நடிகர் நெப்போலியன் மகன் பற்றி அவதூறு புகார்: நடவடிக்கை எடுக்க போலீசில் மனு

தவறான தகவல்களும் தொடர்ந்து வலை தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.உண்மைக்கு மாறாக செய்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடிகர் நெப்போலியன் மகன் பற்றி அவதூறு புகார்: நடவடிக்கை எடுக்க போலீசில் மனு
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் ஜீவன் மயோபதி மருத்துவமனை தலைமை இயன்முறை மருத்துவர் டேனியல் ராஜா இன்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் முன்னாள் மத்திய மந்திரியும், நடிகருமான நெப்போலியன் நடத்தி வரும் ஜீவன் அறக்கட்டளை மயோபதி மருத்துவ மனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி வருகிறேன்.

எங்கள் நிறுவனத் தலைவரின் மூத்த மகன் தனுஷின் குடும்ப வாழ்க்கை குறித்தும், அவரது உடல்நிலை குறித்தும் அவதூறாகவும், தவறான தகவல்களும் தொடர்ந்து வலை தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

இது எங்கள் நிறுவனர் நெப்போலியன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், அவரிடம் பணிபுரியும் எங்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. எனவே உண்மைக்கு மாறாக தவறான செய்திகளை பரப்புபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்த செய்திகளை உடனடியாக தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தனுஷ் நெப்போலியன், அவரது மனைவி அக்ஷயா ஆகியோர் ஒன்றாக நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com