என் மலர்
நீங்கள் தேடியது "வியாபாரி கைது"
- பாகிஸ்தானில் இருந்து வந்த ஆன்லைன் லிங்கில் அரபி கற்றுக் கொடுத்தவர்களில் சிலர் என்.ஐ.ஏ.வின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளனர்.
- ராஜா முகமதுவின் வீட்டுக்கு வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் அவரிடம் சுமார் 1 மணி நேரம் வரை விசாரணை நடத்தினர்.
பழனி:
கோவையில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு, நவம்பர் மாதத்தில் மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அமைப்பினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெரியகலையம்புத்தூரைச் சேர்ந்த ராஜா முகமது (வயது 35) என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது ராஜா முகமதுவின் செல்போன், லேப்டாப், ஹார்டு டிஸ்குகளை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். தற்போது ராஜா முகமது பழனி பகுதியில் தேங்காய் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்த ராஜா முகமது கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைனில் டிப்ளமோ சான்றிதழுக்காக அரபி மொழி கற்றுக் கொண்டிருந்தார். இது தொடர்பாக சில புத்தகங்களை ஆன்லைனில் வாங்கியுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து வந்த ஆன்லைன் லிங்கில் அரபி கற்றுக் கொடுத்தவர்களில் சிலர் என்.ஐ.ஏ.வின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் ராஜா முகமதுவின் வீட்டுக்கு வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் அவரிடம் சுமார் 1 மணி நேரம் வரை விசாரணை நடத்தினர்.
பின்பு அவரை பழனி டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்ததுடன் மேல் விசாரணைக்காக கோவைக்கு அழைத்துச் சென்றனர். அவர் கைது செய்யப்பட்டாரா? என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் தெரியவில்லை.
- திண்டுக்கல் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
- முறைகேடு செய்து ஈட்டியதா என்று விசாரணை.
திண்டுக்கல்:
டெல்லியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் நேற்று திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது. திருச்சி ரெயில்வே எஸ்.பி. ராஜன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், தனிப்பிரிவு காவலர் மணிவண்ணன் கொண்ட போலீசார் அந்த ரெயிலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகாவை சேர்ந்த நவநீத கிருஷ்ணன் (வயது 48) என்பவர் வைத்திருந்த பையை சோதனை நடத்தினர். அதில் ரூ.13 லட்சத்து 77 ஆயிரத்தி 900 பணம் இருந்தது.
இதுகுறித்து அவரிடம் கேட்ட போது தான் வெளிநாட்டு பணத்தை மாற்றி தரும் பணியில் இருப்பதாகவும், அதற்காக கமிசன் பெற்று வருவதாகவும் கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒரு நபருக்கு வெளிநாட்டு பணத்தை மாற்றிக் கொடுத்ததில் கிடைத்த பணத்தை தனது சொந்த ஊருக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால் அதற்குரிய எந்த ஆவணங்களும் அவரிடம் இல்லை.
இதனையடுத்து அந்த பணத்தை திண்டுக்கல் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் நவநீத கிருஷ்ணனை கைது செய்து இந்த பணம் உண்மையிலேயே வெளிநாட்டு பணத்தை மாற்றிக் கொடுத்ததில் கிடைத்ததா? அல்லது முறைகேடு செய்து ஈட்டியதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முஸ்தாக் கான் தனது வீட்டில் பாகிஸ்தான் நாட்டு கொடியை ஏற்றி உள்ளார்
- முஸ்தாக் கான் மீது தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று பா.ஜனதாவினர் போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராய்கர்:
சத்தீஸ்கர் மாநிலம் சரங்கர்-பிலைகர் மாவட்டம் அடல் சவுக் பகுதியை சேர்ந்தவர் முஸ்தாக் கான். இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் முஸ்தாக் கான் தனது வீட்டில் பாகிஸ்தான் நாட்டு கொடியை ஏற்றி உள்ளார். இது தொடர்பாக போலீசாருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று நடவடிக்கை எடுத்து முஸ்தாக் கானை கைது செய்தனர்.
அவர் மீது 153 'ஏ' பிரிவின் கீழ் (மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்கள் இடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதற்கு பாதகமான செயல்களை செய்தல்) வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அவரது வீட்டில் இருந்த பாகிஸ்தான் கொடியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அவர் மீது தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று பா.ஜனதாவினர் போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போதை பொருட்கள் விற்றதாக 9 பெண் உள்பட 40 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
- பாண்டியன் தோட்டத்தில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கஞ்சா, ேபாைத பொருட்கள் விற்பவர்களை கைது செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் நடந்த அதிரடி சோதனையில் குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்றதாக 9 பெண் உள்பட 40 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
எனினும் சிதம்பரம் பரங்கிபேட்டை பகுதியில் கஞ்சா பதுக்கி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பரங்கிப்பேட்டை பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவர் தனது வீட்டு தோட்டத்தில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து பாண்டியனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1500 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து சோதனை நடத்தினர்.
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை,
கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்றுதிருச்சி ரோடு ஹைவே காலனி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து சோதனை நடத்தினர். அதில், அவரது மோட்டார் சைக்கிளில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருச்சி ரோடு ஹைவே காலனியை சேர்ந்த ஜான் பீட்டர் (வயது 50) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளிடம் ரூ.62.64 லட்சம் மோசடி செய்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.
- பணத்தை ஆனந்த் தராமல் ஏமாற்றி வருவதாக கடந்த ஆண்டு புகார் பெறப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். விவசாயி. இவர் சங்கராபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் நெல் மற்றும் எள் உள்ளிட்ட விவசாய பொருட்களை நேரடி கொள்முதல் செய்தார். அவ்வாறு கொள்முதல் செய்த பொருட்களை மொத்தமாக தஞ்சை மாவட்டம், புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் விற்பனை செய்தார். அதற்குண்டான பணத்தை ஆனந்த் தராமல் ஏமாற்றி வருவதாக கடந்த ஆண்டு புகார் பெறப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை செய்தனர்.
சம்பவத்தன்று சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் ஆனந்த் என்பவர் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய வந்த போது போலீசார் விரைந்து சென்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சங்கராபுரம் பகுதிகளில் விவசாயிகளிடம் சுமார் 8000 நெல் மற்றும் எள் மூட்டைகள் கொள்முதல் செய்து அதற்குண்டான பணம் சுமார் ரூ.62,64,628 தராமல் ஏமாற்றி வந்தது தெரியவருகிறது. மேலும் அவர் கொடுத்த காசோலையும் வங்கியில் பணம் இல்லாமல் திருப்பி விட்டுள்ளனர். இவர் மீது அரியலூர் மாவட்டத்தில் இதே போன்று விவசாயிகளிடம் மோசடி செய்த வழக்கு நிலுவையில் உள்ளது தெரி யவருகிறது. போலீசார் ஆனந்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
- சிறுமிக்கு வெற்றிவேல் முருகன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
- சிறுமியின் உடலில் பல இடங்களில் சிகரெட்டால் சூடு வைத்தது மற்றும் அடித்ததற்கான காயங்கள் இருந்தன.
மதுரை:
விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை சேர்ந்தவர் குருநாதன். இவரது மகன் வெற்றிவேல்முருகன் (வயது 28). இவர்கள் இருவரும் மதுரையில் வீடு எடுத்து தங்கி பழ வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுமியை வெற்றிவேல் முருகன் திருமணம் செய்து தனியாக வசித்து வந்தார். அவருக்கு கஞ்சா மற்றும் மது பழக்கம் இருந்ததால், போதையில் சிறுமியை பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கி இருக்கிறார்.
அதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தபடி இருந்துள்ளார். சம்பவத்தன்று இரவும் சிறுமிக்கு வெற்றிவேல் முருகன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியை சரமாரியாக தாக்கி, வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு தப்பி சென்று விட்டார்.
கணவரின் சித்ரவதை தாங்காமல் அந்த சிறுமி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று வெற்றிவேல் முருகன் வீட்டின் பூட்டை உடைத்து சிறுமியை மீட்டனர்.
அப்போது சிறுமியின் உடலில் பல இடங்களில் சிகரெட்டால் சூடு வைத்தது மற்றும் அடித்ததற்கான காயங்கள் இருந்தன. அதுகுறித்து போலீசார் விசாரித்தபோது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெற்றிவேல் முருகன் தன்னை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து குடித்தனம் நடத்தி வந்ததாகவும், போதையில் பாலியல் சித்ரவதை செய்ததாகவும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சிறுமியை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். சிறுமி சித்ரவதைக்கு உள்ளானது குறித்த புகாரின்பேரில் வெற்றிவேல் முருகன் மீது குழந்தை திருமணம், போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர்.
தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் வெற்றிவேல் முருகன் மதுரை அண்ணாநகரில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தல்லாகுளம் போலீசார் அங்கு சென்று அந்த வீட்டை சுற்றிவளைத்தனர்.
பின்பு வீட்டுக்குள் இருந்த வெற்றிவேல் முருகனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- மோட்டார் சைக்கிளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை கொண்டு வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
- வியாபாரி மீது வழக்கு பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட்டு முன்னிலையில் அவரை ஆஜர் செய்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் நேற்று திருகண்டலம் ஊராட்சியை சேர்ந்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது மோட்டார் சைக்கிளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை கொண்டு வந்தவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர் மேட்டுப்பாளையம் கிராமம், பஜனை கோவில் தெருவில் வசித்து வரும் செல்லப்பா(வயது58) என்பது தெரியவந்தது. இவர் தனது கடைக்கு மோட்டார் சைக்கிளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வதை ஒப்புக்கொண்டார்.
எனவே, அவர் பையில் மறைத்து வைத்திருந்த புகையிலை பொருட்களுடன் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர், அவர் மீது வழக்கு பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்தனர்.
- போலீசார் மளிகை கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
- கடையில் 37 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் மூங்கில்பாளையம் வின்டெக்ஸ் நகரில் துரைசிங் (31) என்பவருக்கு சொந்தமான மளிகை கடை உள்ளது.
இந்த கடையில் அரசால் தடைசெய்யபட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் மளிகை கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கடையில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 37 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் வியாபாரி துரைசிங்கை கைது செய்தனர். மேலும் குட்காவையும் பறிமுதல் செய்தனர்.
- மீன் கடையில் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- அனுமதி இன்றி மது விற்பனை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சிறுவல்லூர் போலீஸ் சிறப்பு இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மூபன்சாலை பகுதியில் உள்ள ஒரு மீன் கடையில் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையில் சோதனை செய்தனர். அதில் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது .
இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வாசு (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- விஜயின் வீட்டுக்கு அடிக்கடி மாரேஷ் சென்று வந்துள்ளார்.
- சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் மாரேசின் அண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாரேசை மீட்டார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் அருகே நடந்த நெஞ்சை பதறவைக்கும் இந்த கொடூர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவில் உள்ள பட்டலபள்ளியை சேர்ந்தவர் விஜய் (வயது 36). இவர் சிந்தாமணி டவுனில் தனது மனைவி மாலாவுடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் மாரேஷ் (34). இவரது சொந்த ஊர் பாகேபள்ளி தாலுகா மந்தம்பள்ளி கிராமம் ஆகும். நண்பர்களான இவர்கள் இருவரும் சரக்கு ஆட்டோவில் துணிகளை எடுத்து கொண்டு கிராமம், கிராமமாக சென்று வியாபாரம் செய்து வந்தனர்.
இதனால் விஜயின் வீட்டுக்கு அடிக்கடி மாரேஷ் சென்று வந்துள்ளார். மாலாவுடனும் அவர் சிரித்து பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் விஜய், தனது மனைவியுடன் மாரேசுக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகித்துள்ளார். இந்த சந்தேகம் அவருக்கு நாளுக்கு நாள் வலுத்து வந்துள்ளது.
இதனால் மாரேசை கொலை செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று சரக்கு ஆட்டோவில் விஜய், மாரேஷ் மற்றும் தனது மற்றொரு நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு சித்தேப்பள்ளி கிராஸ் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றார். அங்கு சரக்கு ஆட்டோவை நிறுத்திய விஜய், மாரேசிடம் தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கூறி தகராறு செய்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த விஜய், மாரேசை கீழே தள்ளி தான் வைத்திருந்த கத்தியால், ஆட்டை அறுப்பது போல் மாரேசின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் மாரேசின் கழுத்தில் இருந்து ரத்தம் வெளியேறியது. அதில் விஜய் தனது வாயை வைத்து உறிஞ்சி ரத்தம் குடித்த கொடூரத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தை விஜயுடன் சென்ற அவரது மற்றொரு நண்பர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இதற்கிடையே சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் மாரேசின் அண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாரேசை மீட்டார். பின்னர் மாரேஷ் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இருதரப்பினரும் சமரச பேச்சுவார்த்தைக்கு தயாராகி வந்துள்ளனர்.
இந்தநிலையில், விஜய், மாரேசின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் திடீரென்று வைரலானது. இது காண்போரின் நெஞ்சை பதறவைப்பதாக இருந்தது. கடந்த 19-ந்தேதி நடந்த இந்த கொடூர சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த வீடியோவின் அடிப்படையில் கெஞ்சர்லஹள்ளி போலீசார் மாரேசிடம் புகார் பெற்று விஜயை கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தனது மனைவியுடன் மாரேஷ் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக எழுந்த சந்தேகத்தில் அவரது கழுத்தை அறுத்து ரத்தம் குடித்ததாக விஜய் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகமடைந்த துணி வியாபாரி நண்பரின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
- பிரபு (வயது 36). சாராய வியாபாரியான இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 26-ந்தேதி வலசக்கல்பட்டி ஏரிக்கரையில் சாராயம் காய்ச்சினார்.
- டி.எஸ்.பி. ராமச்சந்திரன் மேற்பார்வை யில் சப்-இன்ஸ்பெக்டர் அல்லிமுத்து தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிமுத்து மகன் பிரபு (வயது 36). சாராய வியாபாரியான இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 26-ந்தேதி வலசக்கல்பட்டி ஏரிக்கரையில் சாராயம் காய்ச்சியபோது டி.எஸ்.பி. ராமச்சந்திரன் மேற்பார்வை யில் சப்-இன்ஸ்பெக்டர் அல்லிமுத்து தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்தனர்.
அப்போது போலீசாரின் பிடியில் இருந்து தப்பிய பிரபு தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் கெங்கவல்லி அருகே நடுவலூரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது உறவினர் வீட்டில் தங்கியிருந்த பிரபுவை போலீசார் சுற்றி வளைத்தனர்.
இதை பார்த்ததும் அவர்களை தள்ளி விட்டு பிரபு ஓட்டம் பிடித்தார். உடனே போலீசார் துரத்திச் சென்று மடக்கி பிடித்து அவரை கைது செய்தனர்.






