என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தேர்த்திருவிழாவிற்கு முகூர்த்தக்கால்
Byமாலை மலர்30 May 2022 8:48 AM GMT (Updated: 30 May 2022 8:48 AM GMT)
தென் திருப்பதி என்று அழைக்கப்படும் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.
துறையூரில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தேர்த்திருவிழா அடுத்த மாதம்(ஜூன்) 4-ந் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு நேற்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருவிழாவின் முதல் நாளான வருகிற 4-ந் தேதி காலை பெருமாள்மலை மேல் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு துவஜாரோகணமும், அன்றிரவு அன்ன வாகனத்தில் பெருமாள் வீதி உலாவும் நடைபெற உள்ளது.
5-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவில் சிம்ம வாகனத்திலும், 6-ந் தேதி காலை மற்றும் இரவில் அனுமந்த வாகனத்திலும், 7-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவில் சேஷ வாகனத்திலும், 8-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவில் கருட வாகனத்திலும், 9-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவில் யானை வாகனத்திலும் பெருமாள் வீதி உலா நடக்கிறது. 10-ந் தேதி காலை பல்லக்கில் பெருமாள் வீதி உலாவும், அன்று மதியம் திருக்கல்யாண வைபவமும், இரவில் இந்திர விமானத்தில் பெருமாள் வீதி உலாவும் நடைபெகிறது.
11-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவில் குதிரை வாகனத்திலும் பெருமாள் வீதி உலா நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 8 மணி முதல் 9 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 13-ந் தேதி காலை தீர்த்தவாரி மற்றும் இரவில் சத்தாவரணம் நடைபெறுகிறது. 14-ந் தேதி காலை திருமஞ்சனம் மற்றும் இரவில் ஆளும் பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் யுவராஜ் செய்து வருகிறார்.
5-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவில் சிம்ம வாகனத்திலும், 6-ந் தேதி காலை மற்றும் இரவில் அனுமந்த வாகனத்திலும், 7-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவில் சேஷ வாகனத்திலும், 8-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவில் கருட வாகனத்திலும், 9-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவில் யானை வாகனத்திலும் பெருமாள் வீதி உலா நடக்கிறது. 10-ந் தேதி காலை பல்லக்கில் பெருமாள் வீதி உலாவும், அன்று மதியம் திருக்கல்யாண வைபவமும், இரவில் இந்திர விமானத்தில் பெருமாள் வீதி உலாவும் நடைபெகிறது.
11-ந் தேதி காலை பல்லக்கிலும், இரவில் குதிரை வாகனத்திலும் பெருமாள் வீதி உலா நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 8 மணி முதல் 9 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 13-ந் தேதி காலை தீர்த்தவாரி மற்றும் இரவில் சத்தாவரணம் நடைபெறுகிறது. 14-ந் தேதி காலை திருமஞ்சனம் மற்றும் இரவில் ஆளும் பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் யுவராஜ் செய்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X