என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பார்வையற்ற மகன் கொலை - தற்கொலை முயற்சியில் உயிர் தப்பிய தாய் கைது
Byமாலை மலர்16 Sep 2018 11:31 AM GMT (Updated: 16 Sep 2018 11:31 AM GMT)
பரங்கிமலை அருகே பார்வையற்ற மகனை கொன்ற வழக்கில், போதிய வருமானம் இல்லாததால் மகனை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்றேன் என பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆலந்தூர்:
சென்னையை அடுத்த பரங்கிமலை நசரத்புரத்தை சேர்ந்தவர் கோபிநாத். இவரது மனைவி பத்மா (35). இவர்களுக்கு பரத் (13) என்ற பார்வையற்ற மகன் இருந்தான். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 12 வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பத்மா தனது மகனை பிளாஸ்டிக் கவரால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.
பின்னர் தானும் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். கயிறு அறுந்து விட்டதால் அதில் இருந்து உயிர் தப்பினார். இதற்கிடையே பரத்தின் உடலை கைப்பற்றிய பரங்கிமலை போலீசார் பிரேத பரிசோதனை நடத்தினர்.
சிறுவன் சாவில் சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து பத்மாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனது மகனை கொன்று விட்டு தான் தற்கொலைக்கு முயன்றதை அவர் ஒப்புக்கொண்டார். அதை தொடர்ந்து பத்மாவை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
கொலை செய்யப்பட்ட பரத்தின் உடல் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தாய் பத்மா சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவனது உடலை யாரிடம் ஒப்படைப்பது என்பதில் போலீசாருக்கு பிரச்சினை ஏற்பட்டது.
இறுதியில், அவனது தந்தை கோபிநாத்திடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்தனர். மனைவியை பிரிந்து வாழும் கோபிநாத் நசரத்புரத்தில் தான் தங்கியிருந்தார். எனவே அவரை அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி பேசினார். பின்னர் அவரிடம் பரத்தின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே தனது மகனை கொலை செய்தது ஏன் என்று பத்மா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
“கடந்த 14 வருடத்துக்கு முன்பு நானும், கோபிநாத்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.
கருத்து வேறுபாடு காரணமாக 2 வருடத்தில் அவர் பிரிந்து சென்றுவிட்டார். நான் எனது மகனுடன் தாய் வீட்டில் இருந்தேன். எனது குறைந்த வருமானத்தில் மகனை வளர்த்து படிக்க வைத்தேன். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் எனது தாயாரும் இறந்துவிட்டார்.
இதனால் மிகவும் விரக்தி அடைந்தேன். எனது குறைந்த வருமானம் மூலம் குடும்பம் நடத்த முடியவில்லை. சம்பாதிக்கும் பணம் வீட்டு வாடகைக்கும், மகன் மருத்துவ செலவுக்கும் போதவில்லை. என்னை விட்டு பிரிந்து சென்ற கணவர் கோபிநாத் இதே பகுதியில் வசித்தாலும் மகன் பரத்துக்கு எந்த உதவியும் செய்யவில்லை.
நான் நம்பி இருந்த தாயும் இறந்துவிட்டார். வறுமையும் வாட்டியது. ஆகவே நான் தற்கொலை செய்து கொள்ள விரும்பினேன். நான் இறந்தால் பார்வையற்ற மகனின் கதியை நினைத்து கலங்கினேன். கண் தெரியாத மகனை விட்டு சென்றால் அவனை பிச்சை எடுக்கவிட்டு விடுவார்களோ என பயந்து பிளாஸ்டிக் கவரால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.
நான் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றேன். ஆனால் கயிறு அறுந்துவிட்டதால் உயிர் பிழைத்தேன். அதன் பிறகும் பிளாஸ்டிக் கவரால் எனது கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றேன். ஆனால் முடியவில்லை. வறுமையின் காரணமாக எனது மகனை கொன்ற பாவி ஆகிவிட்டேன் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த பரங்கிமலை நசரத்புரத்தை சேர்ந்தவர் கோபிநாத். இவரது மனைவி பத்மா (35). இவர்களுக்கு பரத் (13) என்ற பார்வையற்ற மகன் இருந்தான். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 12 வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பத்மா தனது மகனை பிளாஸ்டிக் கவரால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.
பின்னர் தானும் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். கயிறு அறுந்து விட்டதால் அதில் இருந்து உயிர் தப்பினார். இதற்கிடையே பரத்தின் உடலை கைப்பற்றிய பரங்கிமலை போலீசார் பிரேத பரிசோதனை நடத்தினர்.
சிறுவன் சாவில் சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து பத்மாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனது மகனை கொன்று விட்டு தான் தற்கொலைக்கு முயன்றதை அவர் ஒப்புக்கொண்டார். அதை தொடர்ந்து பத்மாவை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
கொலை செய்யப்பட்ட பரத்தின் உடல் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தாய் பத்மா சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவனது உடலை யாரிடம் ஒப்படைப்பது என்பதில் போலீசாருக்கு பிரச்சினை ஏற்பட்டது.
இறுதியில், அவனது தந்தை கோபிநாத்திடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்தனர். மனைவியை பிரிந்து வாழும் கோபிநாத் நசரத்புரத்தில் தான் தங்கியிருந்தார். எனவே அவரை அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி பேசினார். பின்னர் அவரிடம் பரத்தின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே தனது மகனை கொலை செய்தது ஏன் என்று பத்மா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
“கடந்த 14 வருடத்துக்கு முன்பு நானும், கோபிநாத்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.
கருத்து வேறுபாடு காரணமாக 2 வருடத்தில் அவர் பிரிந்து சென்றுவிட்டார். நான் எனது மகனுடன் தாய் வீட்டில் இருந்தேன். எனது குறைந்த வருமானத்தில் மகனை வளர்த்து படிக்க வைத்தேன். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் எனது தாயாரும் இறந்துவிட்டார்.
இதனால் மிகவும் விரக்தி அடைந்தேன். எனது குறைந்த வருமானம் மூலம் குடும்பம் நடத்த முடியவில்லை. சம்பாதிக்கும் பணம் வீட்டு வாடகைக்கும், மகன் மருத்துவ செலவுக்கும் போதவில்லை. என்னை விட்டு பிரிந்து சென்ற கணவர் கோபிநாத் இதே பகுதியில் வசித்தாலும் மகன் பரத்துக்கு எந்த உதவியும் செய்யவில்லை.
நான் நம்பி இருந்த தாயும் இறந்துவிட்டார். வறுமையும் வாட்டியது. ஆகவே நான் தற்கொலை செய்து கொள்ள விரும்பினேன். நான் இறந்தால் பார்வையற்ற மகனின் கதியை நினைத்து கலங்கினேன். கண் தெரியாத மகனை விட்டு சென்றால் அவனை பிச்சை எடுக்கவிட்டு விடுவார்களோ என பயந்து பிளாஸ்டிக் கவரால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.
நான் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றேன். ஆனால் கயிறு அறுந்துவிட்டதால் உயிர் பிழைத்தேன். அதன் பிறகும் பிளாஸ்டிக் கவரால் எனது கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றேன். ஆனால் முடியவில்லை. வறுமையின் காரணமாக எனது மகனை கொன்ற பாவி ஆகிவிட்டேன் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X