search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்பத்திரி பெண்"

    • தனியார் ஆஸ்பத்திரியில் நர்சிங் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.
    • எலிசபெத் ராணி, தோழி ஆத்ரின் மேரியிடம் ஹேரி அருள்ராஜ் தன்னை ஏமாற்றுவதாக தெரிவித்துள்ளார்.

    காரைக்காலை அருகே கோட்டுச்சேரி கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வம் அமல்ராஜ். இவரது மனைவி எலிசபெத் ராணி(வயது45). எலிசபெத் ராணி காரைக்காலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சிங் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். எலிசபெத் ராணிக்கு, சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரியும் ஆத்ரின் மேரி என்பவர் பழக்கம், ஆத்ரின் மேரி, கடந்த 2020-ல், அதே ஊரைச்சேர்ந்த ஹரி அருள்ராஜ்(39) என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார். 

    சிறிது நாள் நல்லவர் போல் நடித்த ஹரி அருள்ராஜ், செக் குடியரசு நாட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தான் வேலை செய்வதாகவும், அங்குள்ள நர்ஸ் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. அந்த வேலையை தான் வாங்கித்தருவதாகவும் கூறி, கடந்த 2021ல் தனது வங்கி கணக்கிற்கு, ரூ.1 லட்சத்து ஐம்பதாயிரத்தை அனுப்பிவைக்கும்படி எலிசபத் ராணியிடம் பணத்தை பெற்றுள்ளார். 2 மாதம் ஆகியும், வேலை வாங்கித்தராததால், ஹரி அருள்ராஜிடம் வேலை தொடர்பாக கேட்ட பொழுது, விரைவில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி வந்ததாக தெரிகிறது. இது குறித்து, எலிசபெத் ராணி, தோழி ஆத்ரின் மேரியிடம் ஹேரி அருள்ராஜ் தன்னை ஏமாற்றுவதாக தெரிவித்துள்ளார். 

    தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம், எலிசபெத் ராணி ஹரி அருள் ராஜை செல்போனில் தொடர்பு கொண்டு, வெளிநாட்டில் வேலை வேண்டாம். கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுமாறு கேட்டுள்ளார். அதற்கு, ஹரி அருள்ராஜ் பணத்தை கொடுக்க முடியாது. இதற்கு மேல் பணத்தை கேட்டு தொந்தரவு செய்தால், காரைக்கால் வந்து உன்னை கொலை செய்து புதைத்து விடுவேன் என்றும் கொலை மிரட்டல் விடுத்ததார் இதனால் அதிர்ச்சி யடைந்த எலிசபெத் ராணி, கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீ சார் வழக்குப்பதிவு செய்து, ஹரி அருள்ராஜை தேடிவருகின்றனர்.

    ×