search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெக்ராத்"

    • ஆஸ்திரேலிய அணி வலுவான பந்துவீச்சு தாக்குதலையும், தரமான பேட்ஸ்மேன்களையும் கொண்ட வித்தியாசமான அணி என மெக்ராத் கூறினார்.
    • இங்கிலாந்து இப்போது மிகச்சிறந்த அணியாக திகழ்கிறது. நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு ஆச்சரியம் அளிப்பார்கள் என மைக்கெல் வாகன் கூறினார்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்துக்கு சென்றுள்ள பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 16-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது. நூற்றாண்டு கால பழமைவாய்ந்த ஆஷஸ் தொடரில் இந்த முறை ஆஸ்திரேலியா முழுமையாக வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளைன் மெக்ராத் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி சமீபகாலமாக ஆக்ரோஷமாக விளையாடி வரும் விதம் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. அதே நேரத்தில் இந்த ஆஸ்திரேலிய அணி வலுவான பந்துவீச்சு தாக்குதலையும், தரமான பேட்ஸ்மேன்களையும் கொண்ட வித்தியாசமான அணி. இது நம்ப முடியாத ஒரு போட்டித்தொடராக இருக்கப்போகிறது. முதல் டெஸ்ட் போட்டி முடிவு மிகவும் முக்கியமானது. இதில் சிறப்பான தொடக்கம் அமைய வேண்டியது அவசியம். ஒவ்வொரு டெஸ்டும் கடைசி வரை பரபரப்பாக நகர்ந்து, அதில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதை பார்க்க முடியும் என்று நம்புகிறேன். தொடரை ஆஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் முழுமையாக வெல்லும் என்பதே எனது கணிப்பு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகையில்,

    2001-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை வென்றதில்லை என்பது வரலாறு சொல்லும் உண்மை. கிட்டத்தட்ட இதே அணி வீரர்களுடன் கடைசியாக 2019-ம் ஆண்டில் இங்கிலாந்தில் ஆடிய போது அவர்களால் 2-2 என்று தொடரை சமன்தான் செய்ய முடிந்தது. இங்கிலாந்து இப்போது மிகச்சிறந்த அணியாக திகழ்கிறது. நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு ஆச்சரியம் அளிப்பார்கள். தொடரை இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும்.

    இவ்வாறு வாகன் கூறினார்.

    ×