search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money fraud"

    • தனியார் ஆஸ்பத்திரியில் நர்சிங் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.
    • எலிசபெத் ராணி, தோழி ஆத்ரின் மேரியிடம் ஹேரி அருள்ராஜ் தன்னை ஏமாற்றுவதாக தெரிவித்துள்ளார்.

    காரைக்காலை அருகே கோட்டுச்சேரி கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வம் அமல்ராஜ். இவரது மனைவி எலிசபெத் ராணி(வயது45). எலிசபெத் ராணி காரைக்காலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சிங் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். எலிசபெத் ராணிக்கு, சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரியும் ஆத்ரின் மேரி என்பவர் பழக்கம், ஆத்ரின் மேரி, கடந்த 2020-ல், அதே ஊரைச்சேர்ந்த ஹரி அருள்ராஜ்(39) என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார். 

    சிறிது நாள் நல்லவர் போல் நடித்த ஹரி அருள்ராஜ், செக் குடியரசு நாட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தான் வேலை செய்வதாகவும், அங்குள்ள நர்ஸ் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. அந்த வேலையை தான் வாங்கித்தருவதாகவும் கூறி, கடந்த 2021ல் தனது வங்கி கணக்கிற்கு, ரூ.1 லட்சத்து ஐம்பதாயிரத்தை அனுப்பிவைக்கும்படி எலிசபத் ராணியிடம் பணத்தை பெற்றுள்ளார். 2 மாதம் ஆகியும், வேலை வாங்கித்தராததால், ஹரி அருள்ராஜிடம் வேலை தொடர்பாக கேட்ட பொழுது, விரைவில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி வந்ததாக தெரிகிறது. இது குறித்து, எலிசபெத் ராணி, தோழி ஆத்ரின் மேரியிடம் ஹேரி அருள்ராஜ் தன்னை ஏமாற்றுவதாக தெரிவித்துள்ளார். 

    தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம், எலிசபெத் ராணி ஹரி அருள் ராஜை செல்போனில் தொடர்பு கொண்டு, வெளிநாட்டில் வேலை வேண்டாம். கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுமாறு கேட்டுள்ளார். அதற்கு, ஹரி அருள்ராஜ் பணத்தை கொடுக்க முடியாது. இதற்கு மேல் பணத்தை கேட்டு தொந்தரவு செய்தால், காரைக்கால் வந்து உன்னை கொலை செய்து புதைத்து விடுவேன் என்றும் கொலை மிரட்டல் விடுத்ததார் இதனால் அதிர்ச்சி யடைந்த எலிசபெத் ராணி, கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீ சார் வழக்குப்பதிவு செய்து, ஹரி அருள்ராஜை தேடிவருகின்றனர்.

    • கள்ளழகர் கோவில் நிலத்தை காட்டி ரூ.70 லட்சம் மோசடி செய்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • மதுரை வண்டியூரில் 12 ஏக்கர் 70 செண்டு நிலம் ரூ.34 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனைக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள சூளக்கரை வீரப்பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாயகி. இவரது சகோதரர் சூரியநாராயணன். சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். அவர் அனுப்பும் சம்பள பணத்தை சேர்த்து வைத்து அந்த பகுதியில் நிலம் வாங்க ரங்க நாயகி முடிவு செய்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு 2020-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் சிவகிரி பட்டியை சேர்ந்த பத்மநாதபன் என்பவர் ரங்கநாகிக்கு அறிமுகமானார். அப்போது தான் ஓய்வு பெற்ற நீதிபதி என்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறியுள்ளார்.

    மதுரை வண்டியூரில் 12 ஏக்கர் 70 செண்டு நிலம் ரூ.34 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனைக்கு உள்ளது என்று கூறியுள்ளார். இதனை நம்பி ரங்கநாயகி ரூ.70லட்சம் வரை பத்மநாபனிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்ட அவர் நிலத்தை பதிவு செய்து தரவில்லை. இதுகுறித்து விசாரித்த போது பத்மநாபன் குறிப்பிட்ட நிலம் மதுரை கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமானது என தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கநாயகி பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்தாக கூறப்படுகிறது.

    இந்த மோசடிக்கு பத்மநாபனுடன் அவரது மகன் சதீஷ் மற்றும் சுமதி, அங்குராஜ், சந்திரன், குழந்தை செல்வம் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

    இதுகுறித்து ரங்கநாயகி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அமுதா என்பவர் லேடிஸ் பர்ஸ்ட் காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டார்.
    • வீரமணி, பணத்தை விரைவில் தருவதாக உறுதியளித்தார். பின்னர் இருதரப்பினரும் எழுதி கொடுத்து சென்றதின் பேரில் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஆவினன்குடி பகுதியை சேர்ந்த அமுதா (45)என்பவர் லேடிஸ் பர்ஸ்ட் காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டு தனது மகளுக்கு நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி வீரமணி என்பவர் 55 ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக புகார் அளித்தார். அதன் பேரில் ஆவினன்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை செய்தனர். அப்போது வீரமணி, பணத்தை விரைவில் தருவதாக உறுதியளித்தார். பின்னர் இருதரப்பினரும் எழுதி கொடுத்து சென்றதின் பேரில் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.

    • போனஸ் தொகையுடன் பணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.
    • குடும்ப கஷ்டங்களை காரணமாக தொடர்ந்து பணம் செலுத்த முடியவில்லை.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் டி.வி. புத்தூர்பகுதியை சேர்ந்த22 பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். பின்னர் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2011 ஆம் ஆண்டில் எங்கள் ஊரை சேர்ந்த 4 பேர் தனியார் நிறுவனத்தில் மாதம் 300 வீதம் 70 மாதம் செலுத்தினால் போனஸ் தொகையுடன் பணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தனர். அதன் பேரில் மாதம்தோறும் மிக சிரமப்பட்டு பணம் செலுத்தி வந்தோம். ஆனால் குடும்ப கஷ்டங்களை காரணமாக தொடர்ந்து பணம் செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் நாங்கள் கட்டிய லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை மீண்டும் கேட்டால் மேற்படி நபர்கள் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர். ஆகையால் தனியார் நிறுவனத்திடம் இருந்து எங்களுக்கு சேர வேண்டிய தொகையை உடனடியாக பெற்று தர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • குறைந்த விலையில் தங்க நாணயம் வழங்குவதாக மோசடி
    • கலெக்டர் அலுவலகத்தில் 1,500 பேர் மனு கொடுத்தனர்

    வேலூர்:

    தமிழகம் முழுவதும் தனியார் நிறுவனம் ஒன்று குறைந்த விலையில் தங்க நாணயம் வழங்குவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்று மோசடி செய்துள்ளது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள அந்த நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர்.

    அதேபோல் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட் டது. பொதுமக்கள் தாங்கள் இழந்த பணத்தை திரும்பி பெறு வதற்காக அந்தந்த மாவட்டங்களில் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

    அதன்படி, வேலூர் கலெக்டர் அலுவலகத்திலும் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. நேற்று வரை 1,500 பேர் மனுக்கள் கொடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஈரோடு அருகே தனியார் நிதி நிறுவனத்தில் பண மோசடியில் ஈடுபட்டதாக பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார்(32). எம். சி.ஏ பட்டதாரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்று நான் மற்றொரு தனியார் நிதி நிறுவனத்தில் எனது பெயரில் 15 பவுன் நகையை அடமானம் வைத்துள்ளேன். அந்த நகையை நீங்கள் மீட்டு அதற்குண்டான பணத்தை தருமாறு அந்த நிதி நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டார்.

    இதை உண்மை என்று நம்பிய அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பிரேம்குமார் வங்கி கணக்கில் 2 தவணையாக ரூ. 3.50 லட்சம் போட்டு உள்ளனர். பின்னர் அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பிரேம்குமார் கூறிய நிதி நிறுவனத்திற்கு சென்று விவரங்கள் கேட்டபோது அப்படி ஒரு பெயரில் நகை அடமானம் வைக்கப்படவில்லை என தெரிய வந்தது. பிரேம்குமார் மோசடி செய்து பணம் பெற்றதும் தெரிய வந்தது.

    இது குறித்து அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பிரேம்குமார் க்கு போன் செய்த போது வருகிறேன் என்று கூறி காலம் தாழ்த்தி வந்து உள்ளார். இது தொடர்பாக நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில் மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பிரேம்குமார் சென்றது போலீசாருக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் பிரேம்குமாரை மடக்கி பிடித்தனர். அப்போது அந்த நிதிநிறுவனத்தில் பிரேம்குமார் இதே போல் மோசடியில் ஈடுபட முயன்றது தெரிய வந்தது. பிரேம்குமாரை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    விசாரணையில் பிரேம்குமார் ஏற்கனவே ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நீதி நிறுவனத்தில் இதே போல் மோசடியில் ஈடுபட்டு பணத்தை பெற்றது தெரிய வந்தது.

    மேலும் இவர் மீது நாமக்கல்லில் பொருளாதார குற்றப்பிரிவில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இது குறித்து ஈரோடு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர்.

    பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். பிரேம்கு மாருக்கு நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது உதவி செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சவுரிபாளையத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு செயல்பட்டு வருகிறது.
    • வாலிபர்கள் எங்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் புகைப்படத்தை அனுப்பிய பெண், தான் இங்கே தங்கி இருப்பதாகவும், ஆன்லைன் மூலமாக பணம் அனுப்பினால் ஜாலியாக உல்லாசம் அனுபவிக்கலாம் என கூறினார்.

    கோவை:

    கோவை சவுரிபாளையத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு செயல்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பில் சூப்பர்வைசராக ராஜேந்திரன் (வயது 84) என்பவர் உள்ளார்.

    சம்பவத்தன்று இந்த குடியிருப்பிற்கு சில வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அங்கு இருந்த காவலாளியிடம் தங்களது செல்போனில் உள்ள சில பெண்களின் போட்டோவை காட்டினர். பின்னர் அவர்கள் தங்கி இருக்கும் குடியிருப்பை காட்டுங்கள் என கூறியுள்ளனர்.

    அதனை பார்த்த காவலாளி இவர்கள் யாரும் இங்கு தங்கவில்லை என கூறினார். அந்த வாலிபர்கள் எங்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் புகைப்படத்தை அனுப்பிய பெண், தான் இங்கே தங்கி இருப்பதாகவும், ஆன்லைன் மூலமாக பணம் அனுப்பினால் ஜாலியாக உல்லாசம் அனுபவிக்கலாம் என கூறினார்.

    அதனை நம்பி நாங்கள் பணத்தை அனுப்பி வைத்தோம். அதன் பின்னர் இங்கு வந்து அந்த பெண்ணிடம் ஜாலியாக இருப்பதற்காக வந்தோம் என்றனர். இதுகுறித்து காவலாளி, சூப்பர்வைசர் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர் இது குறித்து பீளமேடு போலீசில் எங்களது அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக சில போலியான முகவரியை கொடுத்து வாலிபர்களிடம் பணத்தை பெற்றுஏமாற்றி உள்ளனர். எனவே எங்களது அடுக்குமாடி குடியிருப்பில் தவறான முறையில் சித்தரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 8 லட்சம் மோசடி செய்ததாக கணவன்-மனைவி மீது புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    கோவை:

    கோவை வெள்ளலூர் ஆர்.கே. கார்டன் பகுதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (60), இவரது மனைவி சுப்புலட்சுமி (58). இவர்கள் இருவரும் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.

    இவர்களிடம் வெள்ளலூர் தேனீஸ்வரர் கோவில் வீதியை சேர்ந்த தனராஜ் மற்றும் அவரது உறவினர்கள் சீட்டு கட்டி வந்துள்ளனர்.

    ஆனால் சீட்டு முடிந்த பின்னரும் கணவன் - மனைவி பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்து வந்துள்ளனர். இது குறித்து தனராஜ் போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.

    அதில் பாலகிருஷ்ணனும் அவரது மனைவி சுப்பு லட்சுமியும் ரூ. 8 லட்சம் வரை மோசடி செய்து உள்ளதாக தெரிவித்து இருக்கிறார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சோழிங்கநல்லூர் அருகே அமெரிக்க டாலர் தருவதாக கூறி ஜெராக்ஸ் கடை உரிமையாளரிடம் ரூ. 1½ லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    சோழிங்கநல்லூர்:

    பனையூரை சேர்ந்தவர் ரியாஸ். கானாத்தூரில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக இவரது கடைக்கு வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்து சென்றார்.

    ரியாசிடம் பேச்சுக் கொடுத்த அவர் தன்னிடம் ரூ. 3 லட்சம் மதிப்பில் அமெரிக்க டாலர்கள் உள்ளன. ரூ. 1½ லட்சம் ரொக்கம் கொடுத்தால் அமெரிக்க டாலரை தருவதாக கூறினார்.

    இதனை நம்பிய ரியாஸ் அமெரிக்க டாலரை வாங்க ஒப்புக்கொண்டார். நேற்று மாலை அவர் சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே வரவழைத்து அந்த வாலிபரிடம் ரூ. 1½ லட்சத்தை கொடுத்தார்.

    பணத்தை வாங்கிக் கொண்ட வாலிபர் பின்னர் ரியாசிடம் காகிதப் பார்சலை கொடுத்தார். அதில் அமெரிக்க டாலர்கள் இருப்பதாக கூறினார். அதனை பெற்றுக் கொண்ட ரியாஸ் வீட்டுக்கு வந்ததும் பார்சலை பிரித்து பார்த்தார்.

    அதில், வெற்றுக் காகிதங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அமெரிக்க டாலர் கொடுப்பதாக மர்ம வாலிபர் ரூ. 1½ லட்சத்தை பறித்து சென்று இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து ரியாஸ் செம்மஞ்சேரி போலீசில் புகார் செய்தார். மோசடியில் ஈடுபட்ட வாலிபர் குறித்த மற்ற விபரங்கள் அவருக்கு தெரியவில்லை. மோசடி வாலிபரை பிடிக்க போலீசார் கண்காணிப்பு காமிராவில் பதிவான அவரது உருவத்தை வைத்து விசாரித்து வருகின்றனர்.
    ஆன்லைனில் திருமணத்துக்கு பதிவு செய்தவரிடம் பெண் குரலில் பேசி பண மோசடி செய்த வாலிபரை கைது செய்தனர்.
    போரூர்:

    பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்(42). தனியார் நிறுவன ஊழியர்.

    இவர் கடந்த 2017ம் ஆண்டு தனது திருமணத்திற்கு பெண் வரன் வேண்டி ஆன்லைன் மூலம் பதிவு செய்து இருந்தார். சிலநாட்களில் ஆனந்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட இளம்பெண் ஒருவர் தங்களின் முழு விபரங்களையும் ஆன்லைனில் பார்த்து விட்டேன். எனக்கு மிகவும் பிடித்து விட்டது. தங்களை திருமணம் செய்து கொள்ள ஆசை படுகிறேன் என்று தெரிவித்தார்.

    இதில் மயங்கிய ஆனந்த் அடிக்கடி செல்போன் மூலம் அந்த பெண்ணிடம் பேசி வந்தார். அப்போது ஒரு நாள் ஆனந்தை தொடர்பு கொண்ட பெண் தனது சித்தியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் மருத்துவ சிகிச்சைக்கு பணம் வேண்டும் என்று கேட்டார்.

    உடனடியாக ஆனந்த் ரூ.45 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தினார். பின்னர் சில தினங்களில் மீண்டும் தொடர்பு கொண்ட பெண் மருந்து வாங்க பணம் வேண்டும் என்று கேட்டவுடன் ரூ.12ஆயிரத்தை அதே வங்கி கணக்கில் செலுத்தினார் ஆனந்த். பின்னர் அந்த பெண் தீடீரென தலைமறைவானார். ஆனந்த்திற்கு வேறு பெண்ணுடன் திருமணம் முடிந்து விட்டது.

    இந்த நிலையில் ஒன்றரை வருட இடைவெளிக்கு பின் நேற்று முன்தினம் மீண்டும் ஆனந்த்தை தொடர்பு கொண்ட அந்த பெண் ஆசை வார்த்தை கூறி பேசினார். தனக்கு குளிர்சாதனப் பெட்டி வேண்டும் என்று கேட்டார். வாங்கி தருவதாக கூறிய ஆனந்த் வடபழனி அருகே வருமாறு பெண்ணை அழைத்தார்.

    தன்னிடம் பணம் பறித்த பெண்ணை பிடிக்க ஆனந்த் காத்திருந்தார். ஆனால் அங்கு வாலிபர் ஒருவர் மட்டும் வந்தார். சந்தேகமடைந்த ஆனந்த் அவரை மடக்கி பிடித்தார். தன்னிடம் பெண் குரலில் பேசி பணம் பறித்தது வாலிபர் என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    அந்த வாலிபரை வட பழனி போலிசில் ஒப்படைத்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலுசாமி விசாரணை நடத்தியதில் பெண் குரலில் பேசி மோசடியில் ஈடுபட்டது பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்(39) என்பது தெரியவந்தது. வேறு யாரிடமும் இதேபோல் பேசி மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்தில் அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார். #tamilnews
    வடமதுரை அருகே ரூ.10 லட்சம் மோசடி செய்த பார் உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    வடமதுரை:

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் துரை (வயது35). இவர் திருச்சி மாவட்டம் நடுப்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வடமதுரை, தென்னம்பட்டி, காணப்பாடி ஆகிய பகுதிகளில் மதுபான பார் எடுத்து நடத்தி வருகிறார்.

    தொழிலை மேம்படுத்துவதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்களிடம் சுமார் ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளார். ஆனால் முறையாக திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

    கடன் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளான துரை ஊரைவிட்டு தப்பி சென்றுள்ளார். அவரது 3 பார்களும் பூட்டப்பட்டு உள்ளன. இதனால் பணம் கொடுத்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை தேடி வருகின்றனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews
    கோவையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக என்ஜினீயர்கள், பட்டதாரிகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
    கோவை:

    கோவையை சேர்ந்த என்ஜினீயர்கள், பட்டதாரிகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் இன்று மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து ஒரு புகார் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:-

    கோவையில் தனியார் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று எங்களுக்கு கனடா, நியூசிலாந்து நாடுகளில் உள்ள நிறுவனங்களில் வேலை நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கி தருவதாக கூறியது.

    இதை நம்பி நாங்கள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கொடுத்தோம். ஆனால் நிறுவனத்தினர் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து நாங்கள் கேட்ட போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிறுவனத்தை மூடி விட்டு நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டனர். எங்களது பாஸ் போர்ட்டும் அந்த நிறுவனத்தினரிடம் தான் உள்ளது.

    எனவே எங்களை ஏமாற்றிய நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணம் மற்றும் பாஸ்போர்ட்டு ஆகியவற்றை மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    புகார் கொடுத்தவர்கள் கூறுகையில், கோவை மட்டு மல்லாது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் லட்சக்கணக்கில் இந்நிறுவனத்தில் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாக தெரிவித்தனர். #tamilnews
    ×