search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்-ஊஞ்சல் உற்சவம்
    X

    பவுர்ணமி ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு ஊஞ்சலில் பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்-ஊஞ்சல் உற்சவம்

    • கோவில் செயல் அலுவலர் மகாதேவி கிரிவலத்தை தொடங்கி வைத்தார்.
    • பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்தி கடனுக்காகவும் வலம் வந்தனர்.

    கடலூர்:

    திருவண்ணாமலை போல் கிரிவலத்தில் புகழ் பெற்று விளங்கும் கடலூர் மாவட்டம் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவி லில் பவுர்ணமி தோறும் கிரி வலம், ஊஞ்சல் உற்ச வம் ஆகியவை நடந்து வரு கிறது. வைகாசி பவுர்ணமி தினமான நேற்று இரவு கிரிவலம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு மூலவர் சாமி, அம்மன், உற்சவர் தனி அம்மன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை விசேஷ பூஜை நடை பெற்றது. தொடர்ந்து மாலை 6 மணி அளவில் மாட வீதியை 16 முறை வலம் வரும் கிரிவலம் தொடங்கியது. கோவில் செயல் அலுவலர் மகாதேவி கிரிவலத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் கடலூர். விழுப்பு ரம், புதுவை பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்தி கடனுக்காகவும் வலம் வந்தனர். தொடர்ந்து மாலை 7 மணி அளவில் ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பெரியநாயகி அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வைகாசி மாத பவுர்ணமி உற்சவ தாரர் காடாம்புலியூர் ஏவிகுமரன், ஏவி சுரேஷ் குடும்பத்தினர் செய்திருந்த னர்.

    Next Story
    ×