search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "loksabha"

    தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். போல் தொப்பி, கண்ணாடி, சால்வை அணிந்து இன்று பாராளுமன்றத்துக்கு வந்த ஆந்திரா எம்.பி.யால் பரபரப்பு ஏற்பட்டது. #TDPMP #NaramalliSivaprasad #MGR
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றை முன்வைத்து காங்கிரஸ், தெலுங்கு தேசம், அ.தி.மு.க. மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மக்களவையை செயல்பட விடாமல் இடையூறு செய்ததாக அ.தி.மு.க.வை சேர்ந்த 31 உறுப்பினர்கள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 15 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தும் இவர்கள் 46 பேரையும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சமீபத்தில் உத்தரவிட்டார்.


    இந்நிலையில், இன்று காலை மக்களவை கூடியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேற்கண்ட பிரச்சனைகளை மையப்படுத்தி அமளியில் ஈடுபட்டனர். தனியாக இருந்த ஒரேயொரு அ.தி.மு.க. எம்.பி. மட்டும் சபாநாயகர் அமர்ந்திருந்த பகுதிக்கு சென்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முழக்கங்களை எழுப்பினார்.

    அவருக்கு ஆதரவாக தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். போல் தொப்பி, கண்ணாடி, சால்வை அணிந்தவாறு குரல் எழுப்பிய ஆந்திராவை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.யால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

    நரமள்ளி சிவபிரசாத் என்ற அந்த உறுப்பினர் இதற்கு முன்னர் பெண் வேடமிட்டும், மந்திரவாதி, சலவை தொழிலாளி ஆகிய வேடங்களிலும் முன்னர் மக்களவைக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்து அமளியும் கூச்சலும் நிலவியதால் 5 நிமிடம் மட்டுமே இருக்கையில் அமர்ந்திருந்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை பகல் 12 மணிவரை ஒத்திவைப்பதாக அறிவித்துவிட்டு எழுந்துச் சென்று விட்டார். #TDPMP #NaramalliSivaprasad #MGR 
    பாராளுமன்ற மக்களவையில் இன்று கடும் அமளிக்கு இடையில் புதிய முத்தலாக் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. #TripleTalaqBill #TripleTalaq
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவை இன்று காலை கூடியதும்  காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு உரிய நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும் என்று கோரி காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் அமளியில் குதித்தனர்.

    இதற்கிடையே, முன்னர் மக்களவையால் நிறைவேற்றப்பட்டு, ராஜ்யசபையில் முடங்கிப்போன முத்தலாக் மசோதாவின் புதுவடிவத்தை மத்திய சட்டத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் இன்று மீண்டும் தாக்கல் செய்தார்.

    முத்தலாக் முறையை மூன்றாண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றமாக இந்த புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், மக்களின் மதநம்பிக்கை மற்றும் மதம்சார்ந்த பழக்க வழக்கங்கள் தொடர்புடைய விவகாரம் என்பதால் இவற்றை தடை செய்யும் வகையில் இதுபோன்ற மசோதாக்களை தாக்கல் செய்யும் வலிமை இந்த அரசுக்கு இல்லை என்று குறிப்பிட்டார்.

    அரசியலமைப்பு சட்டம் 15 மற்றும் 16 பிரிவுகளை மீறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மசோதாவை ஏற்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

    முத்தலாக் முறையை ஒழிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியதால்தான் முத்தலாக் தடை சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு தீர்மானித்ததாக குறிப்பிட்ட ரவி சங்கர் பிரசாத், சிறிய பிரச்சனைகளைகூட காரணமாக காட்டி வாட்ஸ்அப் மூலமாக முஸ்லிம் பெண்களை விவாகரத்து செய்யும் நடைமுறைகளை தண்டனைக்குரிய செயலாக மாற்ற இதுபோன்ற வலிமையான மசோதா அவசியமாக உள்ளது என்றும் கூறினார்.

    இதைதொடர்ந்து, கடும் அமளிக்கு இடையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.


    இதற்கு பின்னரும் பல்வேறு பிரச்சனைகளை மையப்படுத்தி அவையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டதால் மக்களவையை பகல் 12 மணி வரையிலும், பின்னர் பிற்பகல் 2 மணி வரையிலும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.

    முன்னர், ராஜ்யசபையில் முத்தலாக் மசோதா முடங்கிப் போனாலும், சில திருத்தங்களுக்கு பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து அவசர சட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கலாம். #Govtintroduces #TripleTalaqBill #TripleTalaq

    தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் அளிக்கும் திருத்த மசோதா பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. #MonsoonSession #OBC
    புதுடெல்லி:

    பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம். ஆனால், இதுதொடர்பான மசோதாவுக்கு அரசியல் சாசன அங்கீகாரம் இதுவரை வழங்கப்படவில்லை. 

    தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் வழங்கப்படாததால், பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்கள் பல வகைகளில் காவு கொடுக்கப்பட்டன. அம்மக்களின் நலன்களை பாதுகாக்கும் நோக்குடன் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைகளை வழங்கினாலும் அதற்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் இல்லை என்பதால் அந்தப் பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை.

    இந்நிலையில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் அளிக்கும் திருத்த மசோதா பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு 406 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். #Parliment #Loksabha #OBC
    பிரதமர் இருக்கையில் அமர்ந்திருக்கும் பொழுது மோடியை ராகுல் கட்டித்தழுவியது அவையின் மாண்பை குறைக்கும் செயல் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார். #LokSabha #NoConfidenceMotion #PMModi #RahulGandhi #SumitraMahajan
    புதுடெல்லி:

    மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து பேசினார்.

    தனது உரையை முடித்த பின்னர், யாரும் எதிர்பாராத வகையில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு சென்ற ராகுல் காந்தி மோடியை கட்டிப் பிடித்தார். பதிலுக்கு மோடியும் சிரித்துக் கொண்டே ராகுல் காந்தியின் கையை பிடித்து குலுக்கி அவருக்கு  வாழ்த்து தெரிவித்தார்.

    இந்நிலையில், பிரதமர் இருக்கையில் அமர்ந்திருக்கும் பொழுது மோடியை ராகுல் கட்டித்தழுவியது அவையின் மாண்பை குறைக்கும் செயல் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், பிரதமர் இருக்கையில் அமர்ந்திருக்கும் பொழுது அவரை ராகுல் காந்தி கட்டித் தழுவியது ஏற்கத்தக்கது அல்ல. இது அவையின் மாண்பை குறைக்கும் செயல்.

    அவையில் மாண்புகள் நிச்சயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். வெளியில் இருந்து வந்து யாரும் அவைக்கு பாதுகாப்பு தரமுடியாது. அவையில் இருக்கும் நீங்கள் தான் இதற்கு முழு பொறுப்பு என தெரிவித்துள்ளார். #LokSabha #NoConfidenceMotion #PMModi #RahulGandhi #SumitraMahajan
    நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். #NoConfidenceMotion #RahulGandhi #NarendraModi
    புதுடெல்லி:
     
    பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று காலை நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்காமல் கூட்டணி கட்சியான சிவசேனா கட்சியினர் புறக்கணித்தனர்.

    இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசினார். 
    அப்போது அவர் பேசுகையில், ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளார் மோடி. விவசாயிகளும், இளைஞர்களும் மத்திய அரசின் பொய் வாக்குறுதிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    மேலும், நான் பிரதமர் இல்லை. பிரதம சேவகன் என்றார் மோடி. அமித்ஷா மகன் ஜெய் ஷா விவகாரத்தில் மத்திய அரசு மெளனம் காப்பது ஏன்?

    பிரதமர் நாட்டுக்காக உழைக்கவில்லை; சில தொழிலதிபர்களுக்காக உழைக்கிறார். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரதமர் மோடி ஏமாற்றம் மட்டுமே அளித்துள்ளார்.

    ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் மூலம் மோடியின் நண்பர் பலனடைந்துள்ளார். என் கண்ணைப் பார்த்து பிரதமர் பேசவேண்டும்; ஆனால் அதை தவிர்க்கிறார். பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது 

    ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் உண்மையை வெளிப்படையாக விளக்கவேண்டும் என்றார்.

    அமித்ஷா மகன் குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்த போது மக்களவையில் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து சபை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

    இடைவேளைக்கு பின்னர் பேசிய ராகுல் காந்தி, என் மீது உங்களுக்கு கோபம் உள்ளது. நீங்கள் என்னை பப்பு என அழைக்கலாம். ஆனால், நான் உங்கள் மீது கோபப்பட மாட்டேன்.

    அவை ஒத்திவைக்கப்பட்ட இடைவேளையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மட்டுமல்லாது உங்கள் கூட்டணி கட்சி எம்.பி.க்களும் வந்து என்னிடம் சரியான கேள்விகளை கேட்டீர்கள் என பாராட்டு தெரிவித்தனர்” என ராகுல் கூறினார்.


    தனது பேச்சில் மோடியை கடுமையாக ராகுல் தாக்கினாலும், பேசி முடித்ததும் நேராக மோடியின் இருக்கைக்கு சென்று அவரை கட்டி அணைத்தார். மோடியும் சிரித்துக்கொண்டே ராகுலின் கையை பிடித்து குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.  #NoConfidenceMotion #RahulGandhi  #NarendraModi 
    பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தில் பங்கேற்காமல் சிவசேனா கட்சியினர் புறக்கணித்துள்ளனர். #MonsoonSession #NoConfidenceMotion #Sivasena
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

    தெலுங்கு தேசம் கட்சி சார்பிலும் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதில் தெலுங்குதேசம் அளித்த நோட்டீசை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு வெள்ளிக்கிழமை விவாதம் நடத்த அனுமதி அளித்தார். 

    அதன்படி, பாராளுமன்றத்தில் மக்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியதும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் தொடங்கியது. 

    முன்னதாக, இந்த விவாதத்தில் பங்கேற்பது தொடர்பாக சிவசேனா கட்சியின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிவசேனா நம்பிக்கையில்லா தீர்மானத்தை புறக்கணித்துள்ளது. #MonsoonSession #NoConfidenceMotion #Sivasena
    நீலகிரி மலை ரெயிலால் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரெயில்வேக்கு 54 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என மக்களவையில் மத்திய இணை மந்திரி தெரிவித்துள்ளார். #Parliment #Loksabha #NilgiriMountainRail
    புதுடெல்லி:

    தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் மலை ரெயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

    தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனைவரும் கண்டிப்பாக நீலகிரி மலை ரெயிலில் பயணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையில் இன்று பேசிய ரெயில்வே துறை இணை மந்திரி மனோஜ் சின்ஹா, நீலகிரி மலை ரெயிலால் 2 ஆண்டுகளில் 54 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், நீலகிரி மலை ரெயிலை இயக்கியதன் மூலம் ரெயில்வே துறைக்கு கடந்த 2017-18ம் நிதியாண்டில் 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதேபோல், கடந்த 2016 -17ம் ஆண்டில் 26.75 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

    யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளதால் இந்த மலை ரெயிலை தொடர்ந்து இயக்குவோம் எனவும் தெரிவித்தார். #Parliment #Loksabha #NilgiriMountainRail
    ×