search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stealing from tea shop"

    • போலீசார் கண்காணிப்பு கேமிராவில் பதிவான 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
    • இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சதா சிவம். இவர் அந்த பகுதியில் டீ கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று இரவு சதாசிவம் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு சென்றார். மறு நாள் காலை வந்து கடையை திறந்தார். அப்போது கடையில் இருந்த ரூ.25 ஆயிரத்தை காணா ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பணத்தை யாரோ சிலர் திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் சென்னிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமி ராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதில் 2 பேர் காரில் வந்து டீக்கடையில் பணத்தை திருடி சென்றது பதிவாகி இருந்தது. இதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி அவர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் போலீசார் கண்காணிப்பு கேமிராவில் பதிவான 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் பவானி அருகே உள்ள காலிங்க ராயன்பாளையம் மூவேந்தர் நகரை சேர்ந்த மாரிமுத்து (31), ஈரோடு அடுத்த ஆர்.என்.புதூர் சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபு (32) எனவும், கடையில் பணத்தை திருடியதும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். ெதாடர்ந்து அவர்கள் பெருந்துறை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டி பாளையம் மாவட்ட சிறையில் அடைக்க ப்பட்டனர்.

    ×