search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganja dealer arrested"

    • மோட்டார் சைக்கிளில் 3.400 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தார்.
    • இவர் ஏற்கனவே கஞ்சா விற்றதாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேவாரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீசார் டி.ரெங்கநாதபுரம் மயானப்பகுதியில் கஞ்சா விற்பதாக வந்த தகவலின் பேரில் அங்கு சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது தேவாரம் மூணாண்டிபட்டி வடக்கு தெருவை சேர்ந்த முத்துவீரன் (வயது48) என்பவர் மோட்டார் சைக்கிளில் 3.400 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தார்.

    போலீசார் அவரை கைது செய்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இவர் ஏற்கனவே கஞ்சா விற்றதாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து சோதனை நடத்தினர்.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்றுதிருச்சி ரோடு ஹைவே காலனி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து சோதனை நடத்தினர். அதில், அவரது மோட்டார் சைக்கிளில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருச்சி ரோடு ஹைவே காலனியை சேர்ந்த ஜான் பீட்டர் (வயது 50) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
    • சிறையில் அடைத்தனர்

    ஆற்காடு:

    ஆற்காடு டவுன் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் ஆற்காடு டவுன்போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் போலீசார் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆற்காடு அண்ணாநகர் மாசாபேட்டை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்கிற பகுடு பாஸ்கர் (வயது 33) என்பவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் பாஸ்கரை குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக் டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

    ×