search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mosque"

    சீனாவில் தன்னாட்சி உரிமை பெற்ற நிங்சியா பகுதியில் கட்டப்பட்டுள்ள மசூதியை இடிப்பதில் இருந்து காப்பாற்ற பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் ஆண், பெண்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #China
    பீஜிங்:

    சீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 கோடி பேரும், துருக்கி வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக கருதப்படும் உய்குர் பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள் 1 கோடி பேரும் அடங்குவர்.

    இவர்கள் வழிபாட்டுக்காக நாடு முழுவதும் பிரம்மாண்டமான பல மசூதிகள் உள்ளன. அவற்றில் தன்னாட்சி உரிமை பெற்ற நிங்சியா பகுதியில் உள்ள உசோங் நகரில் இருக்கும் பழம்பெருமை வாய்ந்த வெய்சூங் பெரிய மசூதியும் ஒன்றாகும்.

    இந்த மசூதியை புணரமைக்கும் பணிகள் கடந்த 2015-ம் ஆண்டுவாக்கில் தொடங்கின. தற்போது பணிகள் நிறைவடைந்து புதுப்பொலிவுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த மசூதியின் உச்சியில் உள்ள கோபுரங்கள் (மினராக்கள்) தொடர்பாக உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கும் மசூதி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.



    இந்த மினராக்கள் சீன கட்டிட வடிவமைப்பின்படி இல்லாமல், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மசூதிகளின் கட்டிட வடிவமைப்பு போல் காணப்படுவதால்  இவற்றை இடித்துவிட்டு, சீன பாரம்பரிய கட்டிடக்கலையின்படி மாற்ற அதிகாரிகள் முடிவெடுத்தனர். இந்த முடிவுக்கு எதிராக நிங்சியா பகுதியில் வாழும் முஸ்லிம்கள் கொதித்து எழுந்தனர்.

    கடந்த வியாழனன்று இந்த மசூதியை இடிப்பதற்கு அதிகாரிகள் தயாரான நிலையில், தங்களது வீடுகளில் இருந்து வெளியேறிய பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் ஆண், பெண்கள் மசூதி வளாகத்தை முகாமிட்டனர். அவர்களில் பலர் மசூதிக்குள் அமர்ந்தபடி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



    தொடர்ந்து 3-வது நாளாக நடைபெற்று வரும் இந்த முற்றுகை போராட்டம் இன்னும் பல நாட்களுக்கு நீடிக்கலாம் என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. மிகப்பெரிய அடுப்புகள், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையலுக்கு தேவையான உணவுப்பொருட்கள் பெரிய அளவில் அங்கு கொண்டு செல்லப்படுவதை மேற்கோள்காட்டி இந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

    தற்போது மசூதியில் அமைக்கப்பட்டுள்ள மினராக்களை அகற்றிவிட்டு வேறுமாதிரியான கட்டுமானம் மேற்கொள்வதற்கு போராட்டக்காரர்கள் சம்மதிக்கவில்லை. இந்த மினராக்களை இடித்துவிட்டால் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலம் என்பதற்கான அடையாளமே இல்லாமல் போகும் என அவர்கள் குறிப்பிடுவதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. #China
    வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து திரும்பியபோது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். #AwamiLeagueLeaderKilled
    டாக்கா:

    வங்கதேசத்தில் ஆளுங்கட்சியான அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர் பர்கத் அலி. கட்சியின் பத்தா யூனியன் பொதுச் செயலாளரான இவர் இன்று மசூதிக்கு சென்று தொழுகையில் பங்கேற்றார். தொழுகை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

    இதில் மார்பு மற்றும் தலையில் குண்டுகள் பாய்ந்ததால், பர்கத் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மசூதிக்கு வெளியே நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. 

    இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பர்கத் அலி கொலைக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

    பத்தா பகுதியில் இரு குழுவினருக்கிடையிலான மோதல் மற்றும் வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதால், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. #AwamiLeagueLeaderKilled
    தென் ஆப்பிரிக்காவில் மசூதியில் தொழுகை நேரத்தில் கத்தியுடன் நுழைந்த மர்ம நபர் நிகழ்த்திய தாக்குதலில் 2 பேர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். #SouthAfrica #MosqueAttack
    ஜோகன்னஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவில் மால்மேஸ்பரி நகரில் ஒரு மசூதி உள்ளது. அந்த மசூதியில் நேற்று தொழுகை நேரத்தில் கையில் கத்தியுடன் நுழைந்த ஒரு நபர், அங்கே தன் கண் எதிரே பட்டவர்களை எல்லாம் சரமாரியாக குத்திச் சாய்த்தார்.

    இதனால் மசூதியில் தொழுகைக்கு கூடி இருந்தவர்கள் அலறியடித்தவாறு நாலா புறமும் ஓட்டம் பிடித்தனர்.

    இந்த தாக்குதலில் 2 பேர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கத்தியால் குத்திக்கொண்டிருந்த நபரை உடனடியாக சரண் அடையுமாறு கூறினர். ஆனால் அந்த நபர், அதற்கு செவி சாய்க்கவில்லை. இதையடுத்து அவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

    அவர் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்தவர்கள் அங்கு இருந்து மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த போலீசார், இது பயங்கரவாதத்தின் கூறு என கூறினர்.

    இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   #SouthAfrica #MosqueAttack  #tamilnews
    இங்கிலாந்து நாட்டில் லீட்ஸ் நகரத்தில் பீஸ்டன் ஹார்டி வீதியில் உள்ள ஜாமியா மஸ்ஜித் அபு ஹூரைரா மசூதிக்கு சமூக விரோத சக்திகள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Mosque #SikhGurdware
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டில் லீட்ஸ் நகரத்தில் பீஸ்டன் ஹார்டி வீதியில் உள்ள ஜாமியா மஸ்ஜித் அபு ஹூரைரா மசூதிக்கு நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.45 மணிக்கு சமூக விரோத சக்திகள் தீ வைத்து விட்டனர்.

    அடுத்த சில நிமிடங்களில் லேடி பிட் சந்து பகுதியில் அமைந்து உள்ள சீக்கியர்களின் வழிபாட்டுத்தலமான குருநானக் நிஷ்கம் சேவாக் ஜாதா குருத்வாராவுக்கும் விஷமிகள் தீ வைத்து விட்டனர். குருத்வாராவின் கதவில் ஒரு பாட்டில் பெட்ரோலை ஊற்றி விஷமிகள் தீ வைத்ததாக தகவல்கள் கூறுகின்றன. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மசூதியிலும், குருத்வாராவிலும் தீயை அணைத்தனர்.

    லீட்ஸ் நகர சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் ரிச்சர்டு ஹோம்ஸ் இந்த சம்பவங்கள் பற்றி குறிப்பிடுகையில், “இவ்விரு சம்பவங்களும் அருகருகே நடந்து உள்ளன. ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கிறோம். இது விசாரணையின் ஆரம்ப காலம்தான். இவ்விரு சம்பவங்களும், வெறுப்புணர்வு சம்பவங்கள் என்றே கருதுகிறோம். தொடர்ந்து விசாரணை நடத்துகிறோம்” என கூறினார்.

    மேலும், சம்பவ பகுதியில் அமைந்து உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் துப்பு துலக்குவதாகவும் அவர் கூறினார்.

    இந்த சம்பவங்களை தொடர்ந்து லீட்ஸ் நகரில் போலீஸ் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
     #Mosque #SikhGurdware  #tamilnews
    உத்தரப்பிரதேச மாநிலம் ஃபைசாபாத் பகுதியில் அடுத்தடுத்து மசூதியும் கோவிலும் அமைந்துள்ளது. இதன்மூலம் அப்பகுதி மக்கள் மத ஒற்றுமைக்கு உதாரணமாக திகழ்கின்றனர். #HindusMuslimspeace
    லக்னோ:

    உலகின் ஒரு சில நாடுகளில் மட்டுமே அனைத்து மதத்தினரும் வாழும் சூழல் காணப்படும் அந்த வகையில் இந்தியா சிறப்பு வாய்ந்த நாடு ஆகும். இந்தியாவில் பல மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். அவ்வப்போது மதரீதியான சண்டைகள் ஏற்படும் போதிலும் மக்கள் ஒற்றுமையான வாழ்வையே விரும்புகின்றனர்.

    இந்த ஒற்றுமையை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது பிகாபூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ள கோவிலும் மசூதியும். அருகருகே அமைந்துள்ள இந்த கோவிலுக்கும் மசூதிக்கும் வரும் மக்கள் ஒருபோதும் தங்களுக்குள்ளே வன்முறையில் ஈடுபட்டதில்லை.

    பாபர் மசூதி இடிக்கப்பட்டு நாடு முழுவதும் வன்முறை வெடித்த சூழ்நிலையிலும் நாங்கள் ஒற்றுமையுடன் இருந்தோம் என அப்பகுதி வாழ் மக்கள் பெருமையுடன் கூறுகின்றனர்.



    இதுதொடர்பாக அப்பகுதிவாசி ஒருவர் பேசுகையில், ‘இந்துக்களும் இஸ்லாமியர்களும் அமைதியுடன் ஒற்றுமையுடனும் இங்கு வாழ்கிறோம். மிகச்சிறந்த புரிதலுடன் மற்றவர்களின் பிரார்த்தனை நேரங்களில் ஒருவருக்கொருவர் தொந்தரவு செய்வதில்லை’ என தெரிவித்துள்ளார்.

    மத ரீதியாக மக்களை பிரிக்க நினைக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் பாடம் புகட்டும் வகையில் இப்பகுதி மக்களின் ஒற்றுமை அமைந்துள்ளது. #HindusMuslimspeace
    அமீரகத்தில் இந்தியாவை சேர்ந்த கிறிஸ்துவ தொழிலதிபர் ஒருவர், தொழிலாளர்கள் தொழுகை நடத்துவதற்கு வசதியாக பணிபுரியும் நகரிலேயே மசூதி ஒன்று கட்டி கொடுத்து உள்ளார்.
    துபாய்:

    கேரள மாநிலம், காயங்குளத்தைச் சேர்ந்தவர் ஷாஜி செரியன். கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த இவர், 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-க்குச் சென்று உழைத்து தொழிலதிபராக உயர்ந்தவர். தற்போது, பல கோடிகளுக்கு அதிபதியான ஷாஜி, வளைகுடாவில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், அமீரகத்தில் உள்ள பியூஜைரா எனும் நகரத்தில் பணிபுரியும் பல்வேறு தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்கள், தொழுகைக்காக பல கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து வந்ததை ஷாஜி அறிந்தார். மேலும், ஒருமுறை மசூதிக்கு சென்று வர தொழிலாளர்களுக்கு 20 திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ.400) தேவை. இதனைத் தொடர்ந்து, பியூஜைரா நகரில் தொழிலாளர்களுக்கு என மசூதி ஒன்றை கட்டித்தர ஷாஜி முடிவெடுத்தார். இந்திய மதிப்பு 2 கோடி ரூபாய் செலவில் அழகிய மசூதி ஒன்றை ஷாஜி கட்டத் தொடங்கினார். இந்த மசூதியில் ஒரே சமயத்தில் 950 பேர் வரை தொழுகை செய்ய முடியும்.

    கிறிஸ்துவரான ஒருவர் மசூதி கட்டுவதை அறிந்த உள்ளூர் அதிகாரிகள் வியப்படைந்ததுடன், மசூதிக்கு தேவையான மின்சாரம், குடிநீர் வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தந்தனர். அதிகாரிகளிடமிருந்து இப்படி ஒரு உதவியை எதிர்பாராத ஷாஜி, அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஷாஜியின் செயலைக் கண்டு திகைத்த உள்ளூர் அரேபியர்களும் நிதியுதவி செய்ய முன் வந்தனர். ஆனால், ஷாஜி அவர்களின் நன்கொடைகளை மறுத்து, தனது சொந்த செலவிலேயே மசூதியை எழுப்பினார்.

    இதுகுறித்து ஷாஜி செரியன் கூறியதாவது:-

    சொற்ப சம்பளமே வாங்கும் தொழிலாளர்கள் காசு செலவழித்து தொழுகைக்கு செல்வதைப் பார்த்தேன். அருகில் மசூதி இருந்தால் அவர்கள் சந்தோசப்படுவார்களே என என் உள்மனம் கூறியது. என் நோக்கத்தைப் புரிந்துகொண்ட பலரும் மசூதி கட்டுமானத்துக்கான கல், செங்கல், பெயிண்ட் போன்றவற்றை வாங்கித் தர முன் வந்தனர். ஆனால், என் சொந்த செலவில் இந்த மசூதியைக் கட்டவே நான் விரும்பினேன். அதனால், நன்கொடைகளை ஏற்கவில்லை. மதம், இனம், ஜாதி அடிப்படையில் மனிதர்களைப் பிரித்து பார்ப்பதில்லை. எல்லா மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே என் ஆசை’ என தெரிவித்துள்ளார்.
    இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள மசூதிகளுக்கு இலவசமாக 5 ஆயிரம் டன் அரிசியை வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து இறைவனை வழிபடுவது வழக்கம். இந்த மாதம், இஸ்லாமியர்களின் புனித மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளிலிருந்து வருடந்தோறும் அரசு சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள மசூதிகளுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, இந்த ஆண்டும் இஸ்லாமிய அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று, தமிழகம் முழுவதும் உள்ள 3000 மசூதிகளுக்கு, சுமார் 5 ஆயிரத்து 145 டன் அளவிலான அரிசியை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #CMpalaniswami #freericetomosques
    ×