search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mariamman"

    • 7-ந்தேதி தேரில் அம்பாள் சமயபுரத்துக்கு எழுந்தருள்கிறார்.
    • 16-ந்தேதி விடையாற்றி விழா நடக்கிறது.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் பிரசித்திப்பெற்ற ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்மனுக்கென்று தனி சன்னதி கிடையாது. ஆண்டு முழுவதும் அகல் விளக்கு தீபமாக காட்சி தரும் அம்மனுக்கு வைகாசி மாதத்தில் 13 நாட்கள் நடைபெறும் திருவிழா பிரசித்திப்பெற்ற திருவிழாக்களுள் ஒன்றாகும்.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற நாச்சியார் கோவில் ஆகாசமாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு வைகாசி திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் (மே) 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு சமயபுரத்திலிருந்து அம்மன் கோவிலுக்கு புஷ்ப பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 27-ந் தேதி வீற்றிருந்த திருக்கோலத்திலும், 28-ந் தேதி தஞ்சாவூர் மகாராஜாவால் விருது அளிக்கப்பட்ட லட்சுமி அலங்காரத்திலும், 29-ந் தேதி சரஸ்வதி அலங்காரத்திலும் ஆகாசமாரியம்மன் அருள்பாலித்தார்.

    30-ந் தேதி மதன கோபால அலங்காரத்திலும், 31-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்திலும், 1-ந் தேதி சேஷ சயன அலங்காரத்திலும், 2-ந் தேதி அம்பாள் அந்தம் வரை வளர்ந்து ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் ஏகாந்த வைபவத்தையொட்டி ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

    விழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று பெரிய திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தல் உள்பட பல்வேறு விதமான நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

    நாச்சியார்கோவில் வீதிகள் அனைத்தும் பக்தர்கள் தலைகளாக காட்சி அளித்தது. இதன் காரணமாக வாகன போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து தொட்டில் கட்டியும், பாடை காவடி எடுத்தும், அலகு காவடி எடுத்தும் பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நள்ளிரவு வரை பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளை (செவ்வாய்க்கிழமை) ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ஆகாசமாரியம்மன் அருள்பாலிக்கிறார்.

    7-ந் தேதி (புதன்கிழமை) இரவு தேரில் அம்பாள் சமயபுரத்துக்கு எழுந்தருள்கிறார். அப்போது நின்ற திருக்கோலத்தில் வெள்ளிக்குடம் சுமந்தவாறு சமயபுரம் புறப்படுகிறார். வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணிக்கு விடையாற்றி விழா நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் துரை. சீனிவாசன் அறங்காவலர்கள் டாக்டர்.எஸ். கோபாலகிருஷ்ணன், டி. ராஜு மற்றும் புராதன கவரையர்கள் செய்து வருகின்றனர்.

    • பரமத்திவேலூர் அருகே வெங்கமேடு பெரியார் நகரில் உள்ள சுயம்பு வெள்ளைக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 13-ந் தேதி இரவு கிராம சாந்தி மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • 14-ந் தேதி கரகம் பாளித்தலும், 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், தீபா ராதனையும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வெங்கமேடு பெரியார் நகரில் உள்ள சுயம்பு வெள்ளைக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 13-ந் தேதி இரவு கிராம சாந்தி மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    14-ந் தேதி கரகம் பாளித்தலும், 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், தீபா ராதனையும் நடைபெற்றது.

    கடந்த 21-ந் தேதி மறு காப்பு கட்டும் நிகழ்ச்சியும், 22-ந் தேதி மாலை அம்ம னுக்கு வடி சோறு படைத்தல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து பூத்தட்டு எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பூ தட்டுகளுடன் ஊர்வல மாக கோவிலுக்கு சென்றனர்.

    பின்னர் அம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெற்றது. நேற்று முன்தினம் 23-ந் காலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்த குடம் எடுத்து வந்தனர். மாலை பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தலும், இரவு பொங்கல் மாவிளக்கு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    நேற்று காலை கிடா வெட்டும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபேற்றது. திருவிழா விற்கான ஏற்பாடுகளை பெரியார் நகர் வெள்ளக்கல் மாரியம்மன் கோவில், திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இன்று பக்தர்கள் குவிந்தனர்.
    • அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    சாத்தார்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோவிலா கும். இங்கு ஆண்டு முழு வதும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    அதிகாலை 4 மணி முதல் அம்மனுக்கு பால், பன்னீர், திருமஞ்சனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், போன்ற 16 வகையான சிறப்பு அபிஷே கம் நடந்தது. கோடை விடுமுறையின் காரணமாக பக்தர்கள் கோவிலில் நேர்த்திகடன் செலுத்தி அம்மனுக்கு தீச்சட்டி, அங்க பிரதட்சணம், பால்குடம், ஆயிரம் கண் பானை, கரும்பு தொட்டி, மாவிளக்கு போன்ற நேர்த்திக்கடனை செலுத்தினர்,

    தென் மாவட்டங்களான தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    சங்கரன்கோவில், திருவேங்கடம், தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில் பட்டி போன்ற பல ஊர்க ளில் இருந்து திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு கழிப்பறை வசதி, குடிநீர் தொட்டி, மருத்துவ வசதி, ஆகிய வற்றை கோவில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பி னர்கள், கோவில் பணியா ளர்கள் செய்திருந்தனர்.

    • இன்று மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது.
    • நாளை 3-ம் கால வேள்வி நடக்கிறது.

    கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் பிரசித்தி பெற்ற ஒக்கலிக கவுடர் ஏணியர் குல மக்களின் குலதெய்வமான மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 24-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 4.30 மணிக்கு மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது.

    அன்று அதிகாலை 5 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு, விநாயகர் வேள்வி, கோமாதா வழிபாடு, அடியார்கள் காப்பணிதல், மதியம் 2 மணிக்கு முளைப்பாலிகை ஊர்வலம், தீர்த்த குடங்கள், விமான கலசங்கள் ஊர்வலம் நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, நிலத்தேவர் வழிபாடு, புற்றுமண் எடுத்து வருதல், திருக்குடங்கள் வேள்வி சாலைக்கு புறப்பாடு, இரவு 7.30 மணிக்கு முதலாம் கால வேள்வி, 108 வகையான காய், கனி, கிழங்கு உள்ளிட்ட மூலிகை பொருட்கள், மலர் வழிபாடு, திருமுறை இசைத்தல் நடக்கிறது.

    நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 10 மணிக்கு 2-ம் கால வேள்வி, ராகம், தாளம் வாசித்தல், பிரசாதம் வழங்குதல், மாலை 6 மணிக்கு 3-ம் கால வேள்வி நடக்கிறது.

    வருகிற 23-ந் தேதி காலை 8 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு விமான கலசம் நிறுவுதல், 10 மணிக்கு 4-ம் கால வேள்வி, மலர் வழிபாடு, திருமுறை இசைத்தல், மாலை 6 மணிக்கு 5-ம் கால வேள்வி, இரவு 7 மணிக்கு அம்மனுக்கு எண்வகை மருந்து சாற்றுதல் நடக்கிறது.

    24-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால வேள்வி, 6.15 மணிக்கு திருக்குடங்கள் கோவிலை வந்தடைதல், 6.45 மணிக்கு விமான கலசங்களுக்கும், 7.15 மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 9 மணிக்கு அலங்கார பூஜை, 10 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

    • சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பூச்சொரிதல்விழா நடந்தது.
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த மார்ச் 27-ல் 3 கம்ப கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று பூசாரி சண்முகவேல் தலைமையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நகரத்தார்கள் தலைமையில் பால்குடமும், பொதுமக்கள் பூத்தட்டும் சுமந்து 4 ரத வீதிகளில் வலம் வந்தனர். இதையடுத்து அம்மனுக்கு பூச்சொரிதல் நடந்தது. இதில் நகரத்தார் நிர்வாகிகள் ராஜேந்திரன், கண்ணப்பன், வெங்கடாசலம், செயல் அலுவலர் சுதா, கணக்கர் முரளிதரன், காவல் ராசு அம்பலம் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    வருகிற 22-ந் தேதி திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து அம்மன் வீதி உலா, 30-ந் தேதி பக்தர்களின் நேர்த்திக்கடனாக பால்குடம், அக்னிசட்டி திருவிழாவும் நடைபெறும். அன்று இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், 31-ந் தேதி பூக்குழி விழாவும் நடக்கிறது. ஜூன் 6-ந் தேதி தேரோட்டமும், 7-ந் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறும். தக்கார் சங்கரேசுவரி, செயல் அலுவலர் இளமதி, பணியாளர்கள் பூபதி, பெருமாள், வசந்த் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • மாரியம்மன் கோவில் பூக்குழி விழா இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பரமக்குடி

    பரமக்குடி அருகே உள்ள போகலூர் ஒன்றியம் காமன்கோட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா விமரிசையாக நடந்து வருகிறது.

    கடந் 4-ந் தேதி விழா தொடங்கியதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். விழாவில் நேற்று முன்தினம் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதனை தொடர்ந்து நூற்றுக் கணக்கான பக்தர்கள் ஆயிரங்கண் பானை, கரும்பாலை தொட்டி, அக்னிசட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன் களை செலுத்தினர்.

    நேற்று பெண்கள் உள்பட திரளானோர் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் ெசலுத்தினர். பின்னர் பால்குட ஊர்வலமும் நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நாளையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை காமன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் பாண்டியன், ஊர் தலைவர் சரவணன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • மாம்பழ அபிஷேகம் செய்தால், குழந்தை பாக்கியம் கிட்டும்.
    • மாதுளம்பழ அபிஷேகம் செய்தால், கோபம் தீரும்.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூரில் மகா மாரியம்மன், சுந்தர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வேண்டும் வரம் தரும் மகாமாரியம்மன், சுந்தர காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த மகா சுந்தரகாளி அம்மனை வழிபடும்போது, பழங்களால் அபிஷேகம் செய்தால் சிறந்த பலன் கிடைக்கும். வாழைப்பழ அபிஷேகம் செய்தால், சாகுபடி செய்த பயிர்கள் நல்ல மகசூல் தரும். பலாப்பழ அபிஷேகம் செய்தால், நினைத்தது நடக்கும்.

    மாம்பழ அபிஷேகம் செய்தால், குழந்தை பாக்கியம் கிட்டும். மாதுளம்பழ அபிஷேகம் செய்தால், கோபம் தீரும். எலுமிச்சம்பழம் அபிஷேகம் செய்தால், பகைவர் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை. எங்கும் நிறைந்த பரம்பொருளை, தீபச் சுடராகக் கண்டு வழிபடுவதால், வாழ்வில் துன்ப இருளை அகற்றி இன்ப ஒளி ஏற்றலாம்" என்பது சான்றோர் கருத்துப்படி நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் துன்பம் நீங்கி இன்பமுடன் மகா சுந்தரகாளி அம்மன் அருள் புரிவாள் என்பது நம்பிக்கை.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் அதி விமரிசையாக மகா மாரியம்மனுக்கு தீமிதி திருவிழா மற்றும் சுந்தர காளியம்மன் திரு நடன விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்காக திருவிழா கடந்த மார்ச் 23-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருபுவனம் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து சக்தி கரகம் வீதி உலாவாக கோவிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடைபெற்றது. 28-ந்தேதி இரண்டாம் காப்பு கட்டுதலுடன் தொடங்கிய விழா தினசரி இரவு அம்பாள்கள் வீதி உலா விமரிசையாக நடைபெற்று வந்தது. இன்று(திங்கட்கிழமை) மாலை மகா மாரியம்மனுக்கு தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது.

    முன்னதாக கோவி்லில் இருந்து மகாமாரியம்மன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் வீதியுலா புறப்படுகிறது. தேப்பெருமாநல்லூர் வீதிகள் தோறும் வழி நெடுக அர்ச்சனைகள் நடைபெறுகிறது. பின்னர் அம்பாள் கோவில் திரும்பியதும் தீமிதி திருவிழா நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவார்கர்.

    காலை முதலே பெண்கள் மாவிளக்கு போட்டு வழிபாடு செய்வார்கள். வருகிற 5-ந்தேதி கோவி்லில் இருந்து சுந்தர காளியம்மன் புறப்பட்டு திருநடன விழா நடைபெறுகிறது. 9-ந்தேதி அம்பாள் வீதி உலா முடிந்து கோவிலுக்கு திரும்பும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பு உதவி ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள், கிராம கமிட்டியினர், ஊர் நாட்டான்மைகள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • திண்டுக்கல்லில் உள்ளது பிரசித்திபெற்ற கோட்டை மாரியம்மன் கோவில்.
    • திருவிழா முடிவடைந்ததையடுத்து கோவிலில் மீண்டும் தங்கத்தேர் உலா நடைபெற உள்ளது.

    திண்டுக்கல்லில் உள்ள பிரசித்திபெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசித்திருவிழா தொடங்குவதற்கு முன்பு அம்மனின் தங்கத்தேர் உலா நிறுத்தி வைக்கப்படுவதும், அதன்பிறகு திருவிழா நிறைவு பெற்றதும் மீண்டும் அம்மன் தங்கத்தேர் உலா தொடங்குவதும் வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டு மாசித்திருவிழா தொடங்குவதற்கு முன்பு அம்மனின் தங்கத்தேர் உலா நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் தற்போது திருவிழா முடிவடைந்ததையடுத்து கோவிலில் மீண்டும் தங்கத்தேர் உலா நடைபெற உள்ளது.

    அந்த வகையில் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியளவில் தங்கத்தேர் உலா நடக்கிறது. இந்த தகவலை கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    காக்கும் தாயாய் கற்பகத்தருவாய் ஆதிக்கம் செலுத்தும் ஆதியாய், கேட்கும் வரம் கொடுக்கும் அன்னையாய் பரிதவிக்கும் தாய் உள்ளம் குளிரச் செய்யும் அன்னை அவள் அருளால் மகிழ்வோம்.
    அருள் வளம் செழிக்கும் அன்னை கரூர் மாரி கருணை பொலிவுடன் காக்கும் எல்லை தெய்வம் பூவாடைக்காரி பாவாடை கரூர் மாரி அன்னைக்கு நாளெல்லாம் திருவிழாதான். மதியத்தில் ஒன்றான அபிஷேகம் அவ்வப்போது சகோதரர் மாவடியான் துணை வர உற்சவராக பவனி உற்சவ அன்னைக்கு எடுக்கும் திருவிழா கம்பம் விடும் விழா.

    இதில்தான் எத்தனை எத்தனை வேண்டுதல்கள். துன்பம், துயரம், வாழ்வில் மங்களம் தங்க மலர் பாவாடை, ஆயிரமாயிரமாய் உள்ளம் குளிர அன்னைக்கு நீர் சுமந்து ஊற்றுதல், எண்ணம் சிறக்க வண்ண வண்ண வாசனை மலர் சொரிதல், வயிறு, கண் வலி என துடிப்போர் அன்னை சன்னதியில் மாவிளக்கு வழிபாடு, குழந்தை வரம் வேண்டி பிள்ளை சுமத்தல், குழந்தை பிறந்து கரும்பு தொட்டில் சுமத்தல், உடல்நல, உள்ளம், உடல் நல குறை போக்க அக்னி வேண்டுதல்கள், ஒன்றோடு ஒன்று இணைந்து சுடரொளி அக்கினி கையில் ஏந்தி அன்னைக்கு சமர்ப்பித்தல்,

    நலம் வேண்டி ஆலயத்தை சுற்றி அங்கப்பிரதட்சணம், இடை இன்னல்கள், குடும்பத்தில் பிரச்சினை, வாழ்க்கையில் வறுமை, அமைதியின்மை இவற்றிற்கு அம்மனை வேண்டி அலகு, நாவில் வேல், பறவை காவடி, அலகு காவடி, விமான அலகு காவடி என விதவிதமாய் அலகேந்தி, பால்குடம் சுமந்து, பச்சிளம் குழந்தைகளுக்கு முடி இறக்கி, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி எத்தனை எத்தனை வழிபாடு கரூர் அன்னைக்கு. காக்கும் தாயாய் கற்பகத்தருவாய் ஆதிக்கம் செலுத்தும் ஆதியாய், கேட்கும் வரம் கொடுக்கும் அன்னையாய் பரிதவிக்கும் தாய் உள்ளம் குளிரச் செய்யும் அன்னை அவள் அருளால் மகிழ்வோம்.
    தமிழகத்தின் தன்னிகரில்லா தெய்வமாகவும், பழமையான கோவிலாகவும் அமையப் பெற்ற பெருமை கொண்ட இத்திருத்தலத்தில் உலக நாயகியாம் அன்னை சக்தி ஈசான மூலையை நோக்கி அமர்ந்து அருள் வழங்கிக் கொண்டிருக்கிறாள்.
    பழமையும், புகழும், வரலாற்று சிறப்பும் வணிகச் சிறப்பும், ஆன்மிக பெருமையும் கொண்ட நகரம் கரூர். இத்தகைய சீரும், சிறப்பும் பெற்ற கரூரின் முக்கிய திருவிழா கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா. ஏழை, பணக்காரர் பேதமின்றி, சாதி, சமய வித்தியாசமின்றி அனைவராலும் விரும்பி அன்போடு வணங்கப்படும் தெய்வமே கரூர் மாரியம்மன்.

    இக்கோவிலின் வரலாறு சுவாரஸ்யமானதாகும். கோவிலின் பரம்பரை அறங்காவலரின் கனவில் மாரியம்மன் சிறுமி வடிவில் தோன்றி, எனக்கு கரூரில் ஒரு குடிசை இல்லையே என்று ஏக்கத்தை வெளிப்படுத்தினாளாம். ஒன்றும் புரியாத அவர் விளக்கம் கேட்க குழந்தை மாரியம்மன் எதிர்கரையில் உள்ள ஆதி மாரியம்மன் கோவிலுக்கு சென்று பார் புரியும் என்று சொல்லி மறைந்து விட்டாளாம்.

    அப்பெரியவர் அதன்படியே தாந்தோன்றி மலை கிராமத்திற்கு சென்றார். அங்கு ஊரே திருவிழா கோலம் பூண்டு கோலாகலமாக இருந்தது. விஷயம் புரிந்து கொண்ட பெரியவர் உடனே ஆதிமாரியம்மன் கோவிலில் இருந்து பிடி மண் எடுத்து வந்து கோவிலை கட்டினார். அது முதல் அவரது குடும்பத்தினர் கோவிலின் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து கோவிலை பராமரித்து வருகின்றனர்.

    தமிழகத்தின் தன்னிகரில்லா தெய்வமாகவும், பழமையான கோவிலாகவும் அமையப் பெற்ற பெருமை கொண்ட இத்திருத்தலத்தில் உலக நாயகியாம் அன்னை சக்தி ஈசான மூலையை நோக்கி அமர்ந்து அருள் வழங்கிக் கொண்டிருக்கிறாள். மாரியம்மன் விழாவின் போது வேப்ப மரத்தின் மூன்று கிளைகளை உடைய பகுதியை வெட்டி எடுத்து வந்து மஞ்சள் பூசி வேப்பிலையால் அலங்கரித்து பூஜை ஆராதனையுடன் அமராவதி ஆற்றில் இருந்து கம்பத்தை எடுத்து வருவார்கள்.

    ஆலயத்தில் பலி பீடத்தின் அருகில் நடப்படும் கம்பத்தை சுவாமியாக பக்தர்கள் கருதி வணங்குகிறார்கள். கம்பம் மாரியம்மன் ஆலயத்தில் இருக்கும் நாட்களில் அன்றாடம் மாலை சாயரட்ச பூஜை நடக்கும். அப்போது கம்பத்துடன் கோவிலின் உள்ளே அம்மனுடன் வைக்கப்பட்டுள்ள சக்தியையும் வைத்து பூஜை செய்வார்கள். கோவிலில் நடப்பட்ட கம்பத்திற்கு பக்தர்கள் ஈர ஆடையுடன் மஞ்சள் நீரை வேப்பிலையுடன் எடுத்து வந்து அபிஷேகம் செய்வார்கள். கம்பம் ஆற்றுக்கு செல்லும் நாள் வரை பக்தர்கள் தினமும் மஞ்சள் நீர் ஊற்றி வணங்குவார்கள்.
    கரூர் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் கம்பம் ஆற்றில் விடும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியானது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழாவாகும்.
    கரூர் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் கம்பம் ஆற்றில் விடும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியானது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழாவாகும். இந்த விழாவின்போது கரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பக்தர்கள் பூக்களால் ரதங்களை தயார் செய்து மாரியம்மனை அலங்கரித்து மின் விளக்குகள் ஜொலிக்க அலங்கார ரதத்தின் முன்பு நாதஸ் வரம், தவில், பேண்டு வாத்தியங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்தியபடி வருவார்கள்.

    அப்படி வரும் போது அம்மன் பல்வேறு அவதாரங்கள் எடுத்தது போல் பக்தர்களுக்கு காட்சி தருவார். இந்த காட்சியை காண கண் கோடி வேண்டும். கரூர் பகுதியில் இருந்து 46 பூத்தட்டு ஊர்வலம் கோவிலை அடைந்ததும்.

    கொண்டு வந்த பூக்களை கோவிலில் வழங்கி பக்தர்கள் சாமிதரிசனம் செய்வார்கள். அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துவார்கள். இந்த விழாவை காண பிற மாநிலங்களில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் கரூரை நோக்கி படையெடுப்பார்கள்.
    தடைகள் நீங்கவும், சகல காரியங்கள் வெற்றி அடையவும் அம்மனுக்கு உகந்த காயத்ரி மந்திரங்களுடன் அன்னையின் புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்களை நாமும் பாடி இஷ்ட சித்திகளைப் பெறுவோமாக
    ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி!
    ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி!
    ஓம் அருமறையின் வரம்பே போற்றி!
    ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி!
    ஓம் அரசிளங்குமரியே போற்றி!
    ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி!
    ஓம் அமுதநாயகியே போற்றி!
    ஓம் அருந்தவநாயகியே போற்றி!
    ஓம் அருள் நிறை அம்மையே போற்றி!
    ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி!
    ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி!
    ஓம் ஆதியின் பாதியே போற்றி!
    ஓம் ஆலால சுந்தரியே போற்றி!
    ஓம் ஆனந்த வல்லியே போற்றி!
    ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி!
    ஓம் இமயத்தரசியே போற்றி!
    ஓம் இடபத்தோன் துணையே போற்றி!
    ஓம் ஈசுவரியே போற்றி!
    ஓம் உயிர் ஓவியமே போற்றி!
    ஓம் உலகம்மையே போற்றி!
    ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி!
    ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி!
    ஓம் ஏகன் துணையே போற்றி!
    ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி!
    ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி!
    ஓம் ஒப்பிலா அமுதே போற்றி!
    ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி!
    ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி!
    ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி!
    ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி!
    ஓம் கல்யாண சுந்தரியே போற்றி!
    ஓம் கனகமணிக்குன்றே போற்றி!
    ஓம் கற்பின் அரசியே போற்றி!
    ஓம் கருணை ஊற்றே போற்றி!
    ஓம் கல்விக்கு வித்தே போற்றி!
    ஓம் கனகாம்பிகையே போற்றி!
    ஓம் கதிரொளிச் சுடரே போற்றி!
    ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி!
    ஓம் காட்சிக்கு இனியோய் போற்றி!
    ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி!
    ஓம் கிளி ஏந்திய கரத்தோய் போற்றி!
    ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி!
    ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி!
    ஓம் கூடற்கலாப மயிலே போற்றி!
    ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி!
    ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி!
    ஓம் சக்தி வடிவே போற்றி!
    ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி!
    ஓம் சிவகாம சுந்தரியே போற்றி!
    ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி!
    ஓம் சிவயோக நாயகியே போற்றி!
    ஓம் சிவானந்தவல்லியே போற்றி!
    ஓம் சிங்காரவல்லியே போற்றி!
    ஓம் செந்தமிழ் தாயே போற்றி!
    ஓம் செல்வத்துக்கரசியே போற்றி!
    ஓம் சேனைத்தலைவியே போற்றி!
    ஓம் சொக்கர் நாயகியே போற்றி!
    ஓம் சைவ நெறி நிலைக்கச்செய்தோய் போற்றி!
    ஓம் ஞானாம்பிகையே போற்றி!
    ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி!
    ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி!
    ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி!
    ஓம் திருவுடையம்மையே போற்றி!
    ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி!
    ஓம் திரிபுரசுந்தரியே போற்றி!
    ஓம் திருநிலை நாயகியே போற்றி!
    ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி!
    ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி!
    ஓம் தென்னவன் செல்வியே போற்றி!
    ஓம் தேன்மொழி அம்மையே போற்றி!
    ஓம் தையல் நாயகியே போற்றி!
    ஓம் நற்கனியின் சுவையே போற்றி!
    ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி!
    ஓம் நல்ல நாயகியே போற்றி!
    ஓம் நீலாம்பிகையே போற்றி!
    ஓம் நீதிக்கரசியே போற்றி!
    ஓம் பக்தர் தம் திலகமே போற்றி!
    ஓம் பழமறையின் குருந்தே போற்றி!
    ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி!
    ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி!
    ஓம் பவளவாய்க் கிளியே போற்றி!
    ஓம் பல்லுயிரின் தாயே போற்றி!
    ஓம் பசுபதி நாயகியே போற்றி!
    ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி!
    ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி!
    ஓம் பார்வதி அம்மையே போற்றி!
    ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி!
    ஓம் பெரிய நாயகியே போற்றி!
    ஓம் பொன்மயில் அம்மையே போற்றி!
    ஓம் பொற்கொடி அன்னையே போற்றி!
    ஓம் மலையத்துவசன் மகளே போற்றி!
    ஓம் மங்கள நாயகியே போற்றி!
    ஓம் மழலைக்கிளியே போற்றி!
    ஓம் மனோன்மணித்தாயே போற்றி!
    ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி!
    ஓம் மாயோன் தங்கையே போற்றி!
    ஓம் மாணிக்கவல்லியே போற்றி!
    ஓம் மீனவர்கோன் மகளே போற்றி!
    ஓம் மீனாட்சி அம்மையே போற்றி!
    ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி!
    ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி!
    ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி!
    ஓம் வடிவழகு அம்மையே போற்றி!
    ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி!
    ஓம் வேதநாயகியே போற்றி!
    ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி!
    ஓம் அம்மையே அம்பிகையே போற்றி! போற்றி!!
    ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி! போற்றி!!
    ×