search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "James Anderson"

    • இலங்கையின் முத்தையா முரளிதரன் மற்றும் சமிந்த வாஸ் 895 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
    • ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த மிட்செல் ஸ்டார்க் மற்றும் நாதன் லயன் 580 விக்கெட்களுடன் 5-வது இடத்தில் இருக்கின்றனர்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நியூசிலாந்தில் உள்ள மவுண்ட் மாங்கானுவில் நேற்று தொடங்கியது.

    முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். அதிர்ச்சிகரமாக ஜாக் கிராவ்லி 4 ரன்களில் வெளியேற, பென் டக்கெட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 68 பந்துகளில் 84 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 58.2 ஓவர்களில் 9 விக்கெட்க்கு 325 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

    நியூசிலாந்து அணி சார்பில் நீல் வாக்னெர் 4 விக்கெட்களும், டிம் சவுதி மற்றும் ஸ்காட் குக்கலைன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் லாதமை 1 ரன்னில் ஆலி ராபின்சன் வெளியேற்ற, கேன் வில்லியம்சன் மற்றும் ஹென்றி நிக்கோல்சை வெளியேற்றினார் ஜேம்ஸ் ஆண்டர்சன். அடுத்ததாக நீல் வாக்னரை ஸ்டூவர்ட் பிராட் 27 ரன்களில் அவுட் செய்ய இது உலக சாதனையாக அமைந்தது.

    இந்த விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் டெஸ்ட் வரலாற்றில் 1,000 விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது பௌலிங் பார்ட்னட்ஷிப் ஆனார்கள்.

    இதற்கு முன்னதாக, ஆஸ்திரேலிய ஜாம்பவான்களான கிளென் மெக்ராத் மற்றும் ஷேன் வார்னே 104 போட்டிகளில் இணைந்து 1,001 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். இன்னும் இரண்டு விக்கெட்களை ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் வீழ்த்தினால், பார்ட்னர்ஷிப் அமைத்து டெஸ்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பெருமையை இந்த ஜோடி பெறும்.

    இலங்கையின் முத்தையா முரளிதரன் மற்றும் சமிந்த வாஸ் 895 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்திலும், மேற்கிந்திய தீவுகளின் கர்ட்லி ஆம்ப்ரோஸ் மற்றும் கோர்ட்னி வால்ஷ் 762 விக்கெட்களுடன் 4-வது இடத்திலும், ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த மிட்செல் ஸ்டார்க் மற்றும் நாதன் லயன் 580 விக்கெட்களுடன் 5-வது இடத்தில் இருக்கின்றனர்.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் ஆண்டர்சன் 6 விக்கெட் வீழ்த்தினார்.
    • ஆட்ட நாயகன் விருது பென் ஸ்டோக்சுக்கு வழங்கப்பட்டது.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரு இன்னிங்சிலும் சேர்த்து 6 விக்கெட் வீழ்த்தினார்.

    இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்தார்.

    இதுவரை டெஸ்டில் 664, ஒருநாள் போட்டியில் 269 மற்றும் டி20-ல் 18 என 367 போட்டிகளில் மொத்தம் 951 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

    முன்னதாக, இலங்கையின் முத்தையா முரளிதரன் (1347), ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் (1001), இந்தியாவின் அனில் கும்ப்ளே (956) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

    • இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மொத்தத்தில் 200 டெஸ்டுகளில் விளையாடி உள்ளார்.
    • ஆண்டர்சன் விளையாடும் 174-வது டெஸ்ட் இதுவாகும்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. 'டாஸ்' ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர், முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அந்த அணி முதல் இன்னிங்சில் 53.2 ஓவர்களில் 151 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

    அதிகபட்சமாக ககிசோ ரபடா 36 ரன்களும், கீகன் பீட்டர்சன், கைல் வெரைன் தலா 21 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், பிராட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    அதன் பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் 40 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தப் போட்டியில் களம் இறங்கியதன் மூலம் புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். ஆண்டர்சன் விளையாடும் 174-வது டெஸ்ட் இதுவாகும்.

    அதே சமயம் சொந்த மண்ணில் ஆடும் 100-வது டெஸ்டாக இது அமைந்துள்ளது. இதன் மூலம் உள்நாட்டில் 100 டெஸ்டுகளில் கால்பதித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மொத்தத்தில் 200 டெஸ்டுகளில் விளையாடி உள்ளார். ஆனால், அவர் இந்திய மண்ணில் 94 டெஸ்டுகளும், வெளிநாடுகளில் 106 டெஸ்டுகளும் ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மை காட், என்னே அவள் அழகு, ஸ்டூவர்ட் பிராட்டை முதல்முறையாக பார்க்கும்போது இப்படித்தான் தோன்றியது என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் குறிப்பிட்டுள்ளார்.
    இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட். 36-வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2002-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். ஸ்டூவர்ட் பிராட் 2006-ம் ஆண்டு அறிமுகம் ஆனார்.

    இருவரும் டெஸ்ட் அணியில் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு ஜோடியாக திகழ்கின்றனர். இருவரும் (ஆண்டர்சன்  575, ஸ்டூவர்ட் பிராட் 437) இணைந்து டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டுக்கள் மேல் சாய்த்துள்ளனர்.

    ஜேம்ஸ் ஆண்டர்சன் ‘Bowl. Sleep. Repeat’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் ‘‘நாங்கள் இருவரும் இணைந்து ஆயிரம் விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியது நம்பமுடியாத விசித்திரமானதாகும். எங்களை நாங்கள் போட்டியாக பார்த்தது கிடையாது. ஏனெனில், எங்களுடைய திறமை முற்றிலும் மாறுபாடானது.



    ஸ்டூவர்ட் பிராட் பவுன்ஸ் மற்றும் பந்தின் சீம்-ஐ சரியான பயன்படுத்தி மூவ் செய்வதில் வல்லவர். நான் பந்தை சிறப்பாக ஸ்விங் செய்வேன்.

    முதல் முறையாக அவர் எங்களுடைய வீரர்கள் அறைக்கும் வரும்போது, அவரது நீலக்கலர் கண்கள், பொன்னிறமான நீண்ட கூந்தல், மிக வசீகரமான உடல் ஆகியவற்றை வைத்து, ‘மை காட், என்னே அவள் அழகு’’ என்று தோன்றியதாக குறிப்பிட்டுள்ளார்.
    கோபத்தில் பந்தை தூக்கி எறிந்த இங்கிலாந்து கேப்டன் ஜேம்ஸ் ஆண்டர்சனை ஐசிசி கண்டித்துள்ளது. அத்துடன் தடைக்கான ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேயில் நடைபெற்று வருகிறது. இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் 39-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின்போது, ஆடுகளத்தின் அபாயகரமான பகுதி (Danger)-யில் ஓடியதாக நடுவர் எச்சரித்தார்.



    இதனால் கோபம் அடைந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தை கோபமாக தூக்கி எறிந்தார். இதுகுறித்து போட்டி நடுவரிடம் புகார் அளிக்கப்பட்டது. போட்டி முடிந்த பின்னர், ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனால் அவரை ஐசிசி எச்சரித்ததுடன், போட்டி தடைக்கான ஒரு புள்ளியையும் வழங்கியது. இத்துடன் ஆண்டர்சன் நான்கு புள்ளிகள் பெற்றுள்ளார்.
    டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைப் படைத்துள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் மெக்ராத் மற்றும் டேல் ஸ்டெயின் என்னைவிட சிறந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார். #Anderson
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான கடைசி டெஸ்டில் இந்தியாவின் கடைசி விக்கெட்டாக முகமது ஷமியை வீழ்த்தியன் மூலம் ஜேம்ஸ் ஆண்டர்சன் மெக்ராத்தை பின்னுக்கு தள்ளி 564 விக்கெட்டுக்களுடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

    564 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன் 600 விக்கெட்டுக்கள் வீழ்த்துவார் என்று மெக்ராத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் என்னைவிட மெக்ராத் மற்றும் தென்ஆப்பிரிக்காவின் டெல் ஸ்டெயின் ஆகியோர் சிறந்த பந்து வீச்சாளர்கள் என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் ‘‘நான் மெக்ராத்தை பற்றி சில விஷயங்களை உங்களுக்கு சொல்லியாக வேண்டும். அவர் என்னைவிட சிறந்த பந்து வீச்சாளர். இது தவறான தன்னடக்கம் இல்லை’’ என்றார்.
    ‘சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து உடனடியாக ஓய்வு பெறும் திட்டம் எதுவும் இல்லை’ என்று இங்கிலாந்து டெஸ்ட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்தார். #JamesAnderson #Retirement #England
    லண்டன்:

    இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன், சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தி கலக்கினார். கடந்த செவ்வாய்க்கிழமை லண்டன் ஓவல் மைதானத்தில் முடிந்த இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கடைசி விக்கெட்டாக முகமது ஷமியை போல்டு செய்தார்.



    இதன் மூலம் ஆண்டர்சன் 143 டெஸ்டில் விளையாடி மொத்தம் 564 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மேலும் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் 4-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத்தை பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை ஆண்டர்சன் தன்வசப்படுத்தினார். அத்துடன் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை மெக்ராத்திடம் (563 விக்கெட்டுகள், 124 டெஸ்டில்) இருந்து தட்டிப் பறித்து தனக்கு சொந்தமாக்கினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் முரளிதரன் (இலங்கை), வார்னே (ஆஸ்திரேலியா), கும்பிளே (இந்தியா) ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

    சாதனை படைத்த 36 வயதான இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியதில் மெக்ராத்தின் சாதனையை நான் முறியடித்து இருந்தாலும், என்னை விட சிறந்த பவுலர் மெக்ராத் தான். பவுன்ஸ், ஸ்விங் செய்வது, தளர்வின்றி கடுமையாக பந்து வீசுவது, துல்லியமாக, ஆக்ரோஷமாக செயல்படுவது உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும் மெக்ராத் என்னை விட உயர்வானவர். அவரது பந்து வீச்சின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து தான் எனது கருத்தை தெரிவிக்கிறேன்.

    போட்டிக்கு மெக்ராத் தயார் ஆகும் விதத்தை நான் கவனித்து இருக்கிறேன். அது எனக்கு உதவிகரமாக இருந்து இருக்கிறது. தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் திட்டம் எதுவும் எனக்கு இல்லை. 2006-ம் ஆண்டு ஆஷஸ் போட்டி தொடரில் மெக்ராத் கலந்து கொள்ளும் போது ஓய்வு பெறும் எண்ணம் எதுவும் இல்லையாம். ஆனால் அந்த போட்டி தொடர் முடிவில் அவருக்கு ஓய்வு எண்ணம் உதித்து விடைபெற்றதாக கருத்து தெரிவித்ததை நான் படித்து இருக்கிறேன். அதுபோல் எனக்கும் நடக்கலாமே? அது யாருக்கு தெரியும்.

    ஓய்வு எண்ணம் இதுவரை எனது மனதில் உதிக்கவில்லை. அது குறித்து நான் சிந்திப்பதும் கிடையாது. சிறந்த திறனை வெளிப்படுத்துவதிலும், அடுத்த போட்டி மற்றும் அடுத்த தொடர் குறித்து மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். இலங்கை போட்டி தொடருக்கு முன்பு எங்களுக்கு போதிய இடைவெளி இருக்கிறது. இலங்கை தொடரில் சிறப்பாக பந்து வீச முயற்சிப்பேன்.

    இவ்வாறு ஆண்டர்சன் கூறினார்.  #JamesAnderson #Retirement #England
    இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவல் டெஸ்டில் 2-விக்கெட் கைப்பற்றியதன் மூலம் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்களில் 4-வது இடத்தில் உள்ள மெக்ராத்தை சமன் செய்தார். #ENGvIND #JamesAnderson
    இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிக விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து வீரர் ஆவார். ஓவல் டெஸ்டில் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் (தவான், புஜாரா) கைப்பற்றினார்.

    இதன்மூலம் டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்களில் 4-வது இடத்தில் உள்ள மெக்ராத்தை (ஆஸ்திரேலியா) சமன் செய்தார்.

    மெக்ராத் 124 டெஸ்டில் 563 விக்கெட் எடுத்துள்ளார். ஆண்டர்சன் 143 டெஸ்டில் 563 விக்கெட் கைப்பற்றியுள்ளார். முத்தையா முரளீதரன் (இலங்கை) 800 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும், ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா) 708 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும், அனில் கும்ளே (இந்தியா) 619 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். #ENGvIND #JamesAnderson #Anderson #Mcgrath
    விராட் கோலிக்கு அவுட் கொடுக்காததால் நடுவர் குமார் தர்மசேனாவிடம் சண்டையிட்ட ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 15 சதவிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 332 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின்போது 29-வது ஓவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசினார். அந்த ஓவரில் ஒரு பந்து விராட் கோலியின் கால் பேடை தாக்கியது.

    ஜேம்ஸ் ஆண்டர்சன் எல்பிடபிள்யூ அப்பீல் கேட்டார். ஆனால் நடுவர் குமார் தர்மசேனா அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இங்கிலாந்து அணி ரிவியூ சென்றது. ரிவியூ-வில் அம்பயர் டெசிசன் என முடிவு செய்யப்பட்டு அவுட் கொடுக்கவில்லை.

    இதனால் ஓவர் முடிந்த பிறகு ஜேம்ஸ் ஆண்டர்சன் நடுவர் குமார் தர்மசேனா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது விராட் கோலியும் வாதத்தில் கலந்து கொண்டார்.



    ஆட்டம் முடிந்த பின்னர் கள நடுவர்களான குமார் தர்மசேனா, ஜோல் வில்சன், 3-வது நடுவர் ப்ரூஸ் ஆக்சன்போர்டு ஆகியோர் புகார் அளித்தனர். அப்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது மீதான தவறை ஒத்துக்கொண்டார். ஆண்டர்சனின் தவறு லெவல்-1 ஆகும்.

    இதனால் மேற்கொண்டு விசாரணை ஏதுமின்றி போட்டியின் சம்பளத்தில் 15 சதவிதமும், சஸ்பெண்டிற்கான 1 புள்ளியும் வழங்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு தற்போதுதான் ஐசிசி கண்டனத்திற்குள்ளாகியுள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
    245 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 46 ரன்னுக்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 273 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 27 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 4-வது நாளில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 271 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லோகேஷ் ராகுல் ரன்ஏதும் எடுக்காமல் ஸ்டூவர்ட் பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து புஜாரா களம் இறங்கினார்.



    புஜாராவை 5 ரன்னிலும், ஷிகர் தவானை 17 ரன்னிலும் வெளியேற்றினார் ஜேம்ஸ் ஆண்டர்சன். இதனால் இந்தியா 22 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு விராட் கோலி உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்தியா 4-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் அடித்துள்ளது. விராட் கோலி 10 ரன்னுடனும், ரகானே 13 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 199 ரன்கள் தேவை.
    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சை பார்த்து ஏராளமான விஷயங்களை கற்று இருக்கிறேன் என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான 4–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதாம்ப்டனில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நேற்றைய பயிற்சிக்கு பிறகு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி அளித்த பேட்டியில், ‘‘இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்  ஜேம்ஸ் ஆண்டர்சனின் (இதுவரை 557 விக்கெட் வீழ்த்தியுள்ளார்) பந்து வீச்சை உன்னிப்பாக கவனித்து, அதில் இருந்து நிறைய கற்று இருக்கிறேன்.



    ஆண்டர்சன் அதிகமான வேகத்தில் பந்து வீசுவதில்லை. ஆனாலும் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்துகிறார், இது எப்படி என்பதை எப்போதும் கவனிப்பது உண்டு. அவர் பந்தை எந்த மாதிரி பிட்ச் செய்து, எந்த அளவுக்கு எழுப்புகிறார் என்பதை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். வித்தியாசமான சீதோஷ்ண நிலையில் வித்தியாசமாக பந்து வீசக்கூடிய ஒரு பவுலர் ஆண்டர்சன்’’ என்றார்.
    எனது சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் முறியடித்து விட்டால், அவரது சாதனையை எவராலும் தொட முடியாது என மெக்ராத் கூறியுள்ளார். #Anderson
    ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் க்ளென் மெகராத். இவர் 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29 முறை ஐந்து விக்கெட், 3 முறை 10 விக்கெட்டுக்களுடன் 563 விக்கெட்டுக்கள் குவித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியதில் மெக்ராத் முதல் இடத்தில் உள்ளார். இவர் கடந்த 2007-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெற்றார்.

    அப்போது தனது விக்கெட் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று கூறியிருந்தார். ஆனால் 36 வயதாகும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மெக்ராத் சாதனையை உடைக்க இருக்கிறார்.

    இவர் 141 போட்டிகளில் 26 ஐந்து விக்கெட், 3 பத்து விக்கெட்டுக்களுடன் 557 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இன்னும் 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் மெக்ராத் சாதனையை முறியடிப்பார். இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு எதிராக இன்னும் இரண்டு போட்டிகளில் விளையாட இருக்கிறது. அப்போது இந்த சாதனையை படைக்க வாய்ப்பு இருக்கிறது.



    இந்நிலையில் ஒருமுறை எனது சாதனையை ஆண்டர்சன் முறியடித்து விட்டால், அவரை எவராலும் தொட இயலாது என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மெக்ராத் கூறுகையில் ‘‘நான் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது அதிக அளவில் மரியாதை வைத்துள்ளேன். அவருக்கு வாழ்த்துக்கள். ஒருமுறை என்னுடைய சாதனையை அவர் முறியடித்து விட்டார், அதன்பின் அவரை எவராலும் தொட இயலாது.



    சாதனை என்பது அருமையானது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்ததற்காக பெருமைப்படுகிறேன்.

    எனது சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் முறியடிக்கும்போது அவருக்கு சமமான சந்தோசம் அடைவேன். ஏனென்றால், எந்தவொரு நாட்டில் இருந்து விளையாடினாலும், வேகப்பந்து வீச்சாளர் என்பது அவர்களை ஒருங்கிணைக்கும்’’ என்றார்.
    ×