search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டெயின்"

    கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் நாங்கள் உலகக்கோப்பையை வெல்லுவோம் என்று தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #WorldCup2019
    50 ஓவர் உலகக்கோப்பை தென்ஆப்பிரிக்கா இதுவரை வென்றது கிடையாது. அந்த அணி சிறப்பாக விளையாடினாலும் ராசி கைக்கொடுப்பதில்லை. 2015 உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடியது. ஆனால், நியூசிலாந்துக்கு எதிராக மழை குறுக்கீட்டதால் வெற்றி பெற இயலாமல் போனது.

    இதுபோன்ற ஏராளமான சம்பவங்களை சொல்லலாம். இங்கிலாந்தில் அடுத்த மாதம் தொடங்கும் உலகக்கோப்பையை வெல்ல கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் போதுமானது என தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்டெயின் கூறுகையில் ‘‘எங்கள் அணியில் சில தலைசிறந்த வீரர்கள் உள்ளனர். குயின்டான் டி காக்கில் இருந்து 11-வது வீரர்கள் வரை மேட்ச் வின்னர்கள்தான். நோ-பால் போன்ற விஷயத்தில் கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. அப்படியிருந்தால் நாங்கள் தொடரை கட்டாயம் வெல்வோம்.



    நீங்கள் ரபாடாவை பார்த்தீர்கள் என்றால், அபாரமாக பந்து வீசி வருகிறார். அவரது பார்மை-ஐ தொடர்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் சர்வதேச போட்டிக்குள் நுழைந்து, அவரது வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். சில வீரர்கள் வருவார்கள், சிறப்பாக செயல்படுவார்கள். திடீரென்று சென்று விடுவார்கள். ஆனால், ரபாடா போன்ற வீரர்களை நாம் பயன்படுத்தி கொள்ள முடியும்’’  என்றார்.
    டர்பன் டெஸ்டில் இலங்கைக்கு எதிரான நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய டேல் ஸ்டெயின் கபில் தேவ்-ஐ பின்னுக்குத் தள்ளியுள்ளார். #SAvSL
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 235 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 49 ரன் எடுத்து இருந்தது.

    நேற்று 2-ம் நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 191 ரன்னில் சுருண்டது. 44 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து இருந்தது.



    தென்ஆப்பிரிக்க அணி முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் 48 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் அவர் டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றி 9-வது இடத்தில் இருந்த கபில்தேவ் (434) சாதனையை முறியடித்தார்.

    92 டெஸ்டில் 437 விக்கெட் கைப்பற்றிய அவர் 7-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இங்கிலாந்து வீரர் பிராட்டுடன் இணைந்து அந்த இடத்தில் உள்ளார். இங்கிலாந்து வேகப்பந்து வீரரான ஸ்டூவர்ட் பிராட் 126 டெஸ்டில் 437 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
    டர்பனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் ஸ்டெயின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை 191 ரன்னில் சுருண்டது. #SAvSL
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 235 ரன்னில் சுருண்டது.

    விக்கெட் கீப்பர் டி காக் அதிகபட்சமாக 80 ரன்கள் சேர்த்தார். பவுமா 47 ரன்னும், டு பிளிசிஸ் 35 ரன்களும், மகாராஜ் 29 ரன்களும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், ரஜிதா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்திருந்தது, கருணாரத்னே 28 ரன்களுடனும், பெர்னாண்டோ 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கருணாரத்னே மேலும் இரண்டு ரன்கள் அடித்து 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அதேபோல் பெர்னாண்டோவும் மேலும் 2 ரன்கள் எடுத்து 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.



    அதன்பின் இலங்கையின் விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் சரிய ஆரம்பித்தது. குசால் பேரேரா (51) மட்டும் தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார். டி சில்வா 23 ரன்களும், அறிமுக வீரர் அம்பல்டெனியா 24 ரன்களும் அடிக்க இலங்கை 191 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஸ்டெயின் சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இலங்கை அணி முதல் இன்னிங்சில் 44 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த ரன்தான் இந்த போட்டியின் முடிவை தீர்மானிப்பதாக இருக்க வாய்ப்புள்ளது. 44 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
    பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணியில் டேல் ஸ்டெயின், குயின்டான் டி காக் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. #SAvPAK
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா 3-0 எனக்கைப்பற்றியது.

    ஐந்து போட்டிகளில் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் (19-ந்தேதி) போர்ட் எலிசபெத்தில் தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டிகளுக்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின், விக்கெட் கீப்பர் குயின்டான் டி  காக் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    டெஸ்ட் போட்டியில் அசத்திய ஆலிவியர், தொடக்க பேட்ஸ்மேன் மார்கிராம் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹெயின்ரிச் கிளாசன் விக்கெட் கீப்பராக பணியாற்றுகிறார்.

    தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டு பிளிசிஸ் (கேப்டன்), 2. ஹசிம் அம்லா, 3. எய்டன் மார்கிராம், 4. ரீசா ஹென்ரிக்ஸ், 5. இம்ரான் தாஹிர், 6. ஹெயின்ரிச் கிளாசன், 7. டேவிட் மில்லர், 8. டேன் பேட்டர்சன், 9. பெலுக்வாயோ, 10. பிரிட்டோரியஸ், 11. ரபாடா, 12. ஷமிசி, 13. ஆலிவியர், 14. ரஸ்சி வான் டெர் டுஸ்சென்.
    ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 107 ரன்கள் வெற்றி பெற்ற நிலையில், பாகிஸ்தானை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது. #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப் டவுனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

    இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 262 ரன்களும், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 185 ரன்களும் சேர்த்தன. தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 303 ரன்கள் குவித்தது.

    இதனால் பாகிஸ்தான் வெற்றிக்கு 381 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென்ஆப்பிரிக்கா. 381 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்தது.

    ஆசாத் ஷபிக் 48 ரன்னுடனும், பாபர் ஆசம் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும் ஆசாத் ஷபிக் அரைசதம் அடித்தார். மறுமுனையில் பாபர் ஆசம் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் சர்பிராஸ் அகமது ரன்ஏதும் எடுக்காமல் முதல் பந்திலே ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த ஆசாத் ஷபிக் 65 ரன்னில் ஆட்டமிழந்தார்.



    ஷபிக் ஆட்டமிழந்ததும் பாகிஸ்தான் தோல்வி உறுதியானது. பஹீம் அஷ்ரப் 15 ரன்னிலும், முகமது அமிர் 4 ரன்னிலும், ஹசன் அலி 22 ரன்னிலும், முகமது அப்பாஸ் 9 ரன்னிலும் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 273 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் தென்ஆப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சதாப் கான் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ஆலிவியர், ரபாடா தலா 3 விக்கெட்டுக்களும், ஸ்டெயின் இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார். ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்ததால் பாகிஸ்தானை 3-0 என ஒயிட் வாஷ் செய்தது.
    கேப் டவுன் டெஸ்டில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்த நிலையில், தென்ஆப்பிரிக்காவிற்கு 41 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 177 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா டு பிளிசிஸ் (103), மார்கிராம் (78), பவுமா (75), டி காக் (59) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 431 ரன்கள் குவித்தது.

    பின்னர் 254 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஷான் மசூத் 61 ரன்களும், ஆசாத் ஷபிக் 88 ரன்களும், பாபர் ஆசம் 72 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற பாகிஸ்தான் 294 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.


    பாபர் ஆசம்

    254 ரன்களை தாண்டியதால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது. தற்போது 40 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 41 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ஸ்டெயின், ரபாடா தலா நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்கள்.


    ரபாடா

    பாகிஸ்தான் 294 ரன்னில் ஆல்அவுட் ஆனதுடன் நேற்றைய 3-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் தென்ஆப்பிரிக்கா சேஸிங் செய்து எளிதில் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றி முன்னிலை வகிக்கும்.
    செஞ்சூரியனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 149 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான். #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் ஆலிவியரின் (6) பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ரன்னில் சுருண்டது.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்திருந்தது. நேற்றும் மட்டும் 15 விக்கெட்டுக்கள் வீழ்ந்தன.


    மசூத்

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பவுமா 53 ரன்களும், டி காக் 45 ரன்களும், ஸ்டெயின் 23 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 223 ரன்கள் சேர்த்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தானை விட 42 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த 42 ரன்கள் தென்ஆப்பிரிக்காவிற்கு மிகமிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    42 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் (57), 3-வது வீரராக களம் இறங்கிய ஷான் மசூத் (65) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற பாகிஸ்தான் 190 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அத்துடன் இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.


    இமாம் உல் ஹக்

    முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய ஆலிவியர் 2-வது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தார். ரபாடா 3 விக்கெட்டும், ஸ்டெயின் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    முதல் இன்னிங்சில் 42 ரன்கள் பின்தங்கியிருந்தால் 148 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 149 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருப்பதால் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீசினால் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்த வாய்ப்புள்ளது.



    நேற்று 15 விக்கெட்டுக்கள் வீழ்ந்த நிலையில் இன்றும் 15 விக்கெட்டுக்கள் வீழ்ந்துள்ளன. நாளை எந்தவொரு முடிவு எட்டினாலும் தேனீர் இடைவேளைக்கு முன் போட்டி முடிவடைந்துவிடும்.
    செஞ்சூரியனில் இன்று தொடங்கிய முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ரன்னில் சுருண்டது பாகிஸ்தான் #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    இமாம்-உல்-ஹக், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களான களம் இறங்கினார்கள். முதல் ஓவரை ஸ்டெயின் வீசினார். 2-வது ஓவரை ரபாடா வீசினார். 2-வது ஓவரின் முதல் பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் இமாம்-உல்-ஹக் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.

    அடுத்து பகர் சமான் உடன் ஷான் மசூத் ஜோடி சேர்ந்தார். பகர் சமான் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டெயின் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 422 விக்கெட்டுக்களுடன் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

    ஷான் மசூத் 19 ரன்னில் வெளியேறினார். அசார் அலி தாக்குப்பிடித்து விளையாட ஆசாத் ஷபிக் 7 ரன்னில் வெளியேறினார். தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேறிக் கொண்டே இருந்தார்கள்.

    பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 86 ரன்னாக இருக்கும்போது அசார் அலி 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கேப்டன் சர்பிராஸ் அகமது (0), முகமது அமிர் (1) அடுத்தடுத்து வெளியேற, பாகிஸ்தான் 111 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

    மறுமுனையில் நின்றிருந்த பாபர் ஆசம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. பாபர் ஆசம் 58 பந்தில் 10 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். ஸ்டெயின் வீசிய ஓவரில் நான்கு பவுண்டரிகள் விரட்டினார்.



    அணியின் ஸ்கோர் 178 ரன்னாக இருக்கும்போது பாபர் ஆசம் 79 பந்தில் 15 பவுண்டரியுடன் 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 9-வது விக்கெட்டுக்கு பாபர் ஆசம் ஹசன் அலி உடன் இணைந்து 67 ரன்கள் சேர்த்தார். ஹசன் அலி 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 47 ஓவர்களில் 181 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பாபர் ஆசம் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் கவுரவமான ஸ்கோரை எட்டியது.

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ஆலிவியர் 6 விக்கெட்டுக்களும், ரபாடா 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள். ஸ்டெயின் ஒரு விக்கெட் வீழ்த்தினார். பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
    டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். இவர் டெஸ்ட் போட்டியில் 421 ரன்கள் வீழ்த்தி பொல்லாக் உடன் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை சமன் செய்திருந்தார்.

    கடந்த ஜூலை மாதம் இலங்கையில் நடைபெற்ற டெஸ்டில் ஸ்டெயின் விளையாடினார். ஆனால் இரண்டு இன்னிங்சிலும் ஒரு விக்கெட் கூட அவரால் வீழ்த்த முடியவில்லை. இதனால் பொல்லாக் சாதனையை முறியடிக்க முடியாமல் இருந்தார் ஸ்டெயின்.



    இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் ஸ்டெயின் தனது 4-வது ஓவரின் முதல் பந்தில் தொடக்க வீரர் பகர் சமானை 12 ரன்னில் வீழ்த்தினார். இதன்மூலம் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற சாதனையை படைத்தார்.
    பெர்த்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 152 ரன்னில் சுருட்டி எளிதாக வெற்றி பெற்றது தென்ஆப்பிரிக்கா #AUSvSA
    ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று பெர்த்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டிராவிஸ் ஹெட்டை 1 ரன்னிலும், அடுத்து வந்த டிஆர்கி ஷார்ட்டை டக்அவுட்டிலும் வெளியேற்றினார் அனுபவ பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். ஆரோன் பிஞ்ச் 5 ரன்கள் எடுத்த நிலையில் நிகிடி பந்தில் வெளியேறினார்.



    8 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்த ஆஸ்திரேலியாவால், அதன்பின் மீள இயலவில்லை. 38.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆஸ்திரேலியா 152 ரன்னில் சுருண்டது. கிறிஸ் லின் 15 ரன்களும், விக்கெட் கீப்பர் கேரே 33 ரன்களும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 14 ரன்களும், கவுல்டர்-நைல்  34 ரன்களும் எடுத்தனர்.

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் பெலுக்வாயோ 3 விக்கெட்டும் டேல் ஸ்டெயின், நிகிடி, இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.



    பின்னர் 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணியின் டி காக், ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டி காக் 40 பந்தில் 47 ரன்களும், ஹென்ரிக்ஸ் 74 பந்தில் 44 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மார்க்கிராம் 36 ரன்கள் சேர்க்க, தென்ஆப்பிரிக்கா 29.2 பந்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டாய்னிஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். டேல் ஸ்டெயின் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2-வது ஒருநாள் போட்டி 9-ந்தேதி அடிலெய்டில் நடக்கிறது.
    டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைப் படைத்துள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் மெக்ராத் மற்றும் டேல் ஸ்டெயின் என்னைவிட சிறந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார். #Anderson
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான கடைசி டெஸ்டில் இந்தியாவின் கடைசி விக்கெட்டாக முகமது ஷமியை வீழ்த்தியன் மூலம் ஜேம்ஸ் ஆண்டர்சன் மெக்ராத்தை பின்னுக்கு தள்ளி 564 விக்கெட்டுக்களுடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

    564 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன் 600 விக்கெட்டுக்கள் வீழ்த்துவார் என்று மெக்ராத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் என்னைவிட மெக்ராத் மற்றும் தென்ஆப்பிரிக்காவின் டெல் ஸ்டெயின் ஆகியோர் சிறந்த பந்து வீச்சாளர்கள் என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் ‘‘நான் மெக்ராத்தை பற்றி சில விஷயங்களை உங்களுக்கு சொல்லியாக வேண்டும். அவர் என்னைவிட சிறந்த பந்து வீச்சாளர். இது தவறான தன்னடக்கம் இல்லை’’ என்றார்.
    ×