search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அடி கொடுத்த அர்ஷ்தீப் சிங் மற்றும் கிங்குக்கு நன்றி தெரிவித்த பூரன்- வைரலாகும் புகைப்படம்
    X

    அடி கொடுத்த அர்ஷ்தீப் சிங் மற்றும் கிங்குக்கு நன்றி தெரிவித்த பூரன்- வைரலாகும் புகைப்படம்

    • 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    • அர்ஷ்தீப் சிங் மற்றும் கிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ஒரு போட்டோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2016-க்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் பெற்ற முதல் இருதரப்பு தொடர் வெற்றி இதுவாகும். இந்த தொடரின் தொடர் நாயகன் விருதை நிக்கோலஸ் பூரன் தட்டி சென்றார்.

    இந்நிலையில் நிக்கோலஸ் பூரன் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் மற்றும் கிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ஒரு போட்டோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

    அதில் அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில் அடிவயிற்றில் வாங்கிய காயங்களின் படத்தையும், நான் ஸ்ட்ரைக்கர் முனையில் நின்றபோது பிராண்டன் கிங் அடித்த ஷாட் பூரன் இடது முன்கையைத் தாக்கியது. அந்த தழும்பையையும் மேற்கோள் காட்டி இருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

    இந்த புகைப்படம் தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×