search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டவிரோத மது விற்ற 4 பேர் கைது
    X

    சட்டவிரோத மது விற்ற 4 பேர் கைது

    • சத்தியமங்கலம் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் மோட்டர் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
    • அவர்களிடம் சட்ட விரோதமாக விற்பனை செய்ய 15 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    ஈரோடு

    சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி, பங்களாபுதூர் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.

    அப்போது சத்தியமங்கலம் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் மோட்டர் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் அதிக விலைக்கு விற்பதற்காக மது பாட்டில்களை எடுத்துச் செல்வது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் கோபி, டி.என்.பாளையத்தை சேர்ந்த நன்மணி முத்து (25), ரவிவர்மா (31) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பங்களாபுதூர் போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 39 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார்சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல பழனிகவுண்டம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படு வதாக கடத்தூர் போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    அதன்பேரில் அங்கு சென்ற போலீசாரை கண்டவுடன் மொபட்டில் தப்பி செல்ல முயன்ற நபர்களை மடக்கிப் பிடித்து சோதனையிட்டனர்.

    அப்போது அவர்களிடம் சட்ட விரோதமாக விற்பனை செய்ய 15 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    விசாரணையில் சிவங்கங்கை மாவட்டம், தேவகோட்டையை அடுத்துள்ள கண்டியூரை சேர்ந்த விக்னேஷ்வரன், கோவை ரத்தினபுரியை சேர்ந்த பசுபதி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பங்களாபுதூர் போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து 15 மதுபாட்டில்கள், மொபட் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×