முத்து பல்லக்கில் மகாசக்தி மாரியம்மன் வீதி உலா

தினமும் அம்மனுக்கு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.விடையாற்றி விழாவுடன் திருவிழா நிறைவுபெற்றது.
முத்து பல்லக்கில் மகாசக்தி மாரியம்மன் வீதி உலா
Published on

புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாடிமேட்டூர் கிராமத்தில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 2-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. விழாவின் சிகரநிகழ்ச்சியாக கடந்த 8-ந்தேதி காலை தேரோட்டம் நடைபெற்றது.

மறுநாள் இரவு முத்து பல்லக்கில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழாவில் ஆலம்பாடி, தங்கசாலை, செம்பியக்குடி, குலமாணிக்கம், ஆலம்பாக்கம், புதூர்பாளையம், வாணதிரையான்பாளையம், விரகாலூர், திண்ணகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் அவரவர் வீடுகளுக்கு முன்பு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து மஞ்சள் நீராட்டு, விடையாற்றி விழாவுடன் திருவிழா நிறைவுபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம காரியஸ்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com