என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் ரேசன் கடை ஊழியர் பணிக்கு நேர்காணலுக்கு வந்த பட்டதாரிகள் - பெண்களும் குவிந்தனர்
- விற்பனையாளர் பதவிக்கு கல்வி தகுதி 12-ம் வகுப்பு ஆகும். கட்டுநருக்கு கல்வி தகுதி 10-ம் வகுப்பு ஆகும். 134 பதவிகளுக்கு 11,000 க்கு மேற்பட்டவர்கள் ஆன்லைனில் விண்ணப் பித்திருந்தனர்
- விற்பனையாளர் பதவிக்கான கல்வி தகுதி 12-ம் வகுப்பு ஆகும். ஆனால் பட்டதாரிகள், என்ஜினீயரிங் பட்டதாரிகள் பலரும் நேர்காணலுக்கு வந்திருந்தனர்
நாகர்கோவில் :
கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்ப டும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியி டங்களை நிரப்ப அரசு நட வடிக்கை மேற்கொண்டுள் ளது.
குமரி மாவட்டத்தில் 117 விற்பனையாளர் பதவிக்கும் 17 கட்டுனர்கள் பதவிக்கும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. விற்பனையாளர் பதவிக்கு கல்வி தகுதி 12-ம் வகுப்பு ஆகும். கட்டுநருக்கு கல்வி தகுதி 10-ம் வகுப்பு ஆகும். 134 பதவிகளுக்கு 11,000 க்கு மேற்பட்டவர்கள் ஆன்லைனில் விண்ணப் பித்திருந்தனர். விண்ணப் பித்தவர்களுக்கான நேர்காணல் அழைப்பிதழ் அனுப்பப் பட்டு இருந்தது. இன்று அதற்கான நேர்கா ணல் தொடங்கியது.
நாகர்கோவில் டதி பள்ளியில் விற்பனையாளர் கட்டுநர்களுக்கான நேர்காணல் நடந்தது.நேர்காணலில் பங்கேற்க காலையில் 500 பேருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.
நேர்காணலில் பங்கேற்பதற்கு இன்று காலையிலேயே வாலிபர்கள், பெண்கள் பலரும் வந்திருந்தனர்.நேர்காணலுக்கு வந்த பெண்களை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அழைத்து வந்திருந்தனர். இதைத் தொடர்ந்து விற்பனையாளர் கட்டுனருக்கான நேர்காணல் தொடங்கியது. விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் களை அதிகாரி கள் சரிபார்த்தனர்.
விற்பனையாளர் பதவிக்கான கல்வி தகுதி 12-ம் வகுப்பு ஆகும். ஆனால் பட்டதாரிகள், என்ஜினீயரிங் பட்டதாரிகள் பலரும் நேர்காணலுக்கு வந்திருந்தனர். இதே போல் கட்டுநருக்கான நேர்கா ணலுக்கும் பட்டதாரி பெண்கள் வந்திருந்தனர். நேர்காணலுக்கு வந்த வர்களின் ஒரிஜினல் சான்றிதழை அதிகாரிகள் சரி பார்த்தனர்.
இதே போல் மாலையில் 500 பேருக்கு நேர்காணலில் பங்கேற்க அழைப்பானை அனுப்பப்பட்டிருந்தது. அவர்களும் மதியமே நேர்காணல் மையத்திற்கு வந்திருந்தனர். அவர்களது சான்றிதழ்களையும் அதிகாரிகள் சரிபார்த்தனர்.
இன்று தொடங்கிய இந்த நேர்காணல் வருகிற 29-ந்தேதி வரை நடக்கிறது. வருகிற
18, 24, 25-ந்தேதிகள் மட்டும் விடுமுறை தினங்களாகும். மற்ற நாட்களில் தினமும் காலை 500 பேருக்கும் மாலை 500 பேருக்கும் நேர்காணல் நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்