என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
கொடைக்கானல் சின்ன மாரியம்மன் கோவில் விழா: பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வந்தனர்
- இரவு வாணவேடிக்கையும், அன்னதானமும் நடைபெற்றது.
- சிறப்பு அலங்காரத்தில் சின்ன மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கொடைக்கானல் அண்ணாநகர் பகுதியில் சின்ன மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உற்சவ விழா கடந்த மாதம் 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் சின்ன மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு மின் அலங்கார தேரில் அம்மன் உலா வந்தார்.
விழாவில் நேற்று மேள வாத்தியங்கள் முழங்க 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி, பறவை காவடி எடுத்து மற்றும் பல்வேறு வேடங்கள் அணிந்தும் ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலம் டிப்போ காளியம்மன் கோவிலில் தொடங்கி ஏரிச்சாலை, அண்ணாசாலை, மூஞ்சிக்கல் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் வழியாக கோவிலை வந்து அடைந்தது.
இதனை தொடர்ந்து வண்ண வண்ண பூக்களால் சிறப்பு அலங்காரத்தில் சின்ன மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் இரவு வாணவேடிக்கையும், அன்னதானமும் நடைபெற்றது. இதில் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்