search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrested for"

    • சிப்காட், 2-வது கிராசில் உள்ள கேஸ் கம்பெனி அருகே ஒரு நபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்தது
    • அவர் வைத்திருந்த ரூ. 1,500 மதி ப்பிலான 150 கிராம் கஞ்சா வையும் பறிமுதல் செய்தனர்

    ஈரோடு

    அரசால் தடை செய்ய ப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி பெருந்துறை போலீசார் நேற்று தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுப ட்டிருந்தனர்.

    அப்போது சிப்காட், 2-வது கிராசில் உள்ள கேஸ் கம்பெனி அருகே ஒரு நபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்ற போது, அவர்களைக் கண்ட தும் தப்பியோட முயன்ற ஒரு நபரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர் பீகார் மாநி லம், பால்தியா மாவட்டம், கோதை பாஹ் பகுதியைச் சேர்ந்த முகமது யாசின் மன்சூரி (வயது 21) என்பது தெரியவந்தது. போலீசார் மேற்கொண்ட சோதனை யில், அவர் 150 கிராம் கஞ்சா வைத்திரு ந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், அவர் வைத்திருந்த ரூ. 1,500 மதி ப்பிலான 150 கிராம் கஞ்சா வையும் பறிமுதல் செய்தனர்.

    • மீன் கடையில் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அனுமதி இன்றி மது விற்பனை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் சிறுவல்லூர் போலீஸ் சிறப்பு இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மூபன்சாலை பகுதியில் உள்ள ஒரு மீன் கடையில் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையில் சோதனை செய்தனர். அதில் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது .

    இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வாசு (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அன்கீத்குமாரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
    • கொலை செய்து வேறு இடத்தில் வீசியதை ஒப்புக்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை கந்தாம்பாளையத்திற்கு அருகே உள்ள தனியார் பள்ளியின் காம்பவுண்ட் அருகே கடந்த பிப்ரவரி மாதம் 13-ந் தேதி நிர்வாண நிலையில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெண் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் பிணமாக கிடந்தது உத்திரபிரதேச மாநிலம் மெரகாபாத் மாவட்டம் முஜாப்பூர் பகுதியை சேர்ந்த ரேஷ்மா காதூன் (36) என தெரியவந்தது.

    மேலும் ரேஷ்மா காதூனுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளதும், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்று ரேஷ்மா காதூன் தனியாக வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.

    அப்போது அதே மாவட்டத்தை சேர்ந்த அன்கீத்குமார் (24), ரேஷ்மா காதூனுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

    இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை கந்தாம்பாளையத்தில் உள்ள நூல் மில்லில் தங்கி பணியாற்றி வந்துள்ளனர்.

    இந்நிலையில் ரேஷ்மா காதூனுக்கும், அன்கீத்குமாருக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி ஏற்பட்ட தகராறில் அன்கீத்குமார் ரேஷ்மாகாதூனை தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார்.

    கொலையை மறைக்க ரேஷ்மா காதூனை நிர்வாணமாக்கி உடலை அருகே உள்ள தனியார் பள்ளி காம்பவுண்டிற்குள் வீசி விட்டு தலைமறைவானது தெரியவந்தது.

    இதையடுத்து பெருந்துறை போலீசார் தலைமறைவான அன்கீத்குமாரை தேடி வந்தனர். இந்நிலையில் பெருந்துறை பகுதியில் பதுங்கியிருந்த அன்கீத்குமாரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் ரேஷ்மா காதூனை கொலை செய்து வேறு இடத்தில் வீசியதை ஒப்புக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து கொலை செய்தல், கொலையை மறைத்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து அன்கீத்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தலைமறைவாகி கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு கொலையாளி பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.
    • போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஒங்கன்புரம் மற்றும் மரூர் பகுதியில் 10 பேர் கொண்ட 2 குழுவினர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

    அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒங்கன்புரம் பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் தாளவாடி பகுதியை சேர்ந்த விஜய குமார் (40), பசுவராஜ் (30), சித்துராஜ் (25), அருள்ராஜ் (26), மாதேஷ் (50) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவர்களி டமிருந்த இருசக்கர வாகனங்கள், 52 சீட்டுகள், பணம் ரூ.1,000 ஆகியவ ற்றையும் பறிமுதல் செய்த னர்.

    இதேபோல் மரூர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த தாளவாடி பகுதியை சேர்ந்த பசுவராஜ் (35), நசீப் (52), சிவராமு (35), சிவகுமார் (41), நந்தேஷ் (47) ஆகிய 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து 52 சீட்டுகள், பணம் ரூ.52 ஆயிரத்து 60 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    • அவர்களிடம் இருந்து 35 மதுபான பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், அறச்சலூர் போலீசார் தங்கள் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர்.

    அப்போது அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ரமேஷ் (24), ராமச்சந்திரன் (60), சடையப்பன் (61) ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 35 மதுபான பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • வருவாய் ஆய்வாளர் அன்பரசனை லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
    • இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    பெருந்துறையை சேர்ந்தவர் ரவி. இவர் தனது தாயாருக்கு வாரிசு சான்றி தழ் பெற பெருந்துறை வருவாய் அய்வாளர் அன்பரசனை அனுகினார்.

    அப்போது வாரிசு சான்றிதழ் வேண்டும் என்றால் ரூ.35 ஆயிரம் வேண்டும் என கூறினார். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என கூறி ரவி சென்று விட்டார்.

    சில நாட்களுக்கு பிறகு அன்ப ரசன், ரவியிடம் ரூ.25 ஆயிரம் தாருங்கள் வாரிசு சான்றிதழ் தருகிறேன் என கூறினார். அதற்கு ரவி சம்மதம் தெரிவிக்காததால் முடிவில் ரூ.8 ஆயிரம் தாருங்கள் வாரிசு சான்றிதழ் தருகிறேன் என கூறினார்.

    ஆனால் லஞ்சம் தர விரும்பாத ரவி இது குறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கூறினார். இதையடுத்து போலீசார் ரசாயனம் தடவிய ரூ.8 ஆயி ரத்தை அவரிடம் கொடுத்து அன்பரசனிடம் கொடுக்க சொன்னார்கள்.

    அதன்படி பெருந்துறை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு சென்ற ரவி தான் கொண்டு வந்த பணத்தை அன்பரசனிடம் கொடுக்க சென்றார்.

    ஆனால் அன்பரசன் பண த்தை வாங்காமல் அதை அலுவலக உதவியாளர் அலெக்சாண்டரிடம் கொடுக்க சொன்னார். இதையடுத்து ரவி ரூ.8 ஆயிரத்தை அலெக்சா ண்டரிடம் கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச பணத்துடன் அலெக்சா ண்டரை கையும், களவுமாக பிடித்தனர். பிடிபட்ட அலெக்சாண்டர் இந்த பணத்தை வருவாய் ஆய்வாளர் அன்பரசன் சொல்லி தான் வாங்கினேன் என ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார்.

    அதன்பேரில் வருவாய் ஆய்வாளர் அன்பரசனை லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து அன்பரசனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் போலீசார் சிறையில் அடைத்தனர்.

    • சத்தியமங்கலம் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் மோட்டர் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
    • அவர்களிடம் சட்ட விரோதமாக விற்பனை செய்ய 15 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    ஈரோடு

    சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி, பங்களாபுதூர் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.

    அப்போது சத்தியமங்கலம் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் மோட்டர் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் அதிக விலைக்கு விற்பதற்காக மது பாட்டில்களை எடுத்துச் செல்வது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் கோபி, டி.என்.பாளையத்தை சேர்ந்த நன்மணி முத்து (25), ரவிவர்மா (31) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பங்களாபுதூர் போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 39 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார்சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல பழனிகவுண்டம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படு வதாக கடத்தூர் போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    அதன்பேரில் அங்கு சென்ற போலீசாரை கண்டவுடன் மொபட்டில் தப்பி செல்ல முயன்ற நபர்களை மடக்கிப் பிடித்து சோதனையிட்டனர்.

    அப்போது அவர்களிடம் சட்ட விரோதமாக விற்பனை செய்ய 15 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    விசாரணையில் சிவங்கங்கை மாவட்டம், தேவகோட்டையை அடுத்துள்ள கண்டியூரை சேர்ந்த விக்னேஷ்வரன், கோவை ரத்தினபுரியை சேர்ந்த பசுபதி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பங்களாபுதூர் போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து 15 மதுபாட்டில்கள், மொபட் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • மயிலம்பாடி கரிய காளியம்மன் கோவில் பின்பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • மேலும் அவர்களிடம் இருந்து ஒரு சீட்டுக்கட்டு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,330 பறிமுதல் செய்யப்பட்டது.

    பவானி:

    பவானி மயிலம்பாடி கரிய காளியம்மன் கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மயிலம்பாடி கரிய காளியம்மன் கோவில் பின்பகுதியில் மறைவான இடத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மைலம்பாடியை சேர்ந்த ராஜேஷ் (37), செல்வராஜ் (34), சரவணன் (31), ஒலகடத்தை சேர்ந்த பூபதி (28), பாலன் (32), கண்ணடிபாளையத்தை சேர்ந்த சதீஷ் (34) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து ஒரு சீட்டுக்கட்டு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,330 பறிமுதல் செய்யப்பட்டது.

    • சந்தேகத்துக்கு இடமாக நின்று இருந்த 3பேரை பிடித்து விசாரணை நடத்தினர்
    • பையை வாங்கி பார்த்த போது அதில் 15 குடிநீர் குழாய்கள் இருப்பது தெரியவந்தது

    கோபி,

    கோபிசெட்டி பாளையம் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பெரிய மொடச்சூர் ரோடு அண்ணாநகர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்று இருந்த 3பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்களிடம் இருந்த ஒரு பையை வாங்கி பார்த்த போது அதில் 15 குடிநீர் குழாய்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் அவை திருடப்பட்டதும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3 ஆயிரம் ஆகும்.

    இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது கவுந்தப்பாடியை சேர்ந்த ராஜூ (40), சங்கர் (31), மற்றும் சத்தியமங்கலத்தை சேர்ந்த பரமேஸ் (25), என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • மது குடித்து விட்டு 3 பேரும் வெளியே வந்தனர்.
    • 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    செட்டிப்பாளையம்,

    கோவை மலுமச்ச ம்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 39). தொழிலாளி. இவர் தனது நண்பர்களான தமிழ்செல்வன், ஞான பிரகாசம் ஆகியோருடன் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார்.

    மது குடித்து விட்டு 3 பேரும் வெளியே வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த காரில் வந்த 5 பேருக்கும், இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் 3 பேரும் ஒரு மொபட்டில் சென்றனர். பின்னால் காரில் 5 பேரும் சென்றனர்.

    அப்போது மொபட்டில் சென்றவர்கள் காருக்கு வழி விடாமல் சென்றனர். இதனைடுத்து காரில் சென்றவர்கள் ஹாரன் அடித்து முந்தி சென்றனர். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கினர். தாக்குதலில் தாக்குபிடிக்க முடியாமல் தமிழ்செல்வன், ஞான பிரகாசம் ஆகியோர் அங்கு இருந்து ஓட்டம் பிடித்தனர்

    பிரபாகரன் மட்டும் சிக்கி கொண்டார். அவரை 5 பேர் கொண்ட கும்பல் தென்னை மட்டையால் தாக்கினர். பின்னர் பிரபாகரனை கீழே தள்ளி அங்கு இருந்த கல்லால் தலையில் தாக்கினர். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பிரபாகரன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து செட்டி ப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 5 பேர் கொண்ட கும்பலை தேடி வந்தனர். சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா க்களில் 5 பேர் கொண்ட கும்பல் காரில் தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனை கொண்டு போலீ சார் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்தநிலையில் அந்த கும்பலைச் சேர்ந்த 2 சிக்கினர். இவர்கள் தான் பேடிஎம் பயன்படுத்தி டாஸ்மாக் கடையில் மது வாங்கி இருக்கிறார்கள். அந்த விவரங்களை கொண்டு போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். மற்ற 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    5 பேரும் சிக்கியதும் அவர்களை கைது செய்து ஜெயிலில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

    • முத்தூரை சேர்ந்த கணேசன் என்பவர் பொன்னுசாமியின் மொபட்டை திருடியது தெரிய வந்தது.
    • இதையடுத்து போலீசார் கணேசனை கைது செய்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள மணிமலையை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் சென்னிமலை மாரி யம்மன் கோவில் பொங்கல் திருவிழாவுக்கு தனது மொபட்டில் வந்திருந்தார்.

    தொடர்ந்து அவர் மொபட்டை அந்த பகுதியில் நிறுத்தி விட்டு சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் வந்து பார்த்தபோது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மொபட்டை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் தேடி பார்த்தும் மொபட் எங்கும் கிடைக்கவில்லை.

    இது குறித்து பொன்னு சாமி சென்னிமலை போலீ சில் புகார் செய்தார். போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் முத்தூரை சேர்ந்த கணேசன் (வயது 37) என்பவர் பொன்னுசாமியின் மொபட்டை திருடியது தெரிய வந்தது. இவர் முத்தூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஊழி யராக வேலை பார்த்து வருகிறார்.

    இதையடுத்து போலீசார் கணேசனை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் கணேசனிடம் விசாரித்த போது, இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரு சக்கர வாகன ங்களை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்து மொபட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதைதொடர்ந்து கணேசனை போலீசார் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடை த்தனர்.

    • போலீசார் கண்காணிப்பு கேமிராவில் பதிவான 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
    • இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சதா சிவம். இவர் அந்த பகுதியில் டீ கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று இரவு சதாசிவம் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு சென்றார். மறு நாள் காலை வந்து கடையை திறந்தார். அப்போது கடையில் இருந்த ரூ.25 ஆயிரத்தை காணா ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பணத்தை யாரோ சிலர் திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் சென்னிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமி ராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதில் 2 பேர் காரில் வந்து டீக்கடையில் பணத்தை திருடி சென்றது பதிவாகி இருந்தது. இதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி அவர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் போலீசார் கண்காணிப்பு கேமிராவில் பதிவான 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் பவானி அருகே உள்ள காலிங்க ராயன்பாளையம் மூவேந்தர் நகரை சேர்ந்த மாரிமுத்து (31), ஈரோடு அடுத்த ஆர்.என்.புதூர் சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபு (32) எனவும், கடையில் பணத்தை திருடியதும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். ெதாடர்ந்து அவர்கள் பெருந்துறை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டி பாளையம் மாவட்ட சிறையில் அடைக்க ப்பட்டனர்.

    ×