search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theemithi Thiruvizha"

    • அக்னி அபிஷேகம் நடைபெற்றது.
    • 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 30-ம் ஆண்டு ஆடி குண்டம் திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. ஏக தின அன்னை தமிழ் அர்ச்சனை, கிராம சாந்தி, முனியப்பன் பகாசுரன் வழிபாடு, கொடியேற்றம், பொங்கல் வைத்தல், 36 அடி நீளம் 2 அடி அகலம் கொண்ட குண்டம் திறத்தல், பூ வளர்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

    திருவிழாவுக்கு சிகரம் வைத்தாற் போல் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு பவானி ஆற்றங்கரையில் இருந்து அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் பூ பல்லக்கில் எழுந்தருளினார். பின்னர் நாதஸ்வர இசை மேளதாளம் முழங்க சுவாமி ஊர்வலம் ஆற்றங்கரையில் இருந்து புறப்பட்டது. அங்கிருந்து புறப்பட்ட சுவாமி ஊர்வலம் அதிகாலை 5 மணிக்கு பீமன் பகாசூரன் சந்நிதி அருகே குண்டம் இறங்கும் இடத்தை வந்தடைந்தது.

    குண்டம் இறங்குவதற்காக நேற்று காலை முதலே கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். குண்டம் இறங்குவதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 6 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி தொடங்கியது. கோவில் தலைமை பூசாரி ரகுபதி கையில் வேலெடுத்து குண்டத்தை வலம் வந்து பூஜை செய்து. மல்லிகை மலர்ச்செண்டு, எலுமிச்சை கனியை குண்டத்தில் வீசி அருளுடன் குண்டத்தில் இறங்கி நடந்து வந்தார்.

    தொடர்ந்து உதவி பூசாரிகள் மணிகண்டன் கோலமுடி, சேகர் சக்தி கரகம், ரமேஷ் சிவன் கரகம் எடுத்தும் குண்டம் இறங்கினார்கள். பின்னர் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் குண்டம் இறங்கினர். காலை 6 மணிக்கு தொடங்கிய குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி மதியம் 12 மணிக்கு நிறைவடைந்தது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மதியம் 12 மணிக்கு அக்னி அபிஷேகம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு தமிழ் புலவர் மு.சவுந்தரராஜன் வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். திருவிழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.கே.சின்னராஜ், மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மாணிக்கவேல் துரைசாமி, தேக்கம்பட்டி ஊராட்சி தலைவி நித்யா நந்தகுமார் மற்றும் துரை நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் நாடார் இளைஞர் குழுவினர் குண்டம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். உதவி ஆணையரும், செயல் அலுவலருமான கைலாசமூர்த்தி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் குண்டம் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    திருவிழாவையொட்டி கோவில் வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உட்பட 3 துணை சூப்பிரண்டுகள், 12 இன்ஸ்பெக்டர்கள், 50 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 550-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சிறுமுகை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், இலவச மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • பல பக்தர்கள் கரகம் எடுத்தும், அலகு குத்தியும் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்
    • கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடந்தது.

    கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் இந்த கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதம் இந்த கோவிலில் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார பூஜைகளும் நடந்து வந்தது. நேற்று முன்தினம் குண்டம் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜைகளும், மாலை 5 மணிக்கு பொங்கல் வைத்து, திருக்குண்டம் திறத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடந்தது. முன்னதாக அதிகாலை 3 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து 6 மணிக்கு தலைமை பூசாரி ரகுபதி அம்மனின் சூலத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் எலுமிச்சை மற்றும் பூக்கட்டுகளை குண்டத்தில் உருட்டி விட்டு அதன் பின்னர் குண்டம் இறங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே. செல்வராஜ் குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கினர். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்பட தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டத்தில் இறங்கி வழிபட்டனர். பல பக்தர்கள் கரகம் எடுத்தும், அலகு குத்தியும் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டம் திருவிழாவை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடந்தது. முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

    விழா ஏற்பாடுகளை திருக்கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத், செயல் அலுவலரும், திருக்கோவில் உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

    திருவிழாவை முன்னிட்டு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. டி.எஸ்.பி.க்கள் தென்னரசு, பாலாஜி, வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் 12 இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர் என சுமார் 550 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவிலின் பல்வேறு பகுதிகள் குறிப்பாக குண்டம் இறங்குமிடம், பவானி ஆற்றில் பக்தர்கள் குளிக்கும் இடங்கள், காணிக்கை செலுத்தும் இடங்கள், நேர்த்திக்கடன் செலுத்தும் இடங்கள் என பல்வேறு பகுதிகளில் சிசிடிவி காமிராக்களும் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணித்தனர். 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் கோபுரங்களும் அமைக்கப்பட்டு இருந்தது.

    பக்தர்கள் வசதிக்காக கோவை, மேட்டுப்பா ளையம், அன்னூர் போன்ற இடங்களில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    • நாளை அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைப்பு நடக்கிறது.
    • நாளை காலை 6 மணிக்கு குண்டம் இறங்குதல் நடக்கிறது.

    மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 30-ம் ஆண்டு ஆடி குண்டம் திருவிழா, கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள், ஏகதின அன்னைத்தமிழ் லட்சார்ச்சனை, கிராம சாந்தி, முனியப்பன், பகாசூரன் வழிபாடு ஆகியன நடைபெற்றது.

    இந்த நிலையில் 6-வது நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு யாகசாலை அமைத்து யாகம் வளர்த்தல், காலை 7 மணிக்கு தேக்கம்பட்டி தேசிய கவுடர் கிராம மக்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. கோவில் தலைமை பூசாரி ரகுபதி சிறப்பு பூஜைகளை செய்திருந்தார்.

    தொடர்ந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தேக்கம்பட்டி ஊர் கவுடர் திருநாவுக்கரசு தலைமையில் வரதராஜ் முன்னிலையில் சிம்ம வாகனம் பொறிக்கப்பட்ட கொடி தாரை, தப்பட்டையுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. அங்கு கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா, கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி ஆகியோர் சிம்ம வாகன கொடி ஊர்வலத்திற்கு வரவேற்பு அளித்தனர். அம்மன் சன்னதியில் சிம்ம வாகன கொடிக்கு சிறப்பு பூஜை செய்த பிறகு கொடி மரம் முன்பு எடுத்துவரப்பட்டது.

    அங்கு சிறப்பு பூஜைக்கு பிறகு கொடி மரத்தில் நாதஸ்வர இசை, மேள-தாளம் முழங்க கொடி ஏற்றபட்டது. மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை, தீபாராதனை, இரவு 8 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பு, காலை 6 மணிக்கு குண்டம் இறங்குதல் ஆகியவை நடைபெற உள்ளன.

    • 7-ந்தேதி கங்கையம்மன் உற்சவர் திருவீதி உலா நடக்கிறது.
    • 8-ந்தேதி கூழ்வார்த்தல் பலி பூஜை, அம்மனுக்கு கும்பம் நடக்கிறது.

    சென்னை கொளத்தூர் புத்தகரம் அங்காளம்மன், கங்கையம்மன், நாகாத்தம்மன் மற்றும் சோமநாத ஈஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீதேவி கங்கையம்மன் ஆடி 3-ம் வாரம் தீ மிதி திருவிழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6-ந்தேதி காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து 8-ந்தேதி மாலை 7 மணிக்கு கூழ்வார்த்தல் நடக்கிறது.

    இதையொட்டி வருகிற 31-ந்தேதி மாலை 6 மணிக்கு அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு காப்பு கட்டுதல் நடக்கிறது. 1, 2-ந்தேதிகளில் காலை மகா யாகம், மாலையில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. 3-ந்தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிசேகம், ஆரத்தியும், மாலை பரிவார தேவதைகளுக்கு பரிவார ஹோமமும் நடக்கிறது.

    4-ந்தேதி காலை தாய் வீட்டு சீர், பூங்கரகம் ஊர்வலம், மாலை குமார மக்கள் சந்திப்பு, 5-ந்தேதி காலை விநாயகர் கோவிலில் இருந்து அம்மனுக்கு 108 பால்குடம் எடுத்து வந்து அபிசேகம், மாலை அக்னி சட்டி ஊர்வலம், அம்மன் வர்ணிப்பு, வாணவேடிக்கை போன்றவை நடக்கின்றன. 6-ந்தேதி காலையில் பூங்கரகம் ஊர்வலம், மாலை அக்னி மூட்டு நிகழ்வு, இரவு பூங்கரகம், தீ மிதித்தல் நடைபெறுகிறது.

    7-ந்தேதி மாலை கங்கையம்மன் உற்சவர் திருவீதி உலா, 8-ந்தேதி கூழ்வார்த்தல் பலி பூஜை, அம்மனுக்கு கும்பம், தெருக்கூத்து உள்ளிட்டவை நடக்கின்றன.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

    • 30-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • தீமிதி திருவிழா 31-ந்தேதி நடக்கிறது.

    சிதம்பரம் தம்பரத்தில் உள்ள கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் ஆடி மாதந்தோறும், தீ மிதி திருவிழா நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் முன்பு அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார். பின்னர், கொடிமரத்தில் விழா கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில், நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) மாலை தெருவடைச்சான் உற்சவமும், 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை தேரோட்டமும், சிகர திருவிழாவான தீ மிதி திருவிழா 31-ந்தேதி(திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு மேல் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 1-ந்தேதி விடையாற்றி உற்சவமும், 2-ந்தேதி மாலை மஞ்சள் நீர் விளையாட்டும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவுடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு பிரேமா வீராசாமி, என்.கலியமூர்த்தி ஆகியோர் செய்துவருகின்றனர்.

    • இன்று மாலை 5 மணிக்கு ரதம் நிலை சேருதல் நடைபெறும்.
    • 26-ந்தேதி முரசனுக்கு அடசல் பூஜை நடக்கிறது.

    குன்னத்தூரில் பொன்காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வலம்புரி விநாயகர், கன்னிமார் சுவாமிகளுடன் முரசன் சுவாமிகளும் எழுந்தருளி அருள் பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில் குண்டம் மற்றும் தேர் ருவிழா பூச்சாட்டுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மகுடம் ஏற்றுதல், சந்தன காப்பு அலங்காரம், கிராம சாந்தி நடைபெற்றது. 18-ந் தேதி காலை 7 மணிக்கு கொடியேற்றம், இரவு 8 மணிக்கு சாமி நகை எடுத்து வர வலையபாளையம் செல்லுதல் நடைபெற்றது. பின்னர் அம்மை அழைப்பு, மாலை 6 மணிக்கு குண்டம் திறப்பும் நடைபெற்றது

    திருவிழாவில் நேற்று முக்கிய நிகழ்வான பாரியூர் கொண்டத்து காளியம்மனை அழைத்து குண்டம் இறங்குதல் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கினர். அதனைத் தொடர்ந்து ரத ஆரோகணம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு ராதா உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு ரதம் நிலை சேருதல் நடைபெறும்.

    நாளை (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு அலங்கார முத்து பல்லக்கில் அம்மன் திருவீதி உலா, 23-ந் தேதி இரவு 9 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, அதனைத் தொடர்ந்து மண்டப கட்டளை நடைபெறும். 24-ந் தேதி காலை 8 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், இரவு 8 மணிக்கு சாமி நகை வலையபாளையம் கொண்டு செல்லுதல் நடக்கிறது. 25-ந் தேதி காலை மறுபூஜை நிறைவு, 26-ந்தேதி முரசனுக்கு அடசல் பூஜையும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • இரவு அம்பாள் வீதியுலா காட்சி நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மயிலாடுதுறை ஆனதாண்டவபுரம் சாலையில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் ெசலுத்தினர். முன்னதாக கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

    தொடர்ந்து 10 நாட்களாக விசேஷ அபிஷேக ஆராதனையும், மகாபாரத கதை நிகழ்ச்சியும் நடந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சந்தனக்காப்பு அலங்காரமும், மாலை தீமிதி திருவிழாவும் நடந்தது.

    தொடர்ந்து இரவு அம்பாள் வீதியுலா காட்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்பூண்டியை அடுத்த மகிழி கிராமத்தில் பழமை வாய்ந்த வாழ்முனீஸ்வரர் கோவில் உள்ளது.
    • இந்த கோவிலில் 32 அடி உயரத்தில் வாழ்முனீஸ்வரரின் பிரமாண்ட சிலை உள்ளது.

    நாகை மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த மகிழி கிராமத்தில் பழமை வாய்ந்த வாழ்முனீஸ்வரர் மற்றும் காதாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 32 அடி உயரத்தில் வாழ்முனீஸ்வரரின் பிரமாண்ட சிலை உள்ளது.

    இந்த கோவிலில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு காலையில் காவடி அபிஷேகம், திருமுழுக்கும், மாலையில் பூந்தேரும், பூங்கரகமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தீமிதி திருவிழா நடந்தது.

    இதையொட்டி கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை ஆய்வாளர் கமலச்செல்வி, செயல் அலுவலர் சண்முகராஜ் (கூடுதல்பொறுப்பு) மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மகாமாரியம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சீர்காழி தென்பாதி மெயின் ரோட்டில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் இரவு அம்மன் கோவிலில் உட்புற வீதிஉலா நடைபெற்றது. தொடர்ந்து தீமிதி திருவிழாவை முன்னிட்டு உப்பனாற்று கரையிலிருந்து பால்குடம், பால்காவடி, அலகு காவடி, பறவை காவடி புறப்பாடு நடந்தது. முன்னதாக இந்த ஊர்வலம் மேல தாளங்கள் முழங்க, வாண வேடிக்கையோடு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.

    பின்னர் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் இரவு, கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து இரவு அம்மன் வீதிஉலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

    இதேபோல மயிலாடுதுறை மாவட்டம் மறையூர் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கரகம், காவடி, பால்குடம் தீமிதி திருவிழா கடந்த 2-ம் தேதி பந்தல்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் அபிஷேக ஆராதனைகள், செல்லியம்மன் கும்ப பூஜை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம், தீமிதி திருவிழா நடந்தது.

    முன்னதாக கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் மறையூர் அகஸ்தீஸ்வரர் கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வாண்வேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க கரகம், கூண்டு காவடி, அலகு காவடி, பால்குடம் எடுத்து கோவிலை வந்தடைந்தனர்.பின்னர் கோவிலின் அருகில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மகாமாரியம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மறையூர் கிராமவாசிகள், குலதெய்வத்தார்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். மேலும் இரவு அம்பாள் வீதி உலா காட்சியும் நடைபெற்றது.

    • கருட வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பெண்ணாடம் அருகே இறையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீமிதி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 24-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு திருமஞ்சனம் மற்றும் மகாபாரத சொற்பொழிவு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் பகவானுக்கு அன்னம் அளித்தல், திருக்கல்யாண உற்சவம், அர்ஜூனன் தபசு, விதுரர் விருந்து, கரகத்திருவிழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து கோவில் அருகே அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் திரளான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    பின்னர் கருட வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. நேற்று கோவிலில் தர்மர் பட்டாபிஷேகம், அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், மஞ்சள் நீராட்டு, சாமி வீதிஉலா உள்பட பல்வேறு நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. இதில் துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    • இன்று மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தில் புகழ் பெற்ற திரவுபதி அம்மன் உடனமர் தர்மராஜா கோவில் உள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த இந்த கோவிலில் 34 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் விழா நடைபெறுகிறது. இதனையொட்டி கடந்த மாதம் 26-ந்தேதி புண்ணியார்ச்சனை, கொடி மரம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

    இதனை தொடர்ந்து கடந்த 5-ந்தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், இரவு பரந்தாமனும் பாஞ்சாலியும் என்ற தலைப்பில் சொற்பொழிவும் நடைபெற்றது. கடந்த 6-ந்தேதி கள்ளிப்பாளையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தக் கலசம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது.

    மதியம் 3 மணிக்கு தர்மராஜா- திரவுபதி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு பவளக்கொடி கும்மியாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. 7-ந்தேதி மாலை 4 மணிக்கு உருவாரம் கொண்டு வருதலும், இரவு அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 8-ந் தேதி காலை குண்டம் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து தர்மராஜா பொங்கல் விழாவும், மாவிளக்கு ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இரவு ஆன்மிக சொற்பொழிவாளர் ஆனந்த் கிருஷ்ணனின் சொற்பொழிவு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நேற்று காலை 5 மணிக்கு தொடங்கி 7 மணி வரை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து உச்சி கால பூஜையும், மாலையில் கலாசாரத்தை மீட்டெடுக்கும் கம்பத்து ஆட்டமும் நடைபெற்றது. இன்று மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கள்ளிப்பாளையம், துத்தாரிபாளையம் மற்றும் வலையபாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
    • இன்று தர்மர் பட்டாபிஷேகமும், சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது.

    கடலூர் பழைய வண்டிப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தீமிதி உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தீமிதி உற்சவம் கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினசரி காலை, மாலை வேளையில் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து வந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மாலை 6.30 மணி அளவில் சக்தி கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து இரவு 7 மணி அளவில், விரதமிருந்த திரளான பக்தர்கள் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிஅளவில் பால்குட ஊர்வலம் நடக்கிறது. பின்னர் மாலை 6 மணியளவில் தர்மர் பட்டாபிஷேகமும், மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 7 மணியளவில் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.

    ×