search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andhra MP"

    தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். போல் தொப்பி, கண்ணாடி, சால்வை அணிந்து இன்று பாராளுமன்றத்துக்கு வந்த ஆந்திரா எம்.பி.யால் பரபரப்பு ஏற்பட்டது. #TDPMP #NaramalliSivaprasad #MGR
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றை முன்வைத்து காங்கிரஸ், தெலுங்கு தேசம், அ.தி.மு.க. மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மக்களவையை செயல்பட விடாமல் இடையூறு செய்ததாக அ.தி.மு.க.வை சேர்ந்த 31 உறுப்பினர்கள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 15 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தும் இவர்கள் 46 பேரையும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சமீபத்தில் உத்தரவிட்டார்.


    இந்நிலையில், இன்று காலை மக்களவை கூடியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேற்கண்ட பிரச்சனைகளை மையப்படுத்தி அமளியில் ஈடுபட்டனர். தனியாக இருந்த ஒரேயொரு அ.தி.மு.க. எம்.பி. மட்டும் சபாநாயகர் அமர்ந்திருந்த பகுதிக்கு சென்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முழக்கங்களை எழுப்பினார்.

    அவருக்கு ஆதரவாக தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். போல் தொப்பி, கண்ணாடி, சால்வை அணிந்தவாறு குரல் எழுப்பிய ஆந்திராவை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.யால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

    நரமள்ளி சிவபிரசாத் என்ற அந்த உறுப்பினர் இதற்கு முன்னர் பெண் வேடமிட்டும், மந்திரவாதி, சலவை தொழிலாளி ஆகிய வேடங்களிலும் முன்னர் மக்களவைக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்து அமளியும் கூச்சலும் நிலவியதால் 5 நிமிடம் மட்டுமே இருக்கையில் அமர்ந்திருந்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை பகல் 12 மணிவரை ஒத்திவைப்பதாக அறிவித்துவிட்டு எழுந்துச் சென்று விட்டார். #TDPMP #NaramalliSivaprasad #MGR 
    ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி, தெலுங்குதேசம் கட்சி எம்பி சிவப்பிரசாத் ஹிட்லர் வேடமணிந்து பாராளுமன்ற வளாகத்தில் போராடினார். #TDPProtest #NaramalliSivaprasad #AndhraSpecialStatus
    புதுடெல்லி:

    ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றாத நிலையில், ஆந்திராவின் ஆளுங்கட்சியான தெலுங்குதேசம் கட்சி, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியது. அத்துடன் மாநில சிறப்பு அந்தஸ்துக்காக பாராளுமன்றத்தில் தெலுங்குதேசம் கட்சி எம்பிக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

    மேலும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பாராளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். குறிப்பாக நாரமள்ளி சிவப்பிரசாத் எம்பி, பல்வேறு வேடமணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாரதமுனி, பள்ளி மாணவன் உள்ளிட்ட பல்வேறு கெட்அப்களில் வந்து போராடிய சிவப்பிரசாத் இன்று ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் போன்று வேடமணிந்து பாராளுமன்றத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.


    மத்திய அரசு சர்வாதிகார போக்கை கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டும் வகையில் அவர் இன்று ஹிட்லர் வேடம் அணிந்து வந்துள்ளார்.

    சிவப்பிரசாத் எம்பி, திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர். இவர் 20-க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #TDPProtest #NaramalliSivaprasad #AndhraSpecialStatus
    ×