search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manjima Mohan"

    இந்திய சினிமாவையே உலுக்கிய மீ டூ இயக்கம் குறித்து மஞ்சிமா மோகனிடம் கேட்ட போது, தனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்றும், இது போன்ற சம்பவங்களை தான் அனுபவித்ததும் இல்லை என்று கூறினார். #ManjimaMohan
    அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மஞ்சிமா மோகன், தற்போது கவுதம் கார்த்திக் ஜோடியாக தேவராட்டம் படத்தில் நடித்துள்ளார். ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார்.

    திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடைபெற்று வருவதை எதிர்த்து மீ டூ இயக்கம் உருவாகியுள்ளது. இந்த இயக்கம் வந்த பின் திரைத்துறையில் ஏதேனும் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த மஞ்சிமா, “ எனக்கு இது பற்றி தெரியாது. இது போன்ற சம்பவங்களை நான் அனுபவித்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை.



    இவர்களில் சிலரது அனுபவங்கள் நம்பக்கூடியதாகவும், சிலரது குற்றசாட்டுகள் நம்ப முடியாத அளவிலும் உள்ளன. ஆனால் இதைக் கேட்ட போது பெரும் கொந்தளிப்பே உருவானது” என்று கூறியுள்ளார். இந்தியில் வெளியான குயின் படம் ரசிகர்களிடையேயும் விமர்சகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் மலையாளத்தில் ஸம் ஸம் என்ற பெயரில் உருவாகியுள்ளது. அதில் மஞ்சிமா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்குவர உள்ளது. #ManjimaMohan #MeToo #MeTooIndia

    கிரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் என்.டி.ஆர். வாழ்க்கைப்படத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமான 9 நாயகிகள் நடிக்கின்றனர். #NTRBiopic #Balakrishna
    ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகி வருகிறது. பிரமாண்டமாகத் தயாராகும் இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்கிறார்.

    ‘என்.டி.ஆர். பயோபிக்’ எனத் தற்போது பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடிக்க வித்யா பாலன் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத்திசிங், சாவித்திரி கதாபாத்திரத்தில் நித்யா மேனன், சரோஜா தேவி கதாபாத்திரத்தில் அனுஷ்கா, சவுகார் ஜானகி கதாபாத்திரத்தில் ஷாலினி பாண்டே, ஜெயசுதா வேடத்தில் பாயல் ராஜ்புத், ஜெயப்பிரதா கதாபாத்திரத்தில் ஹன்சிகா, கிருஷ்ண குமாரி வேடத்தில் மாளவிகா நாயர் நடிக்கின்றனர்.

    இதுதவிர, சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் ராணாவும், அவருடைய மனைவியாக மஞ்சிமா மோகனும் நடிக்கின்றனர். இப்படி ஒரே படத்தில் 9 முன்னணி நடிகைகள் நடிப்பதால், இப்போதே இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



    மேலும் இந்தப் படத்தில் முரளி சர்மா, பிரசாத் ரவுல், நாக சைதன்யா, மகேஷ் பாபு, ராணா டகுபதி, மோகன் பாபு மஞ்சு, ராஜசேகர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

    கிரிஷ் இயக்கும் இந்த படத்தை பாலகிருஷ்ணாவே தயாரிக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது. #NTRBiopic #Balakrishna 

    ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகி உள்ளார். #Jiiva #ArulnidhiTamilarasu #ManjimaMohan
    கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் `தேவராட்டம்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மஞ்சிமா மோகன் அடுத்ததாக ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

    ஜீவாவின் குடும்ப தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஜித்தன் ரமேஷ் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் இந்த படத்தை `மாப்ள சிங்கம்' படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கவுள்ளார்.

    நட்பை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் இணைந்துள்ளார். இரண்டு கதாநாயகர்களில் மஞ்சிமா யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.



    யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, அபிநந்தன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற உள்ளார். தற்போது ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 13-ம் தேதி படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. #Jiiva #ArulnidhiTamilarasu #ManjimaMohan

    கிரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் என்.டி.ஆர். வாழ்க்கைப் படத்தில் ஜெயப்பிரதா வேடத்தில் நடிகை ஹன்சிகா நடிக்க இருக்கிறார். #NTRBiopic #JayaPrada #Hansika
    இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான மறைந்த என்.டி.ஆர். வாழ்க்கை திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் என்டிஆராக நடிப்பது என்டிஆரின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா. என்.டி.ஆர். மனைவியாக இந்தி நடிகை வித்யா பாலன் நடித்து வருகிறார்.

    மேலும் இந்தப் படத்தில் முரளி சர்மா, பிரசாத் ரவுல், நாக சைதன்யா, மகேஷ் பாபு, ராணா டகுபதி, மோகன் பாபு மஞ்சு, ராஜசேகர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

    படத்தில் என்டிஆருடன் நடித்த நடிகைகளின் கதாபாத்திரங்களும் இந்தப் படத்தில் இடம்பெறுகிறது. ஸ்ரீதேவி வேடத்தில் ரகுல் பிரீத்தி சிங் நடிக்க, சாவித்திரி வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார்.



    மேலும், ஜெயசுதா வேடத்தில் பாயல் ராஜ்புத் நடிக்க, ஜெயப்பிரதா வேடத்தில் தமன்னா நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், இப்போது ஜெயப்பிரதா வேடத்தில் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தின் முதல் பாகம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது.

    பிரபுதேவாவின் குலேபகாவலி படத்துக்குப் பிறகு நடிகை ஹன்சிகா கைவசம் விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை, அதர்வாவின் 100, மகா என மூன்று படங்கள் தமிழில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #NTRBiopic #JayaPrada #Hansika

    தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகும் என்.டி.ஆர். வாழ்க்கை வரலாறு படத்தில் சந்திரபாபு நாயுடுவாக நடிக்கும் ராணாவின் மனைவி வேடத்தில் மஞ்சிமாக மோகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #NTRBiopic #ManjimaMohan
    சிம்புவுக்கு ஜோடியாக ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். பொதுவாகவே கவுதம் மேனனின் படங்களில் கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளும் பேசப்படுவது வழக்கம். அது இப்படத்தின் வாயிலாக மஞ்சிமா மோகனுக்கும் கிடைத்தது.

    தொடர்ந்து விக்ரம் பிரபுவுடன் சத்ரியன், உதயநிதியுடன் இப்படை வெல்லும் போன்ற படங்களில் நடித்தாலும், அவருக்கான வரவேற்பு அதன்பிறகு பெரிதாக இல்லை. தற்போது அவருக்கு தமிழில் கவுதம் கார்த்திக்குடன் நடிக்கும் தேவராட்டம் படம் மட்டுமே உள்ளது.

    இந்நிலையில் தெலுங்கில் தற்போது உருவாகி வரும் என்.டி.ஆர் வாழ்க்கைப் படத்தில் சந்திரபாபு நாயுடுவாக நடிக்கும் ராணாவுக்கு மனைவியாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உருவாகி வரும் இப்படத்தில் இணைவதன் வாயிலாக தெலுங்கில் தனது இரண்டாவது படத்தில் நடிக்க உள்ளார் மஞ்சிமா.



    ஏற்கனவே அச்சம் என்பது மடமையடாவின் தெலுங்கு பதிப்பான ‘சாகசம் ஸ்வாசகா சகிக்கோ’வின் மூலம் தெலுங்கில் அவர் அறிமுகம் ஆகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #NTRBiopic #ManjimaMohan

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதை படத்தில், அவரது வேடத்தில் நடிக்க சிம்பு பட நடிகை விருப்பம் தெரிவித்துள்ளார். #Jayalalithaa
    திரையுலக சாதனையாளர்கள் வாழ்க்கை படங்களாகி வெளிவருகின்றன. மறைந்த சில்க் ஸ்மிதா வாழ்க்கை ‘த டர்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாகி திரைக்கு வந்தது. சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருது  கிடைத்தது. 

    சாவித்திரியின் வாழ்க்கையை தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் படமாக எடுத்து வெளியிட்டனர். சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். 

    இந்த படத்துக்கு இரு மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. சஞ்சய்தத் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான சஞ்சு படத்தில் அவரது கதாபாத்திரத்தில் ரன்பீர்கபூர் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் சாதனைகள் நிகழ்த்திய மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் வாழ்க்கையும் படமாகிறது. 

    மறைந்த ஆந்திர முன்னாள் முதல்–மந்திரியும், பிரபல தெலுங்கு நடிகருமான என்.டி.ராமராவ் வாழ்க்கை படமாகி வருகிறது. இதில் என்.டி.ராமராவாக அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். மலையாள பட உலகில் கவர்ச்சியாக நடித்து முன்னணி நடிகர்கள் படங்களை வசூலில் பின்னுக்கு தள்ளிய ‌ஷகிலாவின் வாழ்க்கையும் படமாக எடுத்துள்ளனர். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. 



    மறைந்த முதல்– அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையையும் படமாக எடுக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இதில் அவரது கதாபாத்திரத்தில் வித்யாபாலன் அல்லது கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என்று பேசப்பட்டது. இந்த நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் ஜெயலலிதா வாழ்க்கை கதை படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்து உள்ளார். 

    இதுகுறித்து அவர்  கூறும்போது, ‘‘ஜெயலலிதா வாழ்க்கை கதை படத்தில் அவரது வேடத்தில் நடிக்க ஆசை உள்ளது. ஜெயலலிதாவின் தைரியம் எனக்கு பிடிக்கும். தனது முடிவில் இருந்து எந்த காரணத்துக்காகவும் அவர் பின்வாங்க மாட்டார். அவருடைய தைரியம் எல்லா பெண்களுக்கும் இருக்க வேண்டும்’’ என்றார்.

    மஞ்சிமா மோகன் சிம்புவுக்கு ஜோடியாக ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
    முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கவிருக்கும் `தேவராட்டம்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகி உள்ளார். #Devarattam #ManjimaMohan
    `கொடிவீரன்' படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் படம் `தேவராட்டம்'. கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகி இருக்கிறார். 

    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய பிரவீன்.கே.எல். படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். `முத்துராமலிங்கம்' படத்திற்கு பிறகு மீண்டும் கிராமத்து சாயலில் நடிக்க இருக்கிறார் கவுதம் கார்த்திக். 



    சமீபத்தில் இந்த படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இந்த படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Devarattam #GauthamKarthik #ManjimaMohan

    ×