என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
முத்து பல்லக்கில் மகாசக்தி மாரியம்மன் வீதி உலா
- தினமும் அம்மனுக்கு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
- விடையாற்றி விழாவுடன் திருவிழா நிறைவுபெற்றது.
புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாடிமேட்டூர் கிராமத்தில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 2-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. விழாவின் சிகரநிகழ்ச்சியாக கடந்த 8-ந்தேதி காலை தேரோட்டம் நடைபெற்றது.
மறுநாள் இரவு முத்து பல்லக்கில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழாவில் ஆலம்பாடி, தங்கசாலை, செம்பியக்குடி, குலமாணிக்கம், ஆலம்பாக்கம், புதூர்பாளையம், வாணதிரையான்பாளையம், விரகாலூர், திண்ணகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் அவரவர் வீடுகளுக்கு முன்பு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து மஞ்சள் நீராட்டு, விடையாற்றி விழாவுடன் திருவிழா நிறைவுபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம காரியஸ்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்