search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manohar Parrikar"

    கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் உடல்நலம் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் இலாகா இல்லாத முதல்-மந்திரியாக அவரை அறிவிக்க பாரதிய ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது. #manoharparrikar
    புதுடெல்லி:

    கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் பித்தப்பை கோளாறு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் முதலில் பனாஜி ஆஸ்பத்திரியிலும், பின்னர் அமெரிக்காவிலும் சிகிச்சை பெற்றார்.

    அங்கு சிகிச்சை முடிந்து பனாஜி திரும்பிய நிலையில் மீண்டும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தற்போது டெல்லியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மனோகர் பாரிக்கர் நீண்டகாலம் சிகிச்சை பெற்று வருவதால் அரசு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியவில்லை. அவ்வப் போது ஆலோசனைகள் மட்டும் வழங்கி வருகிறார். இதனால் தற்காலிகமாக முதல் மந்திரி வகிக்கும் இலாகாக்கள் மற்ற மந்திரிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் மனோகர் பாரிக்கர் நலம்பெற்று திரும்பி முதல்-மந்திரி பொறுப்பை ஏற்பார் என்று மாநில பா.ஜனதா தலைவர் வினய் தெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதனால் முதல்-மந்திரி இல்லாமலேயே மந்திரிசபை கூட்டம் நடந்து வந்தது.

    இதற்கிடையே கோவாவில் பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மராட்டியவாடி கோமந்த கட்சி மற்றும் கோவா பார்வர்டு கட்சிகள் முதல்-மந்திரியாக வேறு ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து மனோகர் பாரிக்கர் இலாக்காக்களை தற்காலிகமாக மற்ற மந்திரிகள் கவனித்து வருகிறார்கள். அதை அவர்கள் நிரந்தரமாக கவனிக்கும் வகையில் பொறுப்புகள் மாற்றப்படுகிறது.

    மனோகர் பாரிக்கர் சிகிச்சை பெற்று திரும்பும் வரை இலாகா இல்லாத முதல்-மந்திரியாக இருப்பார் என அறிவிக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது. #GoaCM #ManoharParrikar #BJP
    எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை சந்தித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நலம் விசாரித்தார். #VenkaiahNaidu #ManoharParrikar
    புதுடெல்லி :

    கோவா மாநில முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் கணைய புற்றுநோயால் அவதிபட்டு வருகிறார். இதற்காக அவர் அமெரிக்காவில் சுமார் 3 மாதம் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.

    அதன் பின்னர் கடந்த மாதம் முதல் வாரத்தில் அவர் நாடு திரும்பினார். அமெரிக்காவில் தீவிர சிகிச்சை பெற்றபோதும், அவருக்கு நோய் பாதிப்பு குறையவில்லை.

    இதையடுத்து கடந்த மாதம் 15-ந் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மனோகர் பாரிக்கர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையில் மனோகர் பாரிக்கரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    இது பற்றி வெங்கையா நாயுடு தனது டுவிட்டரில், ' கோவா மாநிலத்தின் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சந்தித்து அவருடைய உடல் ஆரோக்கியம் குறித்து கேட்டறிந்தேன். அவர் நமது நாட்டின் மிகவும் அன்பான மற்றும் நேர்மையான மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். அவர் விரைவில் குணமடைந்து வந்து எப்போதும் போல இந்த சமூகத்துக்கு சேவையாற்றுவார் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். ' என தெரிவித்தார். #VenkaiahNaidu #ManoharParrikar

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கோவா முதல் மந்திரியின் உடல்நிலை தேறி வருவதாகவும் கோப்புகளில் அவர் கையொப்பமிடுவதாகவும் தெரியவந்துள்ளது. #ManoharParrikar #Goaminister
    புதுடெல்லி:

    ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
     
    அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று சமீபத்தில் கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    நோயின் தன்மை தீவிரம் அடைந்ததால் கடந்த 15-ம் தேதி மனோகர் பரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தனி வார்டில் டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    மனோகர் பரிக்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் கடந்த 8 மாதங்களாக அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என கோவாவில் ஆளும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் குறிப்பிட்டிருந்தார்.

    எனவே மாநிலத்தின் நிர்வாக பொறுப்புகளை மூத்த மந்திரி ஒருவரிடம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த கோவா பா.ஜ.க. தலைவர் வினய் தெண்டுல்கர், கோவா முதல் மந்திரி பதவியில் மாற்றம் என்ற பேச்சுக்கு இடமில்லை. மனோகர் பரிக்கர் முதல் மந்திரியாக தொடர்ந்து நீடிப்பார் என அறிவித்தார்.

    இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கோவா முதல் மந்திரியின் உடல்நிலை தேறி வருவதாகவும் கோப்புகளில் அவர் கையொப்பமிடுவதாக கோவா பொதுப்பணித்துறை மந்திரி சுதின் தவலிக்கர் இன்று தெரிவித்துள்ளார்.

    அவருடைய துறைசார்ந்த அனைத்து கோப்புகளை படித்துப் பார்த்து மனோகர் பரிக்கர் உடனடியாக கையொப்பமிட்டு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் எங்களுக்கு அனுப்பி வைக்கிறார். இதுவரை எந்த கோப்பும் நிலுவையில் இல்லை.

    முதல் மந்திரியின் உத்தரவின்படி வாரந்தோறும் மந்திரிசபை கூட்டம் நடத்தி பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக முடிவு எடுக்கப்படுகிறது. இந்த முடிவுகள் அறிக்கையாக முதல் மந்திரிக்கு அனுப்பி வைக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். #ManoharParrikar #Goaminister
    மந்திரி சபையில் மாற்றங்கள் செய்யப்படும் என அமித்ஷா கூறியிருந்த நிலையில் கோவா அமைச்சரவையில் இருந்து 2 மந்திரிகளை மனோகர் பாரிக்கர் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். #manoharparrikar
    பானாஜி:

    கோவாவில் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அந்த கூட்டணியில் மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி, கோவா பார்வர்டு கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல்-மந்திரி மனோகர் பாரிக்கருக்கு புற்றுநோய் தாக்கியது. அவர் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

    நாடு திரும்பி முதல்வர் பணியை கவனித்து வந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 15-ந் தேதி அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே முதல்- மந்திரி பதவியில் இருந்து பாரிக்கரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து பா.ஜ.க. கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் கோமந்தக்கட்சி தங்களுக்கு முதல்-மந்திரி பதவி வேண்டும் என்று கோரியது.

    ஆனால் பா.ஜ.க. இதை ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முயற்சி செய்தது. ஆனால் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் கோவா சென்ற பா.ஜ.க. தலைவர் அமித்ஷா முதல்-மந்திரி பதவியில் இருந்து பாரிக்கர் மாற்றம் செய்யப்படமாட்டார் என்று அறிவித்தார்.


    மந்திரி சபையில் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்யப்படும் என்றும் அமித்ஷா கூறியிருந்தார். அதை உறுதிப்படுத்துவது போல இன்று கோவா அமைச்சரவையில் இருந்து 2 மந்திரிகளை மனோகர் பாரிக்கர் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார்.

    அவர் உத்தரவின்பேரில் மந்திரிகள் பிரான்சிஸ் டிசவுஷா, பாண்டுரங் மட்கைகர் ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பிரான்சிஸ் டிசவுஷா உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். பாண்டுரங்குக்கு மூளையில் நோய் ஏற்பட்டு மும்பை ஆஸ்பத்திரியில் உள்ளார்.

    இதனால் அவர்கள் இருவரும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதில் நிலேஷ் மற்றும் மிலண்ட்நாயக் இருவரும் புதிய மந்திரிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை அவர்கள் பதவி ஏற்கிறார்கள்.  #GoaCM #manoharparrikar  #GoaCabinet
    உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மனோகர் பாரிக்கர் கோவா முதல்வராக தொடர்ந்து நீடிப்பார் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். #AmitShah #ManoharParrikar
    புதுடெல்லி :

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பாரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று சமீபத்தில் கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மருத்துவர்களின் அலோசனைப்படி கடந்த 15-ம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நலம் வெகுவாகக் குறைந்ததைத் தொடர்ந்து, கோவா மாநில முதல்வர் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே கவர்னரிடம் சென்று காங்கிரஸ் ஆட்சிமைக்க உரிமை கோரியது.

    இந்நிலையில், கோவா மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்ந்து நீடிப்பார் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில், ‘கோவா மாநில முதல்வர் பதவியில் மனோகர் பாரிக்கர் நீடிப்பார். ஆனால் மந்திரிசபையில் மாற்றம் செய்யப்படும். மந்திரிகளின் துறைகள் மாற்றப்படும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். #AmitShah #ManoharParrikar
    உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் மனோகர் பாரிக்கர் கோவா முதல் மந்திரியாக தொடர்ந்து நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ManoharParrikar #GoaCM #VinayTendulkar
    பனாஜி:

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பாரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று சமீபத்தில் கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    நோயின் தன்மை தீவிரம் அடைந்ததால் நேற்று மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தனி வார்டில் டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. அவரது உடல்நிலை பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை.

    கோவாவில் ஆளும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் பனாஜியில் நிருபர்களிடம் கூறுகையில், மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் கடந்த 8 மாதங்களாக அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை. 

    எனவே மாநிலத்தின் நிர்வாக பொறுப்புகளை மூத்த மந்திரி ஒருவரிடம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மனோகர் பாரிக்கரை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று சென்று பார்த்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி டாக்டர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

    இந்நிலையில்,  மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் தெரிவித்த கருத்துக்கு இன்று பதிலளித்த கோவா பா.ஜ.க. தலைவர் வினய் தெண்டுல்கர், கோவா முதல் மந்திரி பதவியில் மாற்றம் என்ற பேச்சுக்கு இடமில்லை. மனோகர் பாரிக்கர் முதல் மந்திரியாக தொடர்ந்து நீடிப்பார் என அறிவித்துள்ளார். #ManoharParrikar #GoaCM #VinayTendulkar
    கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் உடல்நல குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் புதிய முதல்-மந்திரி நாளை தேர்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #manoharparrikar
    புதுடெல்லி:

    கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தனி வார்டில் டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. அவரது உடல்நிலை பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை.

    இதற்கிடையே கோவா மாநிலத்தில் ஆளும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் பனாஜியில் நிருபர்களிடம் கூறுகையில் மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் கடந்த 8 மாதங்களாக அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை. எனவே மாநிலத்தின் நிர்வாக பொறுப்புகளை மூத்த அமைச்சரிடம் வழங்க வேண்டும் என்றார்.

    அவர் முதல்-மந்திரியை மாற்ற வேண்டும் என்று கூறுவதால் அதுபற்றி பா.ஜனதா மேலிடம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. டெல்லி ஆஸ்பத்திரியில் அனுதிக்கப்படும் முன் மனோகர் பாரிக்கர் பனாஜியில் இருந்து பா.ஜனதா தலைவர் அமித்ஷாவுடன் டெலிபோனில் பேசினார். இதில் முதல்-மந்திரி பொறுப்புகளை மூத்த மந்திரிக்கு வழங்குவது பற்றி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து நாளை பனாஜியில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. இதில் புதிய முதல்-மந்திரி தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. புதிய முதல்- மந்திரி பதவிக்கு சபாநாயகர் பிரமோத் சவந்த், துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ, பொதுப் பணித் துறை மந்திரி சுதின் தவாலிகர் ஆகியோர் பெயர்கள் அடிபடுகிறது.

    கோவாவில் தற்போதுள்ள நிலையில் காங்கிரஸ் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயற்சிக்காது என்று மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது. #manoharparrikar
    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #ManoharParrikar
    புதுடெல்லி:

    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் (வயது 62) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களாக அவதிப்பட்டு வருகிறார். முதல்வர் பணிகளையும் கவனிக்க முடியவில்லை. கடந்த மார்ச் மாதம் கணைய நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு ஏறக்குறைய இரு மாதங்கள் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர்  ஜூன் மாதம் நாடு திரும்பினார். அதன்பிறகு மருத்துவப் பரிசோதனைக்காக மீண்டும் அமெரிக்கா சென்ற பாரிக்கர், சிகிச்சை முடிந்து கடந்த சில தினங்களுக்கு முன் நாடு திரும்பினார்.

    இந்நிலையில் மனோகர் பாரிக்கரின் உடல்நிலையில் நேற்று மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. உடனடியாக வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக இன்று மதியம் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர் பிரமோத் கார்க் தலைமையிலான மருத்துவ குழுவினர், பாரிக்கரின் உடல்நிலையை பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கின்றனர்.



    தற்போதைய நிலையில் பாரிக்கரால் நிர்வாக பொறுப்புகளை கவனிக்க முடியாததால், மூத்த அமைச்சர் ஒருவரிடம் முதல்வர் பொறுப்பை தற்காலிகமாக ஒப்படைக்க பாரிக்கர் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. #ManoharParrikar
    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், அவரது பொறுப்பை மூத்த அமைச்சர் ஒருவரிடம் தற்காலிகமாக ஒப்படைக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. #ManoharParrikar
    பனாஜி:

    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த மார்ச் மாதம் கணைய நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு ஏறக்குறைய இரு மாதங்கள் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர்  ஜூன் மாதம் நாடு திரும்பினார். அதன்பிறகு மருத்துவப் பரிசோதனைக்காக, மீண்டும் கடந்த செப்டம்பர் அமெரிக்கா சென்றிருந்த பாரிக்கர் சிகிச்சை முடிந்து 6-ம் தேதி நாடு திரும்பினார்.

    நேற்று மனோகர் பாரிக்கர் உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனையில் இருந்தபடியே அமைச்சர்கள் மற்றும் கோவா மாநில பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார். மேல்சிகிச்சைக்காக மனோகர் பாரிக்கர் இன்று டெல்லி வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    இதற்கிடையே பாரிக்கர் உடல்நலம் கருதியும் தற்போதைய நிலையில் அவரால் நிர்வாக பொறுப்புகளை கவனிக்க முடியாத நிலையில் உள்ளார் என்பதால் பாரிக்கருக்கு பதிலாக புதிய முதல்வரை தேர்வு செய்ய பா.ஜ.க மேலிடம் முடிவுசெய்துள்ளதாகவும், இதற்காக வரும் திங்கள் கிழமை மத்தியக்குழு கோவா செல்ல உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.



    பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் தொடர்ந்து பாரிக்கருடன் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர் ஒருவரிடம் முதல்வர் பொறுப்பை தற்காலிகமாக ஒப்படைக்க பாரிக்கர் விரும்புவதாகவும் தெரிகிறது. இதுபற்றி பாஜக மேலிடம் ஆலோசனை நடத்தி வருகிறது. #ManoharParrikar
    உடல்நலக்குறைவால் ஏற்கனவே இரண்டு முறை அமெரிக்காவுகு சென்று சிகிச்சை எடுத்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் இன்று மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். #ManoharParrikar #GoaCM
    மும்பை:

    கோவா முதல்வராக உள்ள மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கான கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றார். மூன்று மாதங்களுக்கு பிறகு ஜுன் 14-ல் அவர் இந்தியா திரும்பினார். இதன் பின்னர், இம்மாதம் 10-ம் தேதி அவர் மீண்டும் அமெரிக்கா சென்று 17-ம் தேதி திரும்பினார்.

    இந்நிலையில், தற்போது மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் இன்று இரவு மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளதாக கோவா முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.  
    மனோகர் பாரிக்கர் வெளிநாட்டில் இருப்பதால், கோவா சபாநாயகர் தேசிய கொடியேற்றுவதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. #ManoharParrikar #IndependenceDay
    பனாஜி:

    கோவா முதல் மந்திரியாக இருந்து வருபவர் மனோகர் பாரிக்கர். சமீபத்தில் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

    இதற்கிடையே, மனோகர் பாரிக்கர் மீண்டும் சிகிச்சை பெறுவதற்காக, நேற்று அமெரிக்கா சென்றார். வரும் 17ம் தேதி அவர் கோவா திரும்புகிறார்.

    இதையடுத்து, வரும் சுதந்திர தினத்தில் சபாநாயகர் பிரமோத் சாவந்த் தேசிய கொடி ஏற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சபாநாயகர் தேசிய கொடி ஏற்றுவதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் சங்கல்ப் அமோன்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  சுதந்திர தினவிழாவில் முதல்மந்திரி டான் கொடியேற வேண்டும். அவர் அப்படி வரமுடியாத  நிலையில், அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் உள்ளவர் தான் கொடியேற்ற வேண்டும். சபாநாயகர் தேச்ய கொடி ஏற்றுவது விதிகளை மீறிய செயலாகும் என தெரிவித்துள்ளார்.
    அமெரிக்காவில் தனது சிகிச்சையை முடித்துக்கொண்டு கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று நாடு திரும்பினார். #ManoharParrikar #ReturnIndia
    புதுடெல்லி:

    கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கருக்கு கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அதற்காக கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றா. அதைத்தொடர்ந்து, மும்பை லீலாவதி மருத்துவமனையிலும் சிகிச்சைகள் பெற்றார்.

    ஆனாலும், மேல் சிகிச்சைக்காக மனோகர் பாரிக்கர் அமெரிக்கா சென்றார். கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தற்போது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை நிறைவுற்றுள்ளது. இதையடுத்து, மனோகர் பாரிக்கார் இன்று நாடு திரும்பினார். அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் வந்த மனோகர் பாரிக்கர், மும்பை வந்தார். அங்கிருந்து கோவா செல்கிறார். #ManoharParrikar #ReturnIndia
    ×