குடிநீர் குழாய் திருடிய 3 பேர் கைது

சந்தேகத்துக்கு இடமாக நின்று இருந்த 3பேரை பிடித்து விசாரணை நடத்தினர்பையை வாங்கி பார்த்த போது அதில் 15 குடிநீர் குழாய்கள் இருப்பது தெரியவந்தது
குடிநீர் குழாய் திருடிய 3 பேர் கைது
Published on

கோபி,

கோபிசெட்டி பாளையம் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பெரிய மொடச்சூர் ரோடு அண்ணாநகர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்று இருந்த 3பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்களிடம் இருந்த ஒரு பையை வாங்கி பார்த்த போது அதில் 15 குடிநீர் குழாய்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் அவை திருடப்பட்டதும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3 ஆயிரம் ஆகும்.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது கவுந்தப்பாடியை சேர்ந்த ராஜூ (40), சங்கர் (31), மற்றும் சத்தியமங்கலத்தை சேர்ந்த பரமேஸ் (25), என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com