search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ther Thiruvizha"

    • 14-ந்தேதி முதல் தேரோட்டம் 3 நாட்கள் நடக்கிறது.
    • இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

    பாலக்காடு அருகே கல்பாத்தி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சுவாமி கோவில், கணபதி கோவில், சாந்தபுரம் பிரசன்ன விநாயகர் கோவில் ஆகிய 3 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    இதேபோல் நடப்பாண்டில் தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 11 மணிக்கு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜை, அபிஷேக, அலங்கார பூஜைகள் நடக்கிறது.

    வருகிற 14-ந் தேதி முதல் தேரோட்டம், 15-ந் தேதி 2-வது தேரோட்டம், 16-ந் தேதி 3-வது தேரோட்டம் நடைபெற உள்ளது. விழாவின் கடைசி நாளான 16-ந் தேதி 3 கோவில் தேர்களும் கல்பாத்தி கிராமத்தில் ஒரே இடத்தில் வந்து சேரும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • பக்தர்கள் தேரில் எழுந்தருளியஅம்மனை பயபக்தியுடன் வணங்கி வழிபட்டனர்.
    • இன்று மஞ்சள் நீர் தெளித்தலுடன் விழா நிறைவுபெறுகிறது.

    சுல்தான்பேட்டை ஒன்றியம் வடவேடம்பட்டியில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர் திருவிழா கடந்த 16-ந் தேதி கிராம சாந்தி, அக்கினி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் விமரிசையாக தொடங்கியது. 17-ந் தேதி காப்பு கட்டுதல், கொடி கட்டும் நிகழ்ச்சியும், 18-ந்தேதி இரவு 8 மணி அளவில் திருக்கல்யாணம் நடந்தது.

    நேற்று முன்தினம் மாலை முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், முக்கிய அரசியல் பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு தேரில் எழுந்தருளியஅம்மனை பயபக்தியுடன் வணங்கி வழிப்பட்டனர். நேற்று கம்பம் கலைத்தல், பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.

    இன்று (வெள்ளிக்கிழமை) மகா தரிசனம் பெருவிழா மஞ்சள் நீர் தெளித்தல் ஆகியவையுடன் விழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், தக்கார் கண்ணன் மற்றும் வடவேடம்பட்டி ஊர் பொதுமக்கள் இணைந்து செய்து இருந்தனர்.

    • ஒவ்வொரு கிராமத்திற்கு தேர் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தேரை பக்தர்கள் தலையிலும், தோளிலும் சுமந்து சென்றனர்.

    தொட்டியம் அருகே உள்ள தோளூர்பட்டியில் தாழைமடலாயி பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 4-தலைமுறைகளுக்கு முன்பு பிடாரி அம்மன் தேர்த்திருவிழா நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மீண்டும் தேர்த்திருவிழா நடத்த தோளூர்பட்டி, உப்பாத்துபள்ளம், முதலிப்பட்டி, எலந்தமடைப்புதூர், தொட்டியப்பட்டி, கீழகார்த்திகைப்பட்டி, மேலகார்த்திகைப்பட்டி, பாலசமுத்திரம், கணேசபுரம் ஆகிய 9 கிராம மக்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி அவர்கள் சுமார் 25-கிலோ மீட்டர் தூரம் கொண்ட தேர் செல்லும் வழியில் உள்ள எல்லைகளை கண்டுபிடித்து எல்லை கல் நடும் நிகழ்ச்சி நடத்தினர். பின்னர் காப்பு கட்டுதலுடன் திருவிழாவை தொடங்கினர். இதையொட்டி கடந்த 5-ந்தேதி நள்ளிரவு தோளூர்பட்டியில் உள்ள தாழைமடலாயிபிடாரியம்மன் கோவிலில் தேர் தலையலங்காரம் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு கிராமத்திற்கு தேர் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முதலில் உப்பாத்துபள்ளம் கிராமத்திற்கு தேரை பக்தர்கள் தலையிலும், தோளிலும் சுமந்து சென்றனர். பின்னர் முதலிப்பட்டி வழியாக நேற்று மல்லிகை தோட்டம் மற்றும் கரும்பு தோட்டத்தின் வழியாக கீழ கார்த்திகைப்பட்டியை வந்தடைந்தது. இதை தொடர்ந்து பாலசமுத்திரம், கணேசபுரம் உள்ளிட்ட கிராமங்களில் எல்லை உடைக்கும் நிகழ்ச்சியும், எரி காவல் கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    இன்னும் ஒரு வார காலம் நடைபெற உள்ளது.. இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை 9 கிராமங்களை சேர்ந்த ஊர் பொதுமக்களும், ஊர் முக்கிய பிரமுகர்களும், கோவில் சாமியாடிகளும் செய்து வருகின்றனர். சுமார் 250 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விழா நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நாகர்கோவில் அருகே உடையப்பன் குடியிருப்பில் உள்ளது ஸ்ரீமன் நாராயணசாமி கோவில்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன் குடியிருப்பு ஸ்ரீமன் நாராயணசாமி கோவிலில் ஆனி மாத செம்பவள பஞ்சவர்ண திருத்தேர் திருவிழா நேற்று தொடங்கியது.

    இதனையொட்டி நேற்று காலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் ஊர் தலைவர் எம்.தங்க கிருஷ்ணன் தலைமையில், ஊர் நிர்வாகிகள், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பா.ஜ.க. மாவட்ட பொருளாளரும், நாகர்கோவில் மாநகராட்சியின் தெற்கு மண்டல தலைவருமான முத்துராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தென் திருப்பதி என்று அழைக்கப்படும் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.
    துறையூரில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தேர்த்திருவிழா அடுத்த மாதம்(ஜூன்) 4-ந் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு நேற்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருவிழாவின் முதல் நாளான வருகிற 4-ந் தேதி காலை பெருமாள்மலை மேல் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு துவஜாரோகணமும், அன்றிரவு அன்ன வாகனத்தில் பெருமாள் வீதி உலாவும் நடைபெற உள்ளது.

    5-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவில் சிம்ம வாகனத்திலும், 6-ந் தேதி காலை மற்றும் இரவில் அனுமந்த வாகனத்திலும், 7-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவில் சேஷ வாகனத்திலும், 8-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவில் கருட வாகனத்திலும், 9-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவில் யானை வாகனத்திலும் பெருமாள் வீதி உலா நடக்கிறது. 10-ந் தேதி காலை பல்லக்கில் பெருமாள் வீதி உலாவும், அன்று மதியம் திருக்கல்யாண வைபவமும், இரவில் இந்திர விமானத்தில் பெருமாள் வீதி உலாவும் நடைபெகிறது.

    11-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவில் குதிரை வாகனத்திலும் பெருமாள் வீதி உலா நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 8 மணி முதல் 9 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 13-ந் தேதி காலை தீர்த்தவாரி மற்றும் இரவில் சத்தாவரணம் நடைபெறுகிறது. 14-ந் தேதி காலை திருமஞ்சனம் மற்றும் இரவில் ஆளும் பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் யுவராஜ் செய்து வருகிறார்.
    தேர்திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக சூலக்கல் மாரியம்மனுக்கு மகா அபிஷேகமும், அதனைதொடர்ந்து மாரியம்மனுக்கு மஞ்சல் மற்றும் மலர் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் -விநாயகர் கோவில் உள்ளது. இந்த ஆண்டிற்கான தேர்திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 24-ந் தேதி முதல் தினசரி காலை, மாலை நேரங்களில் மாரியம்மன் குதிரை, சிம்ம வாகன சப்பரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    மேலும் சூலக்கல் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் மாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து 3 நாட்கள் தேரோட்டம் நடைபெற்றது. 3-ம் நாள் தேரோட்டம் நிறைவடைந்தது. அன்று இரவு 7.20 மணிக்கு தேரோட்டகொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேர்திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக சூலக்கல் மாரியம்மனுக்கு மகா அபிஷேகமும், அதனைதொடர்ந்து மாரியம்மனுக்கு மஞ்சல் மற்றும் மலர் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மாரியம்மனை தரிசனம் செய்ததனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் புரவிபாளையம் ஜமீன் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோபன்ன மன்றாடியார், சூலக்கல் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சுந்தரராசு மற்றும் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலக்கல், கேரளா மாநிலத்தில் இருந்து வந்த பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
    இன்று (செவ்வாய்க்கிழமை) பூமிதி விழாவும் நாளை (புதன்கிழமை) பொங்கல் வைத்தல், மா விளக்கும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கிடா வெட்டுதலும் நடைபெறுகிறது.
    பாண்டமங்கலத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் மற்றும் பூமிதி திருவிழா கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. 15-ந் தேதி மறுகாப்பு கட்டுதலும், 16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை சிங்கம், காமதேனு, அன்னம் மற்றும் காளை வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் நேற்று முன்தினம் வடிசோறு நிகழ்ச்சியும், நேற்று மாலை தேர் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பாண்டமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) பூமிதி விழாவும் நாளை (புதன்கிழமை) பொங்கல் வைத்தல், மா விளக்கும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கிடா வெட்டுதலும், 27-ந் தேதி மஞ்சள் நீராடலும், 28-ந் தேதி இரவு அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    இன்று (செவ்வாய்க்கிழமை) மா விளக்கு, பொங்கல் மற்றும் வசந்தோற்சவம் நிகழ்ச்சியும், நாளை (புதன்கிழமை) மஞ்சள் நீர் உற்சவம், 26-ந் தேதி கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    நாமக்கல் பிரதான சாலையில் பிரசித்தி பெற்ற பலப்பட்டரை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி தேர்த்திருவிழா சுமார் 3 மாத காலம் விமரிசையாக நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் தேர்த்திருவிழா நடைபெறவில்லை.

    இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, கடந்த 8-ந் தேதி பொதுமக்கள் மோகனூர் காவிரி ஆற்றிற்கு சென்று தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இரவு கோவில் வளாகத்தில் சக்தி அழைப்பு, கம்பம் நடுதல் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 9-ந் தேதி காலை 6 மணிக்கு பூச்சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 15-ந் தேதி மறுகாப்பு பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் வடிசோறு மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    நேற்று அதிகாலை அபிஷேக ஆராதனை, அம்மன் அலங்காரம், அலகு குத்துதல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் இரவு மாவிளக்கு ஊர்வலமும் நடந்தது. நாமக்கல் சந்தை பேட்டை புதூர், ஆர்.பி.புதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தூக்குத்தேரில் வைத்து மாரியம்மனை வீதி, வீதியாக தூக்கி சென்றனர்.

    பொதுமக்கள் ஆங்காங்கே கூடிநின்று மாரியம்மனை வழிபட்டனர். நகரம் முழுவதும் வாழை மரம், தோரணங்கள் கட்டப்பட்டு வாண வேடிக்கை, மேள தாளங்கள் முழங்க விழாக்கோலம் பூண்டு இருந்தது. இதையொட்டி பக்தர்கள் நீண்ட அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) மா விளக்கு, பொங்கல் மற்றும் வசந்தோற்சவம் நிகழ்ச்சியும், நாளை (புதன்கிழமை) மஞ்சள் நீர் உற்சவம், 26-ந் தேதி கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து தினசரி வருகிற ஜூலை மாதம் வரை காலை, மாலை சிறப்பு அபிஷேகம் நடைபெறும். நகரின் பல்வேறு பகுதிகளில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    ×