search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "livestock"

    • உலர் தீவனமான வைக்கோல், மக்காச்சோளத்தட்டு ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு அதிகரிக்கிறது.
    • உலர் தீவன கிடங்கு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் .

    உடுமலை : 

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் பால் உற்பத்திக்காக மாடுகள் அதிக அளவு வளர்க்கப்படுகின்றன. இவ்வகை மாடுகளுக்கு விளைநிலங்களில் விளையும் பசுந்தீவனமும், வைக்கோல் உட்பட உலர் தீவனங்களும் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் பசுந்தீவன உற்பத்தி குறையும் போது, உலர் தீவனமான வைக்கோல், மக்காச்சோளத்தட்டு ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு அதிகரிக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாடுகளுக்கு முறையான தீவனம் கிடைக்காமல் பால் உற்பத்தி குறைந்தது. மேலும், குறைந்த விலைக்கு மாடுகளை விற்கும் அவல நிலையும் ஏற்பட்டது.இப்பிரச்சினைக்கு தீர்வாக அரசு உலர் தீவன கிடங்கு திட்டத்தை 2014ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

    உடுமலை வட்டாரத்தில் கால்நடைத்துறை சார்பில், அதிகபட்சமாக 5 மாடுகளுக்கு 105 கிலோ வீதம் ஒரு கிலோ வைக்கோல் 2 ரூபாய்க்கு இத்திட்டத்தில் வழங்கப்பட்டது.கால்நடைத்துறை சார்பில் 2 லட்சம் கிலோ வரை வைக்கோல் கொள்முதல் செய்யப்பட்டு கால்நடை வளர்ப்போருக்கு வினியோகிக்கப்பட்டது.

    சில ஆண்டுகள் மட்டுமே இத்திட்டம் செயல்பாட்டில் இருந்தது. இந்நிலையில் உலர் தீவன கிடங்கு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை பகுதியில் பல வகையான பசுந்தீவனங்கள் கிடைத்தாலும் வைக்கோலுக்காக பழனி உட்பட பல்வேறு பகுதிகளுக்குச்செல்ல வேண்டியுள்ளது. அதிக வாடகை அளித்து வைக்கோலை எடுத்து வர வேண்டியிருப்பதால் கட்டுபடியாவதில்லை.குறைந்த விலையில் அனைத்து கால்நடை மருந்தகம் மற்றும் கிளை நிலையங்களில் வைக்கோலை விற்பனை செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.அனைத்துப்பகுதிகளிலும் நெல் அறுவடை சீசன் துவங்கியுள்ள நிலையில் உடனடியாக இத்திட்டம் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்என கால்நடை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர்.

    • 16-ந் தேதி மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
    • 19-ந் தேதி கால்நடை மருத்துவ முகாம்.

    தஞ்சாவூர்:

    கூட்டுறவு வார விழாக்குழு தலைவரும், தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளருமான தமிழ்நங்கை வெளியிட்டு ள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    69-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    விழாவின் முதல் நாளான இன்று கொடியேற்றுதல், உறுதிமொழி எடுத்தல் மற்றும் மரம் நடும் விழா நடைபெற்றது.

    நாளை 15-ந் தேதி விற்பனை மேளா, 16-ந் தேதி மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, 17-ந் தேதி உறுப்பினர் கல்வி திட்டம் மற்றும் கருத்தரங்கம், 19-ந் தேதி கால்நடை மருத்துவ முகாம், 20-ந் தேதி விற்பனையாளர், வாடிக்கையாளர் சந்திப்பு முகாம் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற உள்ளது.

    மாவட்ட அளவிலான கூட்டுறவு வார விழா வருகிற 18-ந் தேதி மாலை 4 மணி அளவில் கும்பகோணம், மூர்த்தி கலையரங்கத்தில் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் மலையடிக்குறிச்சி ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
    • வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் வாசுதேவநல்லூர் ஒன்றியம் மலையடிக்குறிச்சி ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி கால்நடைகளுக்கு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கால்நடை களுக்கு தடுப்பூசி செலுத்தப்ப ட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. சிறந்த கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பயனாளி ஒருவருக்கு இலவச ஆடு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி யில் மாவட்ட துணை செயலாளர் மனோகரன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பொன்ராஜ், மலையடிக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி குமாரி, தலைமை கால்நடை மருத்துவர் கருப்பையா, கிளை செயலாளர் கார்த்திக், தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தேவரம்பூர் கிராமத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை முகாம் வருகிற 14-ந் தேதி நடக்கிறது.
    • விவசாயிகள் தங்கள் கால்நடைகளை முகாமிற்கு அழைத்து வந்து பயன்பெறலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், தேவராம்பூர் கிராமத்தில், வருகிற (14-ந்் தேதி) மாவட்ட கலெக்டர் தலைமையில், ஏழை எளிய விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடக்கிறது.

    இந்த முகாமில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல். நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, ஊடு அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி, நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு அளிக்கப்படும்.

    மேலும் சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளைப் பின்பற்றும் சிறந்த 3 விவசாயிகளுக்கு விருது வழங்கப்படும். கிடாரி கன்று பேரணி நடத்தி சிறந்த 3 கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

    மேலும், தாது உப்புக்கலவைகள் கால்நடை வளர்ப்போருக்கு விநியோகிக்கப்படும். எனவே, கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை முகாமிற்கு அழைத்து வந்து பயன்பெறலாம்.

    இந்த தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • கொள்ளிடத்தில் நீர்வரத்து அதிகரித்து வருவதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யதார்.
    • அணையில் இருந்து உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது.

    இதன் காரணமாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நீலத்தநல்லூர் பாலம் கொள்ளிடம் கரையோரம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகமாக உள்ளதால் கும்பகோணம் வட்டம் கொத்தங்குடி ஊராட்சியில் நீலத்தநல்லூர் பாலம் கொள்ளிடத்தில் நீர்வரத்து அதிகரித்து வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளதால், அணையில் இருந்து உபரிநீர் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டு உள்ளது.

    மேலும் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 2 லட்சம் கன அடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமா றும், கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் (24 X 7) இயங்கி வரும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை இலவச அழைப்பு எண் 1077 மற்றும் தொலைபேசி எண்கள் 04362-264114, 04362-264115 ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு மழை, வெள்ளத்தினால் ஏற்படும் சேதம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவித்திடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது காவிரி வடிநிலகோட்டம் செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) இளங்கோ, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அய்யம்பெருமாள், உதவி பொறியாளர்கள் பூங்கொடி, ராஜ்குமார், கும்பகோணம் தாசில்தார் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஏராளமான கால்நடைகள் வந்து வயல்களில் சுற்றித்திரிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.
    • கால்நடைகளை பிடித்து கால்நடை பட்டியில் அடைக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்சமயம் வடகிழக்கு பருவமழை தொடங்கி அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இப்பகுதியில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    மேலும் நேரடி சம்பா விதைப்பு நடைபெறுகிறது. தற்சமயம், சாகுபடி நிலங்களில் ஏராளமான கால்நடைகள் வந்து வயல்களில் சுற்றித் திரிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.

    மேலும் நகர் பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வியாபாரிகள் தங்கள் பொருட்களை வைக்கும் போது அதை தின்று சேதப்படுத்துகிறது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, கால்நடைகளை பிடித்து கால்நடை பட்டியில் அடைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வருவாய்துறை, தீயணைப்புதுறை மற்றும் அனைத்து துறைகளும் ஒன்றாக இணைந்து மக்களுக்கு செயல் விளக்கமும், பயிற்சியும் அளித்தனர்.
    • மழை, வெள்ளம் போன்ற பேரிடர் ஏற்படும் போது மக்கள் மற்றும் கால்நடைகளை காப்பது குறித்து செய்து காட்டினர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு பாலசமுத்திர குளத்தில் பேரிடர் காலங்களில் மனிதன், கால்நடைகளை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பௌலின் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் வருவாய்துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புதுறை, மின்சாரதுறை, கால்நடைதுறை, போக்குவரத்துதுறை போலீசார் வீட்டு அனைத்து துறைகளும் ஒன்றாக இணைந்து மக்களுக்கு செயல் விளக்கமும், பயிற்சியும் அளித்தனர்.

    பயிற்சியில் மழை, வெள்ளம் போன்ற பேரிடர் ஏற்படும் போது மக்கள் மற்றும் கால்நடைகளை காப்பது குறித்து செய்து காட்டினர். நிகழ்ச்சியில் வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின், தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் குகன் இருவரும் பயிற்சியாளருடன் குளத்தில் பயிற்சியில் ஈடுபட்டது மக்களிடையே மிகுந்த நம்பிக்கையை பெற்றது.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரன், கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் ரவி உள்ளிட்ட அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    • பிளாஸ்டிக் தடை உத்தரவை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • காற்றில் பறக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மேய்ச்சல் நிலங்களை முழுமையாக ஆக்கிரமித்து வருகின்றன.

    பல்லடம் :

    அதிகரிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகள் அவற்றை உணவாக எடுத்து கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தடை உத்தரவை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும்என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து பல்லடம் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- பிளாஸ்டிக் தடை என்பது பெயருக்குத்தான் உள்ளது. எங்கெங்கு காணினும் பிளாஸ்டிக் கழிவுகள் கிடக்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் கேடு, நீர் வளம், நிலவளம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காற்றில் பறக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மேய்ச்சல் நிலங்களை முழுமையாக ஆக்கிரமித்து வருகின்றன. விவசாயிகளின் உயிர்நாடியாகவும், குழந்தைகள், பெரியவர்களுக்கு பாலை வழங்கும் கால்நடைகள் பிளாஸ்டிக்கை உண்டு விடுகின்றன. இதனால் செரிமானமும் ஆகாமல், உணவு குழாயில் இருந்து வெளியே வர முடியாமலும் பிளாஸ்டிக் கழிவுகள் கால்நடைகளின் வயிற்றிலேயே தங்கி விடுகின்றன.

    சிறிது சிறிதாக பிளாஸ்டிக் கழிவுகள் சேரும்போது மாடுகள் சாப்பிட முடியாமல் பட்டினி கிடந்து பரிதாபமாக உயிரை விடுகின்றன. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் வாயில்லா ஜீவன்களான கால்நடைகளின் ஆயுள் குறைந்து அது சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கொள்ளிட கரையோர கிராமங்களில் பயிர் செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள், வாழை, காய்கறி வயல்களில் தண்ணீர் புகுந்துள்ளது.
    • தாழ்வான பகுதியில் வசித்த 31 பேர் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

    பூதலூர்:

    'காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளும் இடம் கொள்ளிடம்' என்ற திரைப்பட பாடல் வரிகள் தற்போது நிதர்சனமாகிக் கொண்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டு கொள்ளிடம் ஆறு இன்னும் இருக்கா? திறந்து விடுங்கள் ஏற்றுக் கொள்ளுகிறேன் என்று கேட்பது போல்ஆர்ப்பரித்து சென்று கொண்டுள்ளது.

    கொள்ளிடக்கரையோர கிராமங்களில் வருவாய் துறை, காவல்துறை அதிகாரிகள் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை முகாம்களுக்கு வாருங்கள் என்று வருந்தி அழைத்தாலும் இதை விட அதிக தண்ணீரை எல்லாம் பார்த்தவர்கள் நாங்கள் ஒன்னும் ஆகாது என்று அலட்சியமாக சொல்வதால் நீர்வளத்துறை அலுவலர்கள், வருவாய்துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சிதுறை அதிகாரிகள் இரவு-பகலாக கொள்ளிடக் கரையோர பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் கொள்ளிட கரையோர கிராமங்களில் பயிர் செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள், வாழை, காய்கறி வயல்களில் தண்ணீர் புகுந்துள்ளது. கல்லணையில் இன்று காலை நிலவரப்படி கொள்ளிடம் ஆற்றில் 58 ஆயிரத்து 220 கன அடி கடந்து வெளியேறி கொண்டுள்ளது. முக்கொம்புலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் சேர்ந்து இன்று காலை கொள்ளிடத்தில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 730 கன அடி தண்ணீர் பெருகி ஓடிக் கொண்டுள்ளது.

    கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாயில் வழக்கம்போல தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் உள்ள 35 மதகுகளையும் திறந்து அதிலிருந்து தண்ணீர் பெருகி பேரிரைச்சலோடு வெளியேறி, முக்கொம்பில் இருந்து வரும் தண்ணீரில் கலந்து கரை புரண்டு ஓடிக் கொண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்றே குறைந்து ஒரு லட்சத்து 77ஆயிரத்து 284கன அடியாக இருந்தது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் 1லட்சத்து 76 ஆயிரத்து 767 கன அடியாக உள்ளது. திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி ஆற்றில் 70 ஆயிரத்து 696 கன அடியும், கொள்ளிடத்தில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 382 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் ெபருக்கெடுத்து ஓடுவதால் தஞ்சையை அடுத்த அய்யம்பேட்டை அருகே கூடலூர் கிராமத்தில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து தாழ்வான பகுதியில் வசித்த 31 பேர் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது மேலும் குறுவை பயிர்களும், கரும்பு, வாழைகளும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்தள்ளனர். தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்தால் இந்த பயிர்கள் அனைத்தும் அழுகும் நிலை ஏற்படும் என்று விவசாயிகள் கவலையுடன் கூறினர்.

    மேலும் திருக்காட்டுப்பள்ளி அடுத்த திருவளர்சோலை அருகே உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் 2-து நாளாக அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு ஆகிய ஊர்களில் இருந்து கார்களில் திருச்சி செல்ல வருபவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் வேங்கூர், சர்க்கார்பாளையம் கிராமங்களில் வழியாக சென்று வருகின்றனர்.

    மேலும் தோட்டப்பயிர்களான பருத்தி, தக்காளி, வெண்டை, மிளகாய், மரவள்ளிக்கிழங்கு மற்றும் முல்லை, காக்கரட்டான் செண்டிப்பூ உள்ளிட்ட பூச்செடிகளும் சுமார் 300 ஏக்கரில் மூழ்கி கிடக்கிறது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    அப்பகுதியில் உள்ள கதவணையில் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் 5-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் கூடுதலாக கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டால் கொள்ளிடம் ஆற்றின் கரைகள் உடைஉடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடக்கரையோர கிராம மக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    இந்நிலையில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பேரிடர் மீட்பு பணிக்குழுவினர் மணல் மூட்டைகளுடனும், மீட்பு பணிசாதனங்களுடன் ஆங்காங்கே தயார் நிலையில் உள்ளனர்.

    தற்போது கர்நாடக மாநிலத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் சற்று மழை குறைந்துள்ளதால் மேட்டூருக்கு வரும் நீரின் வரத்தும் குறைந்துள்ளது. ஆனால் கல்லணையில் இருந்து அணையின் பாதுகாப்பு கருதி கொள்ளிடத்தில் 35 மதகுகளும் முழுமையாக திறக்கப்பட்டு தண்ணீர் வேகமாக வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    திருக்காட்டுப்பள்ளி பகுதியில் கொள்ளிடம் ஆற்றுக்கரை பகுதிக்காக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள், மணல், காலிசாக்குகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கி உள்ளதால் கொள்ளிடத்தி ல்வெளியேற்றப்படும் தண்ணீர் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்தில் கொண்டு வந்து விடப்பட்டன.
    • நகரில் சுற்றித்திரிந்த நாய்களை வாகனங்களில் பிடித்து மயிலாடுதுறை கால்நடை மருத்துவமனைக்கு கருத்தடை செய்ய கொண்டு சென்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரிகின்ற நாய்களை பிடிக்க வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன், சீர்காழி நகரில் சுற்றி தெரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தார்.

    அதன்படி முதல் கட்டமாக 50 -க்கும் மேற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்தில் கொண்டு வந்து விடப்பட்டன. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக சீர்காழி நகரில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்கும் பணி நடைபெற்றது. பப்ளிக் பார் அனிமல் அமைப்பினர் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் கொண்ட குழுவினர் நகரில் சுற்றித்திரிந்த 40-க்கும் மேற்பட்ட நாய்களை வாகனங்களில் பிடித்து மயிலாடுதுறை கால்நடை மருத்துவமனைக்கு கருத்தடை செய்ய கொண்டு சென்றனர். கருத்தடைக்கு பின்னர் மீண்டும் அந்த நாய்கள் சீர்காழி நகரப் பகுதியில் பிடிக்கப்பட்ட இடத்தில் விடப்படும் என தெரிவித்துள்ளனர்.

    • எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் கால்நடை சந்தை இயங்கி வருகிறது.
    • குறிப்பாக இறைச்சிக்கான ஆடுகள் மற்றும் கோழிகள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.

    எடப்பாடி:

    எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் கால்நடை சந்தை இயங்கி வருகிறது. வாரம் தோறும் சனிக்கிழமை அன்று அதிகாலை முதலே நடைபெறும் இச்சந்தையில் ஆடுகள், கோழிகள்,சண்டை சேவல், பந்தயப்புறா, பசு மாடுகள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கான காளை மாடுகள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாவது வழக்கம்.

    ஆடிப்பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இச்சந்தையில் வழக்கத்தை விட கூடுதலான எண்ணிக்கையில் கால்நடை விற்பனையாகி வருகிறது. குறிப்பாக இறைச்சிக்கான ஆடுகள் மற்றும் கோழிகள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. மேச்சேரி, பென்னாகரம்,தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்தும் அதிகப்படியான கால்நடைகள் விற்பனைக்கு வந்திருந்தன.

    மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் கால்நடைகளை மொத்தமான கொள்முதல் செய்தனர். ஆடு மற்றும் கோழிகளின் விலை வழக்கத்தை விட சற்று கூடுதலாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கால்நடைகளுக்கு வரும் நோய் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றி விளக்கி கூறினார்.
    • பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழிற்நுட்ப மேலாளர் மகேஸ்வரி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் முகம்மது சாகீர் ஆகியோர் செய்திருந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரம் கோபுராஜபுரம் கிராமத்தில் 2022-23ம் ஆண்டிற்கான வேளாண்மை தொழிற்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள்ளான தீவன உற்பத்தி தொழிற் நுட்ப பயிற்சி நடைபெற்றது.

    முகாமிற்கு வட்டார துணை வேளாண்மை அலுவலர் தெய்வகுமார் தலைமை தாங்கினார். கோபுராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி ரமேஷ் முன்னிலை வகித்தார்.வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை முலம் வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் வேளாண்மையில் கால்நடைகளின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்ததார்.

    சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய கால்நடை மருத்துவர் முத்துகுமார் முகாமில் கலந்துக்கொண்டு கால்நடைகளுக்கு வரும் நோய் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றி விளக்கி கூறினார்.மேலும் கால்நடைகளுக்கு சரிவிகித உணவு வழங்குவது பற்றி எடுத்துரைத்தார்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழிற்நுட்ப மேலாளர் மகேஸ்வரி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் முகம்மது சாகீர் ஆகியோர் செய்திருந்தனர்.

    முகாமில் 100 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

    ×