search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "check fraud case"

    • தேனி அருகே செக் மோசடி செய்தவர் நபர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
    • நீதிபதி 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் சுருளிப்பட்டியைச் சேர்ந்த பொன்ராம் மகன் மனோகரன் (வயது57). இவர் அதே ஊரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கு கடந்த 2019ம் ஆண்டு ரூ.10 லட்சம் கடன் கொடுத்துள்ளார்.

    கடனை திரும்ப கேட்டபோது பணம் தராமல் மகேந்திரன் வங்கிக் காசோலை கொடுத்துள்ளார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தமனோகரன் உத்தமபாளையம் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி காசோலை மோசடி செய்த மகேந்திரனுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

    பட்டுக்கோட்டையில் காசோலை மோசடி வழக்கில் வாலிபருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்றத்தில் கோவிந்தராஜ் மகன் ஜெயபால் (வயது 39) என்பவர் கடந்த 2016-ம் ஆண்டில் காசோலை மோசடி வழக்கினை சந்திரராஜா என்பவர் மீது பதிவு செய்தார்.

    வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேல் சந்திரராஜா நீதி மன்றத்திற்கு வராத நிலையில் அவருக்கு பிடிவாரண்ட் போடப்பட்டது. பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. கணேசமூர்த்தி கோர்ட்டின் உத்தரவின் பேரில் சந்திரராஜாவை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.

    இதையடுத்து பட்டுக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்ற நீதிபதி சத்தியகுமார் இந்த வழக்கை விசாரித்து பட்டுக்கோட்டை பண்ணவயல் ரோடு பகுதியை சேர்ந்த மன்னர்மன்னன் மகன் சந்திரராஜாவுக்கு காசோலை மோசடி வழக்கில் ஒருவருடம் சிறைதண்டனை மற்றும் காசோலை கொடுத்து ஏமாற்றிய தொகை 25 லட்சம் ரூபாயை ஒருமாதத்தில் கட்ட வேண்டும் என்றும், அவ்வாறு கட்ட தவறினால் மேலும் மூன்றுமாதம் சிறைதண்டனை வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.

    செக் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் நெப்போலியனுக்கு கரூர் கோர்ட்டு பிடிவாரண்டு அனுப்பியுள்ளது. #ActorNapoleon
    கரூர்:

    கரூர் காமராஜபுரம் வடக்கு பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 44). நிதி நிறுவனம் நடத்தி வரும் இவர் நடிகர் கவுதம் கார்த்திக், நெப்போலியன் ஆகியோர் நடித்த முத்துராமலிங்கம் என்ற திரைப்படத்திற்காக ரூ.1 கோடியே 10 லட்சம் கடன் கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் அந்த படம் வெளியானபோது, ரூ.53 லட்சத்து 54 ஆயிரத்தை கோபால கிருஷ்ணனுக்கு திருப்பி செலுத்த வேண்டிய சூழல் இருந்தது. அப்போது நெப்போலியன் அந்த பணத்திற்கு பொறுப்பேற்று தருவதாக கூறியுள்ளார்.

    பின்னர் ரூ.25 லட்சத்தை திருப்பி செலுத்தினார். மீதமுள்ள ரூ.28 லட்சத்து 54 ஆயிரத்திற்கான காசோலையை, கோபாலகிருஷ்ணனுக்கு கொடுத்திருந்தார். ஆனால் சம்பந்தப்பட்ட வங்கியில் அந்த காசோலை பணம் இல்லாமல் திரும்பியது.

    இதனால் ஏமாற்றமடைந்த கோபாலகிருஷ்ணன், இதுதொடர்பாக நெப்போலியன் மீது, கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்காக 5 முறைக்கு மேல் நெப்போலியனுக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. தற்போது அவர் அமெரிக்காவில் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரகோத்தமன், வழக்கில் ஆஜராகாத நெப்போலியனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை மே மாதம் 31-ந்தேதிக்கும் ஒத்திவைத்தார்.

    இதனிடையே வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி நெப்போலியன் தரப்பில் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. #ActorNapoleon
    ×