search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lucknow Super Giants"

    • ஜேக் ஃபிரேசர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார்.
    • லக்னோ சார்பில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 26 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய லக்னோ அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய குவிண்டன் டி காக் மற்றும் கேப்டன் கே.எல். ராகுல் முறையே 19 மற்றும் 39 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 3 ரன்களிலும், மார்கஸ் ஸ்டாயினிஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ரன்களை குவித்தது. லக்னோ அணி சார்பில் ஆயுஷ் பதோனி சிறப்பாக ஆடி 34 பந்துகளில் 55 ரன்களை குவித்தார். டெல்லி சார்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இஷாந்த் சர்மா, முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு பிரித்வி ஷா நல்ல துவக்கம் கொடுத்தார். 22 பந்துகளில் 32 ரன்களை குவித்த பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய டேவிட் வார்னர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ஜேக் ஃபிரேசர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 35 பந்துகளில் 55 ரன்களை விளாசிய ஜேக் ஃபிரேசர் நவீன் உல் ஹக் பந்தில் ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய கேப்டன் ரிஷப் பந்த் 24 பந்துகளில் 41 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    18.1 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2024 ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

    லக்னோ சார்பில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும், யாஷ் தாக்கூர் மற்றும் நவீன் உல் ஹக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • கே.எல். ராகுல் 39 ரன்களை குவித்தார்.
    • குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 26 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லாங்கோ அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய லக்னோ அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய குவிண்டன் டி காக் மற்றும் கேப்டன் கே.எல். ராகுல் முறையே 19 மற்றும் 39 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 3 ரன்களிலும், மார்கஸ் ஸ்டாயினிஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ரன்களை குவித்தது. லக்னோ அணி சார்பில் ஆயுஷ் பதோனி சிறப்பாக ஆடி 34 பந்துகளில் 55 ரன்களை குவித்தார். டெல்லி சார்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இஷாந்த் சர்மா, முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • லக்னோ அணி ஒரே ஒரு போட்டியில் தோல்வியுற்றுள்ளது.
    • டெல்லி அணி நான்கு தோல்விகளை சந்தித்துள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 26 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

    லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் லக்னோ அணி ஒரே ஒரு போட்டியில் தோல்வியுற்றுள்ளது. டெல்லி அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்துள்ளது.

    அந்த வகையில், வெற்றி பெறும் முனைப்பில் டெல்லி அணியும், தொடர் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் லக்னோ அணியும் களமிறங்குகின்றன.

    • லக்னோ அணி வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார்.
    • ஒருவார காலம் மருத்துவ மேற்பார்வையில் இருக்க வேண்டிய அவசியம்.

    ஐ.பி.எல். 2024 தொடரில் லக்னோ அணிக்காக களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ். இளம் வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் தனது அபாரமான பந்துவீச்சு காரணமாக பிரபலமாகியுள்ளார்.

    இந்த நிலையில் காயம் காரணமாக மயங்க் யாதவ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டியில் களமிறங்க மாட்டார் என்று லக்னோ அணியின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    அடிவயிற்று பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருவார காலம் மருத்துவ மேற்பார்வையில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் மயங்க் யாதவ் லக்னோ அணி விளையாட உள்ள அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மயங்க் யாதவ் லக்னோ அணி வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார். 

    • குஜராத் தரப்பில் சாய் சுதர்சன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • லக்னோ அணி தரப்பில் யாஸ் தாகூர் 5 விக்கெட்டும், குர்ணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளை கைப்பற்றின.

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி லக்னோ அணிக்கு பேட்டிங்கில் துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் குவிண்டன் டி காக் 6 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் ஏழு ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

    எடுத்ததும் இரண்டு விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணிக்கு கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் மார்கஸ் ஸ்டாயினிஸ் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். கே.எல். ராகுல் 33 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஸ்டாயினிஸ் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

    இறுதியில் லக்னோ அணி 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது. குஜராத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், தர்ஷன் நல்கண்டே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    இதனையடுத்து குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கில் - சுதர்சன் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தது. மெதுவாக விளையாடி கில் 21 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த வில்லியம்சன் 1 ரன்னில் வெளியேறினார்.

    அதனை தொடர்ந்து குஜராத் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். சரத் 2, விஜய் சங்கர் 17, நல்கண்டே 12, ரஷித்கான் 0, உமேஷ் யாதவ் 2, என விக்கெட்டுகளை இழந்தனர். அதிரடியாக விளையாடிய தெவாட்டியா 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் குஜராத் அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் எடுத்தது. இதனால் லக்னோ அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணி தரப்பில் யாஸ் தாகூர் 5 விக்கெட்டும், குர்ணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளை கைப்பற்றின. 

    • 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 21-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது.
    • இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 4 ஆட்டங்களிலுமே குஜராத் அணியே வாகை சூடியுள்ளது.

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 21-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 4 ஆட்டங்களிலுமே குஜராத் அணியே வாகை சூடியுள்ளது.

    • ஐபிஎல் போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
    • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார்.

    17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் - லக்னோ அணிகள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மோத உள்ளன.

    கடந்த ஆண்டு 5-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் களம் இறங்குகிறது.

    கடந்த இரண்டு ஆண்டுகளும் தொடர்ச்சியாக 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார்.

    இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.

    • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, தனது கேப்டன் மற்றும் துணை கேப்டன் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
    • 2024 ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் தொடர்வார்.

    லக்னோ:

    இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

    நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 22-ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் நடைபெறும் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்நிலையில் ஐ.பி.எல். அணிகளில் ஒன்றான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, தனது கேப்டன் மற்றும் துணை கேப்டன் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி 2024 ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் தொடர்வார். அவர் லக்னோ அணி ஆரம்பிக்கப்பட்ட சீசனிலிருந்தே அதன் கேப்டனாக செயல்படுகிறார்.

    கடந்த வருட ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக கேஎல் ராகுல் விலகிய நிலையில் துணை கேப்டனான குர்ணால் பாண்ட்யா அணியை வழிநடத்தினார். அவர் 6 போட்டிகளில் கேப்டனாக பணியாற்றினார். இந்நிலையில் இந்த ஆண்டில் லக்னோ அணியின் துணை கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் நிக்கோலஸ் பூரனும் செயல்படுவார்கள் என அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    • ஐ.பி.எல். தொடரில் முதல் முறையாக விளையாட இருக்கிறார்.
    • இங்கிலாந்தின் மார்க் வுட்-க்கு மாற்றாக சேர்க்கப்படுகிறார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் 2024 ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது உறுதியாகிவிட்டது. அந்த வகையில், ஷமர் ஜோசப் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாட இருப்பதாக அந்த அணி அறிவித்து இருக்கிறது. இவர் இங்கிலாந்தின் மார்க் வுட்-க்கு மாற்றாக லக்னோ அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

    கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷமர் ஜோசப் தனி ஆளாக நின்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் ஆர்டரை முழுமையாக தகர்த்த ஷமர் ஜோசப் இரண்டாவது இன்னிங்ஸ்-இல் 68 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி கப்பாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி காரணமாக ஷமர் ஜோசப் உலகளவில் பிரபலமான வேகப்பந்து வீச்சாளராக மாறினார். முதல் முறையாக ஐ.பி.எல்.-இல் களமிறங்கும் ஷமர் ஜோசப்-க்கு லக்னோ அணி சார்பில் ரூ. 3 கோடி வழங்கப்படுகிறது.

    இது தொடர்பாக ஐ.பி.எல். சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "2024 டாடா இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மார்க் வுட்-க்கு மாற்றாக ஷமர் ஜோசப்-ஐ தேர்வு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இவர் லக்னோ அணியில் ரூ. 3 கோடி விலையில் இணைகிறார்," என குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • நேற்றைய போட்டியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.
    • பிளே ஆப் சுற்று போட்டியில் 3 ரன் அவுட் நடந்தது இது 2-வது முறையாகும்.

    லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான பிளே ஆஃப் சுற்றின் 2ஆவது போட்ட்டி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.

    பின்னர் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ஒவ்வொரு வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில், முக்கியமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர்.

    இதன்மூலம் பிளே ஆப் சுற்று போட்டியில் 3 ரன் அவுட் நடந்தது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னதாக, கடந்த 2010-ம் ஆண்டு மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 ரன் அவுட் ஆனது. இதில், சிஎஸ்கே வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

    கேமரூன் கிரீன் வீசிய 12-வது ஓவரின் 5-வது பந்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2 ரன்கள் எடுக்க முயற்சித்தார். அப்போது 2-வது ரன்னிற்கு ஓடும் போது தீபக் ஹூடா மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இருவரும் முட்டி மோதிக் கொண்டனர். இதனால், அவர் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார்.

    இதே போல பியூஷ் சாவ்லா வீசிய 3-வது பந்தில் அடித்து விட்டு ஓட முயற்சித்துள்ளார். ஆனால், ஹூடா வேண்டாம் என்று மறுப்பு தெரிவிக்க பின் மீண்டும் கிரீஸுக்குள் சென்றார். அப்போது கேமரூன் கிரீன் பந்தை தடுத்து ரோகித் சர்மாவிடம் வீசினார். அதற்குள் ரன் ஓட முயற்சித்த கிருஷ்ணப்பா கவுதம்மை, ரோகித் சர்மா ரன் அவுட் செய்தார்.

    இந்த 2 பேரையும் ரன் அவுட்டாக்கிவிட்டதாக கருதப்படும் தீபக் ஹூடாவும் ரன் அவுட்டாகி வெளியில் சென்றார். நவீன் உல் ஹாக் அடித்த பந்திற்கு ரன் எடுக்க தீபக் ஹூடா ஓடியுள்ளார். ஆனால், கிரீன் பந்தை தடுத்து ஆகாஷ் மத்வாலிடம் வீசியிருக்கிறார். அவரோ ரோகித் சர்மாவிடம் வீச தீபக் ஹூடா பரிதாபமாக ஆட்டமிழந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த 3 ரன் அவுட் லக்னோ அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து 2-வது முறையாக லக்னோ அணி எலிமினேட்டர் சுற்றில் வெளியேறியுள்ளது.

    • 15.5 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் மட்டுமே லக்னோ எடுத்திருந்தது.
    • சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஸ்டாய்னிஸ் 2 ரன்னுக்கு ஆசைப்பட்டு ஆட்டமிழந்தார்.

    ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் குர்ணால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது.

    டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 11 ரன்னிலும், இஷான் கிஷன் 15 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர்.

    இந்த சரிவுக்குப் பின் கேமரான் கிரீன், சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது.

    11வது ஓவரில் அணியின் ஸ்கோர் 104 ஆக இருந்தபோது, சூர்யகுமார் யாதவ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் கேமரான் கிரீன் அவுட் ஆனார்.

    அவர் 23 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 41 ரன்கள் விளாசினார். திலக் வர்மா 26 ரன்களிலும், டிம் டேவிட் 13 ரன்களிலும், கிறிஸ் ஜோர்டான் 4 ரன்னிலும், நேஹல் வதேரா 23 ரன்களிலும் ஆட்டமிழக்க, மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.

    லக்னோ தரப்பில் நவீன் உல் ஹக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். யஷ் தாகூர் 3 விக்கெட்டுகள், மோஷின் கான் ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கியது.

    இதில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் 40 ரன்கள் எடுத்த நிலையில், 2 ரன்னுக்கு ஆசைப்பட்டு ரன் அவுட் ஆனார். 

    தொடர்ந்து, மயேர்ஸ் 18 ரன்களிலும், குருணல் பாண்டியா 8 ரன்களிலும், பிரேராக் மாங்கட் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 ரன்களிலும், கிருஷ்ணப்பா கவுதம் 2 ரன்களிலும், ஆயுஷ் பதோனி ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். நிக்கோலஸ் பூரன் ஒரு ரன் கூட எடுக்கவில்லை.

    தீபக் ஹூடாவும், கிருஷ்ணப்பா கவுதமும் சொர்ப்ப ரன்னில் ரன் அவுட் ஆகினர். அடுத்தடுத்து 3 ரன் அவுட் லக்னோவிற்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தியது.

    15.5 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் மட்டுமே லக்னோ எடுத்திருந்தது. 31 பந்துகளில் 83 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் லக்னோ தொடர்ந்து விளையாடியது.

    நவீன் உல் அக் மற்றும் மோஹ்சின் கான் களமிறங்கினர். இதில், நவீன் உல் அக் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மோஹ்சின் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மேத்வால் 5 விக்கெட்டுகளும், கிரிஷ் ஜோர்டான் மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் லக்னோ அணி 16.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 101ரன்களை எடுத்து தோல்வியை சந்தித்தது.

    இதன்மூலம், மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி பெற்றுள்ளது. இதனால், லக்னோ அணி தொடரில் இருந்து வெளியேறுகிறது.

    நேற்று பிளே ஆப் சுற்றில் தோல்வி அடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் குவாலிபையர் 2-ல் மும்பை அணி எதிர்த்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கேமரான் கிரீன், சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது.
    • லக்னோ தரப்பில் நவீன் உல் ஹக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    சென்னை:

    ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் குர்ணால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது.

    டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 11 ரன்னிலும், இஷான் கிஷன் 15 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். இந்த சரிவுக்குப் பின் கேமரான் கிரீன், சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது. 

    கேமரான் கிரீன்
    கேமரான் கிரீன்

    11வது ஓவரில் அணியின் ஸ்கோர் 104 ஆக இருந்தபோது, சூர்யகுமார் யாதவ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் கேமரான் கிரீன் அவுட் ஆனார். அவர் 23 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 41 ரன்கள் விளாசினார்.

    திலக் வர்மா 26 ரன்களிலும், டிம் டேவிட் 13 ரன்களிலும், கிறிஸ் ஜோர்டான் 4 ரன்னிலும், நேஹல் வதேரா 23 ரன்களிலும் ஆட்டமிழக்க, மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.

    லக்னோ தரப்பில் நவீன் உல் ஹக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். யஷ் தாகூர் 3 விக்கெட்டுகள், மோஷின் கான் ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்குகிறது.

    ×