search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிக்கோலஸ் பூரன்"

    • நிக்கோலஸ் பூரன் லக்னோ அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.
    • பெயர் மூன்றாவது வீரராக குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 11 ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் கே.எல். ராகுல் கேப்டன்சி செய்யாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருக்கு பதிலாக இந்த போட்டியில் நிக்கோலஸ் பூரன் லக்னோ அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.

    இந்த போட்டியில் விளையாடும் கே.எல். ராகுல் இம்பேக்ட் வீரராக களமிறங்கினார். அணி வீரர்கள் படிவத்தில் இவரது பெயர் மூன்றாவது வீரராக குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த போட்டியில் கே.எல். ராகுல் ஏன் கேப்டனாக செயல்படவில்லை என்ற காரணத்தை நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "கே.எல். ராகுல் காயமுற்று அணிக்கு திரும்பியுள்ளார். நீண்ட தொடர் என்பதால் நாங்கள் அவருக்கு சற்று ஓய்வை அளிக்க விரும்புகிறோம். ஆனால் இன்றைய போட்டியில் அவர் இம்பேக்ட் வீரராக களமிறங்குவார். அனைவரும் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும்," என்று தெரிவித்தார்.

    • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, தனது கேப்டன் மற்றும் துணை கேப்டன் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
    • 2024 ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் தொடர்வார்.

    லக்னோ:

    இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

    நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 22-ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் நடைபெறும் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்நிலையில் ஐ.பி.எல். அணிகளில் ஒன்றான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, தனது கேப்டன் மற்றும் துணை கேப்டன் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி 2024 ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் தொடர்வார். அவர் லக்னோ அணி ஆரம்பிக்கப்பட்ட சீசனிலிருந்தே அதன் கேப்டனாக செயல்படுகிறார்.

    கடந்த வருட ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக கேஎல் ராகுல் விலகிய நிலையில் துணை கேப்டனான குர்ணால் பாண்ட்யா அணியை வழிநடத்தினார். அவர் 6 போட்டிகளில் கேப்டனாக பணியாற்றினார். இந்நிலையில் இந்த ஆண்டில் லக்னோ அணியின் துணை கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் நிக்கோலஸ் பூரனும் செயல்படுவார்கள் என அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    • 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    • அர்ஷ்தீப் சிங் மற்றும் கிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ஒரு போட்டோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2016-க்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் பெற்ற முதல் இருதரப்பு தொடர் வெற்றி இதுவாகும். இந்த தொடரின் தொடர் நாயகன் விருதை நிக்கோலஸ் பூரன் தட்டி சென்றார்.

    இந்நிலையில் நிக்கோலஸ் பூரன் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் மற்றும் கிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ஒரு போட்டோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

     

    அதில் அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில் அடிவயிற்றில் வாங்கிய காயங்களின் படத்தையும், நான் ஸ்ட்ரைக்கர் முனையில் நின்றபோது பிராண்டன் கிங் அடித்த ஷாட் பூரன் இடது முன்கையைத் தாக்கியது. அந்த தழும்பையையும் மேற்கோள் காட்டி இருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

    இந்த புகைப்படம் தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • எனது பந்துவீச்சு நேர்த்தியாக இருக்கும். தவறு செய்ய மாட்டேன் என்பது எனக்கு தெரியும்.
    • நான் பேசுவதை கேட்டு 4-வது போட்டியில் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாட வருவார் என்பதும் எனக்கு தெரியும்.

    கயானா:

    வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    கயானாவில் நடந்த இந்த ஆட்டத்தின் முதலில் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 160 ரன் இலக்காக இருந்தது.

    பிரெண்டன் கிங், 42 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ரோமன் போவெல் 19 பந்தில் 40 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், அக்ஷர் படேல், முகேஷ் குமார் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் விளையாடிய இந்திய அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சூர்யகுமார் யாதவ் 44 பந்தில் 83 ரன்னும் (10 பவுண்டரி, 4 சிக்சர்), திலக் வர்மா 37 பந்தில் 49 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும், மெக்காய் 1 விக்கெட்டும் எடுத்தனர். முதல் 2 போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு இந்திய அணி இந்த வெற்றியை பெற்றது. இதில் தோற்று இருந்தால் 20 ஓவர் தொடரை இழந்து இருக்கும். வெற்றி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. எஞ்சிய 3 ஆட்டங்களும் மிகவும் முக்கியமானது என்று இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பு நாங்கள் பேசி இருந்தோம். அதற்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு விளையாடினோம்.

    நிக்கோலஸ் பூரன் பேட்டிங் செய்வதற்கு தாமதமாக வந்ததால் எங்கள் பந்து வீச்சாளர்களை என்னால் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. குறிப்பாக அக்ஷர் படேலுக்கு அவருக்கு உரிய 4 ஓவர்களையும் முழுமையாக வழங்க முடிந்தது.

    நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி ரன் சேர்க்க நினைத்தால் எனது பந்தில் அடித்துக் கொள்ளட்டும் என்றே நான் காத்திருந்தேன். அதுவே எங்களது திட்டமாக இருந்தது. இது போன்ற போட்டிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். எனது பந்துவீச்சு நேர்த்தியாக இருக்கும். தவறு செய்ய மாட்டேன் என்பது எனக்கு தெரியும். நான் பேசுவதை கேட்டு 4-வது போட்டியில் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாட வருவார் என்பதும் எனக்கு தெரியும்.

    7 பேட்ஸ்மேன்களுடன் விளையாட வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம். இந்த திட்டம் தவறாக போகும் பட்சத்தில் அதற்கு நாங்கள் தான் பொறுப்பாகும். முதல் 7 பேட்ஸ்மேன்கள் தங்கள் வேலையை சரியாக செய்து விட்டால் 8-வது வீரருக்கு வேலை இருக்காது என்பதே எனது கருத்தாகும்.

    சூர்யகுமார் யாதவின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் அணியில் இருப்பது எங்களுக்கு கூடுதல் பலமாகும். திலக் வர்மாவும் மிக சிறப்பாக விளையாடினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    5 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-1 என்ற கணக் கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகள் மோதும் 4-வது போட்டி வருகிற 12-ந்தேதி நடக்கிறது.

    • நவீன்-உல்-ஹக்கை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.
    • மும்பை அணிக்கு எதிரான போட்டியில் நவீன்-உல்-ஹக் 4 ஓவரில் 37 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை - லக்னோ அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் லக்னோ 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நவீன்-உல்-ஹக் 4 ஓவரில் 37 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

    இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக்கை விராட் கோலி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.


    மேலும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் கூட சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட வீடியோவில் வேகப்பந்து வீச்சாளரை "தி மேங்கோ கை" என்று குறிப்பிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    • இந்த போட்டியில் 15 பந்தில் அரைசதம் அடித்த நிகோலஸ் பூரன் சாதனை படைத்தார்.
    • ஐபிஎல்லில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் 15 பந்தில் அரைசதம் அடித்த நிகோலஸ் பூரன் பல சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் ஆர்சிபி - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி 20 ஓவரில் 212 ரன்களை குவித்தது.

    213 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் 23 ரன்களுக்கே 3 விக்கெட்டை இழந்துவிட்டது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக ஆடி 30 பந்தில் 61 ரன்களை குவித்தார். அதன்பின்னர் காட்டடி அடித்த நிகோலஸ் பூரன் 15 பந்தில் அரைசதம் அடித்து, 19 பந்தில் 7 சிக்ஸர்களுடன் 62 ரன்களை குவிக்க, கடைசி பந்தில் இலக்கை அடித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் 15 பந்தில் அரைசதம் அடித்த நிக்கோலஸ் பூரன் சாதனை படைத்தார். இந்த ஐபிஎல் தொடரில் இதுவே அதிவேக அரைசதம் ஆகும். ஒட்டுமொத்த ஐபிஎல்லில் அதிவேக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 2-ம் இடத்தை யூசுஃப் பதான் மற்றும் சுனில் நரைனுடன் பூரன் பகிர்ந்துள்ளார். 14 பந்தில் அரைசதம் அடித்த ராகுல் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகிய இருவரும் முதலிடத்தை பகிர்ந்துள்ளனர்.

    ஐபிஎல்லில் அதிகமான ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரர்கள் பட்டியலில் 326.32 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் பூரன் 4-ம் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் பாட் கம்மின்ஸ் (373.33) முதலிடத்திலும், ரெய்னா(348), யூசுஃப் பதான் (327.27) ஆகிய மூவரும் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

    • டி20 உலகக் கோப்பையில் குரூப் 12 சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம்.
    • தோல்வி குறித்து ஆராய 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

    ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அரையிறுதிக்கு முந்தைய குரூப் 12 சுற்றுக்கு தரவரிசை அடிப்படையில் 8 அணிகள் நேரடியாக தகுதிப் பெற்றன. மீதமுள்ள நான்கு அணிகள் தகுதிச் சுற்றில் விளையாடி வர வேண்டும்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி நேரடியாக தகுதி பெறாததால், தகுதிச் சுற்றில் விளையாடியது. ஆனால் சுற்றில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் குரூப் 12 சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம் அடைந்தது. இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இது மிகப்பெரிய அவமானமாக கருதப்படுகிறது.

    தோல்வி குறித்து ஆராய பிரையன் லாரா உள்பட 3 பேர் கொண்டு குழுவியை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு அமைத்துள்ளது. இந்த நிலையில் டி20 அணி கேப்டனாக செயல்பட்ட நிக்கோலஸ் பூரன் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பை தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. எனது முடிவுக்கு இதுதான் காரணம் என பூரன் தெரிவித்துள்ளார்.

    தொடக்க சுற்றில் ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் இடம் பிடித்திருந்தனர். ஒரேயொரு வெற்றியுடன் வெஸ்ட் இண்டீஸ் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது.

    பொல்லார்டு ஓய்வையடுத்து மே மாதம் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பூரன் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இது போல தான் இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
    • இந்திய அணியை எதிர்கொள்ள எங்கள் வீரர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

    வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது. தவான் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. சிம்ரன் ஹெட்மயர் மற்றும் ஹோல்டர் டி20 அணிக்கு திரும்பி உள்ளனர். டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றும் என அந்த அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டி20-ல் வெஸ்ட் இண்டீஸ் வித்தியாசமான அணியாக இருக்கும். இந்த தொடரில் இந்தியாவை எங்களால் வீழ்த்த முடியும். இந்திய அணியை எதிர்கொள்ள எங்கள் வீரர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் தொடரை இழந்த நிலையில் டி20 தொடரை வென்று பதிலடி கொடுப்போம். சிம்ரன் ஹெட்மயர் மீண்டும் அணியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது போல தான் இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். தொடரின் முடிவில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

    ×