search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trader arrested for"

    • போலீசார் மளிகை கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
    • கடையில் 37 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் மூங்கில்பாளையம் வின்டெக்ஸ் நகரில் துரைசிங் (31) என்பவருக்கு சொந்தமான மளிகை கடை உள்ளது.

    இந்த கடையில் அரசால் தடைசெய்யபட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் மளிகை கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கடையில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 37 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் வியாபாரி துரைசிங்கை கைது செய்தனர். மேலும் குட்காவையும் பறிமுதல் செய்தனர்.

    ×