search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டதாரிகள்"

    • டிப்ளமோ, ஐ.டி.ஐ. பட்டதாரிகள் முகாமில் கலந்து கொள்ளலாம்.
    • போட்டி தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்க ப்பட உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மயிலாடுதுறை மகளிர் திட்டம் ஆகியவை இணைந்து மயிலாடு துறையில் உள்ள யூனியன் கிளப்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

    இதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ. பட்டதாரிகள் முகாமில் கலந்து கொள்ளலாம்.

    மேலும், இதில் திறன் பயிற்சி, அயல்நாட்டு வேலை வாய்ப்பு மற்றும் போட்டி தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்க ப்பட உள்ளது.

    எனவே, வேலை தேடுபவர்கள் சுயவிவர அறிக்கை, கல்விச்சா ன்றுகள், ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயனடை யலாம். மேலும், இதில் கலந்துகொள்ள விருப்ப முள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தங்களது சுயவிவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண். 04364-299790-ஐ தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.
    • 8 முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ, பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன.

    இதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணியி டங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இம்முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ, பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள லாம்.

    மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன்;-

    கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலிபணியிடங்களுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கூறினார்.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரி வித்துள்ளார்.

    மதுரை

    மத்திய பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு-2023 -ல் தமிழ்நாட்டில் உள்ள போட்டித் தேர்வர்கள் கலந்து கொள்ளலாம்.

    மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் (Staff Selection Commission, Government of India) "ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு - 2023 (Combined Graduate Level Examination, 2023)" தொடர்பான அறிவிப்பை 3.4.2023-அன்று வெளியிட்டுள்ளது.

    மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள் / சட்டப்பூர்வ அமைப்புகள்/ தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் "B" மற்றும் குரூப் "C" நிலையில், 7,500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவித்துள்ளது. இந்த தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

    பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் (Recruitment Notice) விரிவாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவரங்கள் https://ssc.nic.in/SSCFileServer/ PortalManagement/UploadedFiles/noticeCG LE03042023.pdf என்ற இணையதள முகவரி யிலும் உள்ளது.

    இந்த காலிபணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்ப டையிலான இந்த தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 3.5.2023 மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 4.5.2023 ஆகும்.

    தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு, ஜூலை 2023-ல் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 7 மையங்க ளிலும். தெலுங்கானா மாநிலத்தில் 3 மையங்களிலும் ஆக மொத்தம் 21 மையங்கள், நகரங்களில் நடைபெற உள்ளது.

    தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான (Staff Selection Commission Exam - CGL) கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன. இந்த தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் (https://tamilnaducareerservices.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இந்த இணைய தளத்தில் " TN Career Services Employment" மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் "AIM TN" என்ற YouTube Channel-களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த தேர்விற்கான காணொளிகளை கண்டு பயன்பெறலாம்.

    இந்த தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரி வித்துள்ளார்.

    • விற்பனையாளர் பதவிக்கு கல்வி தகுதி 12-ம் வகுப்பு ஆகும். கட்டுநருக்கு கல்வி தகுதி 10-ம் வகுப்பு ஆகும். 134 பதவிகளுக்கு 11,000 க்கு மேற்பட்டவர்கள் ஆன்லைனில் விண்ணப் பித்திருந்தனர்
    • விற்பனையாளர் பதவிக்கான கல்வி தகுதி 12-ம் வகுப்பு ஆகும். ஆனால் பட்டதாரிகள், என்ஜினீயரிங் பட்டதாரிகள் பலரும் நேர்காணலுக்கு வந்திருந்தனர்

    நாகர்கோவில் :

    கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்ப டும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியி டங்களை நிரப்ப அரசு நட வடிக்கை மேற்கொண்டுள் ளது.

    குமரி மாவட்டத்தில் 117 விற்பனையாளர் பதவிக்கும் 17 கட்டுனர்கள் பதவிக்கும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. விற்பனையாளர் பதவிக்கு கல்வி தகுதி 12-ம் வகுப்பு ஆகும். கட்டுநருக்கு கல்வி தகுதி 10-ம் வகுப்பு ஆகும். 134 பதவிகளுக்கு 11,000 க்கு மேற்பட்டவர்கள் ஆன்லைனில் விண்ணப் பித்திருந்தனர். விண்ணப் பித்தவர்களுக்கான நேர்காணல் அழைப்பிதழ் அனுப்பப் பட்டு இருந்தது. இன்று அதற்கான நேர்கா ணல் தொடங்கியது.

    நாகர்கோவில் டதி பள்ளியில் விற்பனையாளர் கட்டுநர்களுக்கான நேர்காணல் நடந்தது.நேர்காணலில் பங்கேற்க காலையில் 500 பேருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.

    நேர்காணலில் பங்கேற்பதற்கு இன்று காலையிலேயே வாலிபர்கள், பெண்கள் பலரும் வந்திருந்தனர்.நேர்காணலுக்கு வந்த பெண்களை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அழைத்து வந்திருந்தனர். இதைத் தொடர்ந்து விற்பனையாளர் கட்டுனருக்கான நேர்காணல் தொடங்கியது. விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் களை அதிகாரி கள் சரிபார்த்தனர்.

    விற்பனையாளர் பதவிக்கான கல்வி தகுதி 12-ம் வகுப்பு ஆகும். ஆனால் பட்டதாரிகள், என்ஜினீயரிங் பட்டதாரிகள் பலரும் நேர்காணலுக்கு வந்திருந்தனர். இதே போல் கட்டுநருக்கான நேர்கா ணலுக்கும் பட்டதாரி பெண்கள் வந்திருந்தனர். நேர்காணலுக்கு வந்த வர்களின் ஒரிஜினல் சான்றிதழை அதிகாரிகள் சரி பார்த்தனர்.

    இதே போல் மாலையில் 500 பேருக்கு நேர்காணலில் பங்கேற்க அழைப்பானை அனுப்பப்பட்டிருந்தது. அவர்களும் மதியமே நேர்காணல் மையத்திற்கு வந்திருந்தனர். அவர்களது சான்றிதழ்களையும் அதிகாரிகள் சரிபார்த்தனர்.

    இன்று தொடங்கிய இந்த நேர்காணல் வருகிற 29-ந்தேதி வரை நடக்கிறது. வருகிற

    18, 24, 25-ந்தேதிகள் மட்டும் விடுமுறை தினங்களாகும். மற்ற நாட்களில் தினமும் காலை 500 பேருக்கும் மாலை 500 பேருக்கும் நேர்காணல் நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடந்த 2017-ம் ஆண்டு முதல் மீன்வள பல்கலைக்கழகத்துக்கு கடிதம் எழுதிவருகிறது.
    • மீன் வளடெக்னாலஜி, கோஸ்டல் என்ஜினியரிங் ஆகிய படிப்புகளை தகுதியாக சேர்த்துள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் ராமசாமி முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம், பி.டெக் மீன்வள பொறியியல் முடித்தவர்களை மீன்வள ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் பணிக்கு டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என கடந்த 2017-ம் ஆண்டு முதல் மீன்வள பல்கலைக்கழகத்துக்கு கடிதம் எழுதிவருகிறது.

    இந்நிலையில், தற்போது டி.என்.பி.எஸ்.சி மீன்வள உதவி ஆய்வாளர் 24 பணியிடத்திற்கும், மீன்வள ஆய்வாளர் 64 பணியிடத்திற்கும் தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இதில் மீன் வளடெக்னாலஜி (டிப்ளமோ நிலை), கோஸ்டல் இன்ஜினியரிங் ஆகிய படிப்புகளை தகுதியாக சேர்த்துள்ளது.

    மீன்வள பொறியியல் படித்தவர்களை மேற்கண்ட தேர்வுக்கு தகுதியாக சேர்க்காதது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே, மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர், மீன்வளத்துறை ஆணையர் உரிய நடவடிக்கை எடுத்து மீன்வள பொறியியல் படித்த மாணவர்களை தேர்வு எழுத அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இல்லையெனில் கடந்த ஜந்து ஆண்டுகளாக படித்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு மானியத்துடன் வேளாண்மை சார்ந்த புதிய தொழில் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    • தொழில் தொடங்க விரிவான திட்ட அறிக்கை குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் அதற்கு மேலும் சமர்ப்பிக்கலாம்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார் திருநகரி வட்டாரத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம் நடப்பு ஆண்டில் நாலுமாவடி, புறையூர், கருவேலம்பாடு, உடையார் குளம், மளவராயநத்தம், அழகப்பபுரம், குரங்கணி, புன்னக்காயல் ஆகிய பஞ்சாயத்துகளில் கலைஞ ரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    இக்கிராம பஞ்சாயத்து களில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டம் பெற்ற 21 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட வேலையில்லா பட்டதாரி ஒருவருக்கு அரசு மானியத்துடன் வேளாண்மை சார்ந்த புதிய தொழில் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்க கூடிய திட்டங்களின் கடன் உதவி பெற்று சுய தொழில்கள் தொடங்கலாம்.

    இதற்கு 10 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், மற்றும் வங்கியில் கடன் உதவி பெற்று திட்டம் தொடங்குபவர் அதற்குரிய ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களுடன் விண்ணப்பம் மற்றும் திட்ட அறிக்கை ஆகியவற்றை வேளாண்மை உதவி இயக்குனர் ஆழ்வார் திருநகரி அலுவலகத்தை அணுகிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    தொழில் தொடங்க விரிவான திட்ட அறிக்கை குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் அதற்கு மேலும் சமர்ப்பிக்கலாம். அரசு நிதி உதவி 25 சதவீதம் மானியம் அல்லது ரூ.1 லட்சம் வரை மூலதன மானியம் வழங்கப்படும். மேலும் கூடுதல் விபரங்கள் அறிய வேளாண்மை உதவி இயக்குனர் தென் திருப்பேரை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என வட்டார வேளாண் உதவி இயக்குனர் அல்லிராணி தெரிவித்துள்ளார்.

    • மதுரையில் 2-வது நாளாக சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் திறன் தகுதித்தேர்வில் 525 பட்டதாரிகள் பங்கேற்றனர்.
    • இந்த தேர்வு பணிகளை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார், டி.ஐ.ஜி. பொன்னி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    மதுரை

    தமிழக போலீஸ் துறையில் காலியாக உள்ள 444 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்து தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. 197 மையங்களில் நடைபெற்ற இந்த எழுத்து தேர்வை 1 லட்சத்து 73 ஆயிரத்து 487 பேர் எழுதினர்.

    இந்த நிலையில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆயுதப்படை மைதானங்களில் நடந்து வருகிறது.

    மதுரையில் சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி திறன் தேர்வுகள் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தென் மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் 525 பேர் கலந்து கொண்டனர். இதில் அவர்கள் உடல் தகுதிகள் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.

    இந்த நிலையில் 2-வது நாளான இன்று அவர்களுக்கான உடல் திறன் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. குண்டு எறிதல், கயிறு ஏறுதல், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதி பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

    இந்த தேர்வு பணிகளை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார், டி.ஐ.ஜி. பொன்னி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    • பட்டதாரி இளைஞர்களுக்கு 25 சதவீ தம் அல்லது அதிகபட்ச நிதி உதவியாக ரூ.1லட்சம் மானியம்
    • திட்டத்தின் கீழ் மானிய உதவி பெற விரும்பும் வேளாண்மை பட்டதாரிகளின் வயது 21-ல் இருந்து 40-க் குள் இருக்க வேண்டும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் உள்ள 22 கிராம ஊராட்சிகளில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல், இளநிலை பட்டப்பிரி வில் சான்று பெற்ற இளம் தொழில் முனைவோருக்கு, அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி இளைஞர்களுக்கு 25 சதவீ தம் அல்லது அதிகபட்ச நிதி உதவியாக ரூ.1லட்சம் மானியமாக வழங்கப்படும்.

    இந்த திட்டத்தின் கீழ் மானிய உதவி பெற விரும்பும் வேளாண்மை பட்டதாரிகளின் வயது 21-ல் இருந்து 40-க் குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கக்கூடாது. ஒரு குடும்பத்திற்கு ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே நிதி உதவி பெற தகுதி உடையவர் ஆவார்.

    வருகிற 15 -ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எனவே தகுதியுடைய தொழில் தொடங்கவிருக்கும் வேளாண் பட்டதாரிகள் உரிய விண்ணப்பம் மற்றும் விரிவான திட்ட அறிக்கை யுடன் கல்வி சான்றிதழ், ரேசன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்காக இன்று கடைசி நாள் என்பதால் காலை முதலே ஈரோடு முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பட்டதாரி, முதுகலை பட்டதாரிகள் குவிந்தனர்.
    • குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023-ம் கல்வியாண்டில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி நிலவரப்படி காலி யாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

    இதற்காக அனைத்து மாவட்டத்திலும் கல்வி மாவட்டங்களில் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முறையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

    இதில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய 5 கல்வி மாவட்டங்களிலும் பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்-20, ஆங்கிலம்-1, கணிதம்-4, அறிவியல்-14, சமூக அறிவியல்-8 என 47 காலி பணியிடங்களும், முதுகலை ஆசிரியர் தமிழ்-12, ஆங்கிலம்-7, கணிதம்-10, வேதியியல்-11, வணிகவியல்-18, பொருளாதாரம்-25, வரலாறு-7, கணினி அறிவியல்-2 என 92 காலி பணியிடங்கள் உள்ளதாக ஈரோடு முதன்மை கல்வி அலுவலக அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

    இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்காக இன்று கடைசி நாள் என்பதால் காலை முதலே ஈரோடு முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பட்டதாரி, முதுகலை பட்டதாரிகள் குவிந்தனர். அவர்கள் அவர்களது விண்ணப்ப த்தினை கைப்பட எழுதி, ஈரோடு கல்வி மாவட்ட அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பித்தனர்.

    இதேபோல் பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய கல்வி மாவட்ட அலுவலகத்திலும் விண்ணப்பிக்க அதிகளவிலான பட்டதாரிகள் குவிந்தனர். சிலர் மின்னஞ்சல் வாயிலாகவும் கல்வி மாவட்ட அலுவலருக்கு விண்ணப்பித்துள்ளனர்.

    விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது மின்னஞ்சல் வாயிலாக அனுப்பலாம் என்றும், குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்ற (டெட்) பட்டதாரிகளை தற்காலிகமாக நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
    • 67 பள்ளிகளில் 86 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    திருப்பூர் :

    தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்ற (டெட்) பட்டதாரிகளை தற்காலிகமாக நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    திருப்பூர், தாராபுரம், உடுமலை, பல்லடம் உள்ளிட்ட கல்வி மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மாவட்ட அலுவலகத்தில் கல்வி விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.திருப்பூர் கல்வி மாவட்ட அளவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்க பட்டதாரிகள் அலைமோதினர். முதல் நாளான நேற்று முன்தினம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 106 பேர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 86 பேர், முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 127 பேர் என மொத்தம் 319 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.மேலும் திருப்பூரில் தொடக்க கல்வித்துறையின் கீழ், 117 இடைநிலை, 54 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் 67 பள்ளிகளில் 86 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விருப்பமுள்ளோர்இன்று மாலை, 5மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மயிலம், தமிழ் கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா: மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டது.
    • விழாவில் சிவக்குமார் எம்.எல்.ஏ., மற்றும் திண்டிவனம் போலீஸ் டி.எஸ்.பி. அபிஷேக் குப்தா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    மயிலம், தமிழ் கலை அறிவியல் கல்லூரியில் 84-ம் ஆண்டு கல்லூரி நிறுவியோர், மற்றும் விளையாட்டு விழா நடந்தது இதில் மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ஆம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார் கல்லூரி செயலாளர் ராஜுவ் குமார் ராஜேந்திரன், முன்னிலை வகித்தார் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். விழாவில் சிவக்குமார் எம்.எல்.ஏ., மற்றும் திண்டிவனம் போலீஸ் டி.எஸ்.பி. அபிஷேக் குப்தா ஆகியோர்கள் கலந்து கொண்டு, வாலிபால், கபடி, கோகோ, ஓட்டப்பந்தயம், கவிதை, கட்டுரை, பாட்டு, கோலப் போட்டி, ஓவியப், போட்டி, நடனப்போட்டி, ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள், மற்றும் கல்லூரியில் படித்து முடித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    இதில் சென்னை மத்திய நிறுவன செம்மொழி தமிழாய்வு முன்னாள் பதிவாளர் மாநில சட்ட ஆட்சிமொழி ஆணைய உறுப்பினருமான பேராசிரியர் முத்துவேல் மற்றும் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் லட்சாராமன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள், நிகழ்ச்சியில் துறைத் தலைவர்கள் வீரமுத்து அனுராதா, ஜீவா, வேதாசலம், மற்றும் அலுவலகப் பணியாளர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் முடிவில் துறை தலைவி முத்துலட்சுமி நன்றி கூறினார்.

    ×