என் மலர்
நீங்கள் தேடியது "Muthaiah"
- இயக்குநர் முத்தையா இயக்கும் அடுத்த படத்தில் நாயகனாக தனது மகனை அறிமுகப்படுத்த இருக்கிறார்.
- இப்படத்திற்கு சுள்ளான் சேது என தலைப்பு வைத்துள்ளனர்.
கிராமத்து பின்னணியுடைய படங்கள் மிகவும் அரிதாகி விட்டன. இதை எடுக்கும் இயக்குநர்கள் வெகு சிலரே எனலாம். கிராமத்து பின்னணி படங்களை முதன்மையாக எடுப்பதில் கைத்தேர்ந்தவர் இயக்குநர் முத்தையா. இவர் எடுத்த கொம்பன்,குட்டி புலி,விருமன், போன்ற படங்களே இதற்கு சாட்சி.
கார்த்தி நடிப்பில் வெளிவந்த கொம்பனும்,விருமனும் மக்களிடையே நல்ல வர வேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ஆர்யா நடித்து வெளியான 'காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்' படத்தை இயக்குநர் முத்தையா இயக்கி இருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் முத்தையா இயக்கும் அடுத்த படத்தில் நாயகனாக தனது மகனை அறிமுகப்படுத்த இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் பரத் வில்லனாக நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு சுள்ளான் சேது என தலைப்பு வைத்துள்ளனர்.
மேலும் படத்தில் சமுத்திரகனி மற்றும் பிரிகிடா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் டீசரை ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன்படி படத்தின் டீசர் வரும் 27 ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் இசையை ஜென் மார்டின் மற்றும் ஜிப்ரான் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- முத்தையா இயக்கிய கொம்பன், மருது, தேவராட்டம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
- நடிகர் விஷால், ஏற்கனவே முத்தையா இயக்கிய மருது படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்
மருது படத்தில் இணைந்து பணியாற்றிய விஷால் - முத்தையா கூட்டணி, தற்போது மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. இதையடுத்து அவர் இயக்கிய கொம்பன், மருது, தேவராட்டம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான புலிக்குத்தி பாண்டி திரைப்படம் டி.ஆர்.பி.யில் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்தது.
அடுத்ததாக இவர் இயக்கிய காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படம் மக்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து அவர் தனது மகனை நாயகனாக அறிமுகப்படுத்தி புதிய படத்தை இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் நடிகர் பரத் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில், முத்தையா அடுத்ததாக இயக்கும் படத்தில் நடிகர் விஷால் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் கிராமத்து கதையம்சம் கொண்ட படம் தானாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஷால் நடிப்பில் அண்மையில் வெளியான ரத்னம் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. ஆகவே இதற்கடுத்து துப்பறிவாளன் 2 படத்தில் விஷால் இணைவார் என்றும் அதற்கடுத்து முத்தையா இயக்கத்தில் அவர் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.









