என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வேதாரண்யம் பகுதி கோவில்களில் பவுர்ணமி வழிபாடு
- மாணிக்கவாசகருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- கோவிலை சுற்றி 4 வீதிகளில் தேவாரங்கள் பாடிக்கொண்டு கிரிவலம் வந்தனர்.
வேதாரண்யம்:
கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு வேதாரண்யம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் உள்ள வனதுர்க்கை அம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை அம்மனுக்கு புனிதநீர் அடங்கிய கலசங்கள் வைத்து யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர், புனிதநீர் அடங்கிய குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பி க்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இதேபோல், வேதா ரண்யம் மேலவீதியில் அமைந்துள்ள மாணிக்க வாசகர் மடத்தில் உள்ள மாணிக்கவாசகருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை பாடி மாணிக்கவாசகரை வழிபட்டனர்.
பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது.
நிகழ்ச்சியில் மாணிக்கவாசகர் மடம் தர்மகர்த்தா, யாழ்ப்பாணம் வரணி ஆதீனம், செவந்திநாத பண்டார சன்னதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், வேதாரண்யம் அடுத்த வேம்பதேவன்காடு தெற்கு பகுதியில் அமைந்துள்ள மவுன சித்தர் பீடத்தில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று.
மகானுக்கு பிடித்த பலகாரங்கள், பொங்கல் வைத்து படையல் இடப்பட்டது. பின்னர், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சித்தர் பீடத்துக்கு வந்து தியானம் மேற்கொண்டு வழிபட்டனர்.
பவுர்ணமியை முன்னிட்டு கடல் அன்னைக்கு தீப ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபட்டனர்.
மேலும், பக்தர் ராஜேந்திரன் தலைமையில் ஏராளமான பக்தர்கள் கோவிலை சுற்றி 4 வீதிகளில் தேவாரங்கள் பாடிக்கொண்டு கிரிவலம் வந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்