search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Revenue Inspector"

    • ஜெயமணி (வயது 47). இவர் சீரகபாடி யில் உள்ள தனியார் மருத்து வக் கல்லூரி யில் கேசியராக உள்ளார்.
    • இதுபற்றி போலீசார் விசாரித்த தில் எட்டு மாணிக்கம்பட்டியை சேர்ந்த அரவிந்த் (38) என்ப வர் இருசக்கர வாக னத்தை திருடியது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள ஏர்வாடி வாணியம்பாடியை சேர்ந்த வர் ஜெயமணி (வயது 47). இவர் சீரகபாடி யில் உள்ள தனியார் மருத்து வக் கல்லூரி யில் கேசியராக உள்ளார்.

    இவர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த 6-ந்தேதி இரவு கல்லூரியில் வாகனம் நிறுத்தம் இடத்தில் நிறுத்தி விட்டு பணிக்கு சென்றார். மறுநாள் பார்த்தபோது வாகனம் மாயமானது. இதுபற்றி அவர் ஆட்டை யாம்பட்டி போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி களை பார்த்தபோது இவரது வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்த தில் எட்டு மாணிக்கம்பட்டியை சேர்ந்த அரவிந்த் (38) என்ப வர் இருசக்கர வாக னத்தை திருடியது தெரியவந்தது. அரவிந்த் திருவண்ணா மலை, நாமக்கல் மாவட்டங்க ளில் வருவாய் துறையில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி யதும், பணியின்போது தொடர் குற்றச்சாட்டுகளின் பேரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப் பட்டதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அரவிந்தை போலீசார் கைது செய்து இரு சக்கர வாகனத்தையும் பறி முதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 17-ந் தேதி உயரதிகாரிகளுக்கு மதிய உணவை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தார்.
    • வீடியோ எடுத்து பரப்பிய இருவரிடம் போலீசார் விசாரித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவில் டவுன் வருவாய் ஆய்வா ளராக தனலட்சுமி (வயது 40) பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 17-ந் தேதி உயரதிகாரிகளுக்கு மதிய உணவை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தார். இதை வீடியோ எடுத்த ஒருவர் அதனை சமூகவலை தளங்களில் பரப்பினார்.

    இதுதொடர்பாக வருவாய் ஆய்வாளர் தாராபுரம் போலீசில் புகார் அளித்தார். வீடியோ எடுத்து பரப்பிய இருவரிடம் போலீசார் விசாரித்தனர். அதில் ரேவந்த் என்பவர் இருப்பிட சான்றிதழ் கோரி விண்ணப்பித்தார். ஆவணங்கள் முறையாக இல்லாத காரணத்தால் நிராகரித்ததால் கோபமடைந்த ரேவந்த் தனது நண்பருடன் சேர்ந்து வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி செல்போன் மூலம் உயரதிகாரிகளுக்கு சாப்பாடு ஆர்டர் செய்வதை வீடியோ எடுத்து பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    இந்நிலையில், வீடியோ வைரலான நிலையில், உயர் அதிகாரிக்கு சாப்பாடு ஆர்டர் செய்த வருவாய் ஆய்வாளர் தனலட்சுமியை அலங்கியம் ஒன்றியத்துக்கு மாற்றம் செய்து திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் உத்தரவிட்டார்.

    • வருவாய் ஆய்வாளர் அன்பரசனை லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
    • இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    பெருந்துறையை சேர்ந்தவர் ரவி. இவர் தனது தாயாருக்கு வாரிசு சான்றி தழ் பெற பெருந்துறை வருவாய் அய்வாளர் அன்பரசனை அனுகினார்.

    அப்போது வாரிசு சான்றிதழ் வேண்டும் என்றால் ரூ.35 ஆயிரம் வேண்டும் என கூறினார். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என கூறி ரவி சென்று விட்டார்.

    சில நாட்களுக்கு பிறகு அன்ப ரசன், ரவியிடம் ரூ.25 ஆயிரம் தாருங்கள் வாரிசு சான்றிதழ் தருகிறேன் என கூறினார். அதற்கு ரவி சம்மதம் தெரிவிக்காததால் முடிவில் ரூ.8 ஆயிரம் தாருங்கள் வாரிசு சான்றிதழ் தருகிறேன் என கூறினார்.

    ஆனால் லஞ்சம் தர விரும்பாத ரவி இது குறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கூறினார். இதையடுத்து போலீசார் ரசாயனம் தடவிய ரூ.8 ஆயி ரத்தை அவரிடம் கொடுத்து அன்பரசனிடம் கொடுக்க சொன்னார்கள்.

    அதன்படி பெருந்துறை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு சென்ற ரவி தான் கொண்டு வந்த பணத்தை அன்பரசனிடம் கொடுக்க சென்றார்.

    ஆனால் அன்பரசன் பண த்தை வாங்காமல் அதை அலுவலக உதவியாளர் அலெக்சாண்டரிடம் கொடுக்க சொன்னார். இதையடுத்து ரவி ரூ.8 ஆயிரத்தை அலெக்சா ண்டரிடம் கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச பணத்துடன் அலெக்சா ண்டரை கையும், களவுமாக பிடித்தனர். பிடிபட்ட அலெக்சாண்டர் இந்த பணத்தை வருவாய் ஆய்வாளர் அன்பரசன் சொல்லி தான் வாங்கினேன் என ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார்.

    அதன்பேரில் வருவாய் ஆய்வாளர் அன்பரசனை லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து அன்பரசனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் போலீசார் சிறையில் அடைத்தனர்.

    • 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
    • அங்கீகாரம் பெற்று அமைத்திருந்த வீட்டுமனைப்பிரிவில் பொக்லின் எந்திரம் மற்றும் 2 டிராக்டர்கனை கொண்டு மேடு, பள்ளங்களை சீரமைத்து கொண்டிருந்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் கோர்ட்டு உத்தரவிட்டது. பணிகளை தடுத்து நிறுத்தினர் திருவாரூர் அருகே உள்ள அடியக்கமங்கலத்தை சேர்ந்தவர் ஷாஜகான்.

    இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந் தேதி அன்று அலிவலம் கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் அங்கீகாரம் பெற்று அமைத்திருந்த வீட்டுமனைப்பிரிவில் பொக்லின் எந்திரம் மற்றும் 2 டிராக்டர்கனை கொண்டு மேடு, பள்ளங்களை சீரமைத்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த குன்னியூர் சரக வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன், அலிவலம் கிராம நிர்வாக அதிகாரி அசோக்குமார் ஆகியோர் வேலைகளை தடுத்து நிறுத்தி மண் அள்ளக்கூடாது என கூறினர்.

    ரூ.50 ஆயிரம் லஞ்சம் அதற்கு ஷாஜகான், 'நான் எனது இடத்தில் மண் எடுத்து எனது இடத்திலேயே கொட்டி சரி செய்கிறேன், விற்பனை ஏதும் செய்யவில்லை' என கூறினார்.

    இந்த நிலையில் வருவாய் ஆய்வாளரும், கிராம நிர்வாக அலுவலரும் பொக்லின் எந்திரம் உள்ளிட்ட வாகனங்களின் சாவிகளை பிடுங்கி சென்றனர். மேலும் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் தான் வாகனங்களின் சாவிகளை திருப்பி தருவோம் என கூறி உள்ளனர்.

    கைது இதுகுறித்து ஷாஜகான் நாகை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் கேட்டவர்களை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர்.

    அதன்படி ஷாஜகான் ரசாயனம் தடவிய ரூ.50 ஆயிரத்தை குன்னியூர் சரக வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரனிடம் கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் ரவிச்சந்திரனை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    இதுதொடர்பாக ரவிச்சந்திரன், அசோக்குமார் ஆகிய 2 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருவாரூர் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. 3 ஆண்டுகள் சிறை இந்த வழக்கில் தலைமை குற்றவியல் நீதிபதி பாலமுருகன் நேற்று தீர்ப்பளித்தார்.

    அவர் தனது தீர்ப்பில், வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அதிகாரி அசோக்குமார் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    இந்த வழக்கில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சட்ட ஆலோசகரும், வக்கீலுமான ராஜேந்திரன் ஆஜராகி வாதாடினார்.

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே மரங்களை வெட்டி கடத்தலை கண்காணிக்க தவறிய வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே மஞ்சவாடியில் உள்ள வனப்பகுதியில் சிலர் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டினர்.

    இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தாசில்தாரிடம் புகார் தெரிவித்தனர்.

    இந்த புகாரின்பேரில் பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் கற்பகவள்ளியின் பரிந்துரையின்பேரிலும், தருமபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவின்படி மரங்களை வெட்டி கடத்தலை கண்காணிக்க தவறிய பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் ஆய்வாளர் சேரன், மஞ்சவாடி கிராம நிர்வாக அலுவலர் ஜெய்சுதா ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் தனி வட்டாட்சியர் (பொறுப்பு) செல்வகுமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் கிருஷ்ணன் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க காத்திருப்போர் பட்டியல் வைக்கப்பட்டு உள்ளனர். #tamilnews
    வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் ரூ.400 லஞ்சம் வாங்கிய 2 பேருக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    வேலூர்:

    வாணியம்பாடி தாலுகா மதனஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சின்னபையன். இவருக்கு அதேபகுதியில் விவசாய நிலம் இருந்தது. அந்த நிலத்திற்கு மின் இணைப்பு பெற முடிவு செய்தார். இதற்காக அவருக்கு வாரிசு சான்றிதழ் தேவைப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் கேட்டு மனு அளித்தார். வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய ரமேஷ்பாபு என்பவர் அவரது மனுவை விசாரித்து வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்டுள்ளார். பணம் தந்தால் சான்றிதழ் தருவதாக கூறி உள்ளார்.

    லஞ்சம் கொடுக்க விரும்பாத சின்னபையன் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் சின்னபையனிடம் வருவாய் ஆய்வாளர் ரமேஷ்பாபு, அலுவலக உதவியாளர் சேகர் என்பவர் மூலம் ரூ.400-ஐ லஞ்சமாக வாங்கினார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ரமேஷ்பாபு, சேகர் ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    இது குறித்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்தது.

    நேற்று முன்தினம் வழக்கில் நீதிபதி பாரி தீர்ப்பு கூறினார். அதில், லஞ்சம் வாங்கிய ரமேஷ்பாபு மற்றும் சேகர் ஆகியோருக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பதாக கூறியிருந்தார். #tamilnews
    ×