என் மலர்
நீங்கள் தேடியது "actor napoleon"
- தவறான தகவல்களும் தொடர்ந்து வலை தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
- உண்மைக்கு மாறாக செய்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் ஜீவன் மயோபதி மருத்துவமனை தலைமை இயன்முறை மருத்துவர் டேனியல் ராஜா இன்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் முன்னாள் மத்திய மந்திரியும், நடிகருமான நெப்போலியன் நடத்தி வரும் ஜீவன் அறக்கட்டளை மயோபதி மருத்துவ மனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி வருகிறேன்.
எங்கள் நிறுவனத் தலைவரின் மூத்த மகன் தனுஷின் குடும்ப வாழ்க்கை குறித்தும், அவரது உடல்நிலை குறித்தும் அவதூறாகவும், தவறான தகவல்களும் தொடர்ந்து வலை தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
இது எங்கள் நிறுவனர் நெப்போலியன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், அவரிடம் பணிபுரியும் எங்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. எனவே உண்மைக்கு மாறாக தவறான செய்திகளை பரப்புபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த செய்திகளை உடனடியாக தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தனுஷ் நெப்போலியன், அவரது மனைவி அக்ஷயா ஆகியோர் ஒன்றாக நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கரூர் காமராஜபுரம் வடக்கு பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 44). நிதி நிறுவனம் நடத்தி வரும் இவர் நடிகர் கவுதம் கார்த்திக், நெப்போலியன் ஆகியோர் நடித்த முத்துராமலிங்கம் என்ற திரைப்படத்திற்காக ரூ.1 கோடியே 10 லட்சம் கடன் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் அந்த படம் வெளியானபோது, ரூ.53 லட்சத்து 54 ஆயிரத்தை கோபால கிருஷ்ணனுக்கு திருப்பி செலுத்த வேண்டிய சூழல் இருந்தது. அப்போது நெப்போலியன் அந்த பணத்திற்கு பொறுப்பேற்று தருவதாக கூறியுள்ளார்.
பின்னர் ரூ.25 லட்சத்தை திருப்பி செலுத்தினார். மீதமுள்ள ரூ.28 லட்சத்து 54 ஆயிரத்திற்கான காசோலையை, கோபாலகிருஷ்ணனுக்கு கொடுத்திருந்தார். ஆனால் சம்பந்தப்பட்ட வங்கியில் அந்த காசோலை பணம் இல்லாமல் திரும்பியது.
இதனால் ஏமாற்றமடைந்த கோபாலகிருஷ்ணன், இதுதொடர்பாக நெப்போலியன் மீது, கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்காக 5 முறைக்கு மேல் நெப்போலியனுக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. தற்போது அவர் அமெரிக்காவில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரகோத்தமன், வழக்கில் ஆஜராகாத நெப்போலியனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை மே மாதம் 31-ந்தேதிக்கும் ஒத்திவைத்தார்.
இதனிடையே வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி நெப்போலியன் தரப்பில் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. #ActorNapoleon






