என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "judgement"
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்றத்தில் கோவிந்தராஜ் மகன் ஜெயபால் (வயது 39) என்பவர் கடந்த 2016-ம் ஆண்டில் காசோலை மோசடி வழக்கினை சந்திரராஜா என்பவர் மீது பதிவு செய்தார்.
வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேல் சந்திரராஜா நீதி மன்றத்திற்கு வராத நிலையில் அவருக்கு பிடிவாரண்ட் போடப்பட்டது. பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. கணேசமூர்த்தி கோர்ட்டின் உத்தரவின் பேரில் சந்திரராஜாவை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.
இதையடுத்து பட்டுக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்ற நீதிபதி சத்தியகுமார் இந்த வழக்கை விசாரித்து பட்டுக்கோட்டை பண்ணவயல் ரோடு பகுதியை சேர்ந்த மன்னர்மன்னன் மகன் சந்திரராஜாவுக்கு காசோலை மோசடி வழக்கில் ஒருவருடம் சிறைதண்டனை மற்றும் காசோலை கொடுத்து ஏமாற்றிய தொகை 25 லட்சம் ரூபாயை ஒருமாதத்தில் கட்ட வேண்டும் என்றும், அவ்வாறு கட்ட தவறினால் மேலும் மூன்றுமாதம் சிறைதண்டனை வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பு நாளை (திங்கட்கிழமை) வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அமர்வில் நடைபெற்றது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கடந்த 7-ந் தேதியன்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அமர்வில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது.
வாணியம்பாடி:
கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்வது கிரிமினல் குற்றம் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கருத்துகளை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வாணியம்பாடி பஸ் நிலையத்தில் ஜனதாபுரம் பகுதியை சேர்ந்த ரவி (வயது 45) என்பவர் நின்று கொண்டிருந்தார். தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு அவர் திடீரென கூச்சலிட்டார்.
அப்போது கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்வது கிரிமினல் குற்றம் அல்ல என கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு தொடர்பாக சில வாசகங்களை கூறியதோடு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சத்தமாக கூறி விட்டு தீவைக்க முயன்றார்.
அப்போது அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை சுற்றிவளைத்து பிடித்து தீக்குளிக்க முயன்றதை தடுத்தனர். பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #adultery
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே கும்மிடிகாம்பட்டி கொட்டாவூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், சென்னையில் துரித உணவகம் (பாஸ்ட்புட்) நடத்தி வந்தார். மேலும், இவர் இதே ஊரின் தே.மு.தி.க. முன்னாள் கிளை செயலாளராகவும் இருந்தார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
கடந்த 2.3.2012 அன்று அதே பகுதியில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில் முன்பு வெங்கடேசன் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் வெங்கடேசனை வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறி கந்திலியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் பாபுசங்கர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாபுஜி, திருப்பதி, முரளி, ஜோதி, குப்புசாமி, கோவிந்தன், விஜய், அருண் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு திருப்பத்தூரில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கை நீதிபதி டி.இந்திராணி விசாரித்து, பாபுசங்கர் உள்பட 9 பேரை வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த நிலையில் தீர்ப்பு வந்தால், நமக்கு தண்டனை அளிக்கப்படுமோ? என பாபுசங்கர் சோகத்துடன் காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு திடீரென பாபுசங்கருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பாபுசங்கர் பரிதாபமாக இறந்தார்.
அதாவது வழக்கில் இருந்து பாபுசங்கர் உள்ளிட்ட 9 பேரும் விடுதலையாகிவிட்டார்கள் என தீர்ப்பு வந்த சில மணி நேரங்களிலேயே பாபுசங்கர் இறந்துவிட்டார்.
இந்த சம்பவம் கந்திலி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் காவிரி வெள்ளம் சென்றாலும் கடைமடை பாசன பகுதி பாலைவனமாக உள்ளதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் தலைமை தாங்கினார்.மாநில பொருளாளர் எம்.ரெங்கசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.கு.சீனிவாசன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவா.ராஜ மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அரசியல் ஆதாயத்திற்காக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவில்லை. நதிகள் உள்ள பகுதிகளில் தான் நாகரீகம் தோன்றியது.உலக வரலாற்றில் இடம் பெற்ற கரிகாலன் கட்டிய கல்லணையும், ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலும் இன்றும் புகழ்பெற்று நிற்கிறது. கர்நாடகத்தில் மழை கொட்டி தீர்த்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பிய நிலையில் கர்நாடகம் காவிரிநீரை தந்தது. மேட்டூர் அணை இரண்டு முறை நிரம்பியது. ஆனால் அந்த நீர் கடலுக்கு சென்று கொண்டிருக்கிறது.
ஜெயலலிதா ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லிக் கொள்பவர்கள் தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ வேண்டும் என்பதற்காக தமிழகத்தையே சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். குடி மராமத்து பணி, தூர் வாரும் பணி என்றெல்லாம் நிதி ஒதுக்கி கொள்ளையடித்து வருகிறார்கள். பல ஆண்டு போராட்டத்திற்குப் பின் உச்சநீதிமன்ற உத்தரவின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில தேர்தலுக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை பா.ஜனதா இழுத்தடித்தது.
18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு வந்தவுடன் தமிழகத்தில் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்டாயம் வரும். 234 தொகுதிகளிலும் மக்கள் எதிர்பார்க்கிற நல்ல தீர்ப்பு வரும். மக்கள் விரும்பாத துரோக ஆட்சிக்கு முடிவு வரும்.
கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பூமிக்கடியில் நிலக்கரி கிடைப்பதால் நிலக்கரி எடுக்க நிலங்களை தேர்வு செய்துள்ளார்கள். பூமிக்கடியில் வைரமே கிடைத்தாலும் தேவையில்லை.டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்களை காப்பாற்றுவோம். டெல்டா மாவட்டங்களில் விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழிலுமே நடக்க வேண்டும். எட்டு வழிச்சாலை தொலை நோக்குத் திட்டம் என ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் ஆற்றுநீரை தேக்கி வைக்க முடியவில்லை.
ஊழலை திசை திருப்ப ஆட்சியாளர்கள் ஊர், ஊராக சுற்றி வருகிறார்கள். மன்னார்குடியில் கூட்டம் போட்டு ஓ.பன்னீர்செல்வம் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார்.
ஆடிட்டர் குருமூர்த்தியின் தயவால் பா.ஜனதாவின் உத்தரவுப்படி தமிழகத்தில் ஆட்சி செய்கிறார்கள். ஓ. பன்னீர்செல்வத்திற்கு என்னைக் கண்டால் பயம் ஏற்படுகிறது.
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரி குடை பிடிப்பது போல் தமிழக அமைச்சர்களின் நிலை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, நடிகை சி.ஆர்.சரஸ்வதி, அறந்தாங்கி ரத்தினசபாபதி எம்.எல்.ஏ., முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் குடவாசல் ராஜேந்திரன், திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.சங்கர் வரவேற்றார். முடிவில் நகர செயலாளர் எஸ்.சங்கர் நன்றி கூறினார். #dinakaran #18mlas #edappadipalanisamy
ஜெனீவா:
இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காக ‘தமிழீழம்’ என்ற தனி நாடு கேட்டு விடுதலைப்புலிகள் இயக்கம் போராடி வந்தது. அதன் தலைவராக பிரபாகரன் இருந்தார்.
ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே 27 ஆண்டுகள் உள்நாட்டு போர் நடைபெற்றது. கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார்.
தற்போது இந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்ததாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பெலின்சோனா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சுவிட்சர்லாந்து அரசு சார்பில் விடுதலைப்புலிகள் இயக்கம் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அந்த ஆவணங்களை கோர்ட்டு நிராகரித்தது. விசாரணை முடிந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் விடுதலைப்புலிகள் குற்ற செயல்களில் ஈடுபடவில்லை. அது ‘தீவிரவாத அமைப்பு இல்லை’ என கூறப்பட்டுள்ளது.
மேலும், விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டோரை வழக்குகளில் இருந்து விடுவித்தும் சுவிட்சர்லாந்து கோர்ட்டு உத்தரவிட்டது. #Switzerlandcourt #LTTE
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்