என் மலர்
நீங்கள் தேடியது "bar owner"
- மதுரையில் பார் உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த ஒருவரும் சிக்கினார்.
மதுரை
செக்கானூரணி நேதாஜி தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 57). இவர் மதுரை சுப்பிரமணியபுரம் மேயர் முத்துபாலம் அருகில் உள்ள டாஸ்மாக் அருகே பார் நடத்தி வருகிறார்.
நேற்று இவர் வேளாண் பொறியியல் அலுவலகம் அருகே நடந்து சென்றார். அவரை 2 பேர் வழிமறித்து கத்தி முனையில் பணம் பறித்து தப்பினர். இந்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.
தெற்கு துணை கமிஷனர் சாய்பிரனீத் மேற்பார்வையில், தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் 2 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் ஜெய்ஹிந்துபுரம், ராமையா தெருவை சேர்ந்த சந்தோஷ் குமார் (27), ஜீவா நகர், வள்ளுவர் தெருவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (27) என்பது தெரிய வந்தது.
சந்தோஷ்குமார் மீது செல்லூர், ஜெயஹிந்துபுரம், சுப்பிரமணியபுரம் ஆகிய போலீஸ் நிலையங்களில்
10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தட்சிணாமூர்த்தி மீது பாலமேடு, நாகமலை புதுக்கோட்டை, சோழ வந்தான், அவனியாபுரம், எஸ்.எஸ்.காலனி, சுப்பி ரமணியபுரம் ஆகிய காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இதனை தொடர்ந்து பார் உரிமையாளர் கணேசனை கத்திமுனையில் மிரட்டி பணம் பறித்த மேற்கண்ட இருவரையும் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் கைது செய்தனர்.
ஆயுதங்களுடன் வாலிபர் கைது
ஜெய்ஹிந்துபுரம் போலீசார் நேற்று தேவர் பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு ஒருவர் பதுங்கி இருந்தார். அவரிடம் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கொள்ளை அடிப்ப தற்காக ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த, ஜெய்ஹிந்த்புரம் பாலமுருகன் என்ற பஞ்சாயத்து பாலா (25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் துரை (வயது35). இவர் திருச்சி மாவட்டம் நடுப்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வடமதுரை, தென்னம்பட்டி, காணப்பாடி ஆகிய பகுதிகளில் மதுபான பார் எடுத்து நடத்தி வருகிறார்.
தொழிலை மேம்படுத்துவதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்களிடம் சுமார் ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளார். ஆனால் முறையாக திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
கடன் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளான துரை ஊரைவிட்டு தப்பி சென்றுள்ளார். அவரது 3 பார்களும் பூட்டப்பட்டு உள்ளன. இதனால் பணம் கொடுத்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை தேடி வருகின்றனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews






