search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mariamman"

    • பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
    • இன்று முதல் தினமும் மண்டல பூஜை நடைபெற உள்ளது.

    திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே 100 ஆண்டு பழமையான பிளேக் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 3-ந்தேதி முதற்கால யாக பூஜையுடன் தொடங்கியது.

    கோவிலில் புதிதாக தட்சணா மூர்த்தி, வாராகி அம்மன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று காலை 6.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, நான்காம் கால யாகபூஜை மற்றும் திரவ்ய யாகம் நடந்தது.

    9 மணிக்கு மகா தீபாராதனைக்கு பின் கலச புறப்பாடு நடந்தது. பின்னர் காலை 9.45 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிேஷகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் சங்கர நராயணன், ரவி ஆகியோர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் 'ஓம் சக்தி... பராசக்தி' என கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

    கோவிலை சுற்றிலும் நின்று கொண்டிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து பரிவாரம் மற்றும் மூலவர் கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் பிளேக் மாரியம்மனுக்கு மகாஅபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தச தரிசனம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தென்னம்பாளையம் மார்க்கெட் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை தென்னம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவில் விழாக்கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இன்று (வியாழக்கிழமை) முதல் தினமும் மண்டல பூஜை நடைபெற உள்ளது.

    • இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 2006-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
    • கோவிலில் திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளன.

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 2006-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதையொட்டி கோவிலில் திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதன் முதற்கட்ட திருப்பணியாக நேற்று மாலை 4 மணியளவில் முதற்கால யாக பூஜைகள் தொடங்கியது. இதில் கணபதி வழிபாடு, யாகம் மற்றும் கொடி மரத்துக்கு பூஜைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று (புதன் கிழமை) காலை 9 மணியளவில் 2-ம் கால பூஜைகள் நடக்கிறது. இதில் கோவில் கொடி மரத்துக்கு பாலாயம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் செய்துள்ளனர்.

    • நாளை ரக்‌ஷா பந்தனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெறுகிறது.
    • ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    ஓட்டப்பிடாரம் வட்டம் ஒட்டநத்தம் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட விநாயகர், மாரியம்மன், காளியம்மன், துர்க்கையம்மன், பேச்சியம்மன், கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி, முதல்கால யாகசாலை பூஜை, தீபாராதனை உள்ளிட்டவையும், மாலை 5 மணிக்கு புனிதநீர் எடுத்து வருதல், விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி உள்ளிட்டவைகளும் நடக்கிறது.

    நாளை (சனிக்கிழமை) யாகசாலை பூஜை, பரிவார மூா்த்திகளுக்கு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் தொடக்கம், கன்யாபூஜை, ரக்ஷா பந்தனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், கடம் எழுந்தருளல் நடக்கிறது. 7 மணி முதல் 8 மணிக்குள் விநாயகர், மாரியம்மன், காளியம்மன், துர்க்கையம்மனுக்கு மகா கும்பாபிஷேகமும், 10 மணி முதல் 11 மணிக்குள் பேச்சியம்மன், கருப்பசாமி, பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், இரவில் அம்மன் சப்பரத்தில் வீதி உலா வருதல் நடக்கிறது.

    • அம்மனுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் நடைபெற்றது.
    • பல்வேறு வகைகளில் தயாரான உணவுகள், பழங்கள் படையலிடப்பட்டது.

    கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவிலில் ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்மனுக்கென்று தனி சன்னதி கிடையாது.ஆண்டு முழுவதும் அகல் விளக்கு தீபமாய் காட்சி தரும் அம்மனுக்கு வைகாசி மாதத்தில் 13 நாட்கள் நடைபெறும் திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு விழா கடந்த மே மாதம் 26-ந் தேதி இரவு சமயபுரத்தில் இருந்து அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளுதல் நிகழ்ச்சியுடன் நடைபெற்றது.

    தொடர்ந்து விழா நாட்களில் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக பெரிய திருவிழா நடந்தது. இதையொட்டி நாச்சியார் கோவில் முக்கிய வீதிகள் அனைத்தும் பக்தர்கள் கூட்டமாக நிரம்பி வழிந்தது. போக்குவரத்து மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து தொட்டில் கட்டியும், பாடை காவடி எடுத்தும், அழகு காவடி எடுத்தும் பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    விழாவின் இறுதி நிகழ்ச்சியாக விடையாற்றி விழா நடைபெற்றது. இரவு 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் நடைபெற்றது. பல்வேறு வகைகளில் தயாரான உணவுகள், பழங்கள் ஆகியவற்றை படையலிடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் துரை. சீனிவாசன் அறங்காவலர்கள் டாக்டர்.எஸ். கோபாலகிருஷ்ணன், டி. ராஜு ஆகியோர் செய்திருந்தனர்.

    • இரவு வாணவேடிக்கையும், அன்னதானமும் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் சின்ன மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    கொடைக்கானல் அண்ணாநகர் பகுதியில் சின்ன மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உற்சவ விழா கடந்த மாதம் 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் சின்ன மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு மின் அலங்கார தேரில் அம்மன் உலா வந்தார்.

    விழாவில் நேற்று மேள வாத்தியங்கள் முழங்க 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி, பறவை காவடி எடுத்து மற்றும் பல்வேறு வேடங்கள் அணிந்தும் ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலம் டிப்போ காளியம்மன் கோவிலில் தொடங்கி ஏரிச்சாலை, அண்ணாசாலை, மூஞ்சிக்கல் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் வழியாக கோவிலை வந்து அடைந்தது.

    இதனை தொடர்ந்து வண்ண வண்ண பூக்களால் சிறப்பு அலங்காரத்தில் சின்ன மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் இரவு வாணவேடிக்கையும், அன்னதானமும் நடைபெற்றது. இதில் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தினமும் அம்மனுக்கு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
    • விடையாற்றி விழாவுடன் திருவிழா நிறைவுபெற்றது.

    புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாடிமேட்டூர் கிராமத்தில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 2-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. விழாவின் சிகரநிகழ்ச்சியாக கடந்த 8-ந்தேதி காலை தேரோட்டம் நடைபெற்றது.

    மறுநாள் இரவு முத்து பல்லக்கில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழாவில் ஆலம்பாடி, தங்கசாலை, செம்பியக்குடி, குலமாணிக்கம், ஆலம்பாக்கம், புதூர்பாளையம், வாணதிரையான்பாளையம், விரகாலூர், திண்ணகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் அவரவர் வீடுகளுக்கு முன்பு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து மஞ்சள் நீராட்டு, விடையாற்றி விழாவுடன் திருவிழா நிறைவுபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம காரியஸ்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மகாமாரியம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சீர்காழி தென்பாதி மெயின் ரோட்டில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் இரவு அம்மன் கோவிலில் உட்புற வீதிஉலா நடைபெற்றது. தொடர்ந்து தீமிதி திருவிழாவை முன்னிட்டு உப்பனாற்று கரையிலிருந்து பால்குடம், பால்காவடி, அலகு காவடி, பறவை காவடி புறப்பாடு நடந்தது. முன்னதாக இந்த ஊர்வலம் மேல தாளங்கள் முழங்க, வாண வேடிக்கையோடு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.

    பின்னர் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் இரவு, கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து இரவு அம்மன் வீதிஉலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

    இதேபோல மயிலாடுதுறை மாவட்டம் மறையூர் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கரகம், காவடி, பால்குடம் தீமிதி திருவிழா கடந்த 2-ம் தேதி பந்தல்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் அபிஷேக ஆராதனைகள், செல்லியம்மன் கும்ப பூஜை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம், தீமிதி திருவிழா நடந்தது.

    முன்னதாக கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் மறையூர் அகஸ்தீஸ்வரர் கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வாண்வேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க கரகம், கூண்டு காவடி, அலகு காவடி, பால்குடம் எடுத்து கோவிலை வந்தடைந்தனர்.பின்னர் கோவிலின் அருகில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மகாமாரியம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மறையூர் கிராமவாசிகள், குலதெய்வத்தார்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். மேலும் இரவு அம்பாள் வீதி உலா காட்சியும் நடைபெற்றது.

    சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி 36 அடி உயர தேரை அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 28-ந் தேதி வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
    கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன்-விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்திருவிழா, கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 19-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை தினசரி காலை, இரவு நேரங்களில் சூலக்கல் மாரியம்மன் வீதி உலா மற்றும் பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நேற்று முன்தினம் இரவில் மாரியம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, சூலக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மாரியம்மனை தரிசித்தனர்.

    இதையடுத்து நாளை மறுநாள்(புதன்கிழமை) காலை 6 மணிக்கு மாவிளக்கு மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 26, 27, 28-ந் தேதி மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 26-ந் தேதி தேரோட்டம் என்பதால், கோவில் முன்பு தகர செட்டுக்குள் நிறுத்தி வைக்கப்பட்ட 36 அடி உயர தேர் வெளியே கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து வர்ணம் பூசும் பணி உள்பட தேரை அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் 15 அடி உயரம் கொண்ட விநாயகர் தேரையும் அலங்கரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 29-ந் தேதி மதியம் 12 மணிக்கு சூலக்கல் மாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் அன்னதானம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன் விநாயகர் கோவில் தக்காரும், உதவி ஆணையாளருமான கருணாநிதி, சூலக்கல் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சுந்தரராசு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    மகா மாரியம்மன் என்று மூலவர் அழைக்கப்பட்ட போதிலும் ஏழைகளின் தெய்வமாக இருந்து அருள்பாலிக்கும் அம்மன் கருணையின் வடிவானவளாக இருந்து காட்சி தருகிறார்.
    கருவூராக இருந்ததே காலப்போக்கில் கரூராக மருவியது. தமிழகத்தின் தற்போதைய தொழில் நகரங்களில் ஒன்றாக திகழும் கரூர் ஆன்மீகத்திலும் தழைத்தோங்கி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. அதனை இன்றளவும் தனது பேரருளால் இவ்வுலகிற்கு நிரூபித்து அருள் பாலித்து வருகிறாள் கரூர் மாரியம்மன்.

    கரூர் நகரின் மையப்பகுதியில் கோவில் கொண்டுள்ளார் மாரியம்மன். மகா மாரியம்மன் என்று மூலவர் அழைக்கப்பட்ட போதிலும் ஏழைகளின் தெய்வமாக இருந்து அருள்பாலிக்கும் அம்மன் கருணையின் வடிவானவளாக இருந்து காட்சி தருகிறார்.

    தல சிறப்பு

    அருள்மிகு மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் அருள்பாலித்து வருகிறாள். கிராமத்தில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோவிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து கோவிலில் பரம்பரை அறங்காவலரின் முன்னோர்களால் தற்சமயம் உள்ள இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இது சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தாற் போல உள்ள பெரியதொரு பிரார்த்தனை தலமாக விளங்குகிறது.

    இக்கோவிலில் விசேஷ அபிஷேக ஆராதனையுடன் கம்பத்துக்கு தயிர் சாதம் படைத்து சாமி கும்பிடுவார்கள். தயிர் சாதம் படையல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இத்திருக்கோயில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பாகத்தான் தோன்றியது.    

    தல பெருமை    

    மனிதன் தோன்றுவது அன்னையின் வயிற்றில், மறைவது பூமித்தாயின் வயிற் றில். எப்படித் தோன்றுகி றோமோ அதிலேயே மறைவோம் என்பதே இதில் அடங்கியுள்ள தத்துவம். இதன் உண்மை வடிவமே மாரியம்மன். அந்த வகையில் இந்த ஆலயத்தில் அம்மன் பிரசாதமாக வழங்கப்படுவது திருமண் மட்டுமே.

    மஞ்சள் நீர்க் கம்பம் உற்சவத்தின் போது வேப்ப மரத்தின் மூன்று கிளைகளை உடைய ஒரு பகுதியை எடுத்து வந்து, அதில் இருக்கும் பட்டைகளை உரித்து வடிவமைத்து, மஞ்சள் சொருகப்பட்டு, ஆற்றிலிருந்து பூஜை செய்து எடுத்து வரப்பட்டு, ஆலயத்தின் பலி பீடத்தின் அருகில் கம்பம் நடப்படும். இதை சுவாமியாகக் கருதுகிறார்கள். இது மஞ்சள் நீர்க் கம்பம் என்று அழைக்கப்படுகிறது.    
    வைகாசிப் பெருந்திருவிழாவின் போது நடக்கும் கம்பம் நடும் விழா மிகவும் சிறப்பானது.
    கரூர் மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுதலும், அதனை அமராவதி ஆற்றில் விடுவதும் தொன்மையும், சிறப்பும் வாய்ந்ததாகும்.
    சக்தியின் வடிவமாக திகழும் அம்மன் பக்தர்களின் குறைபோக்கும் அவதாரமாக போற்றப்படுகிறார். ஆடி மாதம் அம்மனுக்கு ஏற்றதாகினும் எப்போதும் பக்தர்களின் தீராத வினைகளை தீர்த்து வைக்கும் அம்சமாக திகழ்கிறாள்.

    அம்மனின் பெருமைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த வகையில் நாடு முழுவதும் பல்வேறு அவதாரம் எடுத்துள்ள அம்மன்களில் தமிழகத்தில் மாரியம்மன் பெரிதும் வணங்கப்படுகிறாள்.

    அந்த வகையில் சக்தி தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக கரூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக திகழ்ந்து வருகிறது. தொழில் நகரமாம் கரூரில் அவதரித்து வரும் இந்த மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத திருவிழா வெகு சிறப்பாகவும், விமரிசையாகவும் நடைபெறும். அப்போது கம்பம் நடுதலும், அதனை அமராவதி ஆற்றில் விடுவதும் தொன்மையும், சிறப்பும் வாய்ந்ததாகும்.

    கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா கம்பம் நடுதலுடன் தொடங்கும். அன்றைய தினம் கோவில் பரம்பரை அறங்காவலருக்கு அசரீரியாக அம்மன் வாக்கு கூறியதையடுத்து மூன்று கிளையுடைய வேப்ப மரத்தின் கம்பினை பாலம்மாள்புரத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலின் பலி பீடம் எதிரே நட்டு வைப்பார்கள்.

    பின்னர் கம்பத்திற்கு மஞ்சள் தேய்த்து, வேப்பிலை சூட்டி அலங்கரித்து வைப்பார்கள். இந்த கம்பத்திற்கு பக்தர்கள் தினமும் புனித நீரை எடுத்து வந்து குடம், குடமாக ஊற்றி வழிபடுவார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சியின் போது, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது திரளான பக்தர்களும் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி அம்மனை வழிபடுவார்கள்.

    அதன்பின்னர் புனித நீர் ஊற்றி கோவிலை சுத்தம் செய்வார்கள். இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன், தீபாராதனை காட்டப்படும். பின்னர் கோவில் பலி பீடம் முன்பு உள்ள கம்பத்தில் வேப்பிலை மற்றும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    அதைத்தொடர்ந்து கம்பத்தை ஆற்றுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்வார்கள். பக்தர்கள் கோவிலின் முன்புற பகுதியில் கம்பத்தை வழியனுப்ப திரண்டு நிற்பார்கள்.

    மாலை நேரத்தில் அம்மன் சன்னதி எதிரே இருந்த கம்பத்தை பூசாரி எடுத்து கோவில் பிரகாரத்தை சுற்றி வருவார். அப்போது விண்ணதிர மேளதாளங்கள் முழங்கும். பின்னர் கோவிலின் முன்புற பகுதியில் தயார் நிலையில் இருந்த பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்திற்குள் கம்பம் வைக்கப்பட்டு ஊர்வலமாக புறப்படும்.

    இரவு 7 மணியளவில் கம்பமானது பசுபதிபாளையம் அமராவதி ஆற்றங்கரையை அடையும். மாவடி ராமசாமியாக அரிவாளுடன் முன்னே அருளாளி செல்ல அதனை பின் தொடர்ந்து கம்பம் ஆற்று பகுதிக்குள் செல்லும். அப்போது ஓம் சக்தி... பராசக்தி... என பக்தர்கள் கோஷம் எழுப்பி கம்பத்தை தொட்டு வணங்குவார்கள்.

    பின்னர் அங்குள்ள மணல் திட்டில் கம்பம் நடப்பட்டு அதன் மீது மஞ்சள், குங்குமம் தூவி பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்படும். இதையடுத்து அங்கு வெட்டி வைக்கப்பட்டிருந்த அகழியில் உள்ள புனிதநீரில் கம்பத்தை விட்டு மூழ்கடிப்பார்கள்.

    அந்த சமயத்தில் பக்தர்கள் மீது அகழியில் இருந்த புனிதநீர் தெளிக்கப்படும். மேலும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கம்பம் சென்ற இடத்தை கண்டு வழிபட்டு செல்வார்கள். சில பக்தர்கள் காலி பாட்டில்களில் அந்த நீரை பிடித்து எடுத்து செல்வார்கள். கம்பம் ஆற்றில் விடப்பட்டதும் கண்களை கவரும் வகையில் விதவிதமான வாண வேடிக்கை நடைபெறும். இந்த நிகழ்ச்சியை காண கரூர் மட்டுமின்றி அண்டை மாவட்ட பக்தர்களும் கடல் அலை போல் திரண்டு வருவார்கள்.
    இன்று (செவ்வாய்க்கிழமை) பூமிதி விழாவும் நாளை (புதன்கிழமை) பொங்கல் வைத்தல், மா விளக்கும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கிடா வெட்டுதலும் நடைபெறுகிறது.
    பாண்டமங்கலத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் மற்றும் பூமிதி திருவிழா கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. 15-ந் தேதி மறுகாப்பு கட்டுதலும், 16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை சிங்கம், காமதேனு, அன்னம் மற்றும் காளை வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் நேற்று முன்தினம் வடிசோறு நிகழ்ச்சியும், நேற்று மாலை தேர் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பாண்டமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) பூமிதி விழாவும் நாளை (புதன்கிழமை) பொங்கல் வைத்தல், மா விளக்கும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கிடா வெட்டுதலும், 27-ந் தேதி மஞ்சள் நீராடலும், 28-ந் தேதி இரவு அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    திருச்சி சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு அடுத்தபடியாக கொங்கு மண்டலத்தில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் ஆலயங்களில் பிரசித்திபெற்ற கரூர் மாரியம்மன் ஆலயமும் ஒன்று.
    கரூரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது மாரியம்மன் கோவில். சக்திவாய்ந்த அம்மன் என்றும் கேட்ட வரம் தரும் மாரியம்மன் என்றும் பக்தர்களால் நம்பிக்கையுடன் வழிபட்டு வரப்படுகிறது.

    கரூர் மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்யதிசை பார்வையுடன் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றாள். மேலும் மதங்களுக்கு அப்பாற்பட்டு மத நல்லிணக்கம் பேணும் புண்ணிய தலமாக இக்கோவில் விளங்குகிறது. சுமார்100 ஆண்டுகளுக்கு முன்பு முன்னோர்கள் தான்தோன்றி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து பிடி மண் எடுத்துவந்து இந்த கோயிலை அமைத்துள்ளனர். கோவிலில் பரம்பரை அறங்காவலராக முத்துக்குமார் உள்ளார். இவரது முன்னோர்கள் இந்த கோயிலை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

    திருச்சி சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தபடியாக உள்ள முக்கிய தலமாக கரூர் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் 22 நாட்கள் திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். இத்திருவிழாவில் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்து கண்ணடக்கம், பூ மிதித்தல், அக்னிசட்டி எடுத்தல், அங்க பிரதட்சணம், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு வழிபாடு, உருவார பொம்மை, அலகு குத்துதல், போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தி மாரியம்மனின் அருளை பெறுகின்றனர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திருவிழா அன்று பந்தல் அமைப்பதை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே முகமது என்ற முஸ்லிம் இனத்தை சேர்ந்தவர் முன் நின்று நடத்தி வைத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

     இன்றும் அவை தலைமுறை, தலைமுறையாக தற்போதும் தொடர்ச்சியாக நிறைவேற்றி வருவது தனி சிறப்பு. மேலும் அம்மன் வழிபாட்டில் சில பூஜைகளை ஏற்பாடு செய்வதும் அம்மன் கோவில் மதிய பூஜை தீர்த்தத்தை வாங்கி அம்மை நோய் தாக்கியவர்களுக்கு கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் நம்பிக்கையோடு கொடுத்து வழிபடுவதும் கோவிலில் தினமும் நடைபெறும் நிகழ்ச்சியாகும். எனவே மத நல்லிணக்கம் பேணும் புண்ணிய தலமாக கரூர் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. கோவில் திருவிழா அன்று கம்பம் ஆற்றில் விடுவது வெகு விமரிசையாக நடைபெறும். கம்பம் விடும் நாளன்று சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் உடன் கம்பத்திற்கு தயிர் சாதம் படைத்து வழிபாடு நடைபெறும்.

    பின்னர் மாரியம்மனுக்கும் கம்பத்திற்கும் மாலை அணிவித்து சிறப்பு வழிபாடுகளுடன் கம்பம் கோவிலில் இருந்து ஊர்வலமாக ஆற்றுக்கு எடுத்து செல்லப்படும். அப்போது கம்பத்திற்கு காவலாக மாவடி ராமசாமி அம்சமாக அரிவாள் எடுத்து செல்லப்படும். இவ்வாறு ஆற்றுக்கு அனுப்பும் கம்பத்திற்கு சில வரலாறுகள் உண்டு. மஞ்சள் நீர் கம்பம் என்பது கடவுளை குறிக்கும். கடவுளின் பிரதிபலிப்பே கம்பம் எனப்படுகிறது. சிவசக்தி, விஷ்ணு சக்தி, பிரம்ம சக்தி ஆகிய மூன்று சக்திகளின் வடிவமாகவே கம்பம் உள்ளது.

    ஆணவம், கண்மம், மாயை என்ற மூன்றையும் நீக்கக் கூடிய சக்தியாகவே கம்பம் விளங்குகிறது. இறைவன் ஏகன் அநேகன் என்பதை வலியுறுத்துவது கம்பம். மூன்று பாகங்கள் இணைந்து ஒரே பாகமாக கம்பம் அமைந்திருக்கும். வழிபாடுகளில் உருவ வழிபாடு, உருவமில்லா வழிபாடு, ஜோதி வழிபாடு என்று பல வகைகள் உண்டு. அதில் மஞ்சள் நீர் கம்பம் வழிபாடு என்பது அனைத்திற்கும் பொதுவானது என்கின்றனர் ஆன்மிக பெரியோர்கள். கரூருக்கு மழை வளம் தரும் தெய்வமாக கரூர் “மாரி”யம்மன் விளங்குகிறாள். ஓவ்வொரு ஆண்டும். கோடை காலத்தில் கம்பம் திருவிழா அன்று கம்பம் சாற்றுதலில் துவங்கி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு வரை அடிக்கடி கண்டிப்பாக மழை பெய்து விடுகிறது.

    கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் திருநீறு மருத்துவ குணம் நிறைந்தது. வெண்டா மண் என்று அழைக்கப்படும் இந்த திருநீற்றை பக்தர்கள் நெற்றியில் பூசிக் கொள்வதன் மூலம் தலைவலி, தலையில் நீர் கோர்த்தல், கண் சம்பந்தமான நோய்கள், தோல் நோய் போன்ற நோய்கள் தீர்ந்து விடுகிறது. இத்தகைய ஒரு அரிய வகை மண், தெய்வீக சக்தி கொண்டதும், பல மருத்துவ குணங்கள் அடங்கியும் உள்ளது.

    அம்மனுக்கு மாவிளக்குக் காரி என்ற பெயரும் உண்டு. அவள் திருவிளையாடலில் கண் வலி, பிடரி வலி, வயிற்று வலி, தலைவலி என இன்னல் படுவோர் மா விளக்கு எடுத்து நெய் விளக்கேற்றி கோயிலின் முன் தன் நேர்த்திக்கடனை செலுத்தினால் பிணியெல்லாம் பனி போல் விலகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
    துன்பம், துயரம், கஷ்டம், இன்னல், இடர் ஏற்படுவதா, ஏற்படுத்திக் கொள்வதா, இதைக் கேள்வியாக முன் வைத்தால் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வது என்பது தான் சரியாகும். அதற்குத் தீர்வு காண அம்மன் சன்னதி, மனதிற்கு நிம்மதி தரும் அந்த சன்னதிக்கு நாமே நம் மனக்கட்டுப்பாடோடு சில நியதிகளை வகுத்துக் கொண்டு நேர்த்திக் கடன்களாய் செய்வதுதான்;

    சிறு குழந்தை முதல் பெரியவர் வரை கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, மொட்டை அடித்து தவமிருந்து பெற்ற குழந்தையை கரும்புத் தொட்டிலிட்டு, அக்னியாய் செங்கதிராய் எழும் தீச்சுடர் சட்டியை கரங்களில் ஆற்றிலிருந்து எடுத்து வழிநெடுக ஊற்றப்படும் எண்ணெய் வேகத்திலும் பைய நடை பயின்று ஆலயம் சேர்க்கும் அழகு தனியழகு. உள்ளம் வருத்தி உயிர் மெய் உருக்கி மேனியெல்லாம் அலகு, நாக்கில் அலகு, இடுப்பில் பெரிய அலகு, முதுகுதண்டில் அலகு குத்தி ஏற்ற வண்டியின் மேல் நிறுத்தி பறக்கும் காவடி, பறவைக் காவடி இப்படி எண்ணற்ற காவடிகளை எண்ணமெல்லாம் நிறைந்த தாய்க்கு தன் நேர்த்திக் கடனாய் செலுத்துவதும் முக்கிய நிகழ்ச்சியாகும்.

    3 ஆண்டுகளுக்குப் பிறகு களைகட்டிய கரூர் மாரியம்மன் திருவிழா

    திருச்சி சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு அடுத்தபடியாக கொங்கு மண்டலத்தில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் ஆலயங்களில் பிரசித்திபெற்ற கரூர் மாரியம்மன் ஆலயமும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் கரூர் மாரியம்மன் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனாவால் 3 ஆண்டுகளாக இத்திருவிழா தடைபட்டது.

    இந்த ஆண்டு வைகாசி திருவிழாவின் முதல் நிகழ்வாக கம்பம் நடும் நிகழ்ச்சி கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. கம்பம் நடுதல் என்பது கோயில் அறங்காவலர்கள் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் கனவில் அம்மன் தோன்றி கம்பம் இருக்கும் இடத்தை கூறுவதாக ஐதீகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து 15 நாள்களுக்கு அதிகாலை தொடங்கி இரவு வரை கம்பத்திற்கு காவிரி தீர்த்தம் செலுத்தும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்ய கூட்டம் தினந்தோறும் அலைமோதும்.

    தொடர்ந்து 13-ந் தேதி வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழாவில் அலங்கரிக்கப்பட்ட பூ அலங்காரத்தில் பகுதிவாரியாக மாரியம்மன் ஆலயத்திற்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 23ஆம் தேதி திருத்தேர், மாவிலக்கு, அக்னி சட்டி, அலகு காவடி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்கள் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    இறுதி நிகழ்ச்சியாக வரும் மே 25-ந்தேதி புதன்கிழமை கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளக்கூடிய பிரமாண்ட நிகழ்ச்சியாக கரூர் மாரியம்மன் திருவிழா நிறைவுபெறுகிறது. கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழாவை ஒட்டி விழாக்குழுவினர் மற்றும் காவல் துறை உள்ளிட்ட இந்து அறநிலையத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் விழாவுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    பிரார்த்தனை தலம்

    கரூரில் கருணை வடிவாய் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் மாரியம்மன் நான்கு கரங்களுடன், கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் இருக்கிறாள். தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை வேரறுத்து இன்மையிலும், நன்மையுடன் வாழ வைக்கும் பிரார்த்தனை தலமாக இந்த கரூர் மாரியம்மன் கோவில் உள்ளது. வழிப் போக்கர், வாசலில் நின்று வணங்கி செல்லும் பக்தர்க ளின் குறைகளை கூட தன தாக்கிக்கொண்டு அவர்கள் வாழ்வின் தடைகளை போக்கி மகிழ்ச்சி பெருக்குடன் வாழ்வை தொடர வைக்கும் தெய்வமாக திகழ்ந்து வருகிறாள்.

    அக்னி சட்டியும், அலகு குத்துதலும் நேர்த்திக்கடன்

    ஆன்மீகமாக இருந்தாலும், அறிவு சார்ந்த நிகழ்வாக இருந்தாலும் எதையுமே கூலி இல்லாமல் அரிதாக வாங்கி விட முடியாது. அதன் பலனை அனுபவித்ததற்கான கூலியை அளித்தே ஆகவேண்டும். அறிவுசார் நிகழ்வுக்கு அதிக மாகவும், அம்மனுக்கு தன்னால் இயன்றதையும் செய்வது சாலச்சிறந்தது. அந்த வகையில் கண்ணீருடன் மருகி நிற்கும் பக்தர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்த்து வைக்கும் கரூர் மாரியம்மனுக்கு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக அக்னி சட்டி ஏந்துதல், அலகு குத்துதல், காவடி எடுத்தல், பால் குடம், மாவிளக்கு வைத்தல், பொங்கல் வைத்தல் ஆகியவற்றை செவ்வனே நிறைவேற்றி வைக்கிறார்கள். இவை தவிர நீர்மோர், பானகம், வடை பருப்பு வைத்து பிரார்த்தனை நடத்தலாம். பால் அபிசே கம் செய்யலாம். திருவிளக்கு பூஜை நடத்தலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம்.

    வீடுகளில் மஞ்சள் நீருடன், தயிர் சாதம் படைத்து வழிபட்ட பக்தர்கள்

    கரூர் நகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், சித்திரை மாதம் இறுதியில் திருவிழா தொடங்கி வைகாசி மாதத்தில் பெருவிழா நடப்பது வழக்கம். அதில், கம்பம் நடுதல், பூத்தட்டு, கம்பம் ஆற்றில் விடுதல் போன்ற நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடக்கும். அன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் கோவிலுக்குள் பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கோவிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அம்மனை தரிசிக்க வரவேண்டாம்.

    தங்கள் வீடுகளில் மஞ்சள் நீர் வைத்து கும்பத்தில் வேப் பிலை, இளநீர், மாவிளக்கு, தேங்காய், பழவகைகளை வைத்து வழிபாடு செய்து, தயிர் சாதம் படையலுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் மக்கள் மஞ்சள் நீர் வைத்து, கும்பத்தில் வேப்பிலை, இளநீர், மாவிளக்கு, தேங்காய், பழவகைகளை வைத்து, தயிர் சாதம் படையலுடன் வழிபாடு செய்தனர்.

    பக்தர்கள் மனதில் ஆறாத வடுவாக இந்த திருவிழா ரத்து இருந்தபோதிலும் நோயற்ற வாழ்வை கரூர் மாரியம்மன் நமக்கு அருளுவார் என்ற நம்பிக்கையுடன் அம்மனை மனதார வழிபட்டு வருகிறார்கள்.

    கரூர் மாரியம்மனுக்கு அக்னி சட்டி எடுத்த கே.பி.சுந்தராம்பாள்

    மாரி என்றால் மழை என்பது பொருள். மாரியம்மன் என்றால் அருள்மழை பொழியும் தெய்வம் என்பது தெளிவு. எல்லை தெய்வமாய் மக்களை காக்கும் அன்னையாய் கருணையே வடிவான தாயாய், கற்பக விருட்சமாய் மாரி விளங்குவதற்கு ஆண்டு தோறும் கரூர் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையே சாட்சி.

    எத்தனையோ பேர் வாழ்வில் எத்தனை, எத்தனையோ அற்புதங்கள் நிகழ்ந்திருந்தாலும் காலப்போக்கில் அவை வெளியுலகிற்கு தெரியாததே அதிகம் எனலாம். முக்கிய பிரமுகர்கள் பலரும் அன்னையின் அருள் மழையில் நனைந்து உள்ளனர் என்பதற்கு பலரது மாட்சியும், சாட்சியும் இன்றளவும் ஒளியாய் திகழ்கிறது.

    அந்த வகையில் வெள்ளித்திரையில் வெண்கலக் குரலுக்கு சொந்தக்காரியான கொடுமுடி கோகிலம் என்ற கே.பி.சுந்தராம்பாள் வெண்கல அக்னி சட்டியேந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பெருமை பெற்றது இந்த கரூர் மாரியம்மன் கோவில்.

    இன்னல் நீங்க வேண்டி எத்தனையோ ஆயிரம் பேர் அக்னிசட்டி ஏந்தி வருகிறார்கள். எத்தகையோ பக்தர்கள் 10, 12 அடி நீளமுள்ள அலகு குத்தி வருகிறார்கள். சில பக்தர்கள் பறக்கும் காவடி பாடைக்காவடி, விமான காவடி எடுத்துஅங்கப் பிரதட் சணம் செய்து கொஞ்சும் மழலைவேண்டி வணங்கி, பின்னர்மாரி அருளால் வந்த குழந்தைகளை கரும்பில் தொட்டில் கட்டி தூக்கி வருவதே பேரழகு தான்.

    சிலர் கரும்புள்ளி, செம் புள்ளி குத்தி குழந்தை வரம் வேண்டுதல், முடிக்காணிக்கை செலுத்துவது, பல்லாயிரம் மாவிளக்கு வைத்தல் என எத்தனை வழிபாடு. அம்மாவாம் கருவூர் மாரிகுழந்தைகளின் உடம்பிலே விளையாட்டாய், விளையாட்டு அம்மையாய் விளையாடும் அழகு தான் எத்தனை. அழகு செதுக்கிய முத்துக்களாய் கோர்த்த மாலையாய் அவர் பார்க்கும் அழகும் வேப்பிலையும், அபிஷேக தீர்த் தமும் வந்த வேகத்தில் வடியும் அழகும் அம்மையின் திருவிளையாடல் அல்லவா! லட்சோப லட்சம் மக்கள் ஆம் பிராவதி எனும் அமராவதி ஆற்றின் கரையில் கூடி வழிபடும் இப்பெருவிழாவை காணாதவர்கள் கண்டு களிக் கவும் அம்மனை தரிசிக்கவும் அழைக்கிறார்கள் அம்மனின் தீவிர பக்தர்கள்.
    ×