search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண மோசடியில் ஈடுபட்ட பட்டதாரி வாலிபர் கைது
    X

    பண மோசடியில் ஈடுபட்ட பட்டதாரி வாலிபர் கைது

    • ஈரோடு அருகே தனியார் நிதி நிறுவனத்தில் பண மோசடியில் ஈடுபட்டதாக பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார்(32). எம். சி.ஏ பட்டதாரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்று நான் மற்றொரு தனியார் நிதி நிறுவனத்தில் எனது பெயரில் 15 பவுன் நகையை அடமானம் வைத்துள்ளேன். அந்த நகையை நீங்கள் மீட்டு அதற்குண்டான பணத்தை தருமாறு அந்த நிதி நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டார்.

    இதை உண்மை என்று நம்பிய அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பிரேம்குமார் வங்கி கணக்கில் 2 தவணையாக ரூ. 3.50 லட்சம் போட்டு உள்ளனர். பின்னர் அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பிரேம்குமார் கூறிய நிதி நிறுவனத்திற்கு சென்று விவரங்கள் கேட்டபோது அப்படி ஒரு பெயரில் நகை அடமானம் வைக்கப்படவில்லை என தெரிய வந்தது. பிரேம்குமார் மோசடி செய்து பணம் பெற்றதும் தெரிய வந்தது.

    இது குறித்து அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பிரேம்குமார் க்கு போன் செய்த போது வருகிறேன் என்று கூறி காலம் தாழ்த்தி வந்து உள்ளார். இது தொடர்பாக நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில் மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பிரேம்குமார் சென்றது போலீசாருக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் பிரேம்குமாரை மடக்கி பிடித்தனர். அப்போது அந்த நிதிநிறுவனத்தில் பிரேம்குமார் இதே போல் மோசடியில் ஈடுபட முயன்றது தெரிய வந்தது. பிரேம்குமாரை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    விசாரணையில் பிரேம்குமார் ஏற்கனவே ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நீதி நிறுவனத்தில் இதே போல் மோசடியில் ஈடுபட்டு பணத்தை பெற்றது தெரிய வந்தது.

    மேலும் இவர் மீது நாமக்கல்லில் பொருளாதார குற்றப்பிரிவில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இது குறித்து ஈரோடு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர்.

    பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். பிரேம்கு மாருக்கு நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது உதவி செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×