என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
ஒட்டநத்தம்மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று தொடங்குகிறது
- நாளை ரக்ஷா பந்தனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெறுகிறது.
- ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
ஓட்டப்பிடாரம் வட்டம் ஒட்டநத்தம் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட விநாயகர், மாரியம்மன், காளியம்மன், துர்க்கையம்மன், பேச்சியம்மன், கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி, முதல்கால யாகசாலை பூஜை, தீபாராதனை உள்ளிட்டவையும், மாலை 5 மணிக்கு புனிதநீர் எடுத்து வருதல், விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி உள்ளிட்டவைகளும் நடக்கிறது.
நாளை (சனிக்கிழமை) யாகசாலை பூஜை, பரிவார மூா்த்திகளுக்கு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் தொடக்கம், கன்யாபூஜை, ரக்ஷா பந்தனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெறுகிறது.
நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், கடம் எழுந்தருளல் நடக்கிறது. 7 மணி முதல் 8 மணிக்குள் விநாயகர், மாரியம்மன், காளியம்மன், துர்க்கையம்மனுக்கு மகா கும்பாபிஷேகமும், 10 மணி முதல் 11 மணிக்குள் பேச்சியம்மன், கருப்பசாமி, பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், இரவில் அம்மன் சப்பரத்தில் வீதி உலா வருதல் நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்