search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மொபட்டை திருடிய பெட்ரோல் பங்க் ஊழியர் கைது
    X

    மொபட்டை திருடிய பெட்ரோல் பங்க் ஊழியர் கைது

    • முத்தூரை சேர்ந்த கணேசன் என்பவர் பொன்னுசாமியின் மொபட்டை திருடியது தெரிய வந்தது.
    • இதையடுத்து போலீசார் கணேசனை கைது செய்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள மணிமலையை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் சென்னிமலை மாரி யம்மன் கோவில் பொங்கல் திருவிழாவுக்கு தனது மொபட்டில் வந்திருந்தார்.

    தொடர்ந்து அவர் மொபட்டை அந்த பகுதியில் நிறுத்தி விட்டு சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் வந்து பார்த்தபோது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மொபட்டை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் தேடி பார்த்தும் மொபட் எங்கும் கிடைக்கவில்லை.

    இது குறித்து பொன்னு சாமி சென்னிமலை போலீ சில் புகார் செய்தார். போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் முத்தூரை சேர்ந்த கணேசன் (வயது 37) என்பவர் பொன்னுசாமியின் மொபட்டை திருடியது தெரிய வந்தது. இவர் முத்தூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஊழி யராக வேலை பார்த்து வருகிறார்.

    இதையடுத்து போலீசார் கணேசனை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் கணேசனிடம் விசாரித்த போது, இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரு சக்கர வாகன ங்களை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்து மொபட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதைதொடர்ந்து கணேசனை போலீசார் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடை த்தனர்.

    Next Story
    ×