என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பழனி அருகே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்க்க முயன்றதாக வியாபாரி கைது
    X

    ராஜா முகமது

    பழனி அருகே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்க்க முயன்றதாக வியாபாரி கைது

    • பாகிஸ்தானில் இருந்து வந்த ஆன்லைன் லிங்கில் அரபி கற்றுக் கொடுத்தவர்களில் சிலர் என்.ஐ.ஏ.வின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளனர்.
    • ராஜா முகமதுவின் வீட்டுக்கு வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் அவரிடம் சுமார் 1 மணி நேரம் வரை விசாரணை நடத்தினர்.

    பழனி:

    கோவையில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு, நவம்பர் மாதத்தில் மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அமைப்பினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெரியகலையம்புத்தூரைச் சேர்ந்த ராஜா முகமது (வயது 35) என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது ராஜா முகமதுவின் செல்போன், லேப்டாப், ஹார்டு டிஸ்குகளை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். தற்போது ராஜா முகமது பழனி பகுதியில் தேங்காய் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்த ராஜா முகமது கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைனில் டிப்ளமோ சான்றிதழுக்காக அரபி மொழி கற்றுக் கொண்டிருந்தார். இது தொடர்பாக சில புத்தகங்களை ஆன்லைனில் வாங்கியுள்ளார்.

    பாகிஸ்தானில் இருந்து வந்த ஆன்லைன் லிங்கில் அரபி கற்றுக் கொடுத்தவர்களில் சிலர் என்.ஐ.ஏ.வின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் ராஜா முகமதுவின் வீட்டுக்கு வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் அவரிடம் சுமார் 1 மணி நேரம் வரை விசாரணை நடத்தினர்.

    பின்பு அவரை பழனி டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்ததுடன் மேல் விசாரணைக்காக கோவைக்கு அழைத்துச் சென்றனர். அவர் கைது செய்யப்பட்டாரா? என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் தெரியவில்லை.

    Next Story
    ×