search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "District Revenue Officer"

    • கடந்த 17-ந் தேதி உயரதிகாரிகளுக்கு மதிய உணவை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தார்.
    • வீடியோ எடுத்து பரப்பிய இருவரிடம் போலீசார் விசாரித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவில் டவுன் வருவாய் ஆய்வா ளராக தனலட்சுமி (வயது 40) பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 17-ந் தேதி உயரதிகாரிகளுக்கு மதிய உணவை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தார். இதை வீடியோ எடுத்த ஒருவர் அதனை சமூகவலை தளங்களில் பரப்பினார்.

    இதுதொடர்பாக வருவாய் ஆய்வாளர் தாராபுரம் போலீசில் புகார் அளித்தார். வீடியோ எடுத்து பரப்பிய இருவரிடம் போலீசார் விசாரித்தனர். அதில் ரேவந்த் என்பவர் இருப்பிட சான்றிதழ் கோரி விண்ணப்பித்தார். ஆவணங்கள் முறையாக இல்லாத காரணத்தால் நிராகரித்ததால் கோபமடைந்த ரேவந்த் தனது நண்பருடன் சேர்ந்து வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி செல்போன் மூலம் உயரதிகாரிகளுக்கு சாப்பாடு ஆர்டர் செய்வதை வீடியோ எடுத்து பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    இந்நிலையில், வீடியோ வைரலான நிலையில், உயர் அதிகாரிக்கு சாப்பாடு ஆர்டர் செய்த வருவாய் ஆய்வாளர் தனலட்சுமியை அலங்கியம் ஒன்றியத்துக்கு மாற்றம் செய்து திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் உத்தரவிட்டார்.

    • சமூக ஆர்வலர்கள் முதல்வர் மற்றும் தலைமைச் செயலருக்கு புகார் அனுப்பியிருந்தனர்.
    • இந்த பகுதியில் ரேசன் கடை, தனியார் பள்ளி உள்ளது.

     பல்லடம் :

    பல்லடத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் நவீன மின்மயானம் அமைக்க கட்டடப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் பச்சாபாளையம் நீரோடை பகுதியில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஒரே நேரத்தில் 2 மின்மயானம் அமைத்து மக்கள் வரிப்பணம் வீணாக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் முதல்வர் மற்றும் தலைமைச் செயலருக்கு புகார் அனுப்பியிருந்தனர்

    இது குறித்து மாலைமலர் நாளிதழில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் பல்லடத்தில் நீரோடை சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் அவரிடம் நீரோடை உள்ள பகுதியில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இடம் நீரோடை பகுதியாக உள்ளது. மேலும் இந்த பகுதியில் ரேசன் கடை, தனியார் பள்ளி உள்ளது. வாகனங்கள் செல்வதற்கு சரியான வழித்தடமும் இல்லை. ஏற்கனவே, கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. அந்த ரோடு வழியாகத்தான் உடலைக் கொண்டு வரும் வாகனங்கள் சென்று வர வேண்டும். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    மேலும் ஏற்கனவே வெங்கிட்டாபுரம் பகுதியில், ரோட்டரி மின் மயான அறக்கட்டளை மூலம் சுமார் 4 கோடி ரூபாயில் நவீன மின் மயானம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மின்மயான திட்டம் செயல்பட்டு வருகின்ற வேளையில் புதிதாக இன்னொன்று அமைப்பது மக்கள் வரிப்பணம் வீணாக வழி வகுக்கும் என்று தெரிவித்தனர். அவர்களிடம் இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசுவதாக தெரிவித்த அவர் பின்னர் பல்லடம் நகராட்சி 8வது வார்டு பச்சாபாளையம் பகுதியில் உள்ள ரேசன் கடையில் பொருட்களின் தரம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டார். அப்போது அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் இயங்குவது குறித்து அவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பல்லடம் மங்கலம் ரோட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கும் விடுதியை ஆய்வு செய்தார். தபால் அலுவலக வீதியில் உள்ள கூட்டுறவு சங்க கட்டடத்தில் செயல்பட்டு வரும் இ. சேவை மையத்தையும் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது, பல்லடம் தாசில்தார் நந்தகோபால் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர் சுகன்யா ஜெகதீஷ்,சமூக ஆர்வலர்கள் ராஜா,மல்லிகா,ராம்குமார், மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    கள்ளக்குறிச்சியில் உயர் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி பிளஸ்-2 மாணவர்கள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்க வேண்டும் மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுரை

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ்-2 மாணவர் களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நடை பெற்றது. அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் விஜய் பாபு தலைமை தாங்கி னார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ் வரி பெருமாள், வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, நகர மன்ற தலை வர் சுப்ராயலு, நகராட்சி ஆணையர் குமரன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜய லட்சுமி வரவேற்றார். நிகழ்ச்சியில் உளுந்தூர் பேட்டை சட்டமன்ற உறுப்பி னர் மணிக்கண்ணன் சிறப்பு ரை ஆற்றினார். இதனை தொடர்ந்து பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் தமிழக அரசின் சார்பில் திறமையான வழிகாட்டும் நபர்களைக் கொண்டு நிகழ்ச்சி நடை பெறுகிறது. அவர்கள் சொல்லும் தகவலை கேட்டு மாணவ,மாணவிகள் பயனடைய வேண்டும். எப்போதும் அரசு பள்ளி மாணவர்கள் திறமையான வர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, கனவு கள் நம்மை தூங்க விடாது என டாக்டர் அப்துல்கலாம் சொன்னது போல மாணவ, மாணவிகள் உங்கள் எதிர்கால எண்ணங்களை கனவுகளாக மாற்றிக்கொண்டு அந்த கனவு நிறைவேறும் வரை குடும்ப சூழ்நிலை நினைத்துப் பார்த்து கவனம் சிதறாமல் படிக்க வேண்டும்.

    படிப்பு மட்டுமே உங்கள் வாழ்க்கைத் தரத்தை மாற்றும் அவ்வாறு உங்கள் வாழ்க்கைத் தரம் மாறு வதற்காக மாணவர் களின் கண்களை திறக்கச் செய்யும் நிகழ்ச்சி தான் இந்த கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி கனவு எனும் கல்வி வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டது. முன்னதாக நகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் தூய்மை குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு உறுதிமொழி களை அனைவரும் ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் பெருமாள் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    நாகை மாவட்டத்தில் தூய்மை கணக்கெடுப்பு விழிப்புணர்வு ரதத்தை மாவட்ட வருவாய் அதிகாரி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
    நாகப்பட்டினம்:

    தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தூய்மை கணக்கெடுப்பு ஊரகம்-2018 அனைத்து ஊராட்சிகளிலும் ஊரக தூய்மை கணக்கெடுப்பு மூலம் மாவட்டங்களை தூய்மையின் அடிப்படையில் தரவரிசை படுத்துதல் பணி கடந்த 1-ந்தேதி தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதற்காக அங்கீகரிக்கப்பட்ட கணக்கெடுப்பு நிறுவனம் ஒன்றின் மூலமாக ஊரக பகுதிகளில் தூய்மை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்த பணிகள் மத்திய அரசின் குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதார துறையால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் செயல்படுத்தபட உள்ளது. மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் குறிப்பிட்ட நிறுவனத்தால் மாதிரி அடிப்படையில் கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திடவும், ஊராட்சியின் பொது இடங்களை தூய்மையாக பராமரித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை கணக்கெடுப்பு விழிப்புணர்வு ரதத்தை மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது தூய்மை கணக்கெடுப்பு (ஊரகம்)-2018 என்ற சின்னம் கொண்ட வில்லைகள் அரசு வாகனங்களில் ஓட்டப்பட்டன.

    இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோவிந்தராஜுலு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  
    ×