search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Krivalam"

    • மாணிக்கவாசகருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • கோவிலை சுற்றி 4 வீதிகளில் தேவாரங்கள் பாடிக்கொண்டு கிரிவலம் வந்தனர்.

    வேதாரண்யம்:

    கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு வேதாரண்யம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் உள்ள வனதுர்க்கை அம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை அம்மனுக்கு புனிதநீர் அடங்கிய கலசங்கள் வைத்து யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர், புனிதநீர் அடங்கிய குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பி க்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    இதேபோல், வேதா ரண்யம் மேலவீதியில் அமைந்துள்ள மாணிக்க வாசகர் மடத்தில் உள்ள மாணிக்கவாசகருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை பாடி மாணிக்கவாசகரை வழிபட்டனர்.

    பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாணிக்கவாசகர் மடம் தர்மகர்த்தா, யாழ்ப்பாணம் வரணி ஆதீனம், செவந்திநாத பண்டார சன்னதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல், வேதாரண்யம் அடுத்த வேம்பதேவன்காடு தெற்கு பகுதியில் அமைந்துள்ள மவுன சித்தர் பீடத்தில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று.

    மகானுக்கு பிடித்த பலகாரங்கள், பொங்கல் வைத்து படையல் இடப்பட்டது. பின்னர், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சித்தர் பீடத்துக்கு வந்து தியானம் மேற்கொண்டு வழிபட்டனர்.

    பவுர்ணமியை முன்னிட்டு கடல் அன்னைக்கு தீப ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபட்டனர்.

    மேலும், பக்தர் ராஜேந்திரன் தலைமையில் ஏராளமான பக்தர்கள் கோவிலை சுற்றி 4 வீதிகளில் தேவாரங்கள் பாடிக்கொண்டு கிரிவலம் வந்தனர்.

    • அண்ணாமலையார் ஆண்டுக்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார்.
    • 25 முதல் 30 இடங்களில் மண்டகப்படி நடைபெறும்.

    ஒவ்வொரு தினத்தன்றும் இரவில் பக்தர்கள் கிரிவலம் வருவது போல் லிங்க வடிவாக வீற்றிருக்கும் அண்ணாமலையாரும் திருவீதி உலாவாக ஆண்டுக்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார்.

    அந்த நன்னாள் கார்த்திகை தீப திருநாளின் மறுநாள் மற்றும் தை மாதம் மாட்டு பொங்கல் ஆகிய இந்த 2 நாட்களிலும் அதிகாலையில் அண்ணாமலையார் கிரிவலம் செல்கிறார். திருமஞ்சன கோபுர வீதியின் கடைசியில் உள்ள குமரகோவிலில் இந்த இரண்டு நாட்களும் இரவு தங்குகிறார்.

    அதிகாலையில் அபிஷேகம் முடிந்ததும் அண்ணா மலையார் கிரிவலம் புறப்படுகிறார். 25 முதல் 30 இடங்களில் மண்டகப்படி நடைபெறும். அஷ்டலிங்கம் மற்றும் அடி அண்ணாமலை ஆகிய கோவில்களில் அண்ணாமலையார் கிரிவலம் செல்லும் போது தீபாராதனைகள் நடைபெறும்.

    கிரிவலம் செல்லும் பக்தர்களிடம் துஷ்ட தேவதைகள் அண்டாமல் இருப்பதற்காகவும், அவைகளை விரட்டு வதற்காகவும் அண்ணாமலை யார் இவ்வாறு ஆண்டிற்கு இரண்டு முறை கிரிவலம் வருகிறார் என்பது ஐதீகம்.

    ஒளி கண்டு ஓடும் இருள் போல் திருவண்ணாமலை தீபம் கண்டவுடன் மாந்தர்களின் பாவங்கள் தீரும் என்பது திண்ணம்.

    ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி!

    இருள் ஒழிந்து இன்பம் ஈவாய் போற்றி!

    நாமும் கிரிவலம் செல்வோம், மலையில் ஜோதியாய் தோன்றும் ஈசனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுவோம்.

    • பா.ஜனதா ஆன்மீகம் மற்றும் ஆலய பிரிவு மாவட்ட தலைவர் அதிசயம் குமார் தலைமையில் கிரிவலம் விமரிசையாக தொடங்கியது.
    • காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சுமார் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சுமார் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் பவுர்ணமியையொட்டி கிரிவலம் நடந்தது. பா.ஜனதா ஆன்மீகம் மற்றும் ஆலய பிரிவு மாவட்ட தலைவர் அதிசயம் குமார் தலைமையில் கிரிவலம் விமரிசையாக தொடங்கியது.

    நெசவாளர் அணி மாநில துணைத் தலைவர் நாகூசா கலந்து கொண்டு கிரிவலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில் ஆலய வெளிப்பிரகாரத்தில் சிவனடியார்கள் திருவாசகம் பாடல்களை பாடி கைலாய வாத்திய இசையுடன் வலம் வந்து ஈஸ்வரன் அனுகிரகம் கிடைக்க வேண்டினார்கள்.

    இதில் விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் சிவானந்தம். கூரம் விஸ்வநாதன். திலகர் குமாரசாமி, ஆன்மீக பிரிவு மாவட்ட துணைத் தலைவர் ரெயில்வே வெங்கடேசன், சிவ. ஈஸ்வரி. துளசி சாமி உள்ளிட்ட சிவனடியார்கள், பொதுமக்கள் என மொத்தம் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பவுர்ணமி தினத்தன்று தொடர்ந்து கிரிவலம் நடைபெறும் என விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    • புகழிமலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில்புரட்டாசி மாத வளர்பிறை பவுர்ணமி கிரிவலம்
    • போற்றி பாடல் பாடிக் கொண்டே பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது.

     வேலாயுதம் பாளையம்,  புகழிமலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில்

    கரூர் மாவட்டம் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மலையை சுற்றி வரும் பாதையில் புரட்டாசி மாத வளர்பிறை பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் இரவு நடைபெற்றது. கிரிவலத்தில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மற்றும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சிவனடியார்கள், பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானார் கலந்து கொண்டு புகழிமலையை சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் வரிசையாக ஊர்வலமாக வந்தனர். ஆறுநாட்டார் மலை என போற்றி வணங்கப்படும் புகழிமலையில் மீனாட்சி அம்மை உடனுறை சுந்தரேசுவரர் பெருமான் ,சிவகாமசுந்தரி அம்மை உடனுறை நடராஜப்பெருமான், புகழிமலை பாலசுப்பிரமணியர் ஆகியோரை வணங்கி போற்றி பாடல் பாடிக் கொண்டே பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது.

    • சாமி தரிசனத்துக்கு 5 மணி நேரமானது
    • சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 10.58 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி நேற்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.

    பவுர்ணமி இன்று காலை 8.17 மணி வரை நீடித்ததால் பக்தர்கள் 2-வது நாளாக கிரிவலம் சென்றனர்.

    கிரிவலம் சென்ற பக்தர்கள் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் வழிபாடு செய்தனர்.

    இதனால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பவுர்ணமியையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் அனைவரும் நீண்ட பொது வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரம் ஆனது.

    போலீசார் தொடர்ந்து கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப இன்றும் சென்னை, வேலூர், விழுப்புரம், பெங்களூர், திருப்பதி ஆகிய இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • குடை பிடித்துக் கொண்டு வலம் வரக்கூடாது.
    • வேறு பல நினைவுகளுடன் வலம் வரக்கூடாது.

    நீராடி தூய ஆடை அணிந்து, விபூதி, குங்குமம், இட்டுக் கொண்டுதான் கிரிவலம் வர வேண்டும்.

    ஆண்கள் சட்டை அணியாது வேட்டியும், இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டும் வலம் வரலாம். ஏனென்றால் வேட்டியுடன் மட்டும் கிரிவலம் வரக்கூடாது.

    பெண்கள் மெட்டி, வளையல், நெற்றியில் குங்குமம் அணிந்து வலம் வர வேண்டும்.

    மிதியடி அணிந்து கொண்டு வலம் வரக்கூடாது. ஏனென்றால் அடிக்கு ஆயிரத்தெட்டு லிங்கம் உள்ளது என்பார்கள்.

    குடை பிடித்துக் கொண்டு வலம் வரக்கூடாது.

    கையை வீசிக் கொண்டு வேக வேகமாக வலம் வரக்கூடாது.

    பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் குறிப்பாக தொலைக்காட்சி தொடர்கள் பற்றி தேவை இல்லாமல் பேசிக் கொண்டும், வேடிக்கை பார்த்துக் கொண்டும், வழியில் எல்லா இடங்களில் அமர்ந்து கொண்டும் வலம் வரக்கூடாது. மனம் முழுக்க ஈசன் நினைவு மட்டுமே இருக்க வேண்டும்.

    வேறு பல நினைவுகளுடன் வரக்கூடாது.

    காம எண்ணங்களுடன் வலம் வரக்கூடாது.

    குறுக்கும், நெடுக்கும் நடந்து வலம் வரக்கூடாது.

    போதை பொருளை உட்கொள்ளக் கூடாது. சிகரெட், பீடி குடிக்க கூடாது.

    புலால் உண்ட அன்றும், போதைப் பொருட்கள் பயன்படுத்திய தினத்திலும் கிரிவலம் வரக்கூடாது.

    தூரம் அதிகமாக உள்ளதே என்று மலைத்த இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது. எப்படி நடக்கப்போகிறோம் என்று மலைப்புடன் வலம் வரக்கூடாது.

    யாருடனும் பேசாது அஞ்செழுத்தை மனதிற்குள் கூறியபடி வலம் வருதல் நல்லது. மனம் முழுவதும் சிவன் மீது நாட்டம் கொண்டிருக்க வேண்டும்.

    கை வீசிக் கொண்டு செல்லாமல் நிதானமாக நடந்து வலம் வர வேண்டும். இது பிராணாயாமம் செய்வதற்கு சமமாக பலன் கிடைக்கும். இன்னும் கூறப்போனால் ஒரு கர்ப்பிணிப் பெண் போல் மெல்ல அடி எடுத்து வைத்து நடக்க வேண்டும். இது ஒட்டப் பந்தயமோ, நடைப் பந்தயமோ அல்லது எவ்வளவு வேகமாக நடந்தோம் என்பதை விட எவ்வளவு மெதுவாக நடந்தோம் என்பதிலேயே பலன் உள்ளது.

    கிரிவலம் வரும்போது சுற்றுச் சாலையின் இடது ஓரமாக நடக்க வேண்டும். மலையை பார்த்துக் கொண்டே நடக்க வேண்டும். அப்போது ஓம் நமச்சிவாய என்று தவறாமல் உச்சரிக்க வேண்டும்.

    திருநீறு, சந்தனம், குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை அணிந்திருத்தல் அவசியம். கையில் ஊதுபத்தி மற்றும் தூபம் எடுத்துக் கொண்டு சென்று அதன் மூலம் ஆராதித்து வழிபடுவது சிறப்பு.

    திருமணம் ஆகாதவர்கள், திருமணம் ஆனவர்கள் ஆகியோர் துறவியர்க்குரிய காவி ஆடை அணிந்து வலம் வரக்கூடாது.

    பிராணிகளுக்கோ, பசுக்களுக்கோ, பிச்சை கேட்போருக்கோ, வலம் வரும்போது சிறு பிரசாதம் அல்லது வாழைப்பழம், பிஸ்கட் ஆகியவற்றை தருதல் நலம். (காசு கொடுத்தல் கூடாது)

    வலம் வரும்போது முக்கிய தூபம் காட்டி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குதல் மிகவும் நல்லது.

    அடிக்கு ஆயிரத்தெட்டு லிங்கங்கள், அடித்துகள் பட்ட இடம் எல்லாம் கோடாணு கோடி லிங்கங்கள் (அ) வாகனத்தால் வலம் வரக்கூடாது. (ஆ) காலணி அணிந்து வலம் வரக்கூடாது. (இ) புகை பிடித்தல் கூடாது. (ஈ) திருவண்ணாமலையில் ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம் செய்தல் கூடாது.

    கார்த்திகை தீபத்தன்று நெய் பிரார்த்தனை உள்ளவர்கள் மட்டுமே கிரிமீது ஏறி பிரார்த்தனை செலுத்தலாம்.

    கிரிவலத்தின்போது அவரவர் பித்ருக்களை வணங்கி அவர்களது ஆசியுடன் அவரவர் குல தர்மப்படி ஆடை அணிந்து, வீண் பேச்சுக்களை அறவே தவிர்த்து அருணாசல இறை நாமம் போற்றிப் பாடி, துதித்து கர்ப்பிணிப் பெண் நடப்பது போல் மெதுவாக நடந்து வலம் வருதல் மிகவும் விசேஷம்.

    மலையை ஒட்டிய பாதையைத் தவிர்த்து இடது புறமாக செல்ல வேண்டும்.

    எறும்பு, வண்டு, ஈ போன்ற சிறு உயிரினங்கள் எதிர்ப்பட்டால் கூட அதற்கு வழிவிட்டு ஒதுங்கிச் செல்லுதல் நலம்.

    8 லிங்கங்கள்

    திருவண்ணாமலையின் எட்டுத் திசைகளிலும் எட்டு லிங்கங்கள் உள்ளன. அஷ்டதிக்கு பாலகர்கள் எனப்படுவோர் இந்திரன், அக்னி, எமன், நிருதி, வாயு, வருணன், குபேரன், ஈசானன் ஆகியோர் ஆவர்.

    வடக்கு திசையின் அதிபதி குபேரன்.

    வடக்கு திசையின் அதிபதி ஈசானன்.

    வடமேற்கு திசையின் அதிபதி வாயு.

    மேற்கு திசையின் அதிபதி வருணன்

    கிழக்கு திசையின் அதிபதி இந்திரன்.

    தெற்கு திசையின் அதிபதி எமன்

    தென்மேற்கு திசையில் அதிபதி நிருதியை

    தென்கிழக்கு திசையின் அதிபதி அக்னி.

    இந்த அஷ்டதிக் பாலகர்கள் வணங்கிய எட்டு லிங்கங்களும் இவர்கள் பெயராலேயே எட்டுத் திசைகளில் மலையைச் சுற்றி அமைந்துள்ளன.

    சூரியனே வலம் வந்து வணங்குகின்ற மூர்த்தி அருணாசலம் ஒன்றுதான்.

    திருவண்ணாமலையில் உருவமாகவும், அருவமாகவும், உருஅருவமாகவும் பல கோடி சித்தர்கள், மகான்கள், யோகிகள், முனிகள், ரிஷிகள் பல அபூர்வ சக்தி வாய்ந்த மூலிகைள் வடிவமாகவும், கற்பாறைகளாகவும் பார்க்கின்றவர்களுக்குக் காட்சி தந்து அருள் பாலிக்கின்றனர்.

    • வேஷ்டியை தரையில் விரித்து போட்டு அதன் மீது நடந்து சென்றார்
    • சாமி தரிசனம் செய்துவிட்டு குடும்பத்துடன் தொடங்கினார்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் அருணாசலா கோவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கிரிவலம் வருவது வழக்கம்.

    இதில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அகஸ்தியர் ஆசிரமத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் வித்தியாசமான முறையில் கிரிவலம சென்றார்.

    திருவண்ணாமலை யில் அடிக்கு ஒரு லிங்கம் உள்ளதாக முன்னோர்கள் தெரிவித்த நிலையில் இந்த ஆன்மீக பக்தர் இன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு குடும்பத்துடன் 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிரிவல பாதையில் செல்ல தொடங்கினார்.

    தன் பாதங்கள் தரையில் படாமல் இருக்க நீளமான வேஷ்டியை தரையில் விரித்து போட்டு அதன் மீது நடந்து கிரிவலம் சென்றார்.

    அப்போது அவருடன் அவரது மனைவி மற்றும் மகளும் இருந்தனர். மேலும் இந்த பக்தர்கள் துணியை பயன்படுத்தி நடந்து சென்றதை அந்த வழியாக சென்ற ஆன்மீக பக்தர்களும் மற்றும் பொதுமக்களும் வியப்புடன் பார்த்து சென்றனர்.

    • கிரிவலப்பாதையில் 14 கிலோமீட்டர் தூரம் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் வந்தார்.
    • பொதுமக்கள் மற்றும் பக்தர்களும் பரதநாட்டிய ம் ஆடியபடி சென்ற இளம் பெண்ணை பாராட்டி ரசித்து சென்றனர்.

    திருவண்ணாமலை:

    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் விளங்கிறது.

    தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வருவது வழக்கம்.

    அதன்படி இன்று அண்ணாமலையார் கோவிலில் ராஜகோபுரம் முன்பு வழிபட்டு ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த பவ்ய ஹாசினி என்ற இளம் பெண் அதிகாலை உலக நன்மைக்காக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 14 கிலோமீட்டர் தூரம் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் வந்தார்.

    இதனை ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்களும் பரதநாட்டிய ம் ஆடியபடி சென்ற இளம் பெண்ணை பாராட்டி ரசித்து சென்றனர். 

    • கோவில் செயல் அலுவலர் மகாதேவி கிரிவலத்தை தொடங்கி வைத்தார்.
    • பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்தி கடனுக்காகவும் வலம் வந்தனர்.

    கடலூர்:

    திருவண்ணாமலை போல் கிரிவலத்தில் புகழ் பெற்று விளங்கும் கடலூர் மாவட்டம் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவி லில் பவுர்ணமி தோறும் கிரி வலம், ஊஞ்சல் உற்ச வம் ஆகியவை நடந்து வரு கிறது. வைகாசி பவுர்ணமி தினமான நேற்று இரவு கிரிவலம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு மூலவர் சாமி, அம்மன், உற்சவர் தனி அம்மன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை விசேஷ பூஜை நடை பெற்றது. தொடர்ந்து மாலை 6 மணி அளவில் மாட வீதியை 16 முறை வலம் வரும் கிரிவலம் தொடங்கியது. கோவில் செயல் அலுவலர் மகாதேவி கிரிவலத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் கடலூர். விழுப்பு ரம், புதுவை பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்தி கடனுக்காகவும் வலம் வந்தனர். தொடர்ந்து மாலை 7 மணி அளவில் ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பெரியநாயகி அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வைகாசி மாத பவுர்ணமி உற்சவ தாரர் காடாம்புலியூர் ஏவிகுமரன், ஏவி சுரேஷ் குடும்பத்தினர் செய்திருந்த னர்.

    • ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்டசோழபுரத்தில் பௌர்ணமி கிரிவலம் நிகழ்ச்சி நடைபெற்றது
    • இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் ஸ்ரீ பிரகன்நாயகி சமேத ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி தினத்தையொட்டி கிரிவல பெருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று மாலை ஸ்ரீகணக்க விநாயகர் ஆலயத்தில் மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பெளர்ணமி கிரிவலம் நடைபெற்றது. கிரிவலம் கோவிலில் தொடங்கி வன்னியர்குழி, கணக்க வினாயகர் கோவில் வழியாக சென்று மீண்டும் பிரகதீஸ்வரர் கோவிலை வந்தடைந்தது. அதைதொடர்ந்து கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. விழாவில் சுற்று வட்டார கிராமமக்கள் மற்றும் சிவனடியார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • திருப்பரங்குன்றத்தில் கிரிவல பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
    • இந்த பகுதியில் சாலை அமைத்து தரவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    திருப்பரங்குன்றம்

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என்ற பெருமை கொண்டது திருப்பரங்குன்றம் ஆகும். குடைவரை கோவிலான இங்கு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் திருமண கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

    மலைமேல் காசி விசுவ நாதர் கோவில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையானது இயற்கையிலேயே லிங்க வடிவில் அமைந்துள்ளதால் திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாக திருப்பரங்குன்றம் உள்ளது.

    இங்கு பவுர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரை மாவட்டம் மட்டுமின்றி விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். பவுர்ணமி கிரிவலம் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் மலையை சுற்றி சுமார் 3½ கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள கிரிவலப் பாதை குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    மேலும் மலையை சுற்றி கோவில் வாசல் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான கழிவறைகள் இருந்தாலும் அவை அனைத்திலும் கூடுதல் கட்ட ணம் வசூலிக்கப்படு கின்றது என்று பக்தர்கள் புகார் தெரிவித்தனர். இதே போல கோவில் வாசல் மற்றும் முக்கிய பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான சுகாதாரமான குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மலைக்கு பின்பகுதியில் அமைந்துள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோவில் பகுதிக்கு செல்ல சுமார் 500 மீட்டர் தூரம் சாலை அமைக்கப்படாமல் மண் பாதையாக உள்ளது.இந்த பகுதியில் சாலை அமைத்து தரவும் பொது மக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளதுதோரண மலை முருகன் கோவில். இந்த கோவில் அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்கள் வழிபட்ட பெருமையுடையது .
    • யானை வடிவில் அமைந்துள்ள மலைமீது முருகன் கோவில் அமைந்துள்ளது ஒரு சிறப்பாகும். மேலும் மலைமீது அமைந்துள்ள குகையில் அமைந்துள்ள முருகன் கோவிலாக இது சிறப்புற்று விளங்குகிறது.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளதுதோரண மலை முருகன் கோவில். இந்த கோவில் அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்கள் வழிபட்ட பெருமையுடையது .

    யானை வடிவில் அமைந்துள்ள மலைமீது முருகன் கோவில் அமைந்துள்ளது ஒரு சிறப்பாகும். மேலும் மலைமீது அமைந்துள்ள குகையில் அமைந்துள்ள முருகன் கோவிலாக இது சிறப்புற்று விளங்குகிறது.

    இந்த முருகன் கோவில் அமைந்துள்ள மலையை சுற்றிலும் பக்தர்கள் பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவது வழக்கமாக உள்ளது.

    ஆவணி மாத பவுர்ணமி அன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலையைச் சுற்றிலும் முருகனின் பக்தி பாடல்களை படித்த வாறும், முருகனின் சரண கோசங்களை எழுப்பிய வாறும் பக்தி பரவசத்தோடு சுமார் 6 கிலோமீட்டர் தூரம் சுற்றளவுள்ள தோரணமலையை கிரிவலம் வந்தனர்.

    கிரிவலம் வந்த பக்தர்கள் அனைவருக்கும் மலையடிவாரத்தில் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

    ×