என் மலர்
நீங்கள் தேடியது "Thoranamalai"
- கடையம் அருகே அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவில். அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்களால் வழிபடப்பட்ட தலமாகும்.
- மாணவர்கள் அறிவு வளர்ச்சி பெற வேண்டி மலையடிவாரத்தில் ஆன்மீகச் செம்மல் ஆதிநாராயணன் சந்திர லீலா நினைவு நூலகம் திறக்கப்பட்டது.
கடையம்:
கடையம் அருகே அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவில். அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்களால் வழிபடப்பட்ட தலமாகும். இன்று ஆவணி மாத கடைசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு வருண கலச பூஜை நடைபெற்றது. விவசாயம் செழிக்கவும், மழை பொழியவும், நாடு செழிப்பு பெற வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. மலை உச்சியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு மலை அடிவாரத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
மேலும் தோரணமலை கோவில் நிர்வாகத்தால் ஆன்மிகப் பணி மட்டுமன்றி பல்வேறுஅறப்பணிகளும் செய்து வரப்படுகிறது.மாணவர்கள் அறிவு வளர்ச்சி பெற வேண்டி மலையடிவாரத்தில் ஆன்மீகச் செம்மல் ஆதிநாராயணன் சந்திர லீலா நினைவு நூலகம் திறக்கப்பட்டது.நூலகத்தினை மருத்துவர் தர்மராஜ் திறந்து வைத்தார்.நூலகத்தில் ஆன்மிகம், சித்தர்கள், மருத்துவம், பொது அறிவு புத்தகங்கள், மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டது. விழாவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.
- தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளதுதோரண மலை முருகன் கோவில். இந்த கோவில் அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்கள் வழிபட்ட பெருமையுடையது .
- யானை வடிவில் அமைந்துள்ள மலைமீது முருகன் கோவில் அமைந்துள்ளது ஒரு சிறப்பாகும். மேலும் மலைமீது அமைந்துள்ள குகையில் அமைந்துள்ள முருகன் கோவிலாக இது சிறப்புற்று விளங்குகிறது.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளதுதோரண மலை முருகன் கோவில். இந்த கோவில் அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்கள் வழிபட்ட பெருமையுடையது .
யானை வடிவில் அமைந்துள்ள மலைமீது முருகன் கோவில் அமைந்துள்ளது ஒரு சிறப்பாகும். மேலும் மலைமீது அமைந்துள்ள குகையில் அமைந்துள்ள முருகன் கோவிலாக இது சிறப்புற்று விளங்குகிறது.
இந்த முருகன் கோவில் அமைந்துள்ள மலையை சுற்றிலும் பக்தர்கள் பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவது வழக்கமாக உள்ளது.
ஆவணி மாத பவுர்ணமி அன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலையைச் சுற்றிலும் முருகனின் பக்தி பாடல்களை படித்த வாறும், முருகனின் சரண கோசங்களை எழுப்பிய வாறும் பக்தி பரவசத்தோடு சுமார் 6 கிலோமீட்டர் தூரம் சுற்றளவுள்ள தோரணமலையை கிரிவலம் வந்தனர்.
கிரிவலம் வந்த பக்தர்கள் அனைவருக்கும் மலையடிவாரத்தில் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.
- தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள தோரணமலை முருகன் கோவிலில் அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்களால் வழிபடப்பட்ட சிறப்பு மிகுந்த தலமாகும்.
- இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மலை அடிவாரத்திலுள்ள விநாயகருக்கு இன்று காலை சிறப்பு அபிஷேகங்கள், ராஜ அலங்காரம்செய்யப்பட்டு 1,008 கொழுக்கட்டை படையலிடப்பட்டது.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள தோரணமலை முருகன் கோவிலில் அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்களால் வழிபடப்பட்ட சிறப்பு மிகுந்த தலமாகும்.
1,008 கொழுக்கட்டை படையல்
இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மலை அடிவாரத்திலுள்ள விநாயகருக்கு இன்று காலை சிறப்பு அபிஷேகங்கள், ராஜ அலங்காரம்செய்யப்பட்டு 1,008 கொழுக்கட்டை படையலிடப்பட்டது.
சிவனடியார்களின் 6 மணிநேரம் தொடர் பஜனையுடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
8, 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்காக திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. சோகோ மென்பொருள் கம்பெனியின் மென் பொறியாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை கூறினர்.
தோரணமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நூலகத்தில் மாணவ-மாணவியர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வண்ணம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் பக்தர்களுக்கு காலை முதல் நாள் முழுவதும் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.
- பெருந்தலைவர் காமராஜர், அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு மற்றும் கணிப்பொறி பற்றி தெரிந்து கொள்ளும் விதமாக தோரணமலை கோவில் நிர்வாகம் சார்பாக புத்தகங்கள் வழங்கப்பட்டன.
- பக்தர்களுக்கு காலை, மதியம் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.
கடையம்:
அகத்தியர், தேரையர் சித்தர் வழிபட்ட தோரண மலை முருகன் கோவில் தென்காசி மாவட்டம் கடையம் அருகில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமை அதிகாலையில் பக்தர்கள் மலை மீதிருந்து சுனை நீரை கலசத்தில் எடுத்து வந்து அடிவாரத்தில் உற்சவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.இதனை அடுத்து விவசாயம் தழைக்க, விவசாயி செழிக்க வருண கலச பூஜையும் நடைபெற்று வருகிறது.
இன்று அதிகாலை மலை அடிவாரம் மற்றும் மலை மீதுள்ள தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நாள் முழுதும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தற்போது இந்த கோவிலின் அடிவாரத்தில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை கொண்ட நூலகம் அமைய இருக்கிறது. அதை இப்பகுதி மாணவ மாணவிகள் பயன்படுத்தும் விதமாக புத்தகம் சேமிக்கும் பணிகள் நடக்கிறது.
தோரணமலை அருகிலுள்ள மடத்தூர் மற்றும் சிவநாடானூர் கிராம பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது தலைமை ஆசிரியரோடு வருகை தந்தனர். அவர்கள் பயன்படுத்தும் விதமாக பெருந்தலைவர் காமராஜர், அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு மற்றும் கணிப்பொறி பற்றி தெரிந்து கொள்ளும் விதமாக தோரணமலை கோவில் நிர்வாகம் சார்பாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. பக்தர்களுக்கு காலை, மதியம் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி மேலாளர் சேதுராமலிங்கம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இன்பசேகரன், பாலன் தொழிலதிபர் கே.டி.ஆர். சுந்தர், பள்ளி நிர்வாகிகள் முருகன், சவந்திர பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பக ராமன் செய்திருந்தார்.
மாணவர்களிடையே கைபேசி மற்றும் தொலைக்காட்சி பயன்படுத்தும் நேரம் அதிகமாகி, புத்தகம் படிக்கும் பழக்கம் குறைவதை தடுத்து, புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடந்தது.






