search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jayam Ravi"

    • 'பூலோகம்' திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் 'அகிலன்'.
    • 'அகிலன்' திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    'பூலோகம்' திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் 'அகிலன்'. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'அகிலன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

    அதன்பின் சமீபத்தில் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் அகிலன் படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி அகிலன் திரைப்படத்தின் டீசர் நாளை (ஜூன் 10) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அகிலன்

    அகிலன்


    இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி என்றும் தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்‌சன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அகிலன் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.


    சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த ஜெனிலியா, தற்போது அவரது போஸ்டரை பார்த்து பாராட்டியிருக்கிறார்.
    சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் நடித்த ஜெனிலியா கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. தமிழில் மிகக் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் அவர் ஏற்று நடித்த அத்தனை பாத்திரங்களும் முக்கியமானவையாக உள்ளன. 

    2011-ம் ஆண்டு வெளியான வேலாயுதம் படத்திற்கு பின் அவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. ஜெனிலியா இந்தி, மராத்தி மொழிகளில் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார். 



    கோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவி ஒன்பது விதமான தோற்றங்களில் வலம் வர உள்ளார். ஒவ்வொரு தோற்றத்தையும் படக்குழுவினர் போஸ்டர்கள் வாயிலாக வெளியிட்டுள்ளனர். ஒன்பதாவதாக வெளியான போஸ்டரில் ஜெயம் ரவி பள்ளி மாணவன் போன்ற தோற்றத்தில் உள்ளார். அதைப் பார்த்த ஜெனிலியா, “என்ன இது ஜெயம் ரவி? உங்களுக்கு வயதே ஆகவில்லை. பதினாறு வயது சிறுவனைப் போல் தோற்ற மளிக்கிறீர்கள்” என்று கூறியுள்ளார்.
    இயக்குநர் லட்சுமனன் - ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்தில் ஹன்சிகாவுக்கு பதிலாக நித்தி அகர்வால் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
    சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே, சின்கம் உள்ளிட்ட பாலிவுட் படங்களிலும்,  விஜய் சேதுபதியின் ஜுங்கா படத்திலும் பணியாற்றிய பிரபல ஒளிப்பதிவாளர் டூட்லி ஜெயம் ரவியின் 25-வது படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    ரோமியோ ஜூலியட், போகன் படங்களை தொடர்ந்து லட்சுமன் - ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணையும் இந்த படம் விவசாயிகள் பிரச்சனையை பேசும் படமாக உருவாகுவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நித்தி அகர்வால் நடிப்பதாக கூறப்படுகிறது.



    ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் இந்த படத்தை தயாரிக்கிறார். டி.இமான் இசையைமக்கிறார்.

    ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக கோமாளி படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. 

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
    இயக்குநர் மணிரத்னமின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா ஷெட்டியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படக்குழு நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

    விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ளனர். கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நாயகிகளாக நடிக்க, சத்யராஜ், மோகன் பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.



    ஆதி, அமலாபாலிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விளையாட்டு படமொன்றில் நடிக்கும் ஆதி அதற்காக தனது உடல் எடையை குறைத்து வருவதால் அவர் படத்தில் ஒப்பந்தமாகவில்லை என்று கூறப்படுகிறது.

    மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீசுடன் பிரபல தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்திற்கான முதற்கட்ட பணிகளில் மணிரத்னம் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் நிலையில், படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்க இருக்கிறது. 

    இயக்குநர் லட்சுமனன் - ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்தில் ஹன்சிகாவுக்கு பதிலாக நித்தி அகர்வால் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
    ரோமியோ ஜூலியட், போகன் படங்களை தொடர்ந்து லட்சுமணன் ஜெயம் ரவி மீண்டும் இணைந்துள்ளனர். முந்தைய 2 படங்களிலுமே ஜெயம் ரவி ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார். ஆனால், இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படக்குழு டாப்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இருவரும் நடிக்கிறார்களா என்பது இன்னமும் உறுதியாகவில்லை.

    ஜெயம் ரவியின் 25-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தனது ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறார். 



    இவர் இதற்கு முன்பாக ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தை தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

    மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் பணிகள் முழுவீச்சில் நடப்பதாக மோகன் ராஜா கூறியிருக்கிறார்.
    கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகிய தனி ஒருவன் திரைப்படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகு தனி ஒருவன் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும் அறிவித்தனர்.

    இந்தப் படத்திலும் ஜெயம் ரவி எஸ்பியாக நடிக்க உள்ளார். தடயவியல் துறை நிபுணராக நயன்தாரா நடிக்கிறார்.

    தனி ஒருவன் திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரமே அரவிந்த்சாமியின் சித்தார்த் அபிமன்யுதான். இரண்டாம் பாகம் எனும்போது, முதல் படத்திலிருந்த மாஸ் வில்லன் இன்னும் பிரமிப்பூட்டும் வகையில் இருக்க வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் மோகன் ராஜா உள்ளார்.



    தனி ஒருவன் 2 படத்திற்கான வேலைகள் சத்தமில்லாமல் நடந்து வருகிறது. இந்த நிலையில், மீண்டும் தனி ஒருவன் படத்தை பார்த்த இயக்குநர் ராம், ராஜா மீண்டும் தனி ஒருவன் படத்தை பார்தேன், மிகப் பெரிய உழைப்பு, அடுத்த பாகத்தை ரொம்ப கவனத்துடன் எடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

    அதற்கு மோகன் ராஜா அளித்த பதிலில், தனி ஒருவன் 2 படத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. தனது உதவி இயக்குநர்களிடம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விடலாமல்லவா? என்று கேட்டேன், 200% கண்டிப்பாக என்று கூறினார்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.


    ஜெயம் ரவி தற்போது கல்யாண் இயக்கத்தில் தனது 25-வது படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்த பிறகு இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஆதியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
    இயக்குநர் மணிரத்னம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்திற்கான பணிகளில் பிசியாகி இருக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி முக்கிய கதபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர்.

    கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். அமலாபாலிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஆதியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுகுறித்து ஆதிக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்களின்படி, மணிரத்னம் ஆதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது உறுதியாகி இருக்கிறது. விரைவில் ஆதி இந்த படத்தில் ஒப்பந்தமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதி கடைசியாக சமந்தாவின் யு-டர்ன் படத்தில் போலீசாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    படத்திற்கான முதற்கட்ட பணிகளில் மணிரத்னம் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் நிலையில், படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்க இருக்கிறது. மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீசுடன் பிரபல தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

    அமரர் கல்கி எழுதியிருக்கும் இந்த கதையில், ஆதித்த கரிகாலனான விக்ரமும், பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்க இருக்கின்றனர்.

    லக்‌ஷ்மண் இயக்கத்தில் தன்னுடைய 25வது படத்தில் நடிக்கும் ஜெயம்ரவி தனக்கு அரசியல் கொள்கை இருப்பதாக கூறியிருக்கிறார்.
    ஜெயம் ரவி 25-வது படத்தை தொடுகிறார். அந்த படம் பற்றி அவர் கூறியிருப்பதாவது:-

    ‘என்னுடைய 25வது படத்தை லக்‌ஷ்மண் இயக்குறார். நான் ரொம்ப நாளா பண்ணணும்னு நினைச்ச வி‌ஷயத்தைப் படமா பண்ணப்போறோம். விவசாயம் சார்ந்த படமா, மண்ணின் மைந்தர்கள் பற்றிய படமா இது இருக்கும். அண்ணனுக்கும் இந்தப் படம் மேல பெரிய நம்பிக்கை இருக்கு. அதனால, இதை முடிச்சுட்டு வா, நாம எப்போவேணா `தனி ஒருவன் 2’ பண்ணலாம்னு சொல்லியிருக்கார். என்னை எனக்குக் காட்டிய படங்களில், `பேராண்மை’யும் ஒண்ணு.



    இந்தப் படத்துல நடிச்சது எனக்குப் பெருமை. மத்தபடி, நானும் ஒரு அரசியலை பாலோ பண்றேன். அந்த அரசியலுக்குள்ள தான் இருக்கேன். அதுக்காகத்தான் தேர்தல்ல ஓட்டு போடுறேன். நான் எந்தக் கட்சியிலும் இல்லை; தனிப்பட்ட நபர் யாரையும் ஆதரிக்கவில்லை’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    கல்யாண் - ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணையும் படத்தில் ரவிக்கு ஜோடியாக நடிக்க டாப்சி ஒப்பந்தமாகி இருக்கிறார். #JayamRavi #Taapsee
    இந்தி சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் டாப்சி ஜெயம் ரவியின் 25-வது படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ஆடுகளம் படத்துக்கு பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாப்சிக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாததால் இந்தியில் நடிக்க சென்றார்.

    அங்கு தனக்கென்று முக்கியமான இடத்தை பிடித்திருக்கும் டாப்சி, தமிழில் ரீ என்ட்ரியாக ‘கேம் ஓவர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து ஜெயம் ரவியுடன் நடிக்கிறார்.



    ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கிய லட்சுமணன் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ஜெயம் ரவியை இயக்குகிறார். டி.இமான் இசையமைப்பாளராக இணைந்துள்ளார். 

    இந்த படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தனது ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிக்கிறார். சுஜாதா விஜயகுமார் இதற்கு முன்பாக ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தையும் தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு அடுத்து வரும் நாட்களில் வெளியாக உள்ளது. #JayamRavi #Taapsee #Kalyan

    தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவியின் 25-வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #JayamRavi
    ‘ஜெயம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஜெயம் ரவி, இதுவரை 24 படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடித்த ‘அடங்க மறு’ படம், அவருடைய 24-வது படமாக கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் 25-வது படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

    இவருடைய 25-வது படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. லட்சுமன் டைரக்டு செய்கிறார். இவர், ஜெயம் ரவியை வைத்து ஏற்கனவே ‘போகன்,’ ‘ரோமியோ ஜூலியட்’ ஆகிய 2 படங்களை டைரக்டு செய்து இருக்கிறார். மூன்றாவது முறையாக இருவரும் புதிய படத்தில் இணைந்து பணிபுரிய இருக்கிறார்கள். இதுபற்றி டைரக்டர் லட்சுமன் கூறியதாவது:-

    ‘‘ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளத்தக்க கதைக்களத்தை கொண்ட படம், இது. கடந்த 24 படங்களில் ஜெயம் ரவியின் திரையுலக பயணத்தை பிரதிபலிக்கும் விதமாக ஜனரஞ்சகமான படமாக இது தயாராக இருக்கிறது.



    ஜெயம் ரவியின் ஜோடியாக நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர கதாபாத்திரங்களுக்கான நடிகர்-நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இமான் இசையமைக்கிறார். ஜெயம் ரவி படத்துக்கு இவர் இசையமைப்பது, இது நான்காவது முறை. ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜய குமார் தயாரிக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி, நான் (லட்சுமன்) இயக்குகிறேன். படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது’’ என்றார் டைரக்டர் லட்சுமன்.
    மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் கதையில் நயன்தாரா ஒப்பந்தமாக இருந்த நிலையில், தற்போது அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. #PonniyinSelvan #Maniratnam
    அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.

    இந்த கதையை மணிரத்னம் இரண்டு பாகங்களாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். படத்தில் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். 



    சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், அமிதாப் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் மோகன்பாபு மற்றும் சத்யராஜ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சூழ்ச்சி செய்யும் மாய மோகினி நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.

    பூங்குழலியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் தளபதி 63, தர்பார் படங்களில் நயன்தாரா பிசியாகி இருப்பதால் அவருக்கு பதிலாக அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #PonniyinSelvan #Maniratnam #AnushkaShetty

    என்ஜிகே படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #JayamRavi #Selvaraghavan
    செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை, மன்னவன் வந்தானடி உள்ளிட்ட படங்களின் வேலைகள் முடிந்தும் தயாரிப்பு தரப்பின் பிரச்சனையால் ரிலீசாகாமல் உள்ளது.

    இந்த நிலையில், செல்வராகவன் சூர்யாவை வைத்து என்ஜிகே படத்தை இயக்கி முடித்துவிட்டார். படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன், சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், ஜெகபதி பாபு, மன்சூர் அலிகான், பொன்வண்ணன், வேல ராமமூர்த்தி குரு சோமசுந்தரம், அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.



    இந்த நிலையில், செல்வராகவன் இயக்கும் அடுத்த படத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜெயம் ரவி தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கோமாளி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். #JayamRavi #Selvaraghavan

    ×