல் கூறி வரவழைத்தார். அவர் போலீசில் புகார் செய்தார். சம்பவஇடத்துக்கு சரவணம்பட்டி போலீசார் விரைந்து சென்றனர். வனிதாவிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். தொடர்ந்து நடந்த விசாரணையில் பெற்ற குழந்தையை கொலை செய்ததாக வனிதா கூறினார்.

    வனிதாவுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த சீனிவாசன் (26) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கணவர் வேலைக்கு சென்ற பின்னர் வனிதா, கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து பல முறை உல்லாசமாக இருந்துள்ளார்.

    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சீனிவாசனுடன் சேர்ந்து குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக வனிதா ஒப்புக்கொண்டார். வீட்டின் அருகே உள்ள குப்பை மேட்டில் சாக்குபைக்குள் இருந்து, குழந்தையின் உடலை போலீசார் மீட்டனர். இதையடுத்து அவரையும், சீனிவாசனையும் போலீசார் கைது செய்தனர். வனிதா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    எனக்கு, பக்கத்து வீட்டை சேர்ந்த சீனிவாசன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பழக்கமானார். அவரது பேச்சு எனக்கு பிடித்து போனதால் நான் அவருடன் நெருங்கி பழகினேன். எனது கணவர் வேலைக்கு சென்ற பின்னர், சீனிவாசன் வீட்டுக்கு வருவார்.

    நாங்கள் உல்லாசமாக இருப்பதற்கு குழந்தைகள் இடையூறாக இருந்தனர். எனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு, என்னால் 2 குழந்தைகளையும் கவனிக்க முடியவில்லை என கூறி மூத்த மகளை திண்டுக்கல்லில் உள்ள எனது தாய் வீட்டில் விட்டு விட்டு வந்தேன். அதன்பிறகு சீனிவாசன் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றார். நாங்கள் உல்லாசமாக இருந்த போது குழந்தை கவிஸ்ரீ அழுது கொண்டே இருந்தாள். இது எங்களுக்கு இடையூறாக இருந்தது.

    எனவே குழந்தையை கொன்று விடலாம் என முடிவு செய்தேன். நேற்று சீனிவாசன் வீட்டுக்கு வந்த போது குழந்தையை கொலை செய்யலாம் என கூறி நான் குழந்தையின் கை, கால்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். சீனிவாசன் குழந்தையின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். பின்னர் ரத்தக்கறை படிந்த எனது நைட்டி, துணிகளை குப்பையில் போட்டு வெளியே சென்று கொட்டினேன்.

    பின்னர் அரிசி சாக்கு பைக்குள் குழந்தையை அடைத்து வீடு அருகே உள்ள குப்பை மேட்டில் வீசி விட்டு எதுவும் தெரியாதது போல வீட்டுக்கு வந்தேன். சீனிவாசன் வீட்டுக்கு சென்ற பிறகு, வீட்டில் இருந்த குழந்தையை யாரோ கடத்தி சென்று விட்டதாக நாடகமாடினேன். ஆனால் போலீஸ் விசாரணையில் சிக்கிக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குழந்தையை மர்மநபர்கள் கடத்தி சென்று விட்டதாக புகார் வந்ததும் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். வனிதா முன்னுக்கப்பின் முரணாக பேசியதால் அவர் மீது சந்தேகம் எழவே, அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது சிறிது நேரத்துக்கு முன்பு வனிதா, சீனிவாசனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றதாக கூறினார்.

    இதுகுறித்து வனிதாவிடம் போலீசார் கேட்ட போது சீனிவாசன் வீட்டுக்கு வரவில்லை என்றார். சிறிது நேரத்தில் குப்பையை கொட்டுவதற்காக அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றதாகவும் மழுப்பினார். தொடர்ந்து போலீசார் பல கேள்விகள் கேட்டதும் பதிலளிக்க முடியாமல் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    கொலைக்கு பயன்படுத்திய கத்தி, ரத்தக்கறை படிந்த நைட்டி மற்றும் துணிமணிகள், சாக்குபை ஆகியவற்றை ஆதாரங்களாக போலீசார் கைப்பற்றினர்.

    கைதான வனிதா, சீனிவாசன் ஆகியோரை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.
    திருச்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற மகனை என்றும் பாராமல் தாய் கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திருச்சி:

    திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள சாந்தபுரத்தைச் சேர்ந்தவர் மீனாம்பாள் (வயது 40). கட்டிடத் தொழிலாளியான மீனாம்பாளின் கணவர் வீரமணி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கேன்சர் நோய் ஏற்பட்டு இறந்து விட்டார்.

    இதனால் மீனாம்பாள் தனது ஒரே மகனான அங்கு ராஜூடன் (14) தனியாக வசித்து வந்தார். அங்குராஜ் திருப்பராய்த்துறையில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) காலை அங்குராஜ் வீட்டில் மயங்கி கிடந்ததாக கூறி அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு மீனாம்பாளும், அவரது தோழி லெட்சுமியும் கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை அளிக்க முடியாததால் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அங்குராஜை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனால் அங்குராஜ் உடலை வீட்டிற்கு கொண்டு வந்தனர்.

    இதற்கிடையே அங்குராஜ் உடல்நிலை சரியில்லாமல் சாகவில்லை என்றும், அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் சோமரசம்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அங்குராஜ் உடலை கைப்பற்றினர்.

    அங்குராஜ் உடலை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது அவர் கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.

    இதனால் போலீசாரின் சந்தேக பார்வை தாய் மீனாம்பாள் மற்றும் அவரது தோழி லெட்சுமி மீது விழுந்தது. அவர்கள் இருவரையும் போலீஸ் கஸ்டடிக்குள் கொண்டு வந்து துருவி துருவி விசாரித்தனர்.

    அப்போது கள்ளக்காதல் பிரச்சனையில் பெற்ற மகன் என்றும் பாராமல் மீனாம்பாள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    கணவர் வீரமணி இறந்த நிலையில், கட்டிட வேலைக்கு சென்ற மீனாம்பாளுக்கு அங்கு கொத்தனாராக வேலை பார்த்த இனியானூர் மேலத்தெருவைச் சேர்ந்த முத்தழகு என்ற முத்தையன் (48) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    அடிக்கடி முத்தையனுடன் வீட்டிலேயே மது குடித்து விட்டு மீனாம்பாள் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் முத்தையனின் மற்றொரு கள்ளக்காதலியான லெட்சுமியும் இவர்களுடன் சேர்ந்து மது குடித்து விட்டு அடிக்கடி வீட்டில் ஜாலியாக இருந்துள்ளனர்.

    முதலில் அக்கம் பக்கத்தினர் முத்தழகனும் லெட்சுமியும் கணவன், மனைவியாக இருக்கலாம் என நினைத்து சாதாரமாக விட்டு விட்டனர். ஆனால் அங்குராஜ் பள்ளிக்கு சென்றதும் அடிக்கடி முத்தழகனும், லெட்சுமியும் மீனாம்பாள் வீட்டிற்கு வருவதும் அவர்கள் மது குடித்து விட்டு ஜாலியாக இருப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். இதை அங்குராஜிடம் கூறியுள்ளனர்.

    இதையடுத்து அங்குராஜ் அவர்கள் நடவடிக்கையை கண்காணித்தான். ஒருமுறை 3 பேரும் வீட்டில் ஜாலியாக இருப்பதை நேரில் பார்த்து விட்டான். இதனால் மனம் வெறுத்து போன அங்குராஜ் தனது தாயை உறவினர்களிடம் கூறி கண்டித்து திருத்தி விடலாம் என நினைத்தான்.

    உறவினர்கள் இது குறித்து மீனாம்பாளிடம், கள்ளக்காதலை கைவிடும்படி கூறினர். ஆனால் மீனாம்பாள் முத்தழகனை பிரிய மனம் இல்லாததோடு தனது கள்ளக்காதலை உறவினர்களிடம் மகன் அங்குராஜ் கூறி அவமானப்படுத்தி விட்டானே என ஆத்திரம் அடைந்தார்.

    இது குறித்து முத்தழகன், மீனாம்பாள், லெட்சுமி ஆகியோர் கூடி அடுத்து என்ன செய்யலாம் என குடித்து விட்டு ஆலோசனை செய்தனர். அப்போது அங்குராஜை தீர்த்து கட்டுவது என முடிவு செய்தனர். இதற்கான திட்டத்தை முத்தழகன் தீட்டினார்.

    கடந்த வியாழக்கிழமை இரவு அங்குராஜிற்கு அதிக தூக்க மாத்திரை கலந்த ஊட்டச்சத்து பானத்தை மீனாம்பாள் கொடுத்தார். அதை குடித்த அங்குராஜ் தூங்கி விட்டார். அப்போது மீனாம்பாளும், லெட்சுமியும் அங்குராஜ் கழுத்தை கயிற்றால் நெரித்தனர்.

    10 மாதம் வயிற்றில் சுமந்து பெற்ற மகன் என்றும் பாராமல் தன் கண் எதிரில் அங்கு ராஜ் துடிதுடித்து சாவதை மீனாம்பாள் கண்டு கொள்ளாமல் தோழியுடன் சேர்ந்து கயிற்றால் நெரித்தார். இதில் மூச்சுத்திணறி அங்குராஜ் இறந்தார்.

    அங்குராஜை கொலை செய்ததை கள்ளக்காதலன் முத்தழகனிடம் செல்போனில் இருவரும் தெரிவித்துள்ளனர். உடனே முத்தழகன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று தற்கொலை நாடகம் ஆடும்படி கூறியுள்ளார்.

    அதன்படி நாடகமாடிய மீனாம்பாளும், லெட்சுமியும் குட்டு வெளிப்பட்டதால் போலீசில் சிக்கி கொண்டனர். இருவரும் திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட் எண்.5-ல் ஆஜர் படுத்தப்பட்டு திருச்சி மகளிர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கள்ளக்காதலிகள் போலீசில் சிக்கி கொண்டதை அறிந்ததும் முத்தழகன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். #Tamilnews
    செங்கோட்டை அருகே பணத்துக்கு ஆசைப்பட்டு 13 வயது மகளை தாயே விபசாரத்தில் தள்ளிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    செங்கோட்டை:

    நெல்லை மாவட்டம் புளியரையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஸ்ரீமூலப்பேரி நீர்த்தேக்கம் உள்ளது. இந்த நீர்த்தேக்கத்துக்கு அருகில் கேரள மாநிலம் அடூர் பகுதியைச் சேர்ந்த சைகால் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இதை புளியரையை சேர்ந்த மாரியப்பன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

    இந்த தோட்டத்தில் கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண், அஜித் (38) என்ற நபருடன் வசித்து வந்தார். இவர்கள் அந்த தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தனர். அந்த பெண், தனது 13 வயது மகளை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் விடுதியில் தங்க வைத்து 8-ம் வகுப்பு படிக்க வைத்தார்.

    பள்ளி விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து அந்த மாணவி, ஆரியங்காவு பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டுக்கு தனது தாயுடன் வந்து தங்கி இருந்தார். இந்த நிலையில் மகளை திடீரென்று காணவில்லை என்றும், தன்னுடன் வசித்து வந்த அஜித் தனது மகளை கடத்திச்சென்று விட்டதாக அந்த பெண் புளியரை, தென்மலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக தென்மலை போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் புகார் கொடுத்த மறுநாளே அஜித், அந்த மாணவியுடன் புளியரையில் உள்ள தோட்டத்து வீட்டுக்கு திரும்பினார். இதையடுத்து மாணவியின் தாய், தான் கொடுத்த புகாரை வாபஸ் வாங்குவதற்காக தென்மலை போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு போலீசாரிடம், தனது மகளும், அஜித்தும் திரும்ப வந்து விட்டதாகவும், புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் கூறினார். அந்த பெண்ணின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    இதையடுத்து போலீசார் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மாணவியின் தாய்க்கும், அங்கு வேலை செய்த அஜித்துக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இந்த விவகாரம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. உடனே இருவரும் அங்கிருந்து வெளியேறினர். அப்போது அந்த பெண், தனது மகளையும் அழைத்துக்கொண்டு அஜித்துடன் வந்து விட்டார்.

    அதன்பிறகு புளியரை பகுதியில் உள்ள தோட்டத்தில் இருவரும் கணவன்- மனைவி என்று கூறிக்கொண்டு வேலைக்கு சேர்ந்த‌னர். தங்களது கள்ளக்காதலுக்கு மகள் இடையூறாக இருப்பாள் என்று கருதி மகளை திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடுதியில் தங்க வைத்துள்ளார் அந்த பெண். இதற்கிடையே பணத்துக்கு ஆசைப்பட்டு விடுமுறையில் ஊருக்கு வந்த மாணவியை விபசாரத்தில் ஈடுபடுத்த அவர்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி தோட்டத்து வீட்டில் வைத்து பலருடன் உல்லாசமாக இருக்குமாறு வற்புறுத்தியதாகவும், அவர்களது கட்டாயத்தின் பேரில் மாணவி விபசாரத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று விடுதிகளிலும், வீடுகளிலும் தங்க வைத்தும் விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். இதற்கு மாணவியின் சித்தப்பாவும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த சூழ்நிலையில் மாணவியின் சித்தப்பாவே மாணவியை விபசாரத்தில் ஈடுபடுத்த கேரளாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    தனது மகளை, தனக்கு தெரியாமல் விபசாரத்தில் ஈடுபடுத்த மாணவியின் சித்தப்பா முடிவு செய்தது தனக்கு பிடிக்காததால் போலீசில் புகார் செய்துள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவியின் தாயையும், அதற்கு உடந்தையாக இருந்த சஜி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் கள்ளக்காதலன் அஜித் மாணவியின் சித்தப்பா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த புளியரை பகுதியைச் சேர்ந்த அய்யப்பன், கருப்பசாமி ஆகியோரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #Tamilnews
    ×